Tuesday, July 28, 2015

எங்கள் அப்துல்கலாம் வாழியவே




சுழலும் உலகிற் கிணையாக
சுழன்று உலகம் போற்ற
குழ லோசையாய் நெருப்புக்
கனலை வீசி இளைஞரின்
அழகை எடுத்துரைத்து இந்திய
ஆன்மாவை பரமாத்மா என
முழங்கிய நமது அப்துல்காலாம்
மலரடியை போற்றி வணங்குவோம்.
==========================
இந்திய மக்களின் இதய நாயகர்
இளைஞர் மூச்சின் இதயத் துடிப்பு
சந்தித்தத் தலைவரில் சைவ உணவு
சுகித்த சன்மார்க்க சான்றோ னவர்
வந்ததால் இந்தியா வான்புகழ் கண்டு
வையத்தில் ஓர் வல்லரசாக்க அணுவில்
அந்தம் பார்த்த அவுல்பக்கிர் ஜெய்னுலாப்தீன்
அப்துல் கலாம் அவர்கள் வாழ்க.
=================================
கடலலையும் அமைதிக் காணும் ராமேஸ்வர
இடமதில் உடலெடுத்த உத்தமரே - நடமாடியே
எப்பாரும் வியக்க இந்தியாவை உயர்த்திய
அப்துல்கலாம் வாழ்க வாழ்க.
================================
தப்பாது ஊட்டிடும் தாய்த்திரு நாட்டிற்கு
அப்துல் கலாமெனும் அமிழ்து.
===================================
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா - மேதகு "அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்" அவர்கள் நேற்று (27-07-2015) மாலை இந்திய மண்ணில் கலந்தார். அவருக்கு எம்முடைய ஆனந்தக் கண்ணீரை மேற்கண்ட பாடல்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். ----  தி.ம.இராமலிங்கம் - கடலூர். 

Saturday, July 25, 2015

இராமலிங்க அந்தாதி - 3



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  


https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWclNGRktWTHNlRnc/view?usp=sharing
                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

வானலாவிய உறவாய் வருகின்ற அண்டங்களை
ஞானத்தால் நட்புறுவோம் ஞாயிறாய் - கானத்தால்
அவைகளைப் பாடி ஆளுகின்ற ராமலிங்கமே
சுவையாகி எனக்கு சுகமானான்.

சுகமான கீதங்களால் சன்மார்க்க மியற்றி
சகத்தில் நாம் சாகாதிருப்போம் - அகத்தில்
உலகெலாம் காண உலாவும் ராமலிங்கமே
பலமாய் இருப்பாயென் புறத்தும்.

புறமும் அகமும் புறப்புறத்தும் அகப்புறமும்
அறவொளி பிரகாசம் அருளினாய் - திறந்து
நான் பார்க்க நாணினேன் ராமலிங்கமே
ஏன் இன்பத்தை அளித்தாய்.

ஆன்மா ஜீவன் இந்திரியங்கள் கரணத்தில்
ஊன்றி பிண்டத்தில் ஒளிர்ந்தாய் - சான்றாய்
என் னகத்தே ஓங்கும் ராமலிங்கமே
உன் பிரகாசமே உண்மை.

சூரியன் அக்கினி சந்திரன் நட்சத்திரங்களில்
காரியப்பட்டு பிரகாசங் கொண்டாய் - வாரி
வழங்கு மண்டத்தில் வாழும் ராமலிங்கமே
பழக்குவாய் எனையும் பரத்தில்.

பரமாகாச மண்டத்திலும் பிண்டத் திலொரு
புருவ நடுவிலும் புகுந்தாய் - இருநிலை
அறிய அருட்பா அளித்த ராமலிங்கமே
சிறியேனின் நடு சித்தமோ.

சித்தம் அறியவே சத்தம் போட்டு
நித்தம் அழ நினைத்தேன் - பித்தன்
எனநீ நினைப்பாய் என ராமலிங்கமே
தினமும் சிரித்தேன் தனித்து.

தனித் தியங்க தெய்வத்தாலு மாகாது
மனிதன் முயல முடியுமோ - முனிவரும்
தேவரும் மூவரும் தேட ராமலிங்கமே
நீவரும் பாதை நின்றேன்.

