Friday, November 22, 2019

95-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு

95-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு
+++++++++++++++++
அன்புடையீர்!
நிகழும் வள்ளலார் வருடம் 197 / தமிழ் எழில்மாறல் (ஸ்ரீ விகாரி) வருடம் கார்த்திகை 17-ஆம் நாள் செவ்வாய் கிழமை அவிட்ட நட்சத்திரம் (03-12-2019) காலை 10.00 மணியளவில் வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் 95-ஆம் ஆண்டு குரு பூஜை அருள் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அவ்வமயம் வள்ளற்பெருமானின் அருள் அவரது அணுக்கத்தொண்டருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் அவரவர்கள் அனுபவத்திற்கு ஏற்ப கிடைப்பது உறுதி.
காரணப்பட்டில் வசிக்கும் புற இனத்தார்கள் எல்லாம் விரைவில் அக இனமாக மாற வேண்டும் என, வள்ளற்பெருமான் காரணப்பட்டு மக்களையும் உலக மக்களையும் அவ்வாறே இங்கு அழைக்கின்றார். எனவே சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் டிசம்பர் 03-ஆம் தேதி காலை 10-மணியளவில் சமரஜ பஜனையாம் ஜோதி வழிபாட்டில் கலந்துக்கொண்டு அருள் நிலையத்தின் அருளை பெற வேண்டுகின்றோம்.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.
காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி
மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும். நன்றி.
இங்ஙனம்
திருவருட்பிரகாச வள்ளலார்
ச.மு.க. ஐயாவின் வழித்தோன்றல்கள்
சுத்த சன்மார்க்க அன்பர்கள்
காரணப்பட்டு கிராம மக்கள்