Friday, October 24, 2014

இராமலிங்க அகவல்

ராமலிங்க அகவல்

சற்குரு திருஅருட்பிரகாசர் அருளாலும் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையாலும் "இராமலிங்க அகவல்" என்கிற இவ்வகவல், சுத்த சன்மார்க்க உலகிற்காக அருளப்பட்டுள்ளது. திருஅருட்பிரகாசரின் பெயரினையே இவ்வகவலுக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இவ்வகவலை என்னுளிருந்து சற்குரு புனைந்தவாரே நானும் (தி..இராமலிங்கம்-கடலூர்) புனைந்துள்ளேன்.

இவ்வகவல் நிலைமண்டில ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திருஅருட்பிரகாசர் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்" 1596 அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். தற்போது 2010 அடிகளைக் கொண்ட இந்த "இராமலிங்க அகவல்" அருளப்பட்டுள்ளதால், சுத்த சன்மார்க்க உலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் "இராமலிங்க அகவலை" மிஞ்சிய மிகப்பெரிய பாடல் இல்லை என்பது இதன் சிறப்பாக உள்ளது.


இராமலிங்க அகவல்

ருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தானாகி                26022014
அருள்புரியும் சிதம்பரம் இராம லிங்கம்

ன்மபிரகா மாய் ஓங்கி எங்கும்
ஊன்றிய சிதம்பரம் இராம லிங்கம்

ங்குலகில் அனையா வருள் ஜோதியாய்
எங்குமொளிரும் சிதம்பரம் இராம லிங்கம்

வதுஇது வெனக்கூறி அன்னதானத் தால்நாம்
ஆவதுஇறைஎன்ற சிதம்பரம் இராம லிங்கம்

ண்மை உரைத் துலகில் நமக்கெல்லாம்
அண்ணனான சிதம்பரம் இராம லிங்கம்                         10

ரற்று தந்தை அம்பலத்தை தம்பெயர்முன்
ஓர்நிலையாக்கிய சிதம்பரம் இராம லிங்கம்

துவும் இல்லாதாகி எல்லாம் தானாகி
அதுவுமாகிய சிதம்பரம் இராம லிங்கம்

கமாகி போகமாகி உலகுக்கு அருட்பாவை
ஆகமமாக்கிய சிதம்பரம் இராம லிங்கம்

ம் பொறியும் அறியஜீவ காருண்யத்தை
அம்பலமாக்கிய சிதம்பரம் இராம லிங்கம்

த்தது ஒருமையில் ஓங்கிய சித்தது
அத்ததாகிய சிதம்பரம் இராம லிங்கம்                           20

தாது உணர்த்தியதை என்றும் இசைக்கின்ற
ஊதாதஒலியாகிய சிதம்பரம் இராம லிங்கம்

ஒளவென்ற ஒலியால் அடங்கிய பசுவாய்
அவ்வுளவாகிய சிதம்பரம் இராம லிங்கம்

தொரு மாடமாய் இயங்கு முக்கண்னாய்
அக்துருவான சிதம்பரம் இராம லிங்கம்

புணரும் இன்பம் புரியவைத்து எனக்கோர்
உணர்ச்சியாம் சிதம்பரம் இராம லிங்கம்

ஆற்று நீரென ஓடவிட்டு என்பாட்டை
ஏற்றும் சிதம்பரம் இராம லிங்கம்                              30

காற்றாகி காட்சியாகி என்னுள்ளே அமுத
ஊற்றாகும் சிதம்பரம் இராம லிங்கம்

விடத்தை அமுதாக்கிய வித்தகன் எந்தன்
உடலுயிராம் சிதம்பரம் இராம லிங்கம்

விதியல்லா மதியால் வாஎன நினைக்க
எதிர்வரும் சிதம்பரம் இராம லிங்கம்

அருளிய அருட்பாவுடன் இப்பாட்டும் நல்
அருளாணையாம் சிதம்பரம் இராம லிங்கம்

என்றோ எனஇருக்க அங்கமதில் சங்கமித்து
அன்றுவந்தாண்ட சிதம்பரம் இராம லிங்கம்                      40

சிறுமை நீங்கி சிற்சபையுள் என்றுந்தீரா
உறுபசியாம் சிதம்பரம் இராம லிங்கம்

குரைத்த வேதங் கெடுத்துத் தமிழை
உரைத்த சிதம்பரம் இராம லிங்கம்

மதம்பிடித்த உலகோர் மீள மருதூரில்
உதயமான சிதம்பரம் இராம லிங்கம்

விந்தைகள் செய்து விண்ணிலும் மண்ணிலும்
ஐந்தொழில்செய் சிதம்பரம் இராம லிங்கம்

புன்னான மங்கையுடன் புணரும் மாயையில்
என்னைவிடாத சிதம்பரம் இராம லிங்கம்                       50

சிறந்தன என்றிங்கு சிரித்தமத மார்க்கமெலாம்
இறந்தனவென்ற சிதம்பரம் இராம லிங்கம்

அன்ன மளித் தன்பர்பசி நீக்கியமெய்
இன்பமாம் சிதம்பரம் இராம லிங்கம்

ஆர்தருவார் ஒருமை எங்களுக் கென்றும்
ஓர்தலைமை சிதம்பரம் இராம லிங்கம்

வல்லானே நல்லானே வான உருவான
எல்லையாம் சிதம்பரம் இராம லிங்கம்

வளியாகி ஒலியாகி வானாகி புனலாகி
ஒளிஉருவாம் சிதம்பரம் இராம லிங்கம்                         60

வல்லான் இல்லான் வாழ்வான் வீழ்வான்
எல்லார்க்கும் நல்லானான இராம லிங்கம்

கண்கள் கலந்து காதலாகி கசிந்துருகி
எண்ணத்தில் ஒன்றிய இராம லிங்கம்

கல்லா நெஞ்சத்துள் கனிந்து இனித்தான்
எல்லாம்செய் வல்லான் இராம லிங்கம்

இருளாய் ஒளியாய் அருவாய் உருவாய்
அருளாய் வருவாய் இராம லிங்கம்

தவமாய் இதமாய் தத்துவ நிலையாய்
அவனாய் நிற்பாய் இராம லிங்கம்                              70

வானந்த வெளியே விண்நடு ஒளியே
ஆனந்த நாதனேஎன் இராம லிங்கம்

ஒருகடை விரித்தே ஒருவனை விற்கும்
அருளுடை அப்பனான இராம லிங்கம்

தள்வது தள்ளித் தலைவனைக் காட்டி
உள்ளது உரைத்தஎன் இராம லிங்கம்

நில்லாத ஆக்கை நிலைக்குமென்ற எங்கள்
இல்லத்துப் பிள்ளையான இராம லிங்கம்

பல்லாரும் கடவுள் பற்பல ஆனாரும்
எல்லாரும் வணங்கும் இராம லிங்கம்                          80

கருவில் அமர்ந்த குருவே என்னகத்தில்
அருள்நாடகம் புரியும் இராம லிங்கம்

தம்பலம் முழுதும் தந்து எம்பலமாக்கிய
அம்பலமே அற்புதமே இராம லிங்கம்

விடி வெள்ளி விண்டது அவன்
அடிமுடி கண்ட இராம லிங்கம்

கொடி கட்டிக் கொண்டே பேருபதேசம்
இடிமுழக்க மானது இராம லிங்கம்

மருளு பதேசம் மாளவே சத்திய
அருளு பதேசமான இராம லிங்கம்                             90

உப்பிட்ட உயிரான உண்மை பதியான
அப்பர் வருவாரென்ற இராம லிங்கம்

கற்பூரம் மணக்கும் காயம் அளித்தே
அற்புதம் செய்வாரென்ற இராம லிங்கம்

குட மொன்று குலையாது சித்தகத்தில்
இடமொன்று அளித்த இராம லிங்கம்

தானே வந்திங்கு தன்னோடு கலந்தான்
நானே சத்தியமென்ற இராம லிங்கம்

வானே உருவாய் வந்திங்கு எனது
ஊனே புகுந்தான் இராம லிங்கம்                         100

வளி சுழலான வான் மழையான
ஒளி வண்ணமான இராம லிங்கம்



சன்மார்க்கி ஆகி சகத்தில் சாகதவனே
என்மார்க்கம் என்ற இராம லிங்கம்

அழுவா ரறிய இங்கு செத்தவர்
எழுவார் என்ற இராம லிங்கம்

மது உண்டு மாளாயாக்கை அருள்வதற்கு
இதுவே தருணமென்ற இராம லிங்கம்

கருணை களித்து காருண்யம் இலயித்து
அருட்ஜோதி ஆனேனென்ற இராம லிங்கம்                      110

அருவான சித்தனிடம் அன்பான அப்பரிடம்
அருளாட்சி பெற்றோங்கும் இராம லிங்கம்

எவ்வுலகி லமைந்த உடலெல்லாம் அதிலுறும்
எவ்வுயிரும் தம்முயிரென்ற இராம லிங்கம்

சத்தியம் சார்ந்து சுகமளித் துயிர்களை
ஒத்துரிமை யாக்கிய இராம லிங்கம்

சுத்த சன்மார்க்கத்தில் சுத்த சித்துருவாய்
எத்துணையும் பேதமுறா இராம லிங்கம்

பொருள்நெறிக் காணாது பொது நெறியில்
அருள்நெறி அளித்த இராம லிங்கம்                             120

மருட்பா என்று முழங்கியோர்க்கும் திரு
அருட்பா அளித்த இராம லிங்கம்

குடியிருக்கும் கோயிலை கொல்லா திருப்போர்
அடிக்கு ஏவல்புரியும் இராம லிங்கம்

நன்றே செய்து நடிக்கும் கருணை
ஒன்றே வடிவான இராம லிங்கம்

சும்மா இருக்கும் சுகமதை யளித்த
அம்மா என்னப்பா இராம லிங்கம்

பாகம் பிரித்து பரமனை வணங்காது
ஏகம் சிவம்ஏகமென்ற இராம லிங்கம்                           130

மாய உலகிலினில் மாளது காயநேய
ஆயவாய நேயனாம் இராம லிங்கம்

போதநாத சபாநாத பாபநாச ஜோதிநேச
ஆதவாத வேதகீத இராம லிங்கம்

தங்கஅங்க துங்கபுங்க தயாலிங்க சங்கமே
அங்கலிங்க ஜோதியாம் இராம லிங்கம்

எத்திக்கும் தித்திக்கும் ஆனந்த அந்தமே
அத்தமுத்த ஆதியாம் இராம லிங்கம்

துஞ்சேல் இனிசுகமே துயரம் யாதுபற்றினும்
அஞ்சேல் அஞ்சேலென்ற இராம லிங்கம்                        140

வட்டமிட்ட தண்டநிட்ட வாட்டமிங்கு தீரவே
அட்டவட்ட நட்டமிட்ட இராம லிங்கம்

உகார மகார இகார சிகாரமே
அகார ஊரனாம் இராம லிங்கம்

அரியபெரிய முத்தேகம் அறிந் தடைந்த
உரியதுரிய பிரியனாம் இராம லிங்கம்

பயிர்களை வளர்த்து பசித்துன்ப மில்லா
உயிர்களைக் காக்கும் இராம லிங்கம்

கலகமுற்று வாழுமக்கள் கருணையுற்று வாழவே
உலகமுழுதும் அமுதுபொழியும் இராம லிங்கம்                  150

உதய சூரியன் அருட்பா பாடகன்
இதய நாயகன் இராம லிங்கம்

குறியுள் இன்பமே கூடிப்பெற்ற சுகமே
அறிவுள் அறியுமறிவே இராம லிங்கம்

பினிநரை மூப்பு பற்றற்ற தேகத்திலோர்
இனிய நிறைவுதரும் இராம லிங்கம்

இன்பம் பொங்கும் இதய கமலத்துள்
அன்பர் நிலைக்கநின்ற இராம லிங்கம்

குலங்களும் மதங்களும் கழன்றவர் மனதிலே
இலங்குஞான நாதமாம் இராம லிங்கம்                    160

தேடிய வேதத்திலே பாடிய கீதத்திலே
ஆடிய பாதமாம் இராம லிங்கம்

தம்முடல் பலமே தம்முயிர் உறவே
எம்குலச் சிவமாம் இராம லிங்கம்

கண்ணொளி காட்சியே கருணைநிறை ஆட்சியே
எண்குணச் சுடராம் இராம லிங்கம்

என்புதோல் போர்த்த உடம்பில் வந்துதித்த
அன்புடைக் குருவாம் இராம லிங்கம்

விதி யாளும் வினையை ஓட்டும்
அதிகார பதியாம் இராம லிங்கம்                         170

கருவுறும் இடத்தே கனிதரும் மரமே
அருளுறு வெளியாம் இராம லிங்கம்

சிற்றின்ப சிறையில் சிக்கி மாளும்
ஒற்றனை உதைத்த இராம லிங்கம்

தாக உணர்வானே ஏக இறையானே
ஆகம மேலவனே இராம லிங்கம்

சாதிநீதி நீங்கவே சோதிதனைக் காட்டியே
ஆதிநீதி வேதனான இராம லிங்கம்
பாடும்ஏடு போதுமா பாவம்நீங்கிப் போகுமா
ஆடல்நீடு பாதனான இராம லிங்கம்                            180

நாறிய பிண்டத்தை நாயகன் தோளிலேற்றி
ஏறிக்கரை ஏறிய இராம லிங்கம்

இன்னல் இன்றியே இன்ப மயமாய்
என்னுள் அமர்ந்த இராம லிங்கம்

கள்ள மனதால் கடிந்து ரையாமல்
உள்ளது உரைத்த இராம லிங்கம்

ஏனந்த வேதங்கள் வீனந்த வாதங்களென்ற
ஆனந்த நாதனாம் இராம லிங்கம்

அக்கரை ஏதுமின்றி இக்கரை அதுவுமின்றி
எக்கரையுமின்றி ஓங்கும் இராம லிங்கம்                  190

குருவும் வந்திங்குக் குருட்டை நீக்கினார்
இருட்டை நீக்கும்ரவியாம் இராம லிங்கம்  

வேதா கமங்களின் விளைவை எல்லாம்
ஓதா துணர்ந்த இராம லிங்கம்

நம்மொடு இருந்தே நீடு வாழ்வளிக்கும்
எம்பெரு வாழ்வாம் இராம லிங்கம்

கபடும் சூதும் கள்ளமும் நீக்கியே
அபயம் அளித்த இராம லிங்கம்

விபத்தில்லா உலக வாழ்வை அளிக்கும்
உபயப் பதமாம் இராம லிங்கம்                                200

எவ்வுயிரும் இன்புற் றிருக்க நீடுவாழும்
இவ்வுடம்பை எடுத்த இராம லிங்கம்

அளந்தறியா இறையை அடிமுடிக் காண
உளவறிந்து அளந்த இராம லிங்கம்

திருச் சிற்றம்பலத்தே திருநட ஜோதிகண்டு
அருட்பாலை அருந்திய இராம லிங்கம்

சிரிப்பும் கோபமும் சதிசெய்யும் காமமும்
எரித்த என்னய்யா இராம லிங்கம்

சன்னதியின் முன்னே செருக்குடன் நின்ற
என்னையும் பணிவித்த இராம லிங்கம்                         210

எவ்வுலகிலும் இலை எனைப்போல் அருளர்
இவ்வுலகிலும் இலைஎன்ற இராம லிங்கம்

என்மீது ஆணை எல்லாம் செயல்கூடுமென்ற
உன்ஆணை செயலோங்கும் இராம லிங்கம்

கற்ற சாகாக் கல்வியுடன் ஒத்தஒழுக்கமும்
உற்ற துணையென்ற இராம லிங்கம்

உனை மறவாதுஎனது உள்ளம் மறக்கினும்
எனையாளும் துரையாம் இராம லிங்கம்

முன்செய் தவத்தால் மயக்கம் நீக்கி
என்னுயிரில் கலந்த இராம லிங்கம்                             220

சிறுபயல் விளையாட்டை சகித்து நான்
உறுசெயலை திருத்தும் இராம லிங்கம்

கழியும் ஓர்நாளாய் கற்பம் கடக்கினும்
அழியாதமுத் தேகன் இராம லிங்கம்

தன்னிலை என்னிலை தருமொரு நிலையான
என்னிரு கண்மணியாம் இராம லிங்கம்

என்னையே கொடுத்தேன் உனக்கு எனக்கு
உன்பெரிய பெயரைஈந்த இராம லிங்கம்

இச்சகத்தில் என்னரு ளன்றி ஏதுமில்லைஎன
அச்சம் தவித்தஎன் இராம லிங்கம்                             230

சிந்தை களித்து சிற்றறிவைக் கடந்தேன்
எந்தன் பேறறிவாம் இராம லிங்கம்

படிஎன்று ஆணையால் படித்த எனை
அடியன் எனவைத்த இராம லிங்கம்

அந்நாளில் வருவேன் என்றுச் சொல்லி
எந்நாளைத் தெரிவித்த இராம லிங்கம்

எஞ்ஞானமு மின்றி மெய்ஞான மிழைய
அஞ்ஞானம் களைத்த இராம லிங்கம்

பன்மார்க்க தெய்வங்களும் பயன் பெறும்
ஒன்றென்ற உணர்ச்சியில் இராம லிங்கம்                       240

பின்தொடர்ந்து வந்து பித்தனை அடியனாக்கி
என்தரத்தை உயர்த்திய இராம லிங்கம்

தனமென்ற குணமென்ற தான தருமமென்ற
எனக்கென்ற பொருளாம் இராம லிங்கம்

அன்பெனும் அப்பனை அருட்பெருஞ் ஜோதியனை
என்கரங்களில் கொடுத்தீந்த இராம லிங்கம்

நல்லான் நமக்குள் நிறைவான் நினைவான்
எல்லாஞ் செய்வல்லான் இராம லிங்கம்

கன்மம் ஆணவம் காரிருள் நீக்கியே
என்பால் தயவுசெய்த இராம லிங்கம்                           250

தன்செயலால் வாழும் தயவுடையார் யார்க்கும்
அன்னியன் அல்லனென்ற இராம லிங்கம்

வழி தெரியாது வடலூர் வந்தஎன்னை
இழியாது அருளும் இராம லிங்கம்

தேடிய இடத்தில் தயவுடன் மெல்லெழுந்
தாடியகால் மலராம் இராம லிங்கம்

தட்டி எழுப்பி தாழ்திறக்கும் தயவோனே
எட்டும் இரண்டுமான இராம லிங்கம்

ஒருவன் உயிரான அருவன் நிலையான
உருவன் மூலாங்க இராம லிங்கம்                              260

