Tuesday, July 7, 2026

இறந்துபோன எனது உடல்கள்

இறந்துபோன எனது உடல்கள்

TMR

 வணக்கம் நண்பர்களே... 

இரண்டு நாட்களுக்கு முன்னர், எனது முகநூல் பக்கத்தில், பல வருடங்களுக்கு முன்னர் நான் பதிவிட்ட எமது புகைப்படங்களில் சிலவற்றை ஒருவர் பார்வையிட்டு அதனை லைக் செய்ததால், அந்தப்படங்களை தற்போது நான் பார்வையிட நேர்ந்தது. 

அது எனது படம்தான். ஆனால் அந்தப்படங்கள் பதினைந்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் அதனை தற்பொழுது பார்க்கையில், அந்த இளமை, அந்த காலம் எல்லாம் எப்படி போயிற்று? என வியக்க வைக்கின்றது. 

அந்த புகைப்படங்கள் எல்லாம், இறந்துபோன எனது உடல்கள், இறந்து போன எனது காலங்கள் என்பதல்லவா உண்மை. 

இறந்துபோன எனது உடலை, இறந்துபோன எனது இளமையை, நானே தற்போதுள்ள உடலால் பார்க்கின்றேன். நமது புகைப்படங்கள் அல்லது நமது வீடியோக்கள் எல்லாம் நமது இறந்துபோன பிணத்தின் வடிவங்கள்தான் என்று நினைக்கையில், இப்போதுள்ள உடலும் இறந்துக்கொண்டே தன்னை புதுப்பித்துக்கொள்வதை உணரமுடிகின்றது. 

வள்ளலார், தனது உடலை புகைப்படத்தில் பதியசெய்யாமைக்கு காரணம் இதுவாகத்தான் இருக்குமோ?. தனது இறந்துபோன உடலை புகைப்படமாகக்கூட தானும், இவ்வுலகமும் பார்த்துவிடக்கூடாது என்ற காரணத்தால், வள்ளலார் தனது உடம்பினை ஒளி உடம்பாக மாற்றினார், அதனால் அவரை புகைப்படமாகக்கூட நம்மால் பார்க்கமுடியாமல் போனது. நன்றி, 

அருட்பெருஞ்ஜோதி.


  


 

 