நின்ற றியேன் நினைப்பு அறவேன்
கன்றாகினும் மடி அறியேன் - தன்நிலை
மறந் துனையே மதிக்க ராமலிங்கமே
இறந்தறியாத நிலையி லிடு.

இட்ட இடத்தி லிருந்து வளர்ந்து
துட்ட னாகித் தளர்ந்தேனே - சிட்டந்
தட்டி எனைத் தருவாய் ராமலிங்கமே
மட்டமாகி நான் மகிழவே.                          210

இட்ட இடத்தி லிருந்து வளர்ந்து
துட்ட னாகித் தளர்ந்தேனே - சிட்டந்
தட்டி எனைத் தருவாய் ராமலிங்கமே
மட்டமாகி நான் மகிழவே.

மகிழவே விந்துநாத முதலிய ஆதியைப்
பகிர்ந்து நிறைந்தப் புகழே - அகிலமதில்
மின்னல் இடி மயமான ராமலிங்கமே
இன்னல் தீர்க்க இரங்காய்.

இரக்க மனமானால் இறப்பு மறப்பாகும்
உரக்கச் சொன்னதை உரைத்தேன் - நரகத்தில்
இடர் படா இயல்பை ராமலிங்கமே
சுடர் மாலையாய்ச் சூட்டு.

சூடாக இவ்வுலகம் சுட்டாலும் தேவனைப்
பாடாத நாளில்லை பார்த்தாய் - வீடாக
நானிருக்கும் கூட்டை நாளை ராமலிங்கமே
வானிருக்கும் இடமாய் வாழ்த்து.

வாழ்த்தினால் வானமும் வந்திங்கு வணங்குமே
தாழ்த்தினால் தாயும்நாயென தூற்றுமே - ஊழ்வினை
எனை வாழ்த்துமோ அறியேன் ராமலிங்கமே
உனையே பிடித்தேன் அஞ்சேன்.

அஞ்சும் எட்டும் அஞ்சாமல் விட்டேன்
எஞ்சிய யாவும் ஏனோபோச்சு - பஞ்சு
மனதில் மார்க்கத்தீ மூட்ட ராமலிங்கமே
கனலாய் சூழ்ந்தான் காண்.

காணாதக் கனவில் கடவுள் வந்தாரென
வீணாகப் பாடியே வந்தேன் - வாணாள்
தந்து பொய்யைத் தயவாக்கி ராமலிங்கமே
வந்தான் மெய்யாய் எனக்கு.

எனக்கிது போதுமென இருக்க மாட்டேன்
உனக்குக் கொடுக்க உண்டேல் - எனக்கு
வாங்க முடியும் வாஎன் ராமலிங்கமே
ஓங்க வேண்டும் உன்னைவிட.
விடமாட்டேன் உனை விட்டுத் துயர்
படமாட்டேன் இப் புன்னுலகில் - நடமாடேன்
நாய்போல் என் நண்பா ராமலிங்கமே
பேய்யாய் சுற்றினேன் போகாதே.

போப்போ ச்சீபோப்போ புகழெனும் ஆணவக்
கூப்பாடே என்னிடம் கூடாதேபோப்போ - வாப்பா
எனைத் தாழ்த்தி உன்குடிலில் ராமலிங்கமே
மனையாய் இருக்க மடிசேர்.                   220

சேர்வாய் நெஞ்சே சன்மார்க்கஞ் சேர்ந்தால்
பேர் நிலைக்கும் பாராய் - ஊரெல்லாம்
நம் பேச்சுதான் நலமேவு ராமலிங்கமே
உம் மார்க்கம் உயர்ந்ததே.

உயர்ந்த உள்ளொளி அசைவின் நடனமதை
தயங்கிநான் கண்ட தருணம் - அயர்வெலாம்
போக்கி எனைப் புனிதனாக்க ராமலிங்கமே
தீக்குணம் நீக்கும் தெய்வம்.

தெய்வமிது தெய்வம் தேர்ந்தார் வணங்கும்
தெய்வமது அருட்ஜோதி தெய்வம் - மெய்யான
தெய்வமிது தூய தேகன் ராமலிங்கமே
தெய்வமெனப் பார்க்க தெய்வமாவீர்.