அடியை வீழ்த்து மந்த மரணாதிகளுக்கு
இடியாய் இருந்து அருளும் இராமலிங்கம்

பாடையிலே படுத்து பின்மண் மூடிப்போகாது
ஓடையிலே நீர்போல ஓடுகின்ற இராமலிங்கம்

மரணமிலா வாழ்வை மனிதம் பெறவே
தரணியில் தயவால் தரும் இராமலிங்கம்

எடுக்கும் போதெல்லாம் அழுகின்றேன் நானும்
படுக்கும் நேரமெலாம் பயந்தேன் இராமலிங்கம்

சாகாக் கல்வி சர்க்கரையே சுவையான
ஆகார அற்புதமே யாகும் இராமலிங்கம்                         270

சுத்தசன் மார்க்கமாம் சகத்தில் ஓர்புதியவிதை
வித்திட்ட விவசாயி வள்ளல் இராமலிங்கம்

வெள்ளாடை அணிந்து வரும் அன்பர்களின்
தள்ளாட்டம் போக்கும் தயாளன் இராமலிங்கம்            

கைகளை கட்டியே கடிந்தவர்க்கும் அன்புப்
பைகளை அளிக்கும் பகலவன் இராமலிங்கம்             

அடக்கமே உருவாய் உருக்கமே பார்வையாய்
நடக்குமே முன்நின்ற நிழலான் இராமலிங்கம்

தாள்பட்ட மண்ணாங்கட்டி தகன்றதைப் பார்த்து
வாள்பட்ட மரம்போல வாடிய இராமலிங்கம்                     280

தாம்வாடினால் பயிரும்வாடு தலால் ஆன்மநேயம்
காம்பிற்கும் உண்டுடென்ற கருணீக இராமலிங்கம்

பட்சிகளை பதைக்க பழங்கொடுத்து கூண்டினுள்
கட்டு வித்ததை கடிந்துரைத்த இராமலிங்கம்

விலங்குகளை கொன்று விருந்துண்ணும் மனித
குலங்களை புறவினமென குறித்த இராமலிங்கம்

குலவழக்க மென்று கொலைசெய்யும் கோவிலை
உலகில் கண்டபோது அலறிய இராமலிங்கம்

ஆடுமாடு கோழிகளை அலங்கரித்து பலியிட்டு
ஆடுகின்றீர் அன்பறியீரென்ற அன்பு இராமலிங்கம்                290

கருணை உடையோரெல்லாம் கூடி அகத்தில்
அருள்பெற ஞானசபை அளித்த இராமலிங்கம்

உலகுயிர்கள் இன்புற்று ஓர்வாழ்வியல் நடத்த
உலகியல் வகுத்த உத்தமன் இராமலிங்கம்                     

ஓரணுவிலே பேரொளி அமர்வை அளந்த
பேரன்பனே அணுபரா பரமே இராமலிங்கம்

அடுக்கிய அண்டமெலாம் அருகிலே பார்க்கும்
நெடுபார்வை உடைய நல் இராமலிங்கம்

அண்டவெளி யெலாம் உயிர்கள் உண்டென
உண்மை உரைத்த உயிரான இராமலிங்கம்                      300

எல்லா அண்டங்களும் அணுவில் அடக்கும்
வல்லான் பெற்ற வான்பிள்ளை இராமலிங்கம்

அண்டம் விசாலமானது அதைவிட மானிட
பிண்டம் பெரியதென்ற பிள்ளை இராமலிங்கம்

ஐந்தொழிலை ஓர்துறும்பும் இயக்கு மென்ற
உந்தன்சொல் பலிக்க அருள் இராமலிங்கம்

உன்தேகத்தி னோர்முடி செத்தாரைஎழுப்பும்
என்றுச் சொல்லி எழுப்பிய இராமலிங்கம்

செயல் எல்லாம்கூட சோதிதனை ஏற்று
மயல் வாழ்வை மறந்த இராமலிங்கம்                          310

உலகெலாம் பதத்திற்கு அகஉலகை காண்பித்து
பலபெயரிட வதுவிரிய பார்த்த இராமலிங்கம்

இல்லாதநிலை யதுஅணுவும் அல்லாத நிலை
எல்லாமாகி விளங்குகின்ற இறை இராமலிங்கம்                 

பொய்யான சாதிமதசமய பழக்கத்தை விடுத்து
மெய்சுத்த சன்மார்க்கம் மலந்த இராமலிங்கம்

இறப்பொழிக்கும் மார்க்கம் இங்கே வம்மின்
உறவுகளே என்று அழைக்கும் இராமலிங்கம்

இதிகாச புராண மியற்றிய வேதமெல்லாம்
மதிக்காது ஆளும் மன்னன் இராமலிங்கம்                       320

மதசமய ஆசாரங்கள் மறைஎன்பன யாவும்
உதவாத ஊடகமென்ற உறவன் இராமலிங்கம்

எல்லாவற்றையும் விட்டு இறவா நிலைபெற்று
அல்லலற்று நீடூழி ஓங்கும் இராமலிங்கம்

குருட்டு நடையாம் கண்மூடிபழக்க மெலாம்
சருவாகி மண்மூட சாபமிடும் இராமலிங்கம்

தான்படைத்த பணங்களை தானம் வழங்காமல்
கோன்படைத்த அருளை கொடுக்கும் இராமலிங்கம்

பணத்திலே சிறிதும் பாசமின்றி கருணை
குணத்திலே தோய்ந்த கனியன் இராமலிங்கம்                    330

இறக்கவும் ஆசையின்றி இங்குபிறக்க வுமாசையின்றி
இறவாம லிருக்கும் இறையோன் இராமலிங்கம்                 

சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திலே
இமயமென நின்றோங்கும் அமலன் இராமலிங்கம்               

சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையிலே
அமர்ந்து அருள்புரியும் ஆதி இராமலிங்கம்

சமரசசுத்த சன்மார்க்க சத்திய சாலையிலே
அமுது படைக்கு உழவன் இராமலிங்கம்

ஆடல் குழந்தைகளுக்கு அழகாய் திருக்குறள்
பாடலை பாட்டுவித்த பாட்டன் இராமலிங்கம்        340

செம்மொழி தமிழ் சமஸ்கிருதம் ஆங்கிலம்பயில
மும்மொழி திட்டம்தந்த முதல்வன் இராமலிங்கம்               

இனியோர் மானிடன் இறக்கக் கூடாதென
தனியோர் மார்க்கம் தந்த இராமலிங்கம்

மாண்டவரை வைத்து மாரடிக்கும் மக்கள்
மாண்புர வந்தமரண மருத்துவர் இராமலிங்கம்

மரணம் குறித்து மாபறையோசை கேட்டு
கரணம் கலங்கிய காந்தி இராமலிங்கம்  

தொட்ட தெல்லம் துலங்கி மரணமில்லா
மொட்டை முகர்ந்த முத்தன் இராமலிங்கம்                350

தொடாமல் தொட்டுத் தனம்மாள் மனதில்கூடி
விடாமல் விளங்கும் விந்தை இராமலிங்கம்              

பொருளினை பிறரிடம் பெறும் போதெல்லாம்
இருளுறும் என்றே அஞ்சிய இராமலிங்கம்                      

அருளும் கருணையும் அன்பான பொருளுமன்றி
உருவான மற்றதை  இகழென்ற இராமலிங்கம்

இறைவனிடம் சுதந்தரம் அடைந்த ஓர்மனிதராம்
மறையில்லா மார்க்கந்தந்த மறவர் இராமலிங்கம்

சும்மா இருந்து செங்கோலைப் பெற்று
ஐம்பெருந் தொழிலை ஈனும் இராமலிங்கம்                     360

நலந்தரும் நாட்டியம் நடுவினில் கண்டு
உலகுயி ரான அன்பன் இராமலிங்கம்                    

அகத்தில் வஞ்சமும் இகத்தில் நல்நெஞ்சமாய்
செகத்தில் நடிப்பவரை சாடும் இராமலிங்கம்

மண்ணுயிர் மாண்பை மனுமுறை வாசகம்
கண்ட மனுநீதிசோழ குரவன் இராமலிங்கம்

ஏன்பிறந்தே னென்ற ஏக்கம் நீக்கிஎன்னோடு
வான்பொழு தாய்நீடு வாழும் இராமலிங்கம்

எண்ணங்களை விற்று இறைவனைப் பெற்ற
பண்ட மாற்றுவியா பாரி இராமலிங்கம்                         370

உருத்திரர் நாரணர் உறுபிரமர்பல கோடிபுறம்நிற்க
அருள்திரு நடனம்கண்ட ஐயா இராமலிங்கம்                   

அருட்பெருஞ் சோதியரை அருள்மணம் புரிந்து
அருவாய் கலந் தாடுகின்ற இராமலிங்கம்           

ஆசைவெட்கம் அறியாது அவருடன் கூடிஎழுந்த
ஓசையை அருட்பாட லாக்கிய இராமலிங்கம்

ஆயிரங்கோடி அணிவிளக் கேற்றியே அருட்பா
பாயிரம்கோடி பாடிப் பணிந்த இராமலிங்கம்

தழைக்க நீரில்லாத் தோணியில் நீர்நிரம்ப
மழை பொழிவித்த மாரியே இராமலிங்கம்                      380

தத்துவம னைத்தும் தனித்தனி கடந்த
சுத்தசன் மார்க்க சங்கம் இராமலிங்கம்                         

சோதியா யாவதல்ல சடங்காற்றா வதல்ல
ஆதி நீதியால் உடல்பேணும் இராமலிங்கம்

எழும்பிறவி தடுக்க ஏழுதிரை அகற்றி
விழும் உடலை வளர்க்கும் இராமலிங்கம்

சாகாத்தலை கண்ட சுத்த சன்மார்க்கியே
ஆகாயனே எங்கள் அய்யன் இராமலிங்கம்

இறைவன் ஒருமை அருமைகளை வாயே
பறையாய் ஒலித்த பறையன் இராமலிங்கம்                     390

எவ்வுலகும் சன்மார்க்க மடைய உயிரோங்கி
இவ்வுலகி லிருந்து இயங்கும் இராமலிங்கம்                    

ஏட்டில் எழுதாமறை எல்லாம் பேரருள்
பாட்டில் எழுதிய பரமன் இராமலிங்கம்                   

அம்மே அப்பா ஐயா அரசேஎன்றவனை
விம்மி அழைக்கின்ற வீரன் இராமலிங்கம்

மங்களம் சூழ் மங்கையர்க்கு சன்மார்க்க
சங்கம் சூழ சரிபாதிதந்த  இராமலிங்கம்

ஊன்வேறாய் அதிலுறும் உயிர்வேறாய்
தான் இன்றி தனிவடிவ இராமலிங்கம்                           400

பொடிவைத்து பேசாமல் படிநிலை முடிவை
கொடிகட்டி காட்டிய கண்ணன் இராமலிங்கம்

உடம்பின் நடுவை அணுவின் அசைவை
நடராஜபதி என்றே நாட்டிய இராமலிங்கம்

நானே சத்தியம் நானே நித்தியம்
ஊனே நானென்ற உண்மை இராமலிங்கம்

எனது உனதென்பதும் இனியேது அக
இனமாகி எல்லா மாகிய இராமலிங்கம்

ஆகநாழிகை ஒன்றிலே அந்நாள் மாலையே
யோகநிலை முழுது மடைந்த இராமலிங்கம்                     410

நாதமுடி மேலிருந்து நாதாந்த நாட்டுக்கோர்
வேதநாயக முடி வேந்தன் இராமலிங்கம்

சிதையாத தேகம்பெற்ற சித்தி வளாகத்தை
கதையாக சிலர்பேச களிக்கின்ற இராமலிங்கம்                              

தத்துவம் அனைத்தும் தன் வசமாக்கி
சுத்தநிலை புரிந்த சத்தியன் இராமலிங்கம்

பொயுலகினிடை மரணபெரும் பயம் தவிர்த்திட
மெய்ஞானம் கூறும்  மதியோன் இராமலிங்கம்

பிறர்தீங்கு செய்யினும் பரிந்துதீங்கு எண்ணா
அறவோன் புகழ் அறவாழி இராமலிங்கம்                        420

இயற்கை உண்மையாகி இயற்கை இன்பமாகி
இயற்கை விளக்கமாகி இயங்கும் இராமலிங்கம்

குற்ற மெலாம் குணமாக்கி எங்களுக்கு
உற்றதை கொடுத் தருளும் இராமலிங்கம்

சோற்றிலே விருப்பம் சூழின் தவமெலாம்
ஆற்றிலே கரைத்த உப்பாமோ இராமலிங்கம்

நலம் ஒன்றையே நாடி நானிலத்தில்
உலகியல் சிறிதும் அண்டாத இராமலிங்கம்

கண்டதெலாம் காமமே களிப்பற சுவையாய்
உண்டதெலாம் மலமே என்ற இராமலிங்கம்                     430

முடிக்கு அடிபுனைய முயன்று வந்தமர்ந்த
குடிக்கு மாயா குடிலமைத்த இராமலிங்கம்

முன்வைத்த அடியும் முயன்று நடக்க
நின்னருள் தனை நாடினேன்  இராமலிங்கம்                                

ஆட்டுவிக்க ஆடியும் உறங்குவிக்க உறங்கியும்
கூட்டுவிக்க கூடியஇறை கருவி இராமலிங்கம்

திருவருள் அன்றி தடுப்பானும் தடைதீர்ப்பானும்
குருவன்றி யாரேஎனும் சற்குரு இராமலிங்கம்                  

அவனன்றி ஓர் அணுவும் அசையாதென்பது
தவமுடை யார்க்கே தகுமென்ற இராமலிங்கம்                   440

பிறப்பும் சாவும் பெரும்பாவ மென்றே
இறப்பை தடுத்த இனியன் இராமலிங்கம்

பாவக் காரியங்களை பட்டியலிட்டு கூறும்
ஜீவ காருண்ய ஜீவனாம் இராமலிங்கம்

அருவ வழிபாட்டை அடக்கி ஜோதியெனும்
உருவ வழிபாட்டை ஆண்ட இராமலிங்கம்

சன்மார்க்க சங்கத்தில் சத்தியனாகி வரும்
அன்பர்களை தூய னாக்கும் இராமலிங்கம்          

அன்பின்றி புலா லுண்ணுபவரைக்  கண்டே
என்பெலாம் கருக இளைத்த இராமலிங்கம்                      450

எளியாரை வலியார் அடிக்கப் பார்த்து
வெளிகண்ட புயலாய் வரும் இராமலிங்கம்

உலகுயிர்கள் பொதுவென உணரா கொலைநெறி
உலகியலரைக் கண்டு அஞ்சிய இராமலிங்கம்                               

வலையும் கண்ணி வகைகளும் உயிரெடுக்கும்
புலையர்களை கண்டே பயந்த இராமலிங்கம்

இரக்கமே உயிராகவும் அன்பே பக்தியாகவும்ஜீவ
இரணத்தை போக்கிய அரன் இராமலிங்கம்                      

முகத்திலும் அகத்திலும் மறந்தும் வஞ்சமறியா
சகத்திலும் பொய்யறியா சத்தியன் இராமலிங்கம்                 460

எதிலு மோராசை இடருமின்றி பிறர்பொருட்டு
கதிகலங்கிய எம் கருணை இராமலிங்கம்

தன்னுயிர் காத்தல் தலைவன் கடனென்றே
சன்மார்க்கம் பெற்று சாதித்த இராமலிங்கம்                     

யாவும்நீ என்றேநம்பி யாரும் அடையாபேரும்
சாவும்நீக்கிய சன்மார்க்க சித்தன் இராமலிங்கம்

தேன்தொய்ந்த மலராய் தான்தொய்ந்த மனமாய்
ஊன்தொய்ந்த உயிரான உறவு இராமலிங்கம்                   

எல்லா உலகும்வாழ்க எல்லா உயிரும்வாழ்க
அல்லா தொன்றும் இல்லா இராமலிங்கம்                       470

தீய விலங்கினங்களை தூயமானிட ராக்குகின்ற
காயசித்தி பெற்ற காவலன் இராமலிங்கம்

எத்தெய்வமும் காணா அத்தவனாம் மானுட
சத்தவனாம் அருள் சோதி இராமலிங்கம்                                         

நாசியில் ஓடும் நாதனைக் கண்டு
வாசி கணக்கிட்ட வானன் இராமலிங்கம்

கள்ளுண்டு கடவுளைக் காமுற்ற என்
வெள் ளாடை வேந்தர் இராமலிங்கம்        

இரப் போர்க்கு  ஈயாது உண்டியிலை
நிரப்போர் மனதில் நில்லா இராமலிங்கம்                        480

பசித்தோர்க்கு உணவைப் போல் பக்தி
கசிந் துருகுவோர்க்கு கடவுள் இராமலிங்கம்

சமயாசாரங்களை வலிந்து சுமக்கும் கூலிகாள்
இமயம்பிடிக்க சுமை ஏனென்ற இராமலிங்கம்                   

கலையிலே சிலையிலே கலங்கி நில்லாதே
மலையிலே தேனை முகர்ந்த இராமலிங்கம்

புறத்திலே சடங்கிலே  புலால் புசியாதே
அறத்திலே மார்க்க மருளிய இராமலிங்கம்               

பணத்திலே பிறர் பொருளிலே ஆசையன்றி
குணத்திலே வாழும் குமரன் இராமலிங்கம்                      490

சகத்திலே சன்மார்க்க சங்கத்திலே கூடுகின்ற
அகத்திலே ஆடுகின்ற அகத்தியன் இராமலிங்கம்

ஞானத்திலே வானத்திலே ஞான சபையிலே
மோன நிலையிலே மேலோங்கும் இராமலிங்கம்                                  

ஆதியிலே நடுவிலே அந்தத்திலே மதமிலே
சாதியிலே குலமிலேஎன்ற சாது இராமலிங்கம்

நாதத்திலே நாதமுடிவிலே நானுமிலே நீயுமிலே
சாதத்திலே சாதமுடிவிலே சாவுமிலா இராமலிங்கம்             

ஈயிலே எறும்பிலே ஆனையிலே அணுவிலே
சேயிலே மீனிலே சார்ந்த இராமலிங்கம்                         500