Friday, July 3, 2026

பூம்புகார் - சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

 சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

TMR

பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை.
சீர்காழி - பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு தென்புறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் இன்று சிதைந்து போய் கிடக்கிறது.
சம்பாபதியம்மன் கோயிலையும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அப்படி ஒரு சிறப்பு கொண்ட வரலாற்றுச் சின்னங்கள் தற்போது சிதிலமடைந்து கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் சம்பாபதி அம்மன் பற்றியும் சதுக்க பூதம் பற்றியும் சொல்கிறேன் கேளுங்கள்.
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக பெருமைவாய்ந்த ஒன்று மணிமேகலைகாப்பியம், ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று அப்படின்னு சொல்வாங்க. இக்காப்பியத்தின் முக்கிய நாயகி மணிமேகலை, கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்த மகள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு கண்ணகி மதுரையை எரித்து பின் கேரள எல்லையில் கோயில் கொள்கிறாள்.
மாதவி தன் மகளை ஒரு புத்த துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டுவிடுகிறது.
அத்தீவில் இறங்கியவுடன் மணிமேகலைக்கு தனது முன்பிறப்பு நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் ஏன் அவளை மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று மந்திரங்களையும் கற்றுக்கொடுகிறது. ஓர் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தனுப்புகிறது.
அதிலிருந்து எடுக்க எடுக்க குறையாத உணவை புகார் நகரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கி வருகிறாள். ஆனால் மன்னன் உதயகுமரன், மணிமேகலையை தன்னை மணந்து கொள் என அவளை வற்புறுத்துகிறான்.அவளோ பயந்து கொண்டு இந்த குச்சரகுடிக்கையில் ஒளிந்து கொள்கிறாள்.
மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் புகார் நகர் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் நிலை கொண்டமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர்
இந்த சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் இது தான் என்கிறது மணிமேகலை காப்பியம்.
சம்பாபதி அம்மன் கோயிலை அக்காலத்தில் குச்சரக்குடிகை என அழைப்பார்கள். இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது.
வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா எனும் தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு.
.
சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன இந்த சதுக்க பூதங்கள்.
யாரையெல்லாம் தண்டிக்கும் என இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்.
பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது செய்து பொருள் சேர்க்கும் அமைச்சர்கள், பொய்சாட்சி சொல்பவர் பொதுப்பணத்தை கையாடல் செய்பவர்கள், - இவர்களை எல்லாம் சதுக்க பூதங்கள் கடுமையாக தண்டிக்கும் என்கிறார் இளங்கோவடிகள்.
சரி கோயில் பகுதிக்கு போகலாம் வாங்க..
ஆனால், இப்படியொரு பெருமை வாய்ந்த கோயில் இருப்பதே இங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது சாய்க்காடு சிவன் கோயில். இதன் தென் புறம் செல்லும் தெருவில் சென்று இடதுபுறம் உள்ள
அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த பகுதியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.
ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிகை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு தகர கொட்டகையில் புதிதாய் குடிவைத்திருக்கிறார்கள். பழைய கோயில் சிதைந்து மண்மேடாக உள்ளது அந்த குடிகை வாயிலில் இரண்டு பூதங்களும் உள்ளன.
வடக்கு நோக்கிய இக்குடிகையின் எதிரில் பெரிய உருவில் இரண்டு சதுக்க பூதங்கள் ஆண்பூதம் ஒன்றும் பெண் பூதம் ஒன்றும் சம்பாதியை காவல் காக்கின்றன.
தற்போது அங்குள்ள சம்பாதியை மட்டும் எடுத்து தனி கோயில் கட்டி வைத்துள்ளனர். உடன் விநாயகர் உள்ளார். வாயிலில் பைரவர் உள்ளார். எதிரில் சிம்மமும் பலிபீடமும் உள்ளன.
சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அவளை, சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது. பெயர் மருதவாணன்.
செங்கல் சுதையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சதுக்க பூதங்கள் மற்றும் ஒரு பெரிய குதிரை சிலைகள் 2000 ஆண்டு பழமையானவை எனப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன.
இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன. நம் மக்களின் மூளையில் திணிக்கப்பட்ட இரண்டே வார்த்தை திராவிடம் ஆரியம்.
தமிழ் தமிழ் என பெருமை பேசும் நாம் மூன்றாயிரம் வருடம் பழமை கொண்ட இக்கோயிலை கூட காப்பாற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது.
'சிலப்பதிகாரத்தில் அறம்' எனும் எனது புத்தகத்தில் பூம்புகாரில் இருந்த சதுக்கங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
கடம்பூர் விஜய் முகநூலில் இதுகுறித்து எழுதியிருந்தார்.
திமுகழக ஆட்சியில் புனரமைப்பு தொடங்க வேண்டும் என கேட்டுப் பதிவிட்டேன். பூம்புகாரை புனரமைப்பு செய்து உள்ளனர்.
இந்த வரலாற்று சின்னத்தின் புதுப்பொலிவை தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் முயற்சியெடுத்து செய்யவும்.
மீள்பதிவு.
Rajamoorthy J

Wednesday, July 1, 2026

உயிர் அறம்

உயிர் அறம்

வள்ளலார்


எல்லா உயிர்களும் இவ்வுலகில் மரியாதையாக வாழ உரிமை உண்டு. திருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன தமிழ அரசு, அந்நூலின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசை நடத்த வேண்டும். குறைந்த பட்சம் தமிழக அரசு, ஓர் உயிரின் மரணத்திற்காவது மரியாதை கொடுக்க வேண்டும். சினிமாக் காரர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது மட்டும் அறம் அல்ல. அதே அறம் எல்லா உயிர்களிடத்தும் காண்பிக்கப்பட வேண்டும்.

”தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.”
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்??
இவ்விடயத்தில் - சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பாராட்டுக்கள். தமிழக அரசு மேல் முறையீட்டினை செய்திருக்கக்கூடாது. அறத்திற்கு புறம்பாக தமிழக அரசு செயல்படுகின்றது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR

Sunday, June 21, 2026

தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

 தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

HOLY CITY

https://vadalurpunithanagaram.com


🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥

🕊️ வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் ஆதரவு கையெழுத்து இயக்கம்! 🕊️

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமி நமது வடலூர். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வாழ்ந்து காட்டிய அந்த மகானின் மண்ணை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக "புனித நகரமாக" அறிவிக்க வேண்டும்!