ஆவியில் கலக்கும் ஆற்ற லுடையாய்
காவியம் படைக்க கலந்தருளாயே - ஓவியம்
போலுன் அழகைப் பார்க்கவே ராமலிங்கமே
தோலுள் நரம்புகள் துடிக்குதே.

துடிக்கும் அணுக்களைத் திறந்தால் அங்கு
விடிந்திருக்கும் பல விண்வெளி - படிக்கும்
பாடமாய் உனைப் படிக்க ராமலிங்கமே
மாடம் தெரிந்தது முன்னே.

முன்னவனே முத்தேக மன்னவனே நின்
சன்னி தானத்திற்கே சரணம் - நன்றி
உரைத்தேன் என் உத்தம ராமலிங்கமே
கரைசேர்த்த உன் கருணைக்கு.

கருணை எத்தனை கிலோ கிடைக்குமென
தெரு வெல்லாம் தேடினேன் - மருதூரில்
கடை விரித்ததைக் கண்டேன் ராமலிங்கமே
எடைக்கு எடை என்னவிலையோ.

விலையறியாப் பொருளை வான் பொருளின்
கலையை சாகாதிருக்கக் கற்றேன் -  புலை
கொலை விட்டேகவே குரு ராமலிங்கமே
அலை கடலை அடக்கினான்.
அடக்கமும் அன்பும் அடங்கா இறைவனை
முடக்கும் உபாய மருந்தாகும் - சடங்கள்
எழுந்து வரும் எழுத்தாய் ராமலிங்கமே
முழுதும் மகா மந்திரமானான்.

மந்திரமோ மகாமந்திரம் முப்பத்து மூன்று
எந்திரம் ஓதும் அத்திறம் - தந்திரம்
அறிந்து தன்னை அறிந்த ராமலிங்கமே
அறியேன் என்னை அறியாயோ.                      230

அறிவாய் இரவிலே அமுதக் காற்றைக்
குறித்து நன்முயற்சிக் கடவாய் - அறிவு
விளக்கம் இரவில் விளங்க ராமலிங்கமே
உளத்தில் ஏனோ உறக்கம்.

உறக்கமே உணர்வாகி உணவே விருந்தாகி
மறந்தே இருந்தேன் மன்னவா - இறந்து
பிறக்கவே நன்கு பழகினேன் ராமலிங்கமே
அறஞ் சொன்னாலும் அண்டேன்.

அண்டமெலாம் அமுத அலையை இரவினில்
தெண்டத்திற்கு தருகின்றாய் தயவோ - பிண்டம்
அதனைப் பெறுவ தெப்படி ராமலிங்கமே
இதனை மாற்றி யமைப்பாய்.

அமைப்பை மாற்றி அமுதக்காற்றைப் பகலில்
சமைத்து சன்மார்க்கம் சாற்று - சுமையில்லா
இறை சட்டம் அருளாய் ராமலிங்கமே
குறை நான் கூறலாமா.

கூறுகின்ற மறைகளில் குறை என்றால்
மாறுகின்றான் உடன் மனிதன் - வீறுகொண்ட
பதிமீதே குறை புகன்றால் ராமலிங்கமே
விதியை மாற்ற வழியுண்டா.

வழியுண்டேல் வாரும் வானவீதியில் காலங்
கழித்துக் கடவுளைக் காண - விழித்திருக்க
முடியாது ஆனால் முத்திதர ராமலிங்கமே
பாடி வருவாய் பறந்து.

பறக்கும் என்னெஞ்சம் பசித்திருக்க அறியாது
பிறர் பசியும் புரியாது - உறவு
கொண்ட என் கணவா ராமலிங்கமே
உண்மை உரைத்தருள் உடனே.

உடன்வந்த கரும உடைமைகளை விரைந்து
கடந்து மேலேறவழி காட்டாய் - மடமை
நெஞ்சம் உடமை உறவே ராமலிங்கமே
எஞ்சியநான் உனக்கே அடிமை.
அடிமை என்றசொல்லுக் கடிமை அருட்ஜோதிக்
கடிமை ஆருயிர்க் கடிமை - படித்தப்
படிப்பிற்கு அடிமை பரஞான ராமலிங்கமே
நடிக்கும் நடத்திற்குஅடிமை நானே.

