Friday, April 24, 2026
வடலூர் மாதப்பூசம் - ஏப்ரல் 2026
நான் இருக்கும் இடத்தில் நீ அமரக் கண்டேன்
வான் கலந்த யாவரும்
வாயாற போற்றும் என்
ஊன் செய்த புண்ணியம்
ஊரார் யாவரும் அறிய
சான்றாய் நடுவில் கூடும்
சுத்த சன்மார்க்க சங்கமே.
--TMR
Friday, February 6, 2026
மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026
மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026
நலந்தரும் திரு அருட்பாவை
நயமாய் திக்கெட்டும் தனது
பலத்த குரலால் பாடிப்பாடி
பிழைக்க வைத்தாய் சன்மார்க்க
உலகை அந்தோ மறப்பறியோம்
இன்று வள்ளல் மனதிலூன்றி
மலர்ந்து மணந்த தவமே
மழையூர் சதா சிவமே.
தனது காலம் முழுதும் திருவருட்பாவை தவிர்த்து வேறு ஏதும் எனது வாயால் பாட மாட்டேன் என முழக்கமிட்டு அவ்வாறே நடந்து காட்டினார். பல முறை சினிமா பாடல் பாடகராக வாய்ப்புக் கிட்டியும் அதனை தவிர்த்தார்.
ஒரு முறை, எங்கள் ஐயாவை போற்றி பாட வேண்டும் என (’ஐயா” என தங்கள் தலைவரை அழைக்கும் கட்சியினர்) கேட்க, அதற்கு மறுத்து, நான் எனது ஐயாவைத் தவிர (வள்ளலாரை) வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்ல, அக்கட்சியினரிடம் அடியும் வாங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த எங்கள் சகோதரரின் திருமண வரவேற்பில் திருவருட்பா பாடி எங்களை மகிழ்வித்ததை அன்புடன் நினைவு கூர்கிறோம்.
இவ்வாறு சன்மார்க்கத்தில் அதீத பற்று கொண்டவரின் அருட்பா குரல் என்றும் திருவருட்பா உள்ளவரை நீடும்.
-TMR
Sunday, January 18, 2026
நாராயண ரெட்டியார் - குருபூஜை-91
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளற்பெருமானின் மெய்த்தொண்டர் - நாராயண ரெட்டியார் - கட்டமுத்துப்பாளையம் (பண்ருட்டி) அவர்களின் 91-ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்.
நாள்: 31-01-2026 சனிக்கிழமை.
தொடர்புக்கு; 9003824014
Wednesday, January 14, 2026
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துகள்
==================
நோயினை அனைத் துயிருள்ளும்
தழலென கொதிக்கும் கூற்றினை
தனதுதாழுங் குணத்தால் விரட்டும்
உழவனை எல்லாம் வல்லவனென
ஊர்தோறும் போற்றி கொண்டாடும்
பழந்தமிழனின் விழாவில் இன்பம்
பெருகி பொங்கல் பொங்கட்டுமே.
-TMR
Tuesday, January 13, 2026
வள்ளலார் பேருந்து நிலையம்
வள்ளலார் பேருந்து நிலையம்
12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.
ரூ 7.53 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன் அவர்கள், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
K.N.NEHRU - Tamil Nadu Minister for Municipal Administration & Water Supply
Subscribe to:
Comments (Atom)








