Thursday, February 29, 2024

கருணை இல்லா மனிதன் கடுகி ஒழிக

அருட்பெருஞ்ஜோதி                                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                           அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கருணை இல்லா மனிதன் கடுகி ஒழிக


அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்!

அரிது...அரிது... மானிடராய் பிறத்தல் அரிது! என்பார் ஒளவையார். அப்படிப்பட்ட அரிதான மனித தேகம் எடுத்தவர்கள் இவ்வுலகில் சுமார் 900 கோடி எண்ணிக்கையில் இருப்பார்கள். நமது இந்தியாவில் மட்டும் 130 கோடி இருப்பார்கள். இவர்களில் மொழி, மதம், கலாச்சாரம், இடம் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் நாம் அனைவரும் பல்வேரு குழுக்களாக வாழ்ந்தாலும், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ”மனம்” உள்ளவகளாகவே வாழ்கின்றோம்.  

”மனமே குரு” என்கிது சித்த வேதம் சிவானந்த பரமஹம்சர். கருணையே மனிதனின் மனமாக இருக்க வேண்டும். கருணை இல்லை என்றால் என் உயிர் இல்லை என்கின்றார் வள்ளலார். மதத்தின் அடிப்படையிலும், கலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் எந்த ஒரு செயலை செய்யும் முன், நமது மனம் என்ன சொல்கின்றது என்பதை கேட்டுச் செய்ய வேண்டும். 

அதே நேரத்தில் கருணை இல்லாத மனம் நம்மை தீய வழிக்கே இட்டுச் செல்லும். இவ்வாறு கருணை இல்லாத மனம் படைத்தவர்களே இவ்வுலகில் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் இவ்வுலகில் கடுகி ஒழிய வேண்டும். நான் இங்கு அவர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாசம் எழுதவில்லை. இவர்கள் அனைவரும் கருணை உள்ளவர்களாக மாற்றம் எய்தி கருணையற்றவர்கள் ஒழிய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாசம் உள்ளதாக அறிய வேண்டும்.

நாம் விடயத்திற்கு வருவோம். மூன்று நாட்களுக்கு முன்பு நமது நாட்டின் தலைநகரில் (டில்லி) போதைப் பொருளை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது 3 தமிழர்கள் பிடிப்பட்டதாக அறிந்து துயறுற்றேன். அந்த மூன்று தமிழர்களுக்கும் தலைமை யார் என்று அறிந்தபொழுது, சென்னையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் ஆளும் கூட்டணி கட்சி (தி.மு.க. மற்றும் வி.சி.க.) பிரமுகர்கள் என மூன்று நபர்கள் என அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தேன். இதுவரை நமது இந்தியாவிற்குத்தான் மற்ற நாடுகளிலிருந்து போதைப் பொருட்கள் கள்ளத்தனமாக வரும். ஆனால் இன்று, இந்தியா போதைப் பொருட்களை மற்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாக அனுப்புகின்றது என்றால் அது ஒவ்வொரு இந்தியனுக்கும் தலை குனிவு. தமிழர்கள் என்ற வகையில் நமக்கு மேலும் தலை குனிவு.

போதை கடத்தலை தடுக்கும் சட்டங்கள் இருப்பினும், அதனை நடைமுறை படுத்தும் அதிகாரிகள் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவதால் இவர்களும் கருணை அற்ற மனிதர்களாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக சென்னையிலிருந்து போதைப் பொருள் வெளிநாட்டிற்கு பார்சல் மூலம் கடத்தியிருக்கின்றார்கள். இதனை மத்திய மாநில அதிகாரிகள் தடுக்காமல் இருந்துள்ளார்கள். மேலை நாட்டிலிருந்து புகார் வந்தப் பிறகு தற்போது பிடிக்கின்றார்கள் என்றால், இவர்களை என்னவென்று சொல்வது? கருணை இல்லா மனிதர்கள் கடுகி ஒழிய வேண்டும்! 

தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை அரசியல் கட்சியினர் பணத்திற்காகவும், ஓட்டிற்காகவும் தங்களுடன் நெருக்கமாக வைத்துக்கொள்கின்றன. இவர்களால் உலக அளவில் உள்ள மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. போதை என்பது பெருமளவில் 18 வயது துவங்கி 25 வயதுக்குள் உள்ள ஆண் மற்றும் பெண்களை அதிகம் பாதிப்புள்ளாக்குகின்றது. இளைய தலைமுறைகளை போதைக்கு அடிமைப் படுத்தும் அரசியல் கட்சிகளும் கடுகி ஒழிய வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மதுக்கடைகளை அந்தந்த அரசுகள் மூட வேண்டும். மக்களை கருணையுள்ளவர்களாக வாழ வழிவகை செய்துத் தரவேண்டும். திருவள்ளுவருக்கும், வள்ளலாருக்கும் விழா எடுப்பதோடு அவர்கள் கூறிய கருணை நிறை வாழ்க்கையை மக்களுக்கு கொண்டு செல்ல அரசுகள் முற்பட வேண்டும்.

மனிதனை கருணை வழிக்கு கொண்டு செல்லும் பல்வேறு சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் அனைத்தும் இது போன்ற நேரத்தில் போதை பொருட்களுக்கு எதிராக  கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். போதை பொருட்களை மக்களுக்கு வழங்கும் அரசுகளையும், மனிதர்களையும் மக்கள் புறந்தள்ள வேண்டும். 

வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கம் - போதை கடத்தல், மற்றும் போதை உபயோகித்தல், போதைக்கு ஆதரவான அரசுகளை வன்மையாகக் கண்டிகின்றது.