நானென்ற சொல்லில் நிறைந்தாய் நீயே
வான்பொருளாய் வந்தாய் நீயே - ஏன்
தான் மறையத் துணிந்தாய் ராமலிங்கமே
மானின் அழகு மறைப்பன்றோ.                      240              
என்றோ ஒருநாள் அவன்வரும் அழகினை
நன்றே பார்த்திட நானிருப்பேன் - அன்று
என்னோடு ஏதுபேச ஆசை ராமலிங்கமே
கன்றோடு பசுவாய்க் கூடிடுவோம்.

கூடு கலையுமோஎன் காடு அழியுமோ
பாடுபட்டப் பாடு பொய்க்குமோ - சூடு
கண்ட பூனை குடிக்குமோ ராமலிங்கமே
குண்டலிப் பால் காட்டேன்.

காட்டு விலங்கும் கூடி வாழுதே
நாட்டு மனிதா நாணமில்லை - கூட்டு
சாதிமத இனஞ் சார்ந்து ராமலிங்கமே
மோதி சாகவே முயலுவர்.

முயலாய் முடிந்தவரை மண்ணில் நாம்
தயவுடன் எல்லாம் தருவோம் - குயவு
மண்ணைச் சுட்டு மாளாவகை ராமலிங்கமே
கண் திறந்துக் காணாய்.

கண்ணின் ஒளியே கற்கண்டு சுவையே
விண்ணின் அமுதே வாராய் - எண்ணில்
எட்டு மிரண்டும் என்றாய் ராமலிங்கமே
எட்டாமல் போவது ஏனோ.

ஏனோ அறியேன்என் உயிரினில் கலந்ததனால்
தானோ வரமறுக்கின்றாய் தனியே - வானோ
காற்றோ எல்லாக் கூற்றும் ராமலிங்கமே
போற்றும் அரும் பொருளே.

பொருள்நிலைக் காணாது பொறுத்தேன் தலைவா
திருநிலை காட்டித் திருப்பு - இருந்த
வேலையும் விட்டு வந்தேன் ராமலிங்கமே
காலைப் பிடித்துக் கட்டேன்.

கட்டுங் கணக்கைக் காட்டி கால்
முட்டு மிடத்தை மணந்தாய் - விட்டுக்
கொடுக்கும் மனங் கொடு ராமலிங்கமே
ஒடுங்க வாராய் என்னுள்.
என்னையே கொடுத்தேன் எனதுயிர் உறவால்
உன்னையே எடுத்து உயர்ந்தேன் - நன்மையே
நவிலும் உன் நாவால் ராமலிங்கமே
கவிப்பல சொல்லக் குறித்தேன்.

தேனென இனிக்கும் திருவருட்பாக் கடலே
நானென இருக்கும் நாயகனே - ஈன்ற
வலி இனியும் விடுப்பனோ ராமலிங்கமே
பலி கொடுப்பதே பிறப்பு.                            250  

பிறக்க அழுதேனோ பிறந்து அழுதேனோ
இறக்க அழுதேனோ இங்கு - சிறக்க
உனை நினைத்து அழுதிலேன் ராமலிங்கமே
வினை தடுக்க விதிசெய்.

செய்த தவப்பலனாக சன்மார்க்கச் சாலை
எய்தி இறவாவரம் உற்றேன் - மெய்யே
எழுதினேன் பொய் எனில் ராமலிங்கமே
வழக்குப் போடுவேன் வந்து.

வந்து நான்செய்த வேலைகள் ஏதுமில்லை
நொந்து செல்லவோ நாயகா - வெந்து
கால் முட்டக் காணாது ராமலிங்கமே
பால் அருந்தப் பார்த்தேன்.

பார்க்கத் தெரியாது படித்தால் புரியாது
வார்த்தால் வராது வானம் - சார்ந்த
சன்மார்க்க சங்கத்தைச் சேர ராமலிங்கமே
தன்நிலை காட்ட தொடும்வானம்.

வானத்தில் சுற்றலாம் வாடாஎன் கண்ணே
ஞானமும் போதைதான் வாடாஎன் - கானமும்
பானமாகி உன்னைப் புகழ ராமலிங்கமே
போனப் பிறவிப்போல் போவேனோ.

