Sunday, October 25, 2020

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை - குருபூஜை - 96-ஆம் ஆண்டு அழைப்பிதழ்

                                 காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை - குருபூஜை -                                                   96-ஆம் ஆண்டு அழைப்பிதழ் 

 அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்... வருகின்ற நவம்பர் மாதம் 22-ஆம் தேதி - ஞாயிற்று கிழமை, காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் குருபூஜை நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வமயம் தாங்கள் அனைவரும் கலந்துக்கொண்டு இறையருளை பெற தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
 தி.ம.இராமலிங்கம். 9445545475














































Saturday, June 27, 2020

மலைகளும் நதிகளும் (Part - 5)

மலைகளும் நதிகளும் (Part - 5)

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(PART - 5)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

யமுனை நதி:
ஐந்தாம் நாள் இரவில் யமுனை நதியினை பற்றி சிறிது சிந்திப்போம். 

யமுனை நதியின் மூலமானது யமுனோத்திரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. அரித்துவார் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாரிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில், புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார்.
இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹரி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிரி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது.
யமுனையின் மற்ற கிளை நதிகளான கிரி, ரிஷிகங்காஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதரில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிரித்து விடப்படுகிறது.
சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாரியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாரிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும்.
யமுனைநதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாரியானா, டெல்லி, உத்தரபிரதேசம்   ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பெரிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது.

 11-09-2019 – புதன் கிழமை – கராடி (Kharadi) இருந்து உத்ரகாசி :

கராடியிலிருந்து காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு உத்தரகாசி நோக்கி இன்றைய எங்களது பயணம் தொடங்கியது. காலை 8.00 மணியளவில் எங்களது வாகனம் கிளம்பியது. 40 நிமிட பயணத்திற்கு பிறகு ஓரிடத்தில் வாகனம் நின்றது. அங்கு உத்ராகாண்ட் மாநில சுற்றுலாத் துறையிடம் நாங்கள் அனைவரும் ”ச்சார்தாம்” யாத்திரைக்காக அனுமதி சீட்டு வாங்கினோம். எங்களது ஆதார் அட்டையினை வாங்கி பதிந்தார்கள். மேலும் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடுவித்தார்கள். இவ்விடத்தில் அரை மணி நேரம் ஆகிவிட்டது. பிறகு மீண்டும் உத்தரகாசியை
நொக்கி வாகனம் புறப்பட்டது. காலை 10.30 மணியளவில் “ப்ரகதீஸ்வர் மகாதேவ்” மலைக் கோயில் செல்வதற்காக வாகனம் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு மலை ஏற வேண்டும். சிலர் மட்டுமே மலை ஏறி கோயிலைப் பார்க்க வந்தனர். பலர் வாகனத்தை விட்டு கீழிறங்கி அங்குள்ள கடைகளையும், இயற்கையும் இரசிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் மலையேறினேன். மேலே ஒரு குகைபோன்ற இயறகை அமைப்பு இருந்தது. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. ஐந்து ஐந்து நபர்களாக உள்ளே விடுகின்றார்கள். இரண்டு பெண் காவலர்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குகைக்குள் சென்றேன். அங்கு ஒரு அருட்பெருஞ்ஜோதி விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. அவ்வெளிச்சத்திலும், சிலர் எரியவிடும் மொபைல் வெளிச்சத்திலும் அக்குகையினை கண்டேன். ஓரிடத்தில் தொட்டி போன்று பாறைகள் சூழ்ந்த இடத்தில் தண்ணீர் தொபதொபவென வந்துக்கொண்டிருந்தது. அதனை எல்லோரும் பார்த்தோம். பிறகு அதன் மறு புறத்தில் சாமி சிலைகள் உள்ளன. அதனை கண்டுவிட்டு அக்குகையினை விட்டு மேலேறினோம். வெளியில் மண்பத்துடன்கூடிய கோயில் உள்ளது. பிறகு அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த வழியே கீழிறங்கினோம்.












