Friday, February 6, 2026

மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

 மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

இராமலிங்கம் தி.ம


நலந்தரும் திரு அருட்பாவை

நயமாய் திக்கெட்டும் தனது
பலத்த குரலால் பாடிப்பாடி
பிழைக்க வைத்தாய் சன்மார்க்க
உலகை அந்தோ மறப்பறியோம்
இன்று வள்ளல் மனதிலூன்றி
மலர்ந்து மணந்த தவமே
மழையூர் சதா சிவமே.
தனது காலம் முழுதும் திருவருட்பாவை தவிர்த்து வேறு ஏதும் எனது வாயால் பாட மாட்டேன் என முழக்கமிட்டு அவ்வாறே நடந்து காட்டினார். பல முறை சினிமா பாடல் பாடகராக வாய்ப்புக் கிட்டியும் அதனை தவிர்த்தார்.
ஒரு முறை, எங்கள் ஐயாவை போற்றி பாட வேண்டும் என (’ஐயா” என தங்கள் தலைவரை அழைக்கும் கட்சியினர்) கேட்க, அதற்கு மறுத்து, நான் எனது ஐயாவைத் தவிர (வள்ளலாரை) வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்ல, அக்கட்சியினரிடம் அடியும் வாங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த எங்கள் சகோதரரின் திருமண வரவேற்பில் திருவருட்பா பாடி எங்களை மகிழ்வித்ததை அன்புடன் நினைவு கூர்கிறோம்.
இவ்வாறு சன்மார்க்கத்தில் அதீத பற்று கொண்டவரின் அருட்பா குரல் என்றும் திருவருட்பா உள்ளவரை நீடும்.
-TMR



Sunday, January 18, 2026

நாராயண ரெட்டியார் - குருபூஜை-91

 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளற்பெருமானின் மெய்த்தொண்டர் - நாராயண ரெட்டியார் - கட்டமுத்துப்பாளையம் (பண்ருட்டி) அவர்களின் 91-ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்.

நாள்: 31-01-2026 சனிக்கிழமை.
தொடர்புக்கு; 9003824014

நாராயண ரெட்டியார்

நாராயண ரெட்டியார்


Wednesday, January 14, 2026

பொங்கல் வாழ்த்துகள்

 பொங்கல் வாழ்த்துகள்

==================
PONGAL




நிழலென தொடரும் பசியெனும்

நோயினை அனைத் துயிருள்ளும்
தழலென கொதிக்கும் கூற்றினை
தனதுதாழுங் குணத்தால் விரட்டும்
உழவனை எல்லாம் வல்லவனென
ஊர்தோறும் போற்றி கொண்டாடும்
பழந்தமிழனின் விழாவில் இன்பம்
பெருகி பொங்கல் பொங்கட்டுமே.
-TMR

Tuesday, January 13, 2026

வள்ளலார் பேருந்து நிலையம்

 வள்ளலார் பேருந்து நிலையம்

12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.

ரூ 7.53 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன் அவர்கள், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

K.N.NEHRU - Tamil Nadu Minister for Municipal Administration & Water Supply

vallalar bus stand

VALLALAR BUS STAND

VALLALAR BUS SATND

VALLALAR BUS STAND


சில முரண்பாடுகள்

 சில முரண்பாடுகள்

TMR


ஞான சபையில் புலால் உண்பவர்கள் செல்வதால் தவறில்லை, ஏனெனில் நான் புலால் தவிர்க்கும் முன் ஞான சபைக்குள் சென்றதால்தான் சன்மார்க்கத்திற்கு வந்தேன். ஞான சபையில் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும் என வள்ளலார் சொல்லவில்லை, என சிலர் கூறுகின்றனர்.

வள்ளலாரின் வடலூரை புனித நகரமாக ஆக்காவிடினும் பரவாயில்லை,  அவர் உருவாக்கிய ஞான சபையில் 20 நபர்கள் அமரக்கூடிய அந்த மிகச்சிறிய இடத்தையாவது புனிதமாக இருக்க விடுங்கள்.  

அடுத்து,

RAMALINGAM TM


புலால் உண்ணும் பார்வதிபுற மக்களிடம் வள்ளலார் ஏன் நிலத்தை தானமாகப் பெற்றார்? என சிலர் கேட்கின்றனர்?

வடலூர் பெருவெளியினை வேட்டவலம் ஜமீன்தாரர் அவர்களே வள்ளலாருக்கு தானமாக கொடுத்தார். வள்ளலார் அந்நிலத்தை தானமாக பெறுவதற்கு முன் அந்த ஜமீன்தாரரை தனது கொள்கைக்கு ஆட்படுத்திய பிறகு அவரை புலால் மறுக்கச் செய்தப் பிறகே வடலூர் நிலத்தை அவரிடமிருந்து தானமாகப் பெற்றார்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் சில சட்ட வரையறைகளுக்காக அந்நிலத்தை பட்டா செய்ய ஜமீன் ஏற்பாடு செய்த சில பார்வதிபுற மக்கள் அந்நிலங்களுக்காக கையொப்பம் மட்டுமே இட்டனர். ஆனால் அந்நிலத்திற்கும் கையொப்பம் இட்ட பார்வதிபுற மக்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.

அடுத்து,

VALLALAR


ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவதற்கு வடலூர் தருமச்சாலையை பயன்படுத்துவது சரிதானா?

நான் இவ்வாறு தருமச்சாலையில் மாலை போட்டுக்கொண்டதால்தான் இன்றைக்கு நான் சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றேன். இன்று நான் முழுதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதால், மாலை அணிந்து சபரி மலைக்குச் செல்வதில்லை.

எனவே தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் வந்து மாலை போட்டுக்கொள்வது தவறல்ல. வள்ளலார் தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை போடக்கூடாது என எங்கும் சொல்லவில்லை, என ஒரு சன்மார்க்கி கூறுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன சொல்ல?

ஐயப்ப மாலை போடுவதற்கு அனுமதி அளித்த இந்து நலத் துறை வன்மையான கண்டனத்திற்கு உரியது.

நன்றி.

https://www.facebook.com/reel/1982273392720324