முத்தேகத்திலே சுத்தசன் மார்க்கத்திலே எனது
இத்தேகத்திலே அமர்ந் தருளும் இராமலிங்கம்

சக்தியிலே பக்தியிலே சித்தியிலே முக்தியிலே
உக்தியிலே உலகிலே உயர்ந்த இராமலிங்கம்                   

அன்றுமிலே இன்றுமிலே என்றுமிலே இரண்டுமிலே
ஒன்றுமிலா ஒன்றிலே ஒன்றிய இராமலிங்கம்

தானுமிலே வானுமிலே தனக்கோர் உவமையிலே
நானுமிலே அவனுமிலே நாதாந்த இராமலிங்கம்                

எண்ணல்ல எழுத்தல்ல ஆண்ணல்ல பெண்ணல்ல
கண்ணல்ல விண்ணல்ல கருணை இராமலிங்கம்                 510

சொல்லல்ல பொருளல்ல செம்பல்ல கல்லல்ல
கொல்லல்ல கோயிலல்ல காயநேய இராமலிங்கம்

தாழ்வல்ல உயர்வல்ல தானும் ஓருருவல்ல
ஊழ்அல்ல விதியல்ல ஊழி இராமலிங்கம்                                        

அகரநிலை தகரநிலை உகரநிலை சிகரம்யாவும்    23062014
நிகரான எங்கள் நாயகன் இராமலிங்கம்             

அருள்நிலை பொருள்நிலை இருள்நிலை யாவும்
தருமொரு நிலையான தயாளன் இராமலிங்கம்

பண்மை வெளியுள் பரமன் நடமிடும்
உண்மை வெளியான உருவே இராமலிங்கம்                     520

இயன்ற விளக்கங்கள் எவ்வகை ஆயினுமது
இயற்கை விளக்கமான இறை இராமலிங்கம்

எவ்வுயிர் சுகங்களும் அவ்வுயிர் துன்பங்களும்
இவ்வுயிர் அறியுமென்ற இன்ப இராமலிங்கம்                   

மலமகன்று உள்ளகத்தில் மலர்ந்து விளங்கும்
உலகெலாம் அறிய உவந்த இராமலிங்கம்

மறையாக மங்கள் மதத்தலை வர்கள்பேசா
இறைவனுக்கு நல் இணையாம் இராமலிங்கம்                  

கற்பங்கள் பற்பலக் கடக்கினும் நின்றோங்கும்
பொற்சபை யளித்த பொன் இராமலிங்கம்                        530

அகவடிவை கணத்தே அனக வடிவாக்கி
சுகவடிவம் பெற்ற சுடர் இராமலிங்கம்

சொன்னது இறைச் சொற்களேஎன அவனது
பொன்னொளி கண்ட புண்ணிய இராமலிங்கம்                                     

பல்லாய மதங்களிலே பாசம் வைத்தக்
கல்லாய மனங்களைக் கரைத்த இராமலிங்கம்

தன்னொளி வெளியில் தயவெனும் இறையை
அன்பெனும் பிடியுள் அடக்கிய இராமலிங்கம்                   

பிரிவிலா நிலையில் பரமனுடன் கூடித்
திரிபிலாப் பொருளாய்த் திகழ் இராமலிங்கம்                     540

மறவேன் என்ற மந்திரத்தை மறந்தே
அறவோன் மந்திரம் ஓதிய இராமலிங்கம்

மொய்த்த பாவையாசை மெய்யன் ஆசைவர
பொய்யுலக ஆசையும் போமென்ற இராமலிங்கம்         

மருதூரில் பிறந்த மாணிக்கமே எங்கள்
கருவில் கலந்த குருவே இராமலிங்கம்

சிரத்தில் அமர்ந்த சிற்சபை ஜோதியனே
பரத்தி லொரு பெரியனே இராமலிங்கம்                  

இகத்தே பரத்தை இனிதேபெற்றுக் கலந்து
புகழெலாம் பெற்ற பெரும்பதி இராமலிங்கம்                     550

அன்பெலாம் நிறைந்து உயிரெலாம் விளங்கி
இன்பெலாம் புரிந்த இறைவா இராமலிங்கம்

வெல்லமே எந்தன் வேந்தனே உண்மைச்
செல்வமே எந்தன் செல்லமே இராமலிங்கம்                                      

காயினும் இனியக் கனியே அன்புத்
தாயினும் பெரிய தந்தையே இராமலிங்கம்

வாங்கும் பிறவிதோரும் வந்தெனை யாண்டுத்
தாங்கும் ஒருமைத் தலைவனே இராமலிங்கம்                  

சினம் அடக்கியே சிங்கார அகத்துள்ளே
இனமாகிக் கூடும் மணமே இராமலிங்கம்                        560

விழைந்த காமமும் வன்சொல் புகலும்
பிழையும் பொருத்தருள் புரியும் இராமலிங்கம்

மந்தையில் செல்லும் மனதை தனிக்கச்செய்து
சிந்தையில் கலந்த சொந்தமே இராமலிங்கம்                   

திருநாவுக் கரசாமென் தந்தையின் கண்ணே
அருளாய் அமர்த்தி யாண்ட இராமலிங்கம்

தந்தையிடம் இருந்து தாயாம் மல்லிகாவிடம்
பந்தமுற கொணர்ந்து பேணும் இராமலிங்கம்                   

ஊரார் இகழாது ஊமைஎனை பேசவைத்து
இராமலிங்க அகவல் ஓதிய இராமலிங்கம்                       570

தண்டபாணி என்பெயரைத் தள்ளி உன்பெயரான
பண்டமானேன் எனைப் பெற்ற இராமலிங்கம்

சென்னை மும்பைச் சென்று பணிசெய்யினும்
என்னை வடலூர் அழைத்த இராமலிங்கம்                                        

திருமண பந்தத்தைத் தடுத்தே எனைப்புணர்ந்து
ஒருமணம் புரிந்த என்னவன் இராமலிங்கம்                     

கற்புடைப் பெண்எனைக் கற்பம் பலகழியினும்
அற்புதமாய் கலந்தே அருளும் இராமலிங்கம்                   

காமத்தில் உயர்ந்தோனை காருண்ய வழிநிறுத்தி
சாமத்தில் கூடி சுகமளிக்கும் இராமலிங்கம்                      580

மாய உலகிலோர் மண்ணாசை மறக்கச்செய்தே
காய சித்தியருளிய கருணை இராமலிங்கம்

பொன்னாசை அறச்செய்து பொற்சபை யளித்த
பொன்னார் மேனியன் பரமன் இராமலிங்கம்                    

நானென்பதை நீஇருக்க நினையேன் அன்பே
தானென்பதை உணர்த்தி தாயான இராமலிங்கம்

என்னுடல் பொருள் ஆவிஎன்றொன்று மில்லை
உன்னுடல் உறவு அளித்த இராமலிங்கம்                       

கொடும்முன் கொடுத்ததாய்க் கூறும் பழக்கம்
தொடுத்து வந்தெனை தாங்கிய இராமலிங்கம்                    590

தூக்கமும் சோம்பலும் தூக்கி எறிந்தே
ஏக்கமும் நீக்கிய ஏந்தல் இராமலிங்கம்

எங்கேநான் செல்லினும் என்னுள் இருந்து
அங்கே எனை யாளும் இராமலிங்கம்  

நாயேனென் வாழ்வில் நோயற்று வாழவே
தேயேனுன் தேனை தந்த இராமலிங்கம்

நரைதிரை மூப்புக்கு நாயகன் நீயேகாப்பு
கரை காணா கதிரோன் இராமலிங்கம்                          

மரணப் பெரும்பிணி மறந்தும் வராதவகை
சரண மடைந்தேனுனை சாமி இராமலிங்கம்                     600

பாடையிலே படுத்தாலும் பாங்குடனே எழுந்து
மேடையிலே ஆடுவேன் மாய இராமலிங்கம்

இடுகாட்டுப் பிணமானால் இப்பூமி சுற்றுமோ
விடுமூச்சைப் பிடித்தேன் வசமாக இராமலிங்கம்                

இத்தேகத்தை புதைப்பார் உளரோ சொல்லாய்
அத்துவித மயமானேன் அரசே இராமலிங்கம்

மண்ணுறுமோ இத்தேகத்தை மாயன் அருளாலே
விண்ணுறுமே எந்தை விமலா இராமலிங்கம்                                     

காலத்தைக் கடந்தேன் காலாதீத னானேன்று
தாளத்தை போடென்ற தயாள இராமலிங்கம்                     610

இத்தேகந் தனில் இழியா நலங்கொடுக்கும்
முத்தேகம் கண்டேன் முத்தா இராமலிங்கம்

சித்தொன்றும் அறியேன் சித்திவளாகச் சித்தனின்
வித்தொன்றை அறிந்தேன் வித்தக இராமலிங்கம்                                  

வாழ்வில் ஏற்றம் விரும்பேன் இரக்கமும்
தாழ்வும் தயவும் தந்தருளும் இராமலிங்கம்                    

இரக்கமும் உயிரும் ஒன்றெனக் காட்டி
சரம்பிரியா சிரமான சோதி இராமலிங்கம்                      

அயல வருடனே அடிக்கடி சண்டையிட்ட
தயவில்லா கடியேனை தாங்கிய இராமலிங்கம்             620

மணம் புரியவே முயன்றேன் அந்தோஎந்தன்
குணம்புரிந்தது எனைக் காத்த இராமலிங்கம்

மெய்மொழிப் பொருளை மருளும் எனக்கே
அய்யா செப்புவாய் அப்பா இராமலிங்கம்                       

எந்தாய் என்னறிவே என்றிட சித்தெல்லாம்
இந்தா என்றளிக்கும் அம்மா இராமலிங்கம்

நஞ்சான பகையும் நமைக்கண்டு அஞ்சும்
தஞ்ச மெனக்கருள் தலைவ இராமலிங்கம்                            

உலகெலாம் என்பதின் உண்மைக் கண்டு
மலர்ந்த சுகந்த மலரே இராமலிங்கம்                           630

மறவாத உளத்தில் மணிமாட இடத்தில்
இறவா வரம் ஈனும் இராமலிங்கம்

சன்மார்க்க உலகிலே சத்திய நாயகனாம்
அன்பு மயமான அகமே இராமலிங்கம்                                

மகா மந்திர மதியே எதனினும்
பகா தேகப் பதமே இராமலிங்கம்

காலன் கணவனைக் கொண்டப்பின் மகளிர்
தாலி வாங்குதலை தடுத்த இராமலிங்கம்                       

முறைவைத்து குழவிக்கு முயன்று காதுகுத்தல்
இறை சம்மதம் இலைஎன்ற இராமலிங்கம்                      640

விழித்து தனித்து வாழ்வோர்க்கு என்றும்
அழியா இளமை யளிக்கும் இராமலிங்கம்

காலச்சக்ரன் என்னும் காலாதீதன் மாயையான
காலத்தை ஊடுருவிக் காணும் இராமலிங்கம்                   

விரைந்து சன்மார்க்கம் வாருங்கள் என்றே
கரைந்து கூட்டும் காகம் இராமலிங்கம்

குணத்தை நமக்குக் கொடுத்து தான்படைத்த                    
பணத்தை எறிந்த பண்பன் இராமலிங்கம்                       

உமியான மொழிகளுள் உயர்ந்த எம்மொழிக்கும்
தமிழ் மூத்த தந்தைஎன்ற இராமலிங்கம்                  650

தன்னை வணங்கினால். தலைவனுக்கு இழுக்கென
என்னை சாமி எனக்கூடாதென்ற இராமலிங்கம்

நினைந்து நினைந்து நீடூழிவாழ இவ்வுலகில்
அனையா தீபம் ஏற்றிய இராமலிங்கம்                         

வினையால் பசியே வரினும் புசித்துபோக்கவே
அனையா அடுப்பு அளித்த இராமலிங்கம்

மறவேன் என்ற மந்திரத்தை மறந்துயர்ந்த
அறவோன் எங்க ளன்பு இராமலிங்கம்                          

வேதாந்த சித்தாந்த வேகாத மறைகளையும்
ஓதாது உணர்ந்த உத்தமர் இராமலிங்கம்                  660

நினைத்தப் பொய்யில் நிறைந்த மதங்கள்
அனைத்தையும் விட் டேறிய இராமலிங்கம்

உளவறியா நிலையில் உவந்து தண்ணீரில்
விளக் கேற்றிய விமலன் இராமலிங்கம்                        

தண்ணீர் விளக்கெரித்து திருஅருட்பாப் பாடி
கண்ணீர் மல்கிய கந்தன் இராமலிங்கம்

எறிபவைகளை எல்லாம் எரித்து கடவுள்நிலை
அறிந்து அம்மயமான இறை இராமலிங்கம்                     

சித்தெல்லாம் பெற்று சகத்தில் கருணையாலே
செத்தாரை எழுப்பிய சத்தியன் இராமலிங்கம்                    670

மாளும் மனிதரை மாளாது காத்து
ஆளும் கருணைக் கரசே இராமலிங்கம்

சதகோடி அனுபவ சாதனைகள் சொல்லி
அதனை அருட்பாவில் அமைத்த இராமலிங்கம்                       

நிதமும் நம்பிள்ளை நமக்கேயென வேலாயுத
முதலியாரை ஆண்ட முகிலன் இராமலிங்கம்

விட்டு தனிக்க வருவார்குரு என்றிருந்தகல்
பட்டு ஐயாவை பணித்த இராமலிங்கம்                         

சந்தமிகு சன்மார்க்கநூல் சீர்பெற பாடுவாயென
கந்தசாமி பிள்ளையை குறித்த இராமலிங்கம்                    680

பிரபந்தத் திரட்டை சன்மார்க்கத்தில் ஏழாம்
திருமுறை என்று தருகின்ற இராமலிங்கம்

ஆதியும் அந்தமும் அறிந்து எல்லாம்வல்ல
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி இராமலிங்கம்                     

அருவாய் இருந்து ஆன்ம பிரகாசமான
புருவ மத்தி புருடன் இராமலிங்கம்

பிரகாசமாய் இருந்து பரவெளியில் விளங்கும்
பரமாகாச பரம் பரமே இராமலிங்கம்                           

அகமும் புறமும் அகப்புறமும் புறப்புறமும்   
கடவுள் பிரகாசம் கண்ட இராமலிங்கம்                          690

ஊன்றிய ஜீவகரண இந்திரிய காட்சிவிடுத்து 
ஆன்மக்காட்சி காண்க என்ற இராமலிங்கம்

இசையும் நடனமும் ஆன்மாவின் உள்ளொளி
அசைவே நடராஜர் என்ற இராமலிங்கம்                        

இனமான சன்மார்க்கிகள் இறைவனை நினைத்து
தினம் ஆறுமுறை தொழுகவென்ற இராமலிங்கம்

தொன்னத்தாறு அகத் தத்துவங்களே நமது
பொன் னான பிண்டமென்ற இராமலிங்கம்                      

ஐந்தொழில் யாவும் எக்காலமும் தடையுறாது
விந்தை செயல் விக்கும் இராமலிங்கம்                         700

கற்பத்திற்கு ஒருபிறவி காணும் ஆன்மாவென
கற்பித்த மெய் கணக்கன் இராமலிங்கம்

சரமோடும் மனிததேகமே சுவர்க்கம் மற்றும்
நரகம் என்ற நல்லோன் இராமலிங்கம்                         

தத்துவக் கெடுதியால் தேகநரை ஏற்படுமென்ற
வித்தக சித்த வைத்தியர் இராமலிங்கம்

ஆன்ம அறிவால் அறிவதே கடவுளென்று
தான் அறிந்த தயவன் இராமலிங்கம்                           

பக்குவ ஆன்மாவிடம் பரமன் காரியப்பட
அக்கனமே முத்தேக மாகுமென்ற இராமலிங்கம்                  710

செயற்கைக் குணமாம் சினம்வெகுளி காமமதை
முயன்று விடுகவென்ற மனிதன் இராமலிங்கம்

இக்கிரக ஜீவன்மனித ஆக்கையில் இறைவிளங்க
விக்கிரக விளக்கம் ஜாலமென்ற இராமலிங்கம்            

பால்மயக்க இன்பம்போல் புகன்ற பலசமயமத
நூல்களின் உண்மை நயந்த இராமலிங்கம்

அறுபத்துமூன்று நாயனர்களும் ஆழ்ந்த தத்துவ
முறும் கதைகளே எனும் இராமலிங்கம்                        

ஆழ்வாரும் நாயன்மாரும் உண்மையில் இலர்
வீழ்புராண புளுகென்ற வீரர் இராமலிங்கம்                       720

தயவு வடிவமான தேகிகளே தேவர்களென்ற
நயந்த நம் நன்னன் இராமலிங்கம்

ஈன்ற குணம்நாலான அப்பு தத்துவங்களே
நான்கு வேதமென்ற நாதன் இராமலிங்கம்                      

தியாகம் செய்வோரை தத்தெடுக்கும் மார்ச்சால
நியாய குரு நாயகன் இராமலிங்கம்

பேதப் பேய்களை பற்றற விடச்செய்யும்
காதல் செய் கனியாம் இராமலிங்கம்                           

விருப்பு வெறுப்பற்ற வெண்மையே என்
இருப்பு என்ற அய்யா இராமலிங்கம்                            730

தன்னையும் தன் தலைவனையும் காட்டி
புன் னையும் பொன்னாக்கும் இராமலிங்கம்

எடுத்தப் பிறவிதனில் அமுதமளித்து முத்தேகம்
கொடுக்கும் முதற் கருவியே இராமலிங்கம்                     

மறை பொருளாம் மன்னவன் நிலையறிந்து
இறை ஏகம் அனேகமென்ற இராமலிங்கம்

பெண் மண் பொன்னாசை விடச்செய்து
விண்ணாசை யளிக்கும் வரம் இராமலிங்கம்                    

கள்காமம் கொலை களவுபொய் ஐந்தும்
தள் ளென்று தனித்த இராமலிங்கம்                             740

இறக்கச் செய்வதே இறை சோதனைஎன
உறக்கம் தவிர் என்ற இராமலிங்கம்

ஆண்டவன் அருளுற இடைவிடா முயற்சி
வேண்டு மென்ற வடலூர் இராமலிங்கம்                  

ஆகாரத்தில் இச்சை இன்றி அழுதழுது
ஆகாயனை பார் என்ற இராமலிங்கம்

தொழிலுறும் உலகில் தன்னைக் காட்டாது
ஒழிக்க வேண்டு மென்ற இராமலிஙகம்                        

நமதுஉள்ளும் புறமும் நற்றுணையாய் வள்ளல்
அமர கவலை ஏன்னென்ற இராமலிங்கம்                        750