போவேன் மேன்மேலும் பரமாகாச வானில்
ஈவேன் என் இன்னுயிரை - நோவேன்
இவ்வுலக வாழ்வு இசைய ராமலிங்கமே
அவ்வுலகம் காண்பது அறிவு.

அறிவுப் பெருங்கோவில் அகத்தில் காட்டி
குறிப்பால் நடுயிருந்த குருவே - பறித்த
பழமதை ருசி பார்க்க ராமலிங்கமே
அழகன் எனக்கு ஆசையே.

ஆசையெலாம் உன் அருட்பா ஓசையால்
மீசையும் போய் மாண்டதே - காசை
கூட்டும் பாவக் கணக்கை ராமலிங்கமே
பூட்டுப் போட்டு பூட்டுமே.
பூட்டைத் திறந்துப் பார்க்க எனக்குமோர்
வீட்டைக் கொடுத்த வள்ளலே - காட்டைக்
கடந்து செல்லக் காவலாய் ராமலிங்கமே
நடந்து வருவாய் நாளுமே.

நாளும் முப்பத்துமூன்றை நாவினால் ஓத
வாளறுந்து போகும் வினை - கோளும்
அதில் வாழும் உயிரும் ராமலிங்கமே
கதிபெற்று உயரக் காப்பாய்.                         260

காப்பாய் நீயென கடலில் விழுந்து
கூப்பாடு போட்டு கலங்கினேன் - சாப்பாடு
போட்டு கரைசேர்ப் பித்த ராமலிங்கமே
காட்டு உனது கதிர்நலத்தை.

நலமோங்கு மந்திரம் நானறிந்து என்
குலதெய்வம் நீஎனக் கண்டேன் - மலமொத்த
வாழ்வில் எனை வீழ்த்தாது ராமலிங்கமே
ஏழ்பிறப்பும் எனை ஏந்தினாய்.

ஏந்தியக் கரங்கள் எதிர்வர உன்னிரு
காந்தியக் கண்களைக் காணேணோ - சாந்தி
எங்கும் நிலவ எண்ணில் ராமலிங்கமே
தங்கள் தயவைத் தாரும்.

தருகின்ற அமுதத்தை தலை வணங்கிப்
பருகநானும் சன்மார்க்க பொருளானேன் - உருகி
உனைப் பாடவே உயர்ந்தேன் ராமலிங்கமே
எனையும் சமமாக்க எண்ணு.

எண்ணுந் தோறும் என்னிதயம் துள்ளி
கண்ணில் நீர் காணுதே - பண்ணில்
கலந்து எழுதி காட்டும் ராமலிங்கமே
தலமோங்கப் பாடுவாய் தழைத்து.

தழைத்த சன்மார்க்கம் துலங்கி பெருவாழ்வு
இழைத்திட இணங்கி அருளாய் - பிழை
எல்லாம் பொறுத்து ஏற்பாய் ராமலிங்கமே
கல்லான் பிழையும் கணக்கோ.

கணக்கில்லா அண்டங்களை கடந்து சுகம்
உணரும் நாள்தான் எந்நாளோ - குணங்கள்
ஒழிந்து துரிய மாவதை ராமலிங்கமே
குழியில் விழும்முன் கூட்டு.

கூட்டு சதியால் குலைக்கும் பொறிகளை
ஓட்டும் நாள்தான் எந்நாளோ - வாட்டும்
மன்மத லீலையை மறக்க ராமலிங்கமே
உன்பாத நிழலில் உறைந்தேன்.
உறைந்தப் பனி உருகுவதுபோல் உயிருருகி
இறைவனாகும் நாள்தான் எந்நாளோ - மறைத்த
திரைகளை தயவால் தள்ளும்முன் ராமலிங்கமே
நரைதிறை மூப்பை நாட்டாதே.

நாட்டுகின்ற மதமெலாம் நன்மார்க்கப் பொது
ஆட்ட மாடும்நாள்தான் எந்நாளோ - சூட்டும்
அந்தாதிப் பாடலை அலங்கரிக்க ராமலிங்கமே
வந்து பொதுவாக்கி விடுத்தான்.                      270

விடுதலை வேண்டி விண்ணப்பித்து விண்ணில்
ஒடுங்கும் நாள்தான் எந்நாளோ - படுகுழி
பாவையின் கண் படுமோ ராமலிங்கமே
சாவை விரும்புமோ சன்மார்க்கம்.