நமது முக்கிய கோரிக்கைகள்:

வடலூரைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்:

🚫 இறைச்சிக் கடைகள் மற்றும் மாமிச உணவகங்கள்

🚫 மதுபானக் கடைகள்

🚫 போதை வஸ்துக்கள் விற்பனை

ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்!

நீங்கள் ஏன் கையெழுத்திட வேண்டும்?

இது வெறும் கையெழுத்து அல்ல; ஒரு ஜீவனின் உயிர் மூச்சு! நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கையெழுத்தின் பின்னாலும், வாய் பேச முடியாத ஓர் உயிரின் வலியும் வேதனையும் துடைக்கப்படும். கசாப்புக் கத்தியிலிருந்து ஓர் உயிரைக் காப்பாற்றும் மாபெரும் புண்ணியத்தில் நீங்களும் பங்குகொள்ள வேண்டாமா? உங்களின் ஒரு கையெழுத்தால் ஒரு உயிர் துன்பத்திலிருந்து மீட்கப்படும்!

🌐 உடனே இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்:

👉 

https://vadalurpunithanagaram.com

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

1. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு e-Sign (டிஜிட்டல் கையெழுத்து) பதிவு செய்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும்.

3. இந்தப் பதிவை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் பகிரவும்!

வடலூர் சத்திய ஞானசபையில், அகவல் பாராயணக்குழு அன்பர்களால் மாதப் பூச நன்னாளான இன்று (17/06/2026) இந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான இணையதளத்தை வடிவமைத்துத் தந்த தயவு ராகேஷ் ஐயா (மலேசியா) மற்றும் தயவு அருட்சிவமாறன் ஐயா (சென்னை) ஆகியோருக்கும், இதனை முன்னெடுத்து நடத்தும் வடலூர் புனித நகரம் அகவல் பாராயணக்குழு அன்பர்களுக்கும் சன்மார்க்க நெஞ்சங்களின் சார்பாக நன்றிகள்!

கையெழுத்திடுவோம்! உயிர்களைக் காப்போம்! வாரீர்! வாரீர்!

✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨

Thursday, May 21, 2026

வெற்றி

                                            வெற்றி

நாம் இதுவரை கண்டுவந்த அரசியல் காட்சிகள் முற்றிலும் ஒழிந்தன. திராவிட கட்சிகள் இலஞ்சத்தையும், ஊழலையும், போதையையும் ஊக்குவித்தன. அதனை ஒழிக்க பேச்சளவிலும் பேசமாட்டார்கள். மக்களுக்காக இறங்கி வேலை செய்யமாட்டார்கள். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வாகனங்களில் மட்டுமே உலா வருவார்கள். எல்லோரும் குறைந்தது மூன்று முறையாவது அமைச்சர்களாகவும், சட்ட மன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை நாம் மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால், தமிழகம் மீண்டும் பின்னோக்கி செல்லும். ஊழலும், இலஞ்சமும், போதையும் குடிகொண்டிருக்கும். ஊழலை முன்னிருத்தியே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். எந்த ஒரு புதிய நற்செயல்களையும் நாம் கண்டிருக்க முடியாது. (நான் த.வெ.க.விற்கு வாக்களிக்காததை நினைத்து இந்நேரத்தில் வருத்தமடைகின்றேன்.)

ஆனால், தமிழக மக்கள் கொடுத்த ’தமிழக வெற்றி கழக’ ஆட்சியானது, நாம் இதுவரை கண்டிராத புதிய மாற்றங்களை பதவியேற்ற பத்து நாட்களிலேயே தமிழக மக்களுக்கு கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

1.       அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சரவை அலுவலகங்கலளில் இலஞ்சம் பெறுவதையும் கொடுப்பதையும் தடுக்கும் நடவடிக்கைகள்.அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு அறிவித்தல். 

2.       அரசு மருத்துவமனைகளில் சுத்தம், சுகாதாரத்தை கண்கானித்து மேம்படுத்துதல். 