ஓராயிரம் ஜென்மமெடுத்து அறியும் யறிவை
ஓர்கணத்தே ஓதா துணர்ந்த இராமலிங்கம்

உபயஇன முண்டாக்கி அதில் அகஇனத்திற்கு
அபயம் விரைந் தளிக்கும் இராமலிங்கம்                       

சமயமதங்கள் கடந்தே சுத்த சன்மார்க்கம்
அமயு மென்ற அன்பு இராமலிங்கம்

மர்மங்களை அம்பலமாக்கி முத்தேகம் பெற்ற
சர்வ சித்தி சத்தியன் இராமலிங்கம்                            

சிற்சபை பொற்சபை ஞானசபையாம் படிமூன்றில்
விற்பத மெய்திய வண்ணன் இராமலிங்கம்                      760

பெரியோரென பெயர் பெற்றோரும் தாயுமானவரும்
இரண்டரக் கலக்க வில்லைஎன்ற இராமலிங்கம்

பேசாதக் கலையெலாம் பேசியே பற்றொழித்து
ஆசாரம் விட்டேறிய ஆசான் இராமலிங்கம்                     

தலைவனைத் தொழும் தொழிலே கடமையாக
அலைகடல் கடந்த ஓடன் இராமலிங்கம்

மூவரோடு யாவரும் மூடத்தரமாதலால் சமயத்
தேவர்களை வழிபடா தேவன் இராமலிங்கம்                    

வழுக்கும் மார்க்க வகைசெல்லாது சன்மார்க்க
ஒழுக்கம் ஒழுகி ஓங்கிய இராமலிங்கம்                          770

சாகாக் கல்வியே சன்மார்க்க முடிபு
சாகாத் தலை சதுரன் இராமலிங்கம்

சாகா தவனே சன்மார்க்கி என்றே
வேகாக் கால் விளக்கும் இராமலிங்கம்                         

ஏகாந்தத்தில் ஊரும் அமுதத்தை அருந்திப்
போகாப் புனல் புணர்ந்த இராமலிங்கம்

ஒருநாள் தூக்கம் ஒருமணிநேரமானால் ஆயிரம்
வருடம் ஆயுள் வருமென்ற இராமலிங்கம்                     

எப்போதும் சலியாமல் அருளாய் நிற்றலே
இப்போத சாகாக்கல்விக்கு ஏதென்ற இராமலிங்கம்                780  

மார்க்க சமயமதங்களை முற்றும் விட்டோர்க்கே
ஈர்க்குமாம் சன்மார்கம் என்ற இராமலிங்கம்

கான அறிவாம் கொலைபுலை அற்றோர்க்கே
ஞானஅறிவு தரும் ஞானி இராமலிங்கம்                  

நான்கு பதவியடைய நான்கு ஒழுக்கங்களை
ஈன்ற வள்ளலாம் ஈசன் இராமலிங்கம்

குறையுடையோர் பசி கருதி அன்னமிடுவோரே
இறைவனா மென் றுரைத்த இராமலிங்கம்                            

சத்துவ முடையோன் சமய சன்மார்க்கியென்ற
சத்திய வாக்கு சொன்ன இராமலிங்கம்                          790

நிர்குணம் நிற்போர் மதசன்மார்க்கியென்ற
வர்த்த மான வசீகரர் இராமலிங்கம்

சத்தாகிய வழியாகி சன்மார்க்க நிலைய
எத்தன் என் னப்பன் இராமலிங்கம்                             

ஆறாந்தத்தை மருவி அழகிய துரியநிலையை
கூறுமிந்த சமரச மென்ற இராமலிங்கம்

கடவுள் விளங்க காரணமாக தீபமுள்ளதென்ற
வடல்பதி வாழ் வள்ளல் இராமலிங்கம்                               

திருநிலை யறிந்தே திருநீறு அளித்தும்விடுத்த
இரு நிலை இனியன் இராமலிங்கம்                             800

பொன்மை கால்பங்கு பகிர்ந்தொரு வெண்மை
ஆன்மக் கொடி ஏற்றிய இராமலிங்கம்

குறித்த பரிபாஷை களெல்லாம் வகரதகரத்தால்
அறிந்த ஆன்ம அனுபவமென்ற இராமலிங்கம்                  

சாதனம் கடந்த சாத்தியர்களே சுத்ததேகிகளென்ற
நாதனடி பரமாகாச நேயனடி இராமலிங்கம்

நன்மார்க்கம் நான்கில் நான்காவது மார்க்கமாம்
சன்மார்க்க மதை சான்ற இராமலிங்கம்                        

சுத்த சன்மார்க்கமே சடாந்த அனுபவத்தினும்
சத்திய மதை சாருமென்ற இராமலிங்கம்                        810

ஆசானடி மறவாமல் எப்போதும் இருப்பதே
சாகாக் கல்விச் சாலையென்ற இராமலிங்கம்

தூக்கமெனும் சுகமதை துச்சமென விடஆயுசு
ஆக்கம் பெறும் என்ற இராமலிங்கம்                           

காமக் குரோதம் கொலைபுலை தவிர்த்தோர்க்கு
ஏமச் சித்தி அளிக்கும் இராமலிங்கம்

காதல் கோட்டைக் கட்டி களித்தங்கே
சாதல் இன்றி இருக்கும் இராமலிங்கம்                         

ஜீவனிடம் தயவும் ஜோதியிடம் அன்பும்
ஆவர்களே சன்மார்க்கி எனும் இராமலிங்கம்                     820

கருணையும் சிவமும் காணும் பொருளென
அருளிய எம்முயிர் உயிராம் இராமலிங்கம்

உலகெலாம் வாழ உள்ளமதில் பிரார்த்தனை
நிலவுவதே நன் நலமென்ற இராமலிங்கம்                      

நான்பெற்றப் பேற்றை நிலவுலகம் பெறவே
வானிடத்து வேண்டிய வள்ளல் இராமலிங்கம்

சர்வ ஜீவதயவுடன் சர்வவல்லமை பெறமானிட
சரீரம் நல்கிய சுவர்ண இராமலிங்கம்                          

ஆசாரங்கள் அழிய உயிரரக்கம் பெருகுமென்ற
பேசாத சித்து பெற்ற இராமலிங்கம்                             830

எதிலும் பொதுநோக்கம் அதிலும் அருள்நோக்க
மதி பெற்ற மதியன் இராமலிங்கம்

உள்ளம் நெகிழ்தலே உண்மை பக்திஎன்று
கள்ளத்தை கடந்த கடவுள் இராமலிங்கம்

ஆன்ம நெகிழ்ச்சியே உண்மை அன்புஎன்று
சான்று அளித்த சத்தியன் இராமலிங்கம்                  

தரும முடையான் தேகநட்ட மடையானென்ற
தருமச் சாலை தலைவன் இராமலிங்கம்

இறைவனின் பெருமையை இம்மனிதரிடம் பேச
நிறைந்த இன்பம் நீடுமென்ற இராமலிங்கம்                      840  

இம்மனிதனின் சிறுமையை இறைவனிடம் பேச
நிம்மதி வாழ்வில் நிறையுமென்ற இராமலிங்கம்

தீபமில்லா இடத்தில் தூங்கினால் ஆன்ம
ஆபத்து நேரும் என்ற இராமலிங்கம்

நெற்றிக் கண்ணை நலம்பெறத் திறந்து
வெற்றி காண விழைந்த இராமலிங்கம்                  

எந்நாளிலும் நமது அறியாமையை வாங்க
வந்த நீல வியாபாரி இராமலிங்கம்

கடவுளிடம் நீங்காநினைவே கோசத் தடிப்பை
அடக்கு மருந் தென்ற இராமலிங்கம்                            850              

பெண்களுக்கும் யோகங்கள் பயிற்று விக்க
எண்ணங் கொண் டேகிய இராமலிங்கம்

கரிசாலை தூதுளை காயகற்ப மென்றுதின
சரியாய் உண்ண சொன்ன இராமலிங்கம்

கடை விரித்தோம் கொள்வாரில்லை என
விடை கொடுத்த வள்ளல் இராமலிங்கம்                       

இறையுடன் வருவேனென இரண்ட ரையில்
மறைந்து காப்பிட்ட முருகு இராமலிங்கம்

சன்மார்க்க பதியை சகத்திலே காட்டுவித்து
துன் மார்க்க துயரறுத்த இராமலிங்கம்                          860

உத்தம மனிதனென்று உரைத்த சந்நியாசிக்கு
புத்தி சொல்லிய பெருமான் இராமலிங்கம்

திருடனுக்குப் பொருள் தந்த திருவாளன்
குருவிற்கும் அருள் கொடுத்த இராமலிங்கம்                    

உருவ வழிபாட்டின் உண்மையை ஸ்ரீதரருக்கு
அருளிய பிரம்ம அருவம் இராமலிங்கம்

சித்திரை மாதத்தில் சில்லென மழைவருவித்து
முத்திரை பதித்த மருதூர் இராமலிங்கம்                        

அசலான செம்புஈய மவைகளை பொன்னாக்கி
ரசவாதம் செய்த ரட்சகர் இராமலிங்கம்                         870

மருதூர் இராமைய்யா மகனான கருணை
கருணீகர் குலம் கண்ட இராமலிங்கம்

சின்னக் காவணம் சிற்றூரில் சின்னம்மையாரை
அன்னையாகப் பெற்ற அன்பன் இராமலிங்கம்

பாவஞ்செய் மீனவர்களை பயிர்த் தொழில்
ஏவிய இனிய எங்கள் இராமலிங்கம்

இறந்த காலத்திற்கு இலக்கணம் வகுத்த
அறந் தலை அமரன் இராமலிங்கம்                            

சந்தை படிப்பான சாத்திரங்களை விட்டே
சொந்தப் படிப்பை படித்த இராமலிங்கம்                         880

மண்ணின் பொருளும் மங்கையர் காதலும்
எண்ணா எம் அண்ணா இராமலிங்கம்                          

பாழான மடந்தையர் பால்சிந்தை வைத்து
வீழாது ஞானம் வளர்த்த இராமலிங்கம்                        

வாள்விழி மாதர்பால் வளையாமல் அவன்
தாள் வழி தாழும் இராமலிங்கம்

முலைக்கு மயங்கி மாமாயை பற்றி
அலையாது தீப ஒளியான இராமலிங்கம்                       

பாவமே உருவாகிய பாவையர் கண்படாது
காவல் செய்த காவலன் இராமலிங்கம்                          890

கோவைவாய் இதழ்க் கிச்சை வையாது
சாவை ஓட்டிய சாதகன் இராமலிங்கம்                         

குய்யம் காட்டும் கடினப்பெண் பேய்களை
அய்யன் அருள ஓட்டும் இராமலிங்கம்

மான்விழிக் காட்டி மோகத்தைக் காட்டினும்
வீன்போது கழியா விண்ணன் இராமலிங்கம்

பாவம் யாவும் பழகுறும் பாழுங்குழியில்
தாவாது அன்பில் தவழும் இராமலிங்கம்                       

சிறுநீர் தரும்கொடிய சீழ்க்கொள் குழியினை
வெறுத்து இருளை வென்ற இராமலிங்கம்                       900

நாற்றக் குழியை நாடுவோரை வீழ்த்தும்குழி
போற்றாரை ஏற்று போற்றும் இராமலிங்கம்                    

பொதிதரும் மங்கையின் கொங்கை மேல்
மதி செலுத்தா மேலோன் இராமலிங்கம்                        

வஞ்ச மடமாதர் வாய்த்ததொரு போக
மஞ்ச மஞ்சிய மகான் இராமலிங்கம்

பஞ்சனை இடைக்குள் பிளந்த வெடிப்பில்
அஞ்சியே விழாத ஆண்மை இராமலிங்கம்                           

இளமுலை தழுவ ஏங்கியவர்க்கு ஏவல்செய்
உளமதை அடக்கி உயர்ந்த இராமலிங்கம்                        910

முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்முன்
விலை போகா வில்லன் இராமலிங்கம்                         

மங்கையர் புழுக்குழியில் மயங்கி ஆழாது
அங்கையர் கனி யான இராமலிங்கம்                           

அண்டமும் அதிலுறும் உயிர்களும் பரம்பர
மணியால் பார்த்த மாதவன் இராமலிங்கம்

பராபர மணியால் பிண்டமும் அதிலுறும்
சராசர உயிரையும் சான்ற இராமலிங்கம்

எண்ணியதை எண்ணியாங் கருளஅரும் பெறன்
மணியை அருளால் மீட்டும் இராமலிங்கம்                      920        

அண்டத்து உயிர்களை ஆட்டிவைக்கும் ககனமா
மணியை அடித்து மகிழும் இராமலிங்கம்

சரவொளி மணியால் சகத்துயிர்களை ஆட்டி
நரகிடை மீட்கும் நாதன் இராமலிங்கம்

கலைநிறை மணியால் காணா உலகெலாம்
அலையாய் உலாவும் அமரன் இராமலிங்கம்

சரஅசர உயிரின் சரமான வித்தகமணியை
அரசராய் பெற் றாளும் இராமலிங்கம்                          

சித்திகளை நடத்த சித்து செய்மணியை
புத்தியில் ஏற்றிய புனிதன் இராமலிங்கம்                  930

அழியா வாழ் வீணும் வளரொளிமணியை
இழியாது பெற்று ஓங்கும் இராமலிங்கம்                 

களித்து நடனமிட குளிகைமணி ஒன்பதையும்
அளித்து எனையும் ஆளும் இராமலிங்கம்    

பொய்யர் இடத்திலும் புலையர் இடத்திலும்
மெய்யர் புகுதல் மறுத்த இராமலிங்கம்

நல்லோரைக் காணுமோர் நாழிகையில் பாவ
மெல்லாமும் போகு மென்றஎன் இராமலிங்கம்                        

உடலை பலருங்கூடி இடுகாட்டில் வைக்காமல்
வடலை அடைந்த வானன் இராமலிங்கம்                       940

சாகாக் கல்வியெலாம் சழக்கற கற்பித்தெனையும்
ஆகாயன் என ஆண்ட இராமலிங்கம்                           

இல்லையென உன்பால் உரிமையாய்க் கேட்கஎன்
அல்லலை யொழித்த அப்பர் இராமலிங்கம்                     

சதகோடி அண்டமும் சந்நிதிமுன் நானாக
இத மொன்று அருளும் இராமலிங்கம்

ஆருகச் சமயக்காட்டை அழித்தெனை சன்மார்க்க
பாருக் குள்ளே பதித்த இராமலிங்கம்                                             

வாய்த் திறந்தோர் வார்த்தையும் சொல்லாமலே
தாய்ப் போலெனை தாங்கும் இராமலிங்கம்                      950

பாரினில் பாசமெலாம் போக்கி என்னை
வாரி வெளுத்த வண்ணா இராமலிங்கம்                        

வெள்ளை நீறணிந்து வேடமிடாமல் வெள்ளை
உள்ள கத்தை அளித்த இராமலிங்கம்                          

ஊழை யகற்றும் உளவு தெரிவித்திந்த
ஏழையை சீமா னாக்கிய இராமலிங்கம்

மங்கையர் புணர்ச்சி மயங்கி நேராமல்
இங் கென்னை ஆளும் இராமலிங்கம்                          

பொருள்தேடும் நாயாய் பார்த்தும் எனை
அருள் தேட அழைக்கும் இராமலிங்கம்                         960

நாயும் மதியா நெடுவறுமை வந்தாலுமெனை
மாயும் நிலை மீட்கும் இராமலிங்கம்

மகிழ்வுசெய் பெருவாழ்வு மகிழ்ந்து தந்தெனை
நெகிழ்வு செய்து நாடும் இராமலிங்கம்

வழியிது என்றே வடலூர் வந்தெனக்கு
அழியா திருக்கும் அடிநல்கும் இராமலிங்கம்                                      

கணப் பொழுதும்நான் கலங்கிடாது எனை
மணந்து இன்புறும் மணவாளர் இராமலிங்கம்

இறப்பில்லாது இவ்வுடல் இங்கிருக்க வேண்டி
மறப் பில்லா மனமருளும் இராமலிங்கம்                        970              

சதியில் விழாது சூதும் கவ்வாதெனை
விதி யறிந்து வேதித்த இராமலிங்கம்                          

சீழ்மதக் குழிபுகாது சீர்சன்மார்க்கக் கடலில்
புகவைத் தெனை புணரும் இராமலிங்கம்                       

மலமான காமமதில் மறந்தும் விடாதெனை
நலமோடு நீடுவாழ நவின்ற இராமலிங்கம்                     

பார்போற்றும் ஞானிகள் பலரிருக்க என்னை
ஊர் போற்ற உளம்கலந்த இராமலிங்கம்

பரிசளிப்பாய் என்றுனையே பாடு மென்னை
சரிப் படுத்திச் சாரும் இராமலிங்கம்                            980              

கன்னியருடன் கூடிநான் கற்பழிந்து நில்லாமல்
உன்னோடு கற்பழிய ஆசையென் இராமலிங்கம்                 

நடுநெற்றியில் நீரிருக்க நல்லநீறெ தற்கென
விடுத்த எனையும் விடாத இராமலிங்கம்

கொலைபுலைக் குறவான கோவத்தை விட்டுன்
வலையுள் சிக்க வைத்த இராமலிங்கம்                  

அகங்காரம் அவாவெகுளி இவையற் றெனைபல
யுகங் காண யுத்தியளித்த இராமலிங்கம்

எல்லாம் பெற்றேன் உன்னிடம் நான்
இல்லா திருக்க இயற்றிய இராமலிங்கம்                   990              

பொய்யன் எனினுமுனை பாடிய எனை
அய்யன் அடி ஆழவைக்கும் இராமலிங்கம்                     

கரும்பாய் கனியாய் கற்கண்டாய் அகத்தில்
அரும்பி உள்ளே இனிக்கும் இராமலிங்கம்                      

அருட் பெருஞ்ஜோதி அகவல் அருளியிங்கு
இருள் நிலை அகற்றும் இராமலிங்கம்                         

அருட் பெருஞ்ஜோதி அட்டகம் அருளியிங்கு
கருப் பொருள் காட்டும் இராமலிங்கம்

தனிப் பெருங்கருணை தனித்தலைமை பதியை
கனிந் துருகிக் கூட்டும் இராமலிங்கம்                           1000