சன்மார்க்க சமரச சத்திய சுத்தமானது
என்னளவில் வருநாள் எந்நாளோ - என்று
தினந் தினம் துவல்கிறேன் ராமலிங்கமே
மனம் உருகும் மந்திரந்தா.

மந்திரஞ் சொல்லி மனமடக்கி நான்
எந்திர மாகும்நாள் எந்நாளோ - தந்திரஞ்
சொல்லி நாதமுடி சந்திரனாக ராமலிங்கமே
பல்லி நன்னிமித்தம் புகலாய்.

புகன்ற வள்ளுவன் புகழ்குறள்படி சாகா
உகம் காணும்நாள் எந்நாளோ - இகபர
வாழ்வில் இரக்கம் வர ராமலிங்கமே
ஊழ்வினை உறுத்து ஊட்டுமோ.

ஊட்டும் உணவினை உவட்டாது உண்ண
ஆட்டுவிக்க ஆடும்நாள் எந்நாளோ - ஏட்டுக்
கல்வியும் இங்கு கறியாக ராமலிங்கமே
பல்லவி பாடுவாய்ப் புகழ்ந்து.

புகழ்ந்து நானுரைக்கும் பாட்டெல்லாம் நீவந்து
அகழ்ந்து ஆளும்நாள் எந்நாளோ - தகன்ற
நெஞ் சகத்தை நெகிழ்விக்க ராமலிங்கமே
அஞ்சுவது தான் அழகோ.

அழகைப் பார்க்காது அகத்தைப் பார்த்து
அழுகின்ற நாள்தான் எந்நாளோ - கழுகேற்றி
மதம் மாற்றிய மடையனை ராமலிங்கமே
நிதம் புகழ்வது நியாயமோ.

நியாயஞ் சொல்லும் நித்திய ஒழுக்கத்தை
ஓயாமல் பிடிக்கும்நாள் எந்நாளோ - மாயா
உலகப் பற்றை உடைக்க ராமலிங்கமே
பலங் கொடுப்பாய் பாமரனுக்கு.
பாமரனும் ஞானியாகி பைந்தமிழில் பாடியே
ஏமம் செய்யும்நாள் எந்நாளோ - காமமுன்
நாமம் சொல்ல நெடுமே ராமலிங்கமே
தாமதம் ஏனோ தயவருள.

அருளும் திரையோதச அலையில் மூழ்கி
உருளும் நாள்தான் எந்நாளோ - குருவும்
இறையும் நீஎன இருந்தேன் ராமலிங்கமே
மறைராகத் திரைநீக்கி மீட்டாய்.                      280

மீட்டுமின்ப ராகத்தில் மரணமிலா ராகத்தை
ஈட்டும் நாள்தான் எந்நாளோ - கேட்டும்
இல்லை எனில் அந்தோ ராமலிங்கமே
எல்லை கடந்து ஏறுவேன்.

ஏறுகின்ற வழியெலாம் ஏகாந்தனைப் பார்த்து
ஊறுகின்ற நாள்தான் எந்நாளோ - மாறுகின்ற
உலக மாயை அறுத்து ராமலிங்கமே
கலகமில்லா நடம் காட்டு.

காட்டா தொழிக்கவே கர்வந் தன்னை
ஓட்டும் நாள்தான் எந்நாளோ - மாட்டி
விட்ட தேகம் வாடாது ராமலிங்கமே
துட்ட வாசனை துடைப்பாய்.

துடைக்கும் துயரெலாம் துடைத்து சன்மார்க்க
மடையும் நாள்தான் எந்நாளோ - தடை
ஏது கண்டாய் என் ராமலிங்கமே
சூது செய்யாது சூழ்வாய்.

சூழும் உலகிடை சூழ்ச்சிவிட்டு என்னில்
ஆழும் நாள்தான் எந்நாளோ - வீழும்
உடலிடை நீ இருக்க ராமலிங்கமே
சடமென வீழேன் சத்தியம்.