கீழிறங்கும்போது இடதுபுற மலைகளிலிருந்து ஒரு ஒற்றையடிப் பாதை நாங்கள் செல்லும் பாதையில் வந்து இணைந்தது. அவ்வழியே அவ்வூரில் உள்ள சில சிறார்கள் கூட்டமாக வந்து எங்களிடம் பிச்சை எடுக்கும் நோக்கில் அருகில் வந்தார்கள். அப்போது கீழே இருந்து கோயிலுக்கு மேல் நோக்கி சில பெண் காவலர்கள் வருவதைக் கண்ட அச்சிறார்கள் உடனே தாங்கள் வந்த அந்த மலைப்பாதையினுள் சென்றுவிட்டார்கள். மலை கிராமங்களில் வறுமை நிலவுவதை அப்போது என்னால் உணரமுடிந்தது. அழுக்கு நிறைந்த பாவாடை சட்டை அணிந்த அந்த சிறுமிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும்.

இப்படியாக கீழே சாலைக்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள கடைகளை சுற்றி பார்த்தோம். அவ்விடத்தில் எலுமிச்சை பழம் மிகப்பெரியதாக இருந்தது. அதனைக்கொண்டு ஜூஸ் போட்டுக் கொடுத்தார்கள். அதில் சில பொடிவகைகளையும் சேர்த்து கொடுத்ததைப் பார்த்து நாங்கள் அந்த ஜூஸை வாங்கிப் பருகினோம். நன்றாகவே இருந்தது. பிறகு 12.00 மணியளவில் அங்கிருந்து வாகனத்தில் உத்தரகாசியை நோக்கி கிளம்பினோம். மதியம் 1.40 மணியளவில் உத்தரகாசி சென்றடைந்தோம்.  “விஸ்வரூப் ரெசிடன்சி” என்கின்ற ஹோட்டலில் தங்கினோம். (Hotel Vishwaroop Residency – NH34, Barahat Range, Netala, Uttrakashi – 249193. Mobile:7060106563)

 ‘உத்தரகாசி’ நகரம் அம்மாவட்டத் தலைநகராக விளங்குகின்றது. இந்நகரம் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல இந்து மதக் கோயில்களும், ஆசிரமங்களும் அமைந்துள்ளன. இங்கு ஜவகர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆஃப் மவுண்டனியரிங் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகர மக்கள் தொகை சுமார் 20,000 ஆகும். இந்நகரில் உத்ரகாசி விஸ்வநாதர் ஆலயம் புகழ் வாய்ந்தது.

நாங்கள் ஹோட்டலில் எங்களது லக்கேஜ்களை அவரவர்கள் அறையில் இறக்கி வைத்துவிட்டு, உத்தரகாசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் செல்ல வாகனத்தில் சென்றோம். எங்களது வாகனம் அந்த ஹோட்டல் தெருவினைக்கூட தாண்டவில்லை. அதற்குள் எங்களது வேன் பழுதடைந்து நடுத்தெருவில் நின்றுவிட்டது. சுமார் 30 நிமிடம் வாகனத்தி நகர்த்த முடியாமல் சாலையை அடைத்துக்கொண்டு நின்றது. அப்போது ஒரு இராணுவ வாகனம் வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்வழியே வந்தது. எங்களது நிலமையை பார்த்தவுடன் அவ்வீரகளில் சிலர் இறங்கி வந்து எங்களது வாகனத்தை தள்ளி ஓரமாக நிறுத்திவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். எனக்கு அவர்களது சேவை ஆச்சரியத்தை அளித்தது. பிறகு அங்கிருந்து நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வழியில் ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தினோம். எங்களது ஹோட்டலுக்கு பின்புறம் அதாவது சாலையின் ஒருபுறம் பகீரதி நதி ஓடிக்கொண்டிருக்கும் அழகை இரசிக்க முடிந்தது. இன்று உத்தரகாசியில் எங்களால் வேறு எந்த இடத்திற்கும் சென்று பார்க்க முடியவில்லை.  இன்று இரவு உத்தரகாசியில் தங்கினோம். இது எங்களுக்கு 6-ஆம் நாள் இரவாகும். 

(தொடரும்)