அருட் பெருஞ்ஜோதி அடைவு அருளியிங்கு
மருள் நீங்கி மகிழும் இராமலிங்கம்

அருட்பெருஞ் ஜோதி யாகியஇறை தாம்                         02102014
ஒருவனே என்ற அருட்பெருஞ் ஜோதி

இருள்சூழ் உலகம் ஒளிபெற இராமலிங்கரை
உருசெய் தளித்த அருட்பெருஞ் ஜோதி

சுத்த சன்மார்க்கச் சித்தியினைக் கொடுத்தே
உத்த மனாக்கும் அருட்பெருஞ் ஜோதி

உயர்நெறிக் காட்டி உணர்ச்சியில் ஓங்கும்
இயற்கை உண்மையாம் அருட்பெருஞ் ஜோதி                    1010

கன்ம வினை கெடுத்து இயற்கை
இன்ப மளிக்கும் அருட்பெருஞ் ஜோதி                          

தருமச் சாலை தருமங்களில் இறை
யருளைத் தருகின்ற அருட்பெருஞ் ஜோதி

தூக்கமும் ஏக்கமும் தவிர்த்து நீடுவாழும்
ஆக்கையை அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

சுகங் கொடுத்து சதகோடி பொருள்கொடுத்து
அகஇனங் காக்கும் அருட்பெருஞ் ஜோதி

புலை தவிர்த்தோர்க்கே பரிந்து அமுத
அலை எழுப்பும் அருட்பெருஞ் ஜோதி                           1020

அன்பான உயிரெலாம் என்னுயிர் என்போர்க்கு
இன்னுயிர் ஆகும் அருட்பெருஞ் ஜோதி                        

நலமெலாம் அடைய நமக்குள் தத்துவ
உலகெலாம் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

பூரண அறிவைப் பெற்றார்க்கு என்றும்
ஆரண மாகிய அருட்பெருஞ் ஜோதி

கள்ள மனைத்தும் கடந்தோர்க்கு என்றும்
உள்ளிருந் தருளும் அருட்பெருஞ் ஜோதி

மூப்பைத் தடுக்க முயன்றோர்க்கு நல்லதோர்
ஆப்பை கொடுக்கும் அருட்பெருஞ் ஜோதி                       1030

நரைதிரை கெடுதிகள் நாடாது உடலுக்கோர்
இரையான மருந்தாம் அருட்பெருஞ் ஜோதி                     

அழுக்கில்லா மனதில் ஆடுகின்ற அப்பனாம்
இழுக்கில்லா இறையாம் அருட்பெருஞ் ஜோதி

கண்ணொளிப் பார்வையாய் காதுறு ஒலியாய்
எண்ணொடு எழுத்தாம் அருட்பெருஞ் ஜோதி

தமிழெனும் மொழியில் தவழ்ந்து வந்தருளும்
அமிழ்தினும் அமிழ்தாம் அருட்பெருஞ் ஜோதி

மதமான இருளை மதியாது அருட்பெருஞ்சுடர்
உதயத்தைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி                      1040

தட்டும் தாளமும் தாலாட்டும் இராகமும்
எட்டும் இரண்டுமான அருட்பெருஞ் ஜோதி

இன்பங்கள் இசைந்து இமயமென உயரும்
அன்பெனும் சுகமாம் அருட்பெருஞ் ஜோதி

கணுவாக இணைத்து கதிராக ஒளிரும்
அணுவான அருவாம் அருட்பெருஞ் ஜோதி

மண்வகை கல்வகையால் முயங்கிக் கோள்கள்
எண்ணற்று அமைத்த அருட்பெருஞ் ஜோதி

பயிர்விளை மண்ணில் பிறவி எடுக்கும்வரை
உயிர்களை மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                    1050

காற்றாகி கனலாகி கதிராகி மாயாக்கால
ஊற்றாகி உழலும் அருட்பெருஞ் ஜோதி

ஏகாந்த இடமாம் ஆதியற்ற பரமாகாச
ஆகாய நிலையாம் அருட்பெருஞ் ஜோதி

புருவ நடுவில் பொலிந்து நடமிடும்
அருவச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

சம்பூரண மயமாய் சன்மார்க்க நிலையாய்
அம்பலத் தாடும் அருட்பெருஞ் ஜோதி

கண்ணிமை நேரமும் கருணையால் நமக்கு
உண்மை உரைக்கும் அருட்பெருஞ் ஜோதி                       1060

நிரந்தர ஆட்சியில் நலந்தரு அற்புத
அரசியல் நடத்தும் அருட்பெருஞ் ஜோதி

பயிரெலாம் செழிக்க பார்தனில் பிறக்கும்
உயிரெலாம் வணங்கும் அருட்பெருஞ் ஜோதி

தளர்வடையா மனதில் துளிர்விட் டோர்
உளவு சொல்லும் அருட்பெருஞ் ஜோதி

குறிவைத்து வாழ்வார்க்கு குருவாக வந்து
அறிவுறுத்து மப்பனாம் அருட்பெருஞ் ஜோதி

மலமகற்றி நீடுவாழ மக்களுடன் கூடி
உலகம் சுற்றும் அருட்பெருஞ் ஜோதி                           1070

குருட்டாட்டம் நீங்கி குவலயம் ஓங்கத்திரு
அருட்பாவை அளித்த அருட்பெருஞ் ஜோதி

தாழா நிலையருளைத் தரும் பிரபந்தத்திரட்டை
ஏழாம் திருமுறையெனும் அருட்பெருஞ் ஜோதி

கானகப் பாதையைக் கடந்து வயோதிக
ஊனம் தவிர்க்கும் அருட்பெருஞ் ஜோதி

கூடுவிட்டு போகுமுன் கூட்டுவித்து சிரத்தில்
ஆடுகின்ற சிற்றம்பல அருட்பெருஞ் ஜோதி

கூவிப்பிறக்கும் முன்எம் கூட்டினைக் காத்த
ஆவி உருவான அருட்பெருஞ் ஜோதி                           1080

பழுதான மேனியைப் புதைக்கச் செத்தாரை
எழுப்பிடும் அருளான அருட்பெருஞ் ஜோதி

எந்நிலை விரும்பினும் அன்பர்க்கு விரைந்து
அந்நிலை அருளும் அருட்பெருஞ் ஜோதி

புலை கொலை பாதகர்கட்கு பேரருள்
இலை என்னும் அருட்பெருஞ் ஜோதி

வெறுத்துப் பசியால் வாடியோர்க்கு சாலையில்
அறுசுவை அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

காட்சி கொடுத்து கருணை ஞானசபையில்
ஆட்சி செய்யும் அருட்பெருஞ் ஜோதி                           1090

சித்தி வளாகத்தில் சித்தனோடு கலந்திங்கு
எத்திக்கும் தித்திக்கும் அருட்பெருஞ் ஜோதி

சங்கமதை நாடியோரை சத்தியனாக்கி அவர்
அங்கமதை தங்கமாக்கும் அருட்பெருஞ் ஜோதி

முத்தேகம் அடைவதே முத்தி என்றே
இத்தேகம் நீடுசெயும் அருட்பெருஞ் ஜோதி

சாதிமத குலமும் சாடியே பொய்யென்று
ஓதி உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

கற்பம் ஒன்றிற்கு கருப்பை ஒன்றீனும்
அற்புதம் செய்யும் அருட்பெருஞ் ஜோதி                         1100

மாண்டவன் தாண்டவன் மதச் சாமிக்கெலாம்
ஆண்டவன் நானெனும் அருட்பெருஞ் ஜோதி

கூற்று ஒழியும் காற்றை அளித்தே
ஆற்று படுத்திய அருட்பெருஞ் ஜோதி

மருந்தான தயவை மலர்ந்தவர் நமக்கு
அருந்தவப் பயனாம் அருட்பெருஞ் ஜோதி

கடல்சூழ் உலகிற்குக் கதிரவன்போல் நமது
உடல்சூழ் ஒளியாம் அருட்பெருஞ் ஜோதி

வாழத் தெரியாது வன்பொருள் ஈட்டும்
ஊழல் ஒழிக்கும் அருட்பெருஞ் ஜோதி                          1110

காதல் மலர்ந்து கருத்தொ ருமையினால்
ஈதல் செய்யும் அருட்பெருஞ் ஜோதி

இருமை ஒழிந்து உத்தமன் உறவளிக்கும்
ஒருமை நினைவாம் அருட்பெருஞ் ஜோதி

சிந்தனை ஒன்றி சிந்திக்க பெருவாழ்வில்
எந்தனை ஏற்றும் அருட்பெருஞ் ஜோதி

காம மகற்றி காதலுறச் செய்து
ஏம சித்தருளும் அருட்பெருஞ் ஜோதி

பசித்திருந்து உள் பார்க்கச் சொல்
அசிகை தவிர்க்கும் அருட்பெருஞ் ஜோதி                        1120

தனித்தே இருந்து தவம் செய்வார்க்கு
இனிக்கும் இன்பமாம் அருட்பெருஞ் ஜோதி                           

விழித் திருக்கும் வழிச் செல்வோரை
அழித்தல் கூடுமோ அருட்பெருஞ் ஜோதி

வானத்தின் காட்சிகளை வியந்து நோக்கின்
ஆனந்தம் ஆனந்தம் அருட்பெருஞ் ஜோதி

வல்லானைக் காண விரும்பிஅழக் கடல்
எல்லாம் கண்ணீரோ அருட்பெருஞ் ஜோதி

சித்திப் பெற சித்தனைப் பாடும் எனக்கீன்ற
உத்தியோகம் இதுவோ அருட்பெருஞ் ஜோதி                     1130

தூமையில் பிறக்கவைத்து தூய்மை யாக்கி
ஊமைஎனை பேசவைத்த அருட்பெருஞ் ஜோதி

காண்பன யாவும்நடுக் கண்ணால் காணும்
ஆண்மை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

ஜீவகாருண்ய பணிசெய்து ஜீவித்திருக்க ஆசை
ஆவதெல்லாம் உன்னருளே அருட்பெருஞ் ஜோதி

கண்ணொளி யாகக் காட்சித் தந்தாட
எண்கோனம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அறியாம லிருக்க அருவமாகும் சித்தை
அறிவியல் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி                        1140

பாழுமுலக வாசனை பாழ்பட விட்டால்
ஏழுத்திரையும் தடையோ அருட்பெருஞ் ஜோதி

சாதாரணன் என்னை சாகாதவன் என்றே
ஆதார மாக்கும் அருட்பெருஞ் ஜோதி

இம்மையும் மறுமையும் இன்றி எடுத்துஎன்
ஐம்புலன் களாகிய அருட்பெருஞ் ஜோதி

நரக உலகிடை நாய்யெனக் குரைத்தேன்
இரவும் பகலுமாய் அருட்பெருஞ் ஜோதி

கதைசொல் பக்தியில் களிப்பவர் கோடி
இதென்ன மாயை அருட்பெருஞ் ஜோதி                         1150

அன்பினால் என்னை அழைத்தே என்னிடம்
உன்னைக் கொடுத்தேன் அருட்பெருஞ் ஜோதி

விளைந்த வினையால் விளைத்த விதையாய்
இளைப்பதை தடுக்கும் அருட்பெருஞ் ஜோதி

பகலவன் நினைக்கப் பாடுகின்ற இராமலிங்க
அகவலில் புணர்ந்த அருட்பெருஞ் ஜோதி

நிராதார நிலையளித்து நலம் அளிக்குமே
இராமலிங்க அகவல் அருட்பெருஞ் ஜோதி

நாமபஜனை அகவல் நவின்றால் இங்கு 
ஈமக்கடன் உண்டோ அருட்பெருஞ் ஜோதி                       1160

இரண்டாயிர மடி அகவலைஓதியே நாழிகை
இரண்டரையில் கலப்பாய் அருட்பெருஞ் ஜோதி

தாய்எனத் தாங்கும் தந்தையாய் காக்கும்
ஓய்வற்று ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி

படிகள் மூன்றும் பார்த்து அதற்கே
அடிமை ஆனேன் அருட்பெருஞ் ஜோதி

இக்கரை கடப்போரை இன்பம் ஊட்டும்
அக்கறை செலுத்தும் அருட்பெருஞ் ஜோதி

சகத்தில் ஓங்கும் சன்மார்க்க சாலைக்கு
அகரப் பதியாம் அருட்பெருஞ் ஜோதி                           1170

தகவல் அறிந்து தனித் திருப்போரை
அகழியாய் காக்கும் அருட்பெருஞ் ஜோதி

கசடு போக்கி களித் திருப்போரைஉன்
அசல் என்றாக்கும் அருட்பெருஞ் ஜோதி

கசிந்து உருகாதக் கடவுள் பக்தி
அசிங்கம் இல்லையோ அருட்பெருஞ் ஜோதி

சடங்குகள் இன்றி சத்திய முடையார்க்கு
அடக்கம் தரும் அருட்பெருஞ் ஜோதி

எடுத்த முத்தேகம் எடுக்கும் இத்தேகம்
அடுத்தது நானே அருட்பெருஞ் ஜோதி                          1180

தடியேன் எம்மை தனிப்பெருங் கருணையால்
அடியேன் என்றாக்கும் அருட்பெருஞ் ஜோதி

மடங்கும் மனதை மங்கையர் நினைவை
அடக்கு வந்தெனை அருட்பெருஞ் ஜோதி

அடித் துண்ணாமை அருள் பெறுவதற்கு
அடிப்படை யன்றோ அருட்பெருஞ் ஜோதி

கடை விரித்ததை கொள்வோர்க் கெல்லாம்
அடைவு கொடுக்கும் அருட்பெருஞ் ஜோதி

பணி செய்வோரை பணிந் திருப்பதே
அணி என்றாகும் அருட்பெருஞ் ஜோதி                          1190

தஞ்ச மடைந்துனை தலைவனென ஏற்று
அஞ்சலி செய்வேன் அருட்பெருஞ் ஜோதி

தசை தின்று தயா வேடமிடுவோர்க்கு
அசைவம் ஏனோ அருட்பெருஞ் ஜோதி

சிக்க லெடுத்து சிங்கார மானோர்க்கு
அக்கம் பக்கமான அருட்பெருஞ் ஜோதி

இசை அருட்பா இசைத்தோர்க்கு மனம்
அசைதல் இலையே அருட்பெருஞ் ஜோதி

அகஇனத் தாருக்கு அருட்பெருஞ் ஜோதி
அகவல் துணையாம் அருட்பருஞ் ஜோதி                        1200

அச்சம் தவிர்த்து ஆசை விட்டார்க்கு
அச்சு தெரியும் அருட்பெருஞ் ஜோதி

அட்ட சபையும் அட்டக பாடலும்
அட்ட காசம் அருட்பெருஞ் ஜோதி

கணுவில்லாக் கரும்பாய் காணு மிடத்தே
அணுவும் உண்டோ அருட்பெருஞ் ஜோதி

பிணை தரும் பசிக்கு ணவுதரும்
அணையா தீபம் அருட்பெருஞ் ஜோதி

சமைத்த சுத்த சன்மார்க்க மெங்கும்
அமைதி அமைதி அருட்பெருஞ் ஜோதி                          1210

தப்பாத பிறவி தோறும் காக்குமென்
அப்பர் நீயன்றோ அருட்பெருஞ் ஜோதி

அதீன மடைந்து அகங் குளிர்ந்தால்
அதீத சுகமாம் அருட்பெருஞ் ஜோதி

விமலனைத் தொழ விபூதிப் பூசும்
அமளி ஆகுமோ அருட்பெருஞ் ஜோதி

மந்திரம் ஓதியே மருந்துண்டேன் இனியுன்
அந்தரங்கம் எனதாகும் அருட்பெருஞ் ஜோதி

உபயம் இன்றி ஒன்றென ஓங்குவோர்க்கு
அபயம் அபயம் அருட்பெருஞ் ஜோதி                           1220

எமபய போக்கும் உந்தனிச் சித்தியை
அமலாக்கம் செய் அருட்பெருஞ் ஜோதி

இம்சை நீக்கிய இயல்பினரை உந்தன்
அம்ச மாக்கு அருட்பெருஞ் ஜோதி

வம்பு செய்து வாய் தடித்தோர்க்குன்
அம்பு பாயும் அருட்பெருஞ் ஜோதி

உபாயம் இன்றி ஓங்குமென்ற உம்திறன்
அபாரம் அபாரம் அருட்பெருஞ் ஜோதி

கபாலக் கனல் கண்டு அமர்ந்தெனக்கு
அபாயம் உண்டோ அருட்பெருஞ் ஜோதி                  1230

அத்தைத் தெரிந்து அமர்ந்த எனக்குநீநல்
அத்தைப் பெண்ணாம் அருட்பெருஞ் ஜோதி

சத்திய அகவலிது சகத்திலோர் புதிய
அத்தி யாயம் அருட்பெருஞ் ஜோதி

அன்பு ளோர்க்கு அமுதுடன் பசிதீரும்நல்
அன்ன மளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

அருள் விளக்காய் என்னுள் ஓங்கும்
அருட் பிரகாச அருட்பெருஞ் ஜோதி

ஆத்திகம் பேசி ஆருயிர் போக்குவார்மேல்
ஆத்திரம் உண்டோ அருட்பெருஞ் ஜோதி                        1240

சதிசெய்து வழக்காடும் சதியாளர் மேல்
அதிருப்தி காட்டுக அருட்பெருஞ் ஜோதி

நல்லார்கள் வாழ நல்லதுணை உனை
அல்லால் யாரோ அருட்பெருஞ் ஜோதி

நரகிடை வழியை நடத்தும் ஆசைக்கு
அரக்கன் ஆகுக அருட்பெருஞ் ஜோதி

இருள்சூழ் வானில் இளம்பிறை யானது
அருமை அருமை அருட்பெருஞ் ஜோதி

தருகின்ற சுத்த தேகத்தில் மலர்ந்ததோர்
அரும்பாய் மணக்கும் அருட்பெருஞ் ஜோதி                      1250

கலகமுற உயிர்களைக் கொல்லும் போது
அலறு கின்றேன் அருட்பெருஞ் ஜோதி

மறித்து நிற்கும் மொழி பலஉண்டென்று
அறியாயோ என் அருட்பெருஞ் ஜோதி

அறியா மார்க்கத்தை எல்லா மொழியிலும்
அறியச்செய் என் அருட்பெருஞ் ஜோதி

இரவு வெளுக்க இறவானை மொழிக்கோர்
அரசனை வரச்செய் அருட்பெருஞ் ஜோதி

நிர்க்குணனே நிராமயனே நான் உனக்கே
அர்ப்பணம் அர்ப்பணம் அருட்பெருஞ் ஜோதி                     1260