சத்திய ஞானசபை சுயத்தில் கண்டுஅதில்
அத்தை காணும்நாள் எந்நாளோ - வித்தை
புரியும் விவரம் புகன்று ராமலிங்கமே
உரித்தாகுக உரிய இன்பத்தை.

இன்பம் துன்பம் இரண்டுமின்றி சன்மார்க்க
அன்பராகும் நாள்தான் எந்நாளோ - தன்னொளி
தான் பார்க்கத் தடையோ ராமலிங்கமே
வான் ஒளியாய் வழங்கு.

வழங்கும் முத்தேக வித்தைப் பெற்று
உழலும் நாள்தான் எந்நாளோ - விழலும்
நீர் பெற்று நீளுமே ராமலிங்கமே
சீர்த்தர எனக்கு சிரமமோ.
சிரமமின்றி நாளும் சீவ காருண்ய
இரக்கம் காணும்நாள் எந்நாளோ - நரகில்
இடர் படோம் என்றும் ராமலிங்கமே
விடம் கொடுத்தாலும் வரமே.

வரம் வாங்கிவந்து விளங்கி ஓங்கும்
சிரம் காணும்நாள் எந்நாளோ - கரம்
பிடித்து நாடி பார்த்த ராமலிங்கமே
விடிந்ததே என் வானம்.                            290

வானம் வசப்பட்டு வானறிவும் பெற்று
ஊனம் நீங்கும்நாள் எந்நாளோ - தானம்
அளிக்கும் திற னளித்து ராமலிங்கமே
களிம்பை நீக்கி கனகமாக்கு.

கனலை உணர்ந்து கனகமாகி உன்அக
இனமாகும் நாள்தான் எந்நாளோ - மனம்
வாட்ட மடைய வள்ளல் ராமலிங்கமே
காட்டுவேன் பல காரணம்.

காரணப்பட்டு காணும் கந்தசாமி போல
ஆரணங் கடக்கும்நாள் எந்நாளோ - பூரண
சுத்தசிவ நோக்கம் சார்ந்து ராமலிங்கமே
புத்தகங்கள் கணத்தில் படிப்பேனோ.

படிப்பறியா பாவியேன் படுந்துன்ப மறந்துன்
அடிக்காணும் நாள்தான் எந்நாளோ - முடிவற்ற
வாழ்வாம் பெரு வாழ்வை ராமலிங்கமே
பாழ் படாது பயிற்று.

பயிலும் பாடத்தில் பிரணவங் கற்றுஎன்
உயிரை காணும்நாள் எந்நாளோ - வயிற்றுப்
பசி நீங்கியேப் போக ராமலிங்கமே
புசிக்க முப்பூப் பொருளைத்தா.

பொருளெல்லாம் அருளாய் பார்க்கும் உன்திரு
வருட்பா இயற்றும்நாள் எந்நாளோ - ஒருமந்திரம்
இயற்றி உனை இசைப்பேன் ராமலிங்கமே
பயம் பூஜ்ஜியமாகிப் போனதே.

போவென்று சொன்னாலும் போகாத பாவத்தால்
ஓவென்று அழும்நாள் எந்நாளோ - வாவென்று
என்று சொல்லி அனுப்பிய ராமலிங்கமே
வென்றேன் அங்கு வரட்டுமா.

வரம் எனப்படும் வள்ளலின் அருளை
கர மேந்தும்நாள் எந்நாளோ - சர
ஓட்டங் கண் டாட ராமலிங்கமே
பாட்டுக்குத் தாளம் போடுவாய்.
வாயெல்லாம் இனிக்க வானவனைப் பாடி
ஆய்ந் திருக்கும்நாள் எந்நாளோ - ஓய்ந்திருக்க
ஆகுமோ என் அய்யா ராமலிங்கமே
சாகுமோ எனது சங்கம்.

சங்கத்தில் இருந்தே சாதுவாகி சாகாத
அங்கமாகும் நாள்தான் எந்நாளோ - தங்கம்
செய்யு மாற்றல் சனித்தும் ராமலிங்கமே
அய்யோ அதனை அண்டேனே.                      300

(இராமலிங்க அந்தாதி - தொடரும்)