3.       அரசு அலுவலகங்களில் மக்கள் வந்தால் முதலில் மக்களை அமரவைத்து விசாரித்தல். 

4.       காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா முழு நேரமும் இயங்க உத்தரவு. அனைத்து புகார்களையும் சி.சி.டி.வி.யில் காணொலியாக பதியவைக்க உத்தரவு. 

5.       காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க த.வெ.க. வழக்கறிஞர்களை, ஒரு காவல் நிலையதிற்கு இரண்டு நபர்களை நியமிப்பது. 

6.       முதல்வர் தனது அலுவலகத்திற்கு செய்யும் மரியாதையாக, மதிய உணவுடன் காலையில் சென்று மாலை வீடு திரும்புதல்.இதன் காரணமாக தலைமை செயலக அலுவலர்கள் காலை பத்து மணிக்குள் தங்களது அலுவலகத்திற்கு வருகின்ற அதிசயம் நடைபெறுகின்றது. 

7.       மாநகராட்சி ஊழியர்களின் வருகையை நேரக்கட்டுப்பாட்டுக் கருவியில் (பயோ மெட்ரிக்) பதிவிடச்செய்தல். 

8.       வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள்போல் இல்லாமல், ஆங்கில உடை அணிந்து தமிழர் ஆட்சியினை கொடுக்கும் முதல்வர். 

9.       டாஸ்மாக் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது. உரிய நேரத்தில் திறந்து, மூடுதல், கள்ள விற்பணையை தடுத்தல். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துநிலையம், வழிபாட்டு இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடியது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் திராவிட கலாச்சாரத்தை ஒழித்தது. 

10.   போதை இல்லா தமிழ்நாடு காண, போதைப் பொருளை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தல். 

11.   அரசு டெண்டர்களில் இனி சட்டமன்ற உறுப்பினரகள், அமைச்சரகள் மறைமுகமாக எவ்வகையிலும் இடம் பெற தடைவிதித்தது. 

12.   1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் முதன் முதலாக கூட்டணி அமைச்சரவை உருவாக்கியது. 

13.   இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்து, முன்னால் முதல்வரையும் தோற்கடித்தது. 

14.   அரசு விழாக்களில் தேசியத்தை முன்னிலைப்படுத்தி முதலில் வந்தே மாதரம் பாடலையும், பிறகு மாநிலத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைப்பது.

        பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்புப்படை அமைத்தது.

த.வெ.க. மாவட்டச் செயலாலர்களின் பல்வேறு அரசு துறைகளில் திடீர் ஆய்வுச் செய்து சீர்திருத்தம் செய்தல்.

பட்டியலினத்தவர்கள் ஏழு நபர்களுக்கு அமைச்சரவையில் இடம்  கொடுத்தது.

விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள், இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது.

இளைஞர்கள் அதிகமுள்ள அமைச்சரவையை தமிழக அரசு கண்டிருக்கின்றது.

 இந்து அல்லாத ஒருவர் (கிறுத்துவர்) முதன் முதலில் தமிழத்தின் ஆட்சியை பிடித்தது.

தற்போது உலகில் கோலாட்சும் ஏ.ஐ. க்காக (செயற்கை நுண்ணறிவு) ஒரு புதிய துறையை ஏற்படுத்தி அதற்கான ஒரு அமைச்சரையும் கொடுத்து, ஏ.ஐ. மூலம் இவ்வுலகம் பெறும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் எவ்வகையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்தது வரவேற்கத்தக்கது. உலகில் வேறெந்த நாட்டிலும் ஏ.ஐ.க்காக அமைச்சகம் இல்லை.

இவை போன்று தடாலடி மாற்றங்கள் இன்னும் நிறைய வரவேண்ட்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

வடலூரை புனித நகரமாக்க வேண்டும் என்பது சுத்த சன்மார்க்கர்களின் நீண்ட நாள் கனவு. அதனையும் நமது புதிய முதல்வர் நிறைவேற்றவேண்டும்.

கடலூர் மாவட்ட அமைச்சராக இன்று (21-05-2026) பொறுப்பேற்ற மாண்புமிகு B.இராஜ்குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

TMR