கரத்தா லின்பங் கொண்டேன் எனைப்போல்
அரக்கன் உண்டோ அருட்பெருஞ் ஜோதி

உலகியல் விடுத்தும் அருள்தர என்மேல்
அலட்சியம் தானோ அருட்பெருஞ் ஜோதி

மலையாக நிற்கும் மாமாயை எண்ணங்கள்
அலை அலையாம் அருட்பெருஞ் ஜோதி

சற்குரு புகன்ற சுத்த சன்மார்க்கம்
அற்புதம் அற்புதம் அருட்பெருஞ் ஜோதி

குறித்துநீ உரைத்ததை கேளாமல் நடப்பது
அறியாமை அன்றோ அருட்பெருஞ் ஜோதி                      1270

சரணம் சரணம் சுத்தசன்மார்க்கம் என்றே
அரங்கம் ஏறினேன் அருட்பெருஞ் ஜோதி

நட்சத்திரத் தூவல்கள் நலம்வாழ நீஇட்ட
அட்சதை வாழ்த்தோ அருட்பெருஞ் ஜோதி

சம்சாரமும் சகல சம்பத்தும்நீ யன்றோஎன்
அம்மையும்நீ என்பேன் அருட்பெருஞ் ஜோதி

எமபயம் நீக்கி இவ்வுலகிடை ஓங்கஎனை
அமர்த்தினாய் வாழியென் அருட்பெருஞ் ஜோதி

உருவ உடலினை உண்மை யாக்கி
அருவ மாக்கும் அருட்பெருஞ் ஜோதி                           1280

கவைக் குறியாய்க் கருதி வணங்கும்
அவை அவையாம் அருட்பெருஞ் ஜோதி

பறிந்து ஊட்டும் பாலையும் அருந்தா
அறிவிலி பாராய் அருட்பெருஞ் ஜோதி

மனு அளித்தும் மன்னிக்காதென் பிழைமீது
அனுதாப மிலையோ அருட்பெருஞ் ஜோதி

மாகாயமதில் மருவி மலர்ந்ததால் அந்த
ஆகாயம் எனதாச்சு அருட்பெருஞ் ஜோதி

என்னைத் தன்னோடு ஈர்த் தென்றும்விடாத
அன்றாட சுவாசமாம் அருட்பெருஞ் ஜோதி                      1290

பாசிகளை எடுத்துப் பழகும் எனைநல்
ஆசிரியர் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி

தனுவெலாம் பொடித்து தானே நானாகும்
அனுபவம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

பழமைத் தமிழும் பார்க் கடலும்
அழகு அழகு அருட்பெருஞ் ஜோதி

காட்டுப் பாதைச்செல்லக் கூடும் கரணங்கள்
ஆட்டுவிக்க ஆடேன் அருட்பெருஞ் ஜோதி

பாட்டில் பிழையாய் பாடினும் எனை
ஆட்கொண் டாடு அருட்பெருஞ் ஜோதி                          1300

நாட்டில் நல்லவனென நடித்த எனை
ஆட்டு விப்பாய் அருட்பெருஞ் ஜோதி

ஏடு படித்து அருட்பா அமுதுண்டு
ஆடு கின்றேன் அருட்பெருஞ் ஜோதி

கணை விடுத்தேன் காண எனைவினை
அணை தடுக்குமோ அருட்பெருஞ் ஜோதி

பாயிரத்தில் கலந்துப் பாடுபொருள் நீயானால்
ஆயிரம் பாடுவேன் அருட்பெருஞ் ஜோதி

பாடை ஏற்றாதுஎனை பகலொளியாய் வெள்
ஆடை போலாக்கு அருட்பெருஞ் ஜோதி                         1310

காண் இரண்டறக் கலக்காது போனால்
ஆண் நானோ அருட்பெருஞ் ஜோதி

உழைத்த எனை உன்பணிக்கு வடலூர்
அழைத்தாய் வாழி அருட்பெருஞ் ஜோதி

தளரும் எனைத் தழுவி முகரும்போது
அளவு கடக்குமே அருட்பெருஞ் ஜோதி

மனுநீதி பாவமெலாம் மறந்தும் செய்யாதிருக்க
அனுமதி தருவாய் அருட்பெருஞ் ஜோதி

இறைத்தன்மை நிறைய இனி இறவாதிருக்க
அறைந்தாய் எனையே அருட்பெருஞ் ஜோதி                     1320

காதலால் களிக்கின்ற காயம் அதிசூடு
ஆதல் என்றுருமோ அருட்பெருஞ் ஜோதி
தன்னோடு என்னைத் தழுவிக் கலந்து
அன்புருவ மாக்கும் அருட்பெருஞ் ஜோதி

ஊன் நிலைத்து உண்மை ஓங்குவதே
ஆன்ம இலாபம் அருட்பெருஞ் ஜோதி

காலம் கடந்த காயமடைதலே அன்ம
ஆலயம் ஆகும் அருட்பெருஞ் ஜோதி

சாபம் நீக்கி சோதனை செய்யும்
ஆபத்தை நீக்கும் அருட்பெருஞ் ஜோதி                          1330

காணவரும் நாள் கொஞ்சம் அதில்
ஆணவம் ஏனோ அருட்பெருஞ் ஜோதி

பார்வை அகத்துள் பதியைத்தேட அதிக
ஆர்வம் எனக்கு அருட்பெருஞ் ஜோதி

ஊரூராய் சுற்றினும் உண்மை அறியேன்
ஆரூடம் சொல் அருட்பெருஞ் ஜோதி

வேதா கமங்கள் வேண்டிலேன் மெய்போகா
ஆதாயம் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

மாண்டுப் போகவே மரணநாள் எதுவென
ஆண்டு போகுமோ அருட்பெருஞ் ஜோதி                  1340

வளி மண்டலம் வந்து சுழன்றுஆங்கே
அளிப்பாய் சுகமே அருட்பெருஞ் ஜோதி

புனலில் நீந்தி பல்கும் உயிர்க்கும்
அனல் ஆகும் அருட்பெருஞ் ஜோதி

தாவர உயிரியில் தழைத்து ஓங்கியோர்
ஆவண மாகிய அருட்பெருஞ் ஜோதி

நாளும் உயிர்களை நாடி அன்பால்
ஆளும் அரசே அருட்பெருஞ் ஜோதி

இறந்தாரை எழுப்பும் இறை சித்திவகை
அறமெலா மருள் அருட்பெருஞ் ஜோதி                         1350

ஊமைக் கனவை உரைத்த மதவழியெலாம்
ஆமைப் பயணமாம் அருட்பெருஞ் ஜோதி

வீழும் உடலில் விமலனைக் காணத்திரை
ஏழும் ஒன்றும் அருட்பெருஞ் ஜோதி

காணும் உயிரெலாம் களித்துலகில் வாழ
ஆணும் பெண்ணுமானாய் அருட்பெருஞ் ஜோதி

பசித்தோர்ப் பசிப் போக்கா உண்டியல்
அசிங்கம் அசிங்கம் அருட்பெருஞ் ஜோதி

கடைந்த தேகத்தில் கற்பூரமணமே உன்
அடையாள மாகும் அருட்பெருஞ் ஜோதி                        1360

வாழ் உடலில் விளங்கும் அலைமனம்
ஆழ் கடலாமோ அருட்பெருஞ் ஜோதி

பாபா என்றோதி புலால் உண்ணுதல்
ஆபாச மன்றோ அருட்பெருஞ் ஜோதி

படிநிலை கடந்து பார்க்க இப்பாவிக்கும்
அடிமுடி காட்டாய் அருட்பெருஞ் ஜோதி

பழுது வாராதிருக்க பாட்டால் உனை
அழுது தொழுவேன் அருட்பெருஞ் ஜோதி

வோலை வருமுன்னே வருவோர்க் கோர்
ஆலை நடத்தும் அருட்பெருஞ் ஜோதி                          1370

தேனினும் நீடும் தயவுப் பெற்றேனினிதேக
ஆனி நேருமோ அருட்பெருஞ் ஜோதி

கனாக் கண்ட கருப்பொரு ளடையஎனை
அனாதி ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி

வீதியில் அழியா விதிச்செய் தென்னை
ஆதி ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி

மருந் தென்று மலரும் குண்டலிப் பால்
அருந்து வேன் அருட்பெருஞ் ஜோதி

பண்டமும் பிண்டமும் படைத்துப் பல 
அண்டங் காக்கும் அருட்பெருஞ் ஜோதி                         1380

சத்திய நெறியாம் சன்மார்க்கம் பிடித்து
அத்துவித மானேன் அருட்பெருஞ் ஜோதி

தப்பேது செய்யினும் தண்டனை எனக்கருள்
அப்போதுக் கப்போதே அருட்பெருஞ் ஜோதி

கதிபதிக் கெல்லாம் கட்டளை இடும்
அதிபதி யாகும் அருட்பெருஞ் ஜோதி

மகிழ்ச்சி யுடன் மாமனிதர்வாழ மற்றொரு
அகிலம் அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி

நல்லார் நலம்பெற நாடும் உலகில்
அல்லார் ஏனோ அருட்பெருஞ் ஜோதி                           1390

சங்கம் சார்ந்த சன்மார்க்கப் போதனை
அங்குச மாகும் அருட்பெருஞ் ஜோதி

படித்தால் பிணிப் போக்கும் அருட்பா
அடியார்க் கடியேன் அருட்பெருஞ் ஜோதி

தமதுயிர் போகாது தடுக்கும் அன்பரை
அமரர் ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி

சரியென்ற சமயமெலாம் சாராத தனித்த
அரிய சுகமாகும் அருட்பெருஞ் ஜோதி

உருவும் அருவும் இல்லாத ஓர்தனித்த
அருளே வடிவாம் அருட்பெருஞ் ஜோதி                         1400

வேதிக்கும் தேகம் வேண்டும் என்
ஆதி பகவனே அருட்பெருஞ் ஜோதி

பன்னிய தத்துவங்களைப் பாரில் ஏதும்
அன்னிய மில்லை அருட்பெருஞ் ஜோதி

சாகும் பிறப்பும் சமமில்லாச் சாதனை
ஆகும் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி

வேகாக் காலை வேண்டி நின்றோர்க்கு
ஆகாத துண்டோ அருட்பெருஞ் ஜோதி

பரிநரி யானதைப் புரியாதோர் உலகில் 
அரிசிவ என்பார் அருட்பெருஞ் ஜோதி                           1410

கல்லா தவர்போல்புன் கறி உண்டு
அல்லா என்பார் அருட்பெருஞ் ஜோதி

பாவி என்றே பயங்காட்டிப் பரிசுத்த
ஆவி என்பார் அருட்பெருஞ் ஜோதி

தவாநிலை தயவைத் தந்த புத்தர்
அவா போனதே அருட்பெருஞ் ஜோதி

நாட்டில் புலையரும் நன்றாய் வணங்கி
ஆட்டை அடிப்பதோ அருட்பெருஞ் ஜோதி

ஊழி உருத்த ஆரூடம் பார்த்துவீணே
ஆழியில் மூழ்குவார் அருட்பெருஞ் ஜோதி                      1420

கனவு நனவாகக் கூட்டமாய் நெருப்பு
அனலை மிதிப்பதோ அருட்பெருஞ் ஜோதி

சவந் தின்னும் சனங்களால் உயிர்கள்
அவதி யுறுவதோ அருட்பெருஞ் ஜோதி

மண வாழ்க்கை மயக்கும் மாயையே
அணங்கு என்ற அருட்பெருஞ் ஜோதி

உணவின்றி ஏங்கி உத்தமனுக்காக இளைக்க
அணங்காட்டு தகுமோ அருட்பெருஞ் ஜோதி

எந்தை என்னுள் அமர்ந்து சித்திக்கும்
அந்நாளைத் தருக அருட்பெருஞ் ஜோதி                         1430

தடையெலாம் நீக்கி தனித்த அமுமதை
அடைய அருளாய் அருட்பெருஞ் ஜோதி

கணிதம் கடந்து காணா அண்டங்கள்
அணி அணியாம் அருட்பெருஞ் ஜோதி

பணிந்துப் பாடும் பரமாகாச அகவலுக்கு
அணிந்துரைச் செய்யும் அருட்பெருஞ் ஜோதி

உடலைக் கழுவி ஊர்க்கூடியழுது தீயிட்டு
அடலை செய்வதோ அருட்பெருஞ் ஜோதி

கடலைக் கடக்கக் கருதி அணிவோர்
அடலை இதுவோ அருட்பெருஞ் ஜோதி                         1440

உருசெய் மதங்கள் உளறிய உலகில்
அருமறை நீயே அருட்பெருஞ் ஜோதி

குறித்து நோக்கினும் காலத் தொடக்கம்
அறியேன் அறியேன் அருட்பெருஞ் ஜோதி

மனமதை அடக்கி மானங் காத்தாரை
அனக னாக்கும் அருட்பெருஞ் ஜோதி

எமன் வரும்வரை ஏதுமறியாது நாள்கழித்து
அமர்ந் திருப்பனோ அருட்பெருஞ் ஜோதி

வழி தெரியாது வந்தப்பிறவி மேன்மேல்
அழிஞ்சிப் பட்டேன் அருட்பெருஞ் ஜோதி                        1450

பழிக்கப் பிறரழ பாடையடைய இனிமேல்
அழிஞ்சிப் படேன் அருட்பெருஞ் ஜோதி

சம்மதம் சம்மதம் சன்மார்க்கச் சத்திய
அம்மண மனமருள் அருட்பெருஞ் ஜோதி

இம்மலத் தேக இருட்டை விடுத்தெனை
அம்பலம் செய்வாய் அருட்பெருஞ் ஜோதி

கருஉரு உயிரெலாம் கருணை பெற்றுய்ய
அருளுக அருளுக அருட்பெருஞ் ஜோதி

அழுது தொழுவார் அமுது பெறுவார்
அழுக்கை நீக்கும் அருட்பெருஞ் ஜோதி                          1460

எவ்விட மிருந்து எமக்கருள் புரியும்
அவ்விடம் காட்டுக அருட்பெருஞ் ஜோதி

பாகமில்லா ஒன்றாய்ப் புரிந்து ஜோதியாய்
ஆகலாம் ஆகலாம் அருட்பெருஞ் ஜோதி

முத்தேக சித்தனுக்கு முயங்கி அன்றளித்த
அத்தேக மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

ஓதாமல் உணரும் ஓங்கு தயவெனும்
ஆதார மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

சாகா வரம்தந்து சோதனைக் கடந்தநல்ல
ஆகார மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                       1470

சாதீய குணமெலாம் சாரானே சத்தியனுன்
ஆதீன மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

தங்க மயமான தனிஅருட் ஜோதிநிலை
அங்க மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

தாயினு மன்புடையாய் தயவிலா தடியேன்
ஆயினு மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

பழமை தெரியாது புதுமை யோடிருக்கும்
அழகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

என்னது நின்னதென்ற இருமை நிலையற்ற
அன்பை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                       1480

சிற்றம்பலம் விளங்க சித்தெலாம் செய்யும்
அற்புத மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

சாக்கிரம் ஒழிந்த செத்தாரை எழுப்பும்
ஆக்க மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

சகத்துயிர்கள் வாழ சீவ காருண்ய
அகம் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

ஊட்டியக் கருணையால் அருள் செங்கோல்
ஆட்சி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

நாழி இரண்டரையில் கருணைக் கணை
ஆழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                          1490

நிறை வாகி நின்னோடுறைய சித்திவளாக
அறை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

பறியவினை ஓட பதிஒன்றெனக் காணும்
அறிவு எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

பருவம் ஓயும்முன்னே பிறர்பார்க்க மறையும்
அருவ மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

இகத்திலே பரத்தை  ஈட்டிய இராமலிங்க
அகவல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

உறக்கம் போக்கும் இயற்கை உண்மை
அறத்தை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                      1500


மெய்யனை தூயனை மனத்தானை இராமலிங்க

அய்யனை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

 

களித்து நாமிருக்கக் கருதி உன்னையே

அளித்து எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

 

கூற்றதை விலக்கும்திருக் கூட்டத்தில் சேரும்

ஆற்றலை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

 

சத்தி பெற்ற சித்திவளாகம் தங்கமாக்கும்

அத்திற மெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

 

மதத்தோ ரெல்லாம் மயங்கிப் புலையராகும்

அதர்மம் பாரேன் அருட்பெருஞ் ஜோதி                        1510

 

சான்றோன் என்றே சுகபோகம் காண்கின்றார்

ஆன்மிகம் இதுவோ அருட்பெருஞ் ஜோதி

 

சாத்வீக சன்மார்க்கச் சாதுக்களை காண்பது

ஆத்ம தரிசனமாம் அருட்பெருஞ் ஜோதி

 

சாபத்தை நீக்கி சடுதியில் வருகின்றஎல்லா

ஆபத்தையும் நீக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

ஞானசபை ஓட்டை ஞாயிறாய் தங்கமாக்க

ஆனதைச் செய்வாய் அருட்பெருஞ் ஜோதி

 

பேச்சற்ற ஒலியும் பெயரற்ற தேகாதிகளும்

ஆச்சரியம் ஆச்சரியம் அருட்பெருஞ் ஜோதி                 1520

 

பகலவன் ஒளியாய் பார்ப்பவர்ப் பொருளாய்

அகப்படும் அருளே அருட்பெருஞ் ஜோதி

 

இகழ்ந்தோர் வியக்க என்னுள் நிலைத்து

அகழ்ந்து செல்லும் அருட்பெருஞ் ஜோதி

 

சடங்கில்லா பக்தி செய்யும் என்னுள்

அடங்கி ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி

 

இகரமுறும் உயிர்க்கும் இசைந்த முத்திக்கும்

அகரஒளி யளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

இருள்சூழ் உலகிடை உழலும் உயிர்க்கெல்லாம்

அருளின்ப மருளுவாய் அருட்பெருஞ் ஜோதி                          1530

 

உறியென மேலாய் உறுதியோடு இருப்போர்க்கு

அறிவின்ப மளிப்பாய் அருட்பெருஞ் ஜோதி

 

உலகாய் அண்டமாய் அணுவாய் எல்லாந்தான்

அலதாய் தனித்த அருட்பெருஞ் ஜோதி

 

மானத்தின் மாண்பாய் மலருள் மணமாய்

ஆனஎலாம் நிறைந்த அருட்பெருஞ் ஜோதி

 

அகமுறு எண்ணமாய் அண்டத்தில் வெளியாய்

அகண்டு விரியும் அருட்பெருஞ் ஜோதி

 

ஏன்னென்ற கேள்வியும் ஆம்மென்ற பதிலும்

ஆன்மானந்த மாகும் அருட்பெருஞ் ஜோதி                               1540

 

அகத்தைப் பிடித்த அகங்காரப் பேய்யான

அகந்தை யழிக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

சக்கரம் சுழன்று சிரங்காண மூலாதார

அக்னி மூட்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அகங்காணு முன்னே அன்பாய்ப் பாடுவது

அகம்பாவம் தானோ அருட்பெருஞ் ஜோதி

 

நான் இருக்கையில் நடிப்பாய் நீஎன்பது

ஆன்றோர்க் கழகோ அருட்பெருஞ் ஜோதி

 

என்னோ டுன்னையும் உன்னோ டென்னையும்

அன்போடு கலந்தருள் அருட்பெருஞ் ஜோதி                            1550

 

தானாகி என்றுமுன் தாளாகி இவ்வுடலோடு

ஆனாமை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கூடா நட்புடன் கூத்தாடி மதப்பேயுடன்

ஆடாமை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

வசைப் பாடுமுலகில் வசப்படாது நின்நிலை

அசையாமை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கானக் குயிலாய்க் கூவுமுனைக் காணும்

ஆனந்தம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கமுக்க மாக்கி காயத்துள் மறைந்தபேர்

அமுதம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                 1560

 

அருந் தொழிலாம் ஐந்தொழில் செய்யும்

அருள் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சங்கம் சொல்லும் சத்திய நெறிநில்லும்

அங்கம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அகிலமெலாம் வாழும் ஆருயிர்கட் கெலாம்

அகிம்சை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

எங்கும் சென்று எந்தைநின்னருள் புகழ்பேசும்

அங்கீகாரம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கங்கனங் கட்டும் கருத்துடைய சங்கத்தில்

அங்கத்தினர் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                         1570

 

தப்பாது மேல்செல்ல தடைகளைத் தாண்டும்

அப்பியாசம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கபடும் கள்ளமும் காணா தருளும்உன்

அபயம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சபித்தல் நீக்கிச் சுத்தசன்மார்க்க அருளால்

அபிவிருத்தி வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கபிக்குணம் அடக்கிக் கண்ணீரால் நனையும்

அபிஷேகம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சனுவாய் அகத்தும் சகத்தும் சுகமோங்கும்

அனுபவம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                            1580

 

தவம் செய்து தத்துவங்கடக்கும் தயாநிலை

அவசியம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அவலம் போக்க ஆன்மா என்னுடலிலோர்

அவயமாக வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சந்திக்கும் வாய்ப்பருளி சன்மார்க்கச் சித்தி

அந்தியம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கனகசபை என்னுள் காணும் ஒருமை

அனந்தம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

காற்றும் கதிரும் கதியும் விதியுமருளும்

ஆற்றல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                  1590

 

தனு தானறியாத தன்மை அறியஉன்னருள்

அனுகூலம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

பனுவைப் போல் பழியாது நம்பாட்டை

அனுடிக்க வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

எனுவும் தற்சுதந்தரம் இல்லை எதற்கும்

அனுமதி வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

இகபரக் காட்சி எல்லாம் பகலெனக்காண

அகக்கண் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கரு கலையாதிருக்கக் குருவென நீஎன்

அருகில் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                 1600

 

மதிதரு அருட்பாவை மதித்தறியும் மதி

அதிகம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

படும் பாடறிந்து படியேறும் வழிஎனக்கு

அடுத்தடுத்து வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சமப் படுத்திச் சன்மார்க்கங்காண என்னுள்

அமருதல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

பஞ்சணை படுத்தாரும் பாடை காணும்போது

அஞ்சுதல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

குழைந்துக் குலாவிக் குறிப்பால் உனைப்பாடி

அழைத்தல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                           1610

 

தருகின்ற பிறவியெலாம் தன்னையே பாடும்

அருள்வாக்கு வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

கனுஇரு நடுவில் கனிந்து ஒளியெனஎனை

அனுப்புதல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

நிழலில்லா தேகமும் நிறைமதிக் காட்சி

அழகும் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அமைத்த மார்க்கம் எம்மதமும் இயங்காத

அமைப்பு வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அறிந்த தெலாம் அநித்தியமென உனையெனும்

அறிஞர் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                 1620

 

வலையிடு தொழிலெலாம் விடுக்கும் ஆன்மநேய

அலைகள் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அகரஉகரம் தெரிவித்து ஒளிமய மாக்கும்

அகச்சூடு வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

ஐவராதிகள் வந்து ஐயனைத் தொழும்காட்சி

அவனியில் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சகத்தே ஆயிரங்கோடி சூரியனைப் பார்க்கும்

அகவை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

என்னோ டிருக்கும் ஐம்புலன் களிலிருந்து

அன்மை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                1630

 

மதிதரும் ஒளிதரும் மற்றென்றும் இறவா

அதிசயம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

விதிவழிச் செல்லா விதி படைக்கின்ற

அதிட்டம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

பதம் பணிந்துன் பேரருளைப் பாடும்

அதரம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

எத்திறம் பெற்றும் எமனை வெல்லும்

அத்திரம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சகியா தெழுந்து சீவகாருண்யம் புரியும்

அகிலம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                 1640

 

பசலை நீக்கி பெருவாழ்வு வாழ்கவெனும்

அசரீரி வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

உகங்கள் கடந்தும் உருஅருவா யிருக்கும்

அகதம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

புகலும் அறத்தால் புலையன் வருந்திவரும்

அகஇனம் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

பகல் இரவாய் பக்தியினை உளம்பதிக்கும்

அகத்தடிமை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

தகரத்தில் இருக்கும் தலைவனின் தயவான

அகத்தியல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                            1650

 

இன்புற நினைந்துனை இச்சித்து புகழும்

அன்பு வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

தகதக மின்னும் தந்தையோடு கலக்கும்

அகநாழிகை வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

அகஇனத் தார்க் கெல்லாம் நிலைக்கேற்ப

அகப்படல் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

நகமும் சதையுமாய் நவின்ற உளத்தில்

அகப்பூ வேண்டும் அருட்பெருஞ் ஜோதி

 

சுகமும் துக்கமும் சுமக்கா துனைக்காணும்

அகமும் வேண்டும் அருட்பெருஞ் ஜோதி                                 1660

 

 

கருவாய் கனிவாய் கதிராய் குணமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

குருவாய் கனலாய் காற்றாய் இயல்பாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

தருவாய் நிழலாய் தலையாய் அடியாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

அருவாய் அணுவாய் ஒலியாய் ஒளியாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

உருவாய் உளதாய் இலதாய் இனமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி                                  1670

 

திருவாய் மலராய் தலமாய் மணமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

மருவாய் உளமாய் மதுவாய் இதமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

இருவாய் பதியாய் அனலாய் தனமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

ஒருவாய் பிரிவாய் இணையாய் சரியாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி

 

சருவாய் சலமாய் சுகமாய் சிரமாய்

அருட்பா அருளும் அருட்பெருஞ் ஜோதி                                  1680

 

பற்பல போதிக்கும் பிரபந்தத் திரட்டு

அற்புதந் தரும் அருட்பெருஞ் ஜோதி

 

பாலகனும் படிக்கும் பிரபந்தத் திரட்டு

ஆலயம் ஆகும் அருட்பெருஞ் ஜோதி

 

பன்மார்க்கப் பஜனை பிரபந்தத் திரட்டு

அன்பினை ஈர்க்கும் அருட்பெருஞ் ஜோதி

 

பாபநிலை அழிக்கும் பிரபந்தத் திரட்டு

ஆபரண மாகும் அருட்பெருஞ் ஜோதி

 

பருப்பொருள் உரைக்கும் பிரபந்தத் திரட்டு

அருட்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி                          1690

 

பாவம் போக்கும் பிரபந்தத் திரட்டு

ஆவது அருவம் அருட்பெருஞ் ஜோதி

 

பரமனைக் காட்டும் பிரபந்தத் திரட்டு

அரச னாக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

பாங்காய்ப் பதியும் பிரபந்தத் திரட்டு

ஆங்காங் கருளும் அருட்பெருஞ் ஜோதி

 

பதிநிலை அளிக்கும் பிரபந்தத் திரட்டு

அதிசுக இன்பம் அருட்பெருஞ் ஜோதி

 

பார் போற்றும் பிரபந்தத் திரட்டு

ஆர் அறிவார் அருட்பெருஞ் ஜோதி                                            1700

 

ஓசை ஒளியாய் ஆக விரும்புமென்

ஆசை தீர்ப்பாய் அருட்பெருஞ் ஜோதி

 

மூச்சுக் காற்றின் முடிபெலாம் என்னது

ஆச்சு எனப்புகல் அருட்பெருஞ் ஜோதி

 

காற்றின் சுவாசம் காத்தருளும் சித்து

ஆற்றல் தாராய் அருட்பெருஞ் ஜோதி

 

பாடலால் உனைப்பாடிப் பல்வேறு சித்து

ஆடல் விரும்பேன் அருட்பெருஞ் ஜோதி

 

விடப் பாம்பான வன்மிருகமான எம்மனம்

அடர்ந்தக் காடோ அருட்பெருஞ் ஜோதி                                    1710

 

தாக்கும் புலன்களைத் தடுத்து வீழ்த்தும்

ஆக்கினை இடுவாய் அருட்பெருஞ் ஜோதி

 

சாகாத உடம்பினைச் சார்ந்த வனால்

ஆகாதது உண்டோ அருட்பெருஞ் ஜோதி

 

ஏகு என்றாலும் எந்தாய் போகிலேனென்

ஆகுலம் தடுக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

பாகும் பருப்புமாய் பரத்துடன் எம்மை

ஆகுபெயர் செய்தாய் அருட்பெருஞ் ஜோதி

 

ஈகை பெருவாழ்வு அளிப்பது சத்தியம்

ஆகையால் ஈந்தேனைனை அருட்பெருஞ் ஜோதி                   1720   

 

பேசாநிலை அடைய பயில்வனோ அல்லது

ஆசாபங்க மடைவனோ அருட்பெருஞ் ஜோதி

 

ஏடகத்தில் அடங்கா உனைப்பாடி பலர்காண

ஆடம்பரம் செய்வேன் அருட்பெருஞ் ஜோதி

 

கால எந்திரக் கணக்கெனும் காலனெனும்

ஆலம் அமுதாச்சு அருட்பெருஞ் ஜோதி

 

பாதந் தொழும் பாமரனென்மேல் உனது

ஆதரவு நல்காய் அருட்பெருஞ் ஜோதி

 

காசி வேளாங்கன்னி காபா செல்லினுமுன்

ஆசி கிடைக்குமோ அருட்பெருஞ் ஜோதி                                 1730

 

கூசி நிற்போர்க்கு கவள அன்னமிடஉன்

ஆசி கிடைக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

பாடலாம் கூடலாம் பரிந்து என்னுடனே

ஆடவருக வருக அருட்பெருஞ் ஜோதி

 

நாடகம் நடிக்கும் நாயகன் ஆயினும்

ஆடகம் ஆக்குக அருட்பெருஞ் ஜோதி

 

வேண்டுதல் அளித்து வேண்டாமை நீக்கி

ஆண்டகை ஆக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

மாண்புயர சன்மார்க்க மரபில் எனையும்

ஆண்டவ னாக்கும் அருட்பெருஞ் ஜோதி                                  1740

 

ஏணியறிந்து ஏறி எட்டிப் பிடித்தோர்மேனி

ஆணிப் பொன்னாம் அருட்பெருஞ் ஜோதி

 

நாணை விட்டு நான்செல்ல ஓர்

ஆணை அளி அருட்பெருஞ் ஜோதி

 

என்னுடல் உச்சியின் எதிர்நின்று எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

நன்மயிர்த் தன்மையை நரைபோக்கி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்முக நெற்றியில் உள்ளிருந்து எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                             1750

 

என்புருவ நடுவில் ஆடல்புரிந்து எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்னிமை இயல்பாய் எதிர்ப்பாரிடமிருந் தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்நாசிக் காற்றாய் உள்ளும்புறமும் எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்னிரு கன்னம் ஏந்தும்கண்நீராய் எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்னிரு காதின்சப்த ஒலியாயிருந்து எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                             1760

 

என்னிரு உதடும் உனக்கேவாயிலாக எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்னுடை பற்களாய் உறுதியோடு எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்நாச் சுவையில் இனிப்பாயிருந்து எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்முகந் தாங்கும் எங்கழுத்தாயிருந் தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்மார்பகங்கள் ஈனும் அமுதாயிருந் தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                             1770

 

என்னிரு கைகளும் உனையேயணைய எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்வயிற்றுப் பசிக்கு உணவிட்டு எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்குறி இன்பத்தை அறிவின்பமாக்கி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்கால் நடைபோல் என்னைநடத்தி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்தோலெலாம் உனது அருளால்மூடி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                             1780

 

என்தசைகள் தளராது இளமைபோகாது எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்மூட்டு இடமெலாம் இணைபிரியா தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என் எலும்பாய் இருந்துசெயல்பட்டு எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்நரம்பு தோறும் உயிர்ப்பாயிருந் தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்ரத்த ஓட்டமாய் என்னுள்நிறைந் தெனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                             1790

 

என்னிதய துடிப்பாய் என்றும்விளங்கி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என் ஆன்மா இயற்கையின்பம்பெற எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என் உயிரெலாம் உன்னுயிராக எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்னுள் உறுப்புகள் அனைத்துமாகி எனை

அன்போடு காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

தொழுதலே என்றுமென் தொழிலாய் இருக்க

அழுகின்றேன் என்றும் அருட்பெருஞ் ஜோதி                          1800

 

பரந்த வான்போல பாலில் நெய்போல

அரசு செய்யுமென் அருட்பெருஞ் ஜோதி

 

ஏகாந்த நிலையில் அமரும் அன்பர்க்கு

ஆகாரம் நீயேஎன் அருட்பெருஞ் ஜோதி

 

அகிலம் முழுதும் அன்பே நிலைக்க

அகிம்சை வழிசெய் அருட்பெருஞ் ஜோதி

 

முகவடிவும் உன்பெரும் மதியும் பேரழகு

அகவடிவும் கண்டேன் அருட்பெருஞ் ஜோதி

 

அகத்திலும் புறத்திலும் எனக்கான உரிமை

அகவாட்டி நீயன்றோ அருட்பெருஞ் ஜோதி                             1810

 

பகல்பொழுதே ஆயினும் பரமன் விளங்கும்

அகல்ஜோதி விளக்காம் அருட்பெருஞ் ஜோதி

 

படிமூன்று கடந்து பார்க்க வெட்டவெளியாய்

அடிமுடி விளங்கின அருட்பெருஞ் ஜோதி

 

விதிசெய் நிகழ்வினை விட்டவன் மதியால்

அதிட்டம் வாய்க்கும் அருட்பெருஞ் ஜோதி

 

சும்மா இருக்கும் சுகத்தை அறிந்தோர்க்கு

அம்புலி பூரணமாம் அருட்பெருஞ் ஜோதி

 

பதிநிலை அறிவாரைப் பற்றி எழுப்பும்

அதிகாலை அனுபவ அருட்பெருஞ் ஜோதி                               1820

 

பற்றில்லா உலகர்க்கு பாழும் உடலின்

அற்றம் முற்றுமே அருட்பெருஞ் ஜோதி

 

நிதமும் நினைவில் நிறுத்திட்டால் நீயும்

அதர முத்தசுகமே அருட்பெருஞ் ஜோதி

 

எந்நிலை உடையாரும் அன்புட னிருக்க

அந்நியம் இல்லையே அருட்பெருஞ் ஜோதி

 

மதங்கள் காட்டிய மூடங்களை நீயே

அதமம் செய்வாய் அருட்பெருஞ் ஜோதி

 

நவநிலை கடந்து நானிருக்க எண்ணில்லா

அவனி கண்டேன் அருட்பெருஞ் ஜோதி                                   1830

 

அகத்திலே உன்னால் இன்பம் அடையும்

அகவை அடைந்தேன் அருட்பெருஞ் ஜோதி

 

பகர்ந்த சமயமத பொருளுக்கும் மேலான

அகணிகப் பொருளாம் அருட்பெருஞ் ஜோதி

 

அகரமும் உகரமும் அண்ட பகிரண்டமான

அகண்டா கண்டேன் அருட்பெருஞ் ஜோதி

 

விசை ஏதுமில்லாது விண்ணிலும் என்னிலும்

அசைந் தாடுகின்றாய் அருட்பெருஞ் ஜோதி

 

நிலைத்தப் பொருளை நினைவார் மனதில்உன்

அலைகள் ஓய்வதில்லை அருட்பெருஞ் ஜோதி                        1840

 

மறிந்தவரை மீண்டும் மீட்க சன்மார்க்க

அறிஞரே அறிவர் அருட்பெருஞ் ஜோதி

 

மழையாய்ப் பெய்கவென மனம் உருக

அழைக்க வருவாய் அருட்பெருஞ் ஜோதி

 

சிக்கெனப் பிடித்தால் சிற்சபை அனுபவம்

அக்கனம் தோன்றும் அருட்பெருஞ் ஜோதி

 

சங்கத்தில் கூடியே சன்மார்க்கம் பயின்றால்

அங்கத்தில் அங்கமாகும் அருட்பெருஞ் ஜோதி

 

எக்காலத்தும் நம்மில் உள்ளிருந்து ஓங்கும்

அக்கினி சுடுவதில்லை அருட்பெருஞ் ஜோதி                          1850

 

இகபர சுகத்தின் அடிமுடி ஆதிஅந்த

அகராதி நீதானே அருட்பெருஞ் ஜோதி

 

சூசகமாய் சதிசெய்யும் சமய வழக்கெனும்

அசத்தை ஒழியும் அருட்பெருஞ் ஜோதி

 

சபலமற்று சாதி சமயமற்று உன்னில்

அபயம் அபயம் அருட்பெருஞ் ஜோதி

 

சுபத்திற்கு கொலை செய்வாய் சமயமெலாம்

அபத்தம் அபத்தம் அருட்பெருஞ் ஜோதி

 

கண் காட்சியினால் கருணை நிறையுலக

அண்டம் அறிவரோ அருட்பெருஞ் ஜோதி                                1860

 

உருகும் இரக்கம் அகத்தில் வந்துவிட்டால்

அருகே மிகஅருகே அருட்பெருஞ் ஜோதி

 

விடுத்த மறுகணம் வந்து அமரும்

அடுத்த இடமாம் அருட்பெருஞ் ஜோதி

 

உகந்தோறும் வரும் அனாதி யியற்கை

அகங்கார மடக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

சமுகத்தில் வாழ்வதும் சாவதும் உந்தன்

அமுதவிஷ வாயுவால் அருட்பெருஞ் ஜோதி

 

இரக்கத்துடன் இருந்து இறவா நிலையுடன்

இரண்டற கலப்பேன் அருட்பெருஞ் ஜோதி                             1870

 

கடலெனும் பிறவிகள் கடந்து நிலைபெறவே

உடல்பெற்று வந்தேன் அருட்பெருஞ் ஜோதி

 

பாசாகார பொருள் பற்றுதலுக்கு ஆதார

ஆசாரம் அறுக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

தத்துவ மென்றசிவத் தன்மையும் அதன்

அத்துவ பொருளாம் அருட்பெருஞ் ஜோதி

 

கருணைச் செயலால் கடவுளைக் காண்பது

அருள னுபவமாம் அருட்பெருஞ் ஜோதி

 

உருளும் உலகில் உயிர்களுக்கு உணவை

அருட்சத்தி ஊட்டும் அருட்பெருஞ் ஜோதி                               1880

 

துடிக்கும் இதயம் தயவு தயவுஎன்போரின்

அடிக்கு அடியேன் அருட்பெருஞ் ஜோதி

 

அருளாலே மார்க்க அன்பர்க்கு பொருந்தல்

அருந்தல் சமமாக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

ஊன் உடம்பே ஒளி உடம்பாவது

ஆன்ம அறிவால் அருட்பெருஞ் ஜோதி

 

அமலன் என்றாகில் அகத்துச் சபையில்

அமனம் தோன்றும் அருட்பெருஞ் ஜோதி

 

பசுபாச அறிவைவிட்டு பதி அறிவால்

அசுரரும் சுரராவர் அருட்பெருஞ் ஜோதி                        1890                           

 

உபாயம் இதுவென் அகவினம் ஆகில்

அபாயம் இல்லை அருட்பெருஞ் ஜோதி

 

நலமான சன்மார்க்கம் நாட மூவாசையும்

அலட்சிய மாகும் அருட்பெருஞ் ஜோதி

 

அகவினத் தார் என்றுசங்கம் சார்ந்தால்

அகவிருள் நீக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

முகநக நட்பெல்லாம் முடித்து நெஞ்சில்

அகநக நட்பதாம் அருட்பெருஞ் ஜோதி







தினந் தொழும் திண்மைப் பொருளை

எனக்கு முழுதாய் அருளே அருளே

 

கனமழை பெருகும் கண்ணீர்ப் பொருளை

எனக்கு முழுதாய் அருளே அருளே

 

உனது உயிர் உறவான பொருளை

எனக்கு முழுதாய் அருளே அருளே                                                                    2110

 

நினது அருள் நிலையானப் பொருளை

எனக்கு முழுதாய் அருளே அருளே

 

சனம் விரும்பும் சன்மார்க்கப் பொருளை

எனக்கு முழுதாய் அருளே அருளே                                                        

 

நான் தானாகும் நாதமாம் பொருளை

ஏன்னெனக் கேளாது அருளே அருளே

 

முத்தேக மடையும் முச்சுடர்ப் பொருளை

இத்தேகத்தில் இப்போது அருளே அருளே

 

ஜீவ காருண்ய ஜீவதிறவுப் பொருளை

ஈவதுன் கடனென்று அருளே அருளே                                                    2120

 

எல்லா உயிரும் இன்புறும் பொருளை

இல்லெனச் சொல்லா தருளே அருளே

 

சாகாக் கல்வியின் சத்தியப் பொருளை

ஆகாய நடுவில் அருளே அருளே                                    

 

பதி நிலை பசித்திருப் பொருளை

அதிகம் புசிக்க அருளே அருளே

 

தன் னொளித் தனித்திருப் பொருளை

இன்றே எனக்கு அருளே அருளே

 

வா னோடு விழித்திருப் பொருளை

ஊனோடு கலந்து அருளே அருளே                                                                     2130

 

தேகமெழுஞ் சஞ்சீவி தீப்பூடுப் பொருளை

ஏகமாய் கொடுத்து அருளே அருளே

 

சஞ்சீவி மூலிகை சார்ந்த பொருளை

அஞ்சாமல் எனக்கு அருளே அருளே                                         

 

ஆதாரந் தரும் அருட்பாப் பொருளை

ஓதாமல் உணர அருளே அருளே

 

உலகெலாம் உணர்ந்த உத்தமப் பொருளை

அலங்கரித் தெனக்கு அருளே அருளே

 

தங்கஞ் செய்யும் தன்ஏமசித்திப் பொருளை

அங்கஞ்செய்ய எனக்கு அருளே அருளே                                                           2140

 

உடைய நால்வகை ஒழுக்கப் பொருளை

அடையச் செய்து அருளே அருளே

 

களித் திருக்க குளிகைப் பொருளை

அளித்து மகிழ்ந்து அருளே அருளே                                                        

 

எழில் உற ஏழுதிரைப் பொருளை

அழித்துக் காட்டி அருளே அருளே

 

மாயா நிலை முப்படிப் பொருளை

ஆயாமல் எனக்கு அருளே அருளே

 

தானே நானாகும் தத்துவப் பொருளாய்

ஆனேன் என்று அருளே அருளே                                                             2150

 

 

அகத்திலே அடிமுடி இல்லாப் பொருளை

உகந்துடைமை எனக்கு அருளே அருளே

 

ஆன்ற சன்மார்க்க ஒருமைப் பொருளாம்

ஆன்மநேயம் எனக்கு அருளே அருளே 

 

பொற்பதங் காட்டி பொற் சபை

அற்புதம் எனக்கெ அருளே அருளே                                          

 

உருவரு அற்ற எல்லோர்க்கும் பதியாம்

அருட்பெருஞ் ஜோதி இறையே இறையே

 

வளி மண்டலம் வான் மண்டலமெங்கும்

ஒளி வழங்கும் இறையே இறையே                                                                     2160

 

வயங்கு வெளியெலாம் வளர்ந்தத் திரு

இயற்கை உண்மை இறையே இறையே                                                

 

தயவு விளக்கமெலாம் தருவிளக்க மாகி

இயற்கை விளக்க இறையே இறையே

 

செயற்கை மயல் சாராது ஓங்குமோர்

இயற்கை இன்ப இறையே இறையே                                                    

 

அன்னை தந்தையாய் எனக்கு குருவுமாகி

என்னைத் தானக்கும் இறையே இறையே

 

நல்லான் நலம்செய நன்றே நல்குவான்

எல்லாம் வல்லஓர் இறையே இறையே                                                  2170

 

பயிராய் பரியாய் புழுவாய் பார்க்கின்ற

உயிரில் உறையும் இறையே இறையே                                                  

 

அயனும் வியக்க யாவரும் பெற்றிடும்

இயல் எனக்களித்த இறையே இறையே

 

சராசரங் காணா சன்மார்க்கப் பெரும்பதி

இராமலிங்கர் காட்டிய இறையே இறையே                                         

 

வித்த கரெலாம் வியக்க எனக்கமைந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே

 

நித்தி யானந்தம் நிலைக்க எனக்கமைந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                                   2180

 

சித்தியல் முழுதும் சித்திக்க எனக்கமைந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                                  

 

மத்தியில் அமர்ந்து மயலற எனக்கமைந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே

 

எத்திக்கும் சந்திக்க என்னுயிரா யமைந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                      

 

சத்தியம் போதித்து சத்தியனாய் அமர்ந்த

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே

 

புத்தியாம் ஒழுக்கம் புரிந்து எனைஏற்றும்

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                                   2190

 

சத்தமொன்று மிலாது சோதனை தடுக்கும்

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                                  

 

முத்தரும் சித்தரும் மதிக்க அருளிய

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே

 

அத்தெலாம் நீக்கிய என் இராமலிங்க

சுத்த சன்மார்க்க சற்குருவே குருவே                                                      

 

சன் மார்க்க சித்து பெற்றோங்க

என்னை ஈன்ற என்னன்புத் தாயே

 

தன்னோடு உயர்த்தி திருக்கூட்ட மரபில்

என்னையும் நிறுத்திய என்னன்புத் தாயே                                                          2200

 

 

கருவாய் உருசெய்த காலங் கடத்திஎனை

அருவாய் செய்யும் என்னன்புத் தாயே                                                   

 

என்னோ டிருந்து எந்தனை வளர்த்து

என்னோடு கலந்த என்னன்புத் தாயே

 

பிறர் இழியாதப் பண்புகளை ஊட்டியே

அறத்தோடு வளர்க்கும் என்னன்புத் தாயே                                           

 

உணர்வு வருமுன்னே உறு பசிக்கு

உணவளித்து காக்கும் என்னன்புத் தாயே

 

உறங்கும் போதும் என்தலை சுமக்கும்

உறவாய் இருக்கும் என்னன்புத் தாயே                                                   2210

 

அழுதிடுந் தோறும் ஆறுதல் கூறிஎனை

எழுந்திட வைக்கும் என்னன்புத் தாயே                                                

 

சத்தியப் பெயரைச் சூட்டி எனையும்

அத்தனென் றாக்கிய என்னன்புத் தாயே

 

தேவை எலாம் தெரிந்து எனக்கு

ஆவகை அருளும் என்னிறைத் தாயே                                                    

 

சித்தெல்லாம் புரிந்து சிகரத்தில் ஏற்றிஎனை

உத்தம னாக்கும் என்னறிவுத் தந்தையே

 

ஒன்றெனக் காணும் அறிவெனக் களித்து

அன்ப னாக்கும் என்னறிவுத் தந்தையே                                                  2220

 

படிப்பறியா பாவியேன் பரிந் தெனையும்

அடிய னாக்கும் என்னறிவுத் தந்தையே                                                 

 

அநந்த நிலை யானந்த நிலையாயெனை

அநாதி யாக்கும் என்னறிவுத் தந்தையே

 

தபசு செய்யத் தவறும் எனக்கும்

அபய மளித்த என்னறிவுத் தந்தையே

                                                           

சரம் ஓங்கவே சன்மார்க்கத் திலெனை

அரச னாக்கும் என்னறிவுத் தந்தையே

 

அறியா பரமாகாச அற்புதங் களெல்லாம்

அறிய வைக்கும் என்னறிவுத் தந்தையே                                                 2230

 

ஐந்தொழி லாற்றல் எனக்கு மளிக்கும்

எந்தாயே குருவே என்னறிவுத் தந்தையே                                                         

 

பொய்யான தேகத்தில் புகுந்தே மெய்யாக்கும்

அய்யனே அன்னையே என்னறிவுத் தந்தையே

 

வான் கலந்தோரெல்லாம் வணங்கவே என்

ஊன் கலந்தோங்கும் என்இறைத் தந்தையே                                        

 

எல்லாம் வல்ல எந்தனிச் சித்தர்

மெல்லென ஓதிய மகா மந்திரமே

 

உலகெலாம் உணர்ந்து உயி ரெலாம்

மலர்ந்து மணக்கும் மகா மந்திரமே                                                                    2240

 

சரண மடைந்து சத்திய வழியில்

மரணந் தடுக்கும் மகா மந்திரமே                                                            

 

பார் ஓங்கப் பன்னும் சுத்தசன்

மார்க்க மளித்த மகா மந்திரமே

 

பாமர மார்க்கங்கள் புகலும் மந்திர

மாமறைகளு மறியா மகா மந்திரமே                                                     

 

கண்ணெனக் காக்கும் கருணை யால்

மண்ணு யிரான மகா மந்திரமே

 

என் னகத்தில் இரண்டறக் கலந்து

முன்னென நடக்கும் மகா மந்திரமே                                                                  2250

 

 

உறங்கச் செய்யும் உப தேசங்களை

மறக்கச் செய்யும் மகா மந்திரமே                                                            

 

இனி இறவா இனிமைத் தந்துத்தம

மனித னாக்கும் மகா மந்திரமே

 

வகுப் பெடுத்து வாய்மை யுரைத்து

மகுடஞ் சூட்டும் மகா மந்திரமே                                                           

 

முடி யெலாம் முகங் காட்டிட

அடி யெலாம் அகங் காட்டிட

 

கண்ணீர்ப் பெருகி கண்ணும் கரைந்திட

எண்ணம் பெருகி எத்திசையும் சென்றிட                                                           2260

 

இமை இரண்டும் இமைக்க மறந்திட

சுமை யெலாம் சுகமாய் மலர்ந்திட                                                                    

 

நரம் பெலாம் நாட்டியம் புரிந்திட

கர மிரண்டும் கட்டித் தழுவிட

 

நடு விருக்கும் நற்றவன் எழுந்திட

படுத்த பாம்பெலாம் படமெடுத் தாடிட                                               

 

விடுத்த மூச்செலாம் விண்ணவ னாகிட

எடுத்த மூச்செலாம் என்னவ னாகிட

 

இரண்டும் கலந்து இல்லாத தாகிட

மிரண்ட தேகமும் மின்னொளி யாகிட                                                  2270

 

இரத்த மனைத்தும் இராமலிங்க மாயிட

மரத்தில் கலந்து மகாமந்திர மாயிட                                                                   

 

அலறிய குரலெலாம் அன்பே ஓங்கிட

மலர்ந்த இதழ்களில் மருந்தை ஊட்டிட

 

தத்துவ மெலாம் தன்ன தாகிட

இத்தவம் புரிய அமிழ்து சுரந்திட                                                           

 

புருவ நடுவில் புருடன் கலந்திட

அருவ நிலை அன்றே வந்திட

 

உடம் பெலாம் உண்மை யாகிட

சடங் களெலாம் சிரித் தெழுந்திட                                                                       2280

 

காய முழுதும் கற்பூரம் மணந்திட

மாய மதங்கள் மருண் டோடிட                                                              

 

இதயத் துடிப்பு இனிதாய் நின்றிட

உதயமாகி உத்தமன் உரு வாகிட

 

எல்லா உலகும் எதிர்நின்று வணங்கிட

பொல்லாப் பசியும் பறந்தே சென்றிட                                                  

 

எல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்திட

வல்லா னெனை வருவிக்க உற்றிட

 

தயவைப் பெற்றே தலைவனைப் பாடிட

நயந்த ஐந்தொழிலை நான்செய்ய தந்திட                                                          2290

 

ஆன்மக் குறிகளில் இன்பம் பொங்கிட

வான் கலந்தோரெலாம் வந்து வணங்கிட                                                        

 

சிலிர்த்த முடியொன்று செத்தாரை எழுப்பிட

வலிந்து சித்தெல்லாம் விரும்பி கொடுத்திட

 

என்னதவம் செய்தனோ என்றே முழித்திட

அன்ன தான மளித்தாய் என்றேமுழங்கிட        

 

நான் செய்தவத்தால் நானே தொலைந்திட

வான் செய்தவல்லபம் வானாய் ஆகிட                         

 

தேகத்தில் சத்தியம் துளிர்த்து எழுந்திட

போகத்தில் பெருவாழ்வு பெருகி வந்திட                                                         2300

 

வாழ்க நின்னருள் வளர்க நின்பொருள்

ஏழ்திரை விலக்கிய அருட்பெருஞ் ஜோதி

 

வாழ்க நின்கொடை வளர்க நின்படை

ஊழ்வினை அகற்றிய அருட்பெருஞ் ஜோதி

 

புனைந்த வாறே புனைந் துரைத்தேன்

எனையும் புனர்ந்த அருட்பெருஞ் ஜோதி                                                         

 

வாழ்கநின் மனிதம் வாழ்கநின் ஆன்மம்

வாழ்கநின் இயற்கை வாழ்கநின் இறைமை

 

வாழ்க உலகெலாம் வாழ்க உயிரெலாம்

வாழ்க தருமச்சாலை வாழ்க ஞானசபை                                                2310

 

வாழ்க சித்திவளாகம் வாழ்க சங்கங்கள்

வாழ்க சுத்தசன்மார்க்கர் வாழ்க கருங்குழி

 

வாழ்க திருமருதூர் வாழ்க சின்னக்காவணம்

வாழ்க சென்னை வாழ்க உத்தரஞான சிதம்பரம்

 

வாழ்க கல்பட்டு வாழ்க தொழுவூர்

வாழ்க காரணப்பட்டு வாழ்க புதுச்சேரி

 

வாழ்க கடலூர் வாழ்க தமிழ்நாடு

வாழ்க இந்தியா வாழ்க உலகநாடுகள்

 

வாழ்த் தெல்லாம் வாழவேண்டுமென என்

ஆழ்மனத்தில் இருந்து வாழ்த்தினாய் போற்றி                                      2320

 

என்னுள்ளே அமர்ந்து என்னுள்ளே நடந்து

என்னுள்ளே விழுந்து என்னுள்ளே கலந்து

 

என்னுள்ளே பூத்து என்னுள்ளே மலர்ந்து

என்னுள்ளே கனிந்து என்னுள்ளே இனித்து

 

என்னுள்ளே எரிந்து என்னுள்ளே தெரிந்து

என்னுள்ளே மறைந்து என்னுள்ளே விரிந்து

 

என்னுள்ளே நினைந்து என்னுள்ளே காய்ந்து

என்னுள்ளே படிந்து என்னுள்ளே நிறைந்து

 

என்னுள்ளே விரைந்து என்னுள்ளே ஆழ்ந்து

என்னுள்ளே கடந்து என்னுள்ளே விருந்து                                                         2330

 

படைத்த தனிக்கடவுளின் பதம் போற்றி

நடை பயிற்றுவித்த நாதனடி போற்றி

 

உத்தரஞான சிதம்பர உத்தமன் போற்றி

நித்திரை போக்கிய நிமலனடி போற்றி

 

வடலூர் ஞானவடிவ வானவன் போற்றி

கடவுள் தனிப்பெருங் கருணையன் போற்றி

 

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி                                         2338