புலை கொலை போதைத் தவிர்த்து மனிதர்கள் யாவரும் கருணையுடன் வாழ்வோம். கருணை இல்லா மதங்கள், சமயங்கள், மார்க்கங்கள், அரசுகள், மனிதர்கள் அனைத்தும்/அனைவரும் கடுகி ஒழிய வேண்டும் என்று வள்ளற்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றேன். நன்றி.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com   

++++++++++++++++++++

அனைவருக்கும் வணக்கம்.

மேற்காணும் பதிவினை பதிவிட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்று 06-03-2024 புதுச்சேரியில் கஞ்சா போதையில் 19 வயது வாலிபனும், 59 வயது கிழவனும் சேர்ந்து 9 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்து கொன்று சாக்கடையில் தூக்கி வீசியிருக்கும் சம்பவம் (இது இன்றைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே நடந்தேறிவிட்டது) புதுச்சேரியையும், தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. 

ஆர்த்தி என்ற பெயரருடைய ஏதுமறியா 5-ஆம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியை இவ்வாறு செய்யத்தூண்டியது போதை என்னும் பழக்கமே ஆகும். இதனை தடுக்காமல், ஊக்குவித்த புதுச்சேரி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தக்க தண்டனையை இறைவனும் மக்களும் வழங்க வேண்டும். சிறுமி ஆர்த்தியின் ஆன்மா இறையடிச் சேர வள்ளற்பெருமானை வேண்டுகின்றேன்.

கருணையில்லா மனிதன் கடுகி ஒழிக!

++++++++++++++++++++++ 



   


Wednesday, February 28, 2024

எள் அளவு பொய்!

 அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

எள் அளவு பொய்

தற்சமயம் சன்மார்க்க உலகில் பேசப்பட்டுவரும் பழமொழி - “எள்ளு போட்டால் எள்ளு விழாது” என்பதாகும். 

வடலூர் பெருவெளியில் அன்பர்கள் குளம் வெட்டும் பொழுது, “எள்ளு போட்டால் எள்ளு விழாது” அந்த அளவிற்கு இங்கு எதிர்காலத்தில் கூட்டம் வரும், எனவே நீங்கள் இங்கு குளம் வெட்டக்கூடாது - எனச்சொல்லி வள்ளலார் தடுத்ததாக ஒரு செவி வழிச் செய்தியினை ஊரனடிகள் தமது நூலில் எழுதியுள்ளார். அது எந்த அளவிற்கு உண்மை???

தருமச்சாலை அழைப்பு !

தருமச்சாலைத் தொடக்க விழா அழைப்பு ! 25--4--1867 ,ஆம் ஆண்டு !

ஆன்மநேய சித்தமுடைய தயவுடைய அனைவருக்கும் வந்தனம் .

சிதம்பர தலத்திற்குச் சுமார் இரு காத வழிநடை எல்லையில் கடலூரைச் சார்ந்த வடலூர் என்றும், பார்வதிபுரம் என்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுறத்தில்,சென்னை நகரில் இருந்து கும்பகோணத்திற்கு போகின்ற பெரியபாட்டைசுமார் நூறு-மயிலில் மஞ்சகுப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை சுமார் ஐம்பதாவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம்.குருவாரம் உதய காலம்,ருஷப  லக்கினத்தில்

சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டங்களுக்கு அஸ்திவாரங்களும் ,கிணறு,கேணி,முதலிய நீர் நிலை எடுப்புகளும் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன் மேய்ந்த மண் கட்டடச் சாலையில்,ஒருசார் ஆகார தரும விருத்தியும் தொடக்கம் செய்யும்படி நிச்சயித்து இருக்கின்றது.

ஆதலில் அந்த தினத்தில் தாங்கள் தங்கள் மனைவியர், புத்திரர்,துணைவர்,தந்தையர்,தாயார்,உறவினர் ,சினேகிதர், முதலியவர் களோடும்,வந்திருந்து நடத்து விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மேற்காணும் தருமச்சாலை அழைப்பிதழில் வள்ளலார் தருமச்சாலை அமைக்கும் பொழுதே கிணறு, கேணி (குளம்) போன்ற நீர் நிலைகளையும் அமைக்க வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதை நாம் அழைப்பிதழில் காண்கின்றோம். 

எனவே ஊரனடிகள் எழுதிய வள்ளலாரின் செவி வழிச் செய்தி பொய் என்று சன்மார்க்க அன்பர்கள் அறிய வேண்டும்.

வள்ளலார் சொல்லும் உண்மையை விட, பல பேர் சொல்லும் பொய்யே ஏற்கப்படுகின்றது.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com 



Monday, February 26, 2024

வடலூர் பெருவெளி வள்ளற்பெருமானுக்கு எவ்வாறு கிடைத்தது?

 வடலூர் பெருவெளி வள்ளற்பெருமானுக்கு எவ்வாறு கிடைத்தது?



அருட்பெருஞ்ஜோதி                         அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                    அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

சுத்த சன்மார்க்கர்கள் அனைவருக்கும் வந்தனம்!

வடலூர் பெருவெளி பற்றின தகவல்கள் தற்காலத்தில் அனைவராலும் சமூக ஊடகங்களில் பெருவாரியாகப் பேசப்பட்டு வருகின்றன. சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்களும் வள்ளற்பெருமான்மேல் பற்றுள்ள பொது மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது அறியாமையால் வள்ளற்பெருமானை பற்றியும் அவரது பெருவெளி பற்றியும் தவறான செய்திகளை இவ்வுலகிற்கு எடுத்தியம்புகின்றனர். 

1.வள்ளற்பெருமானைப் பற்றின தவறான கருத்து எதுவெனில்? 

வள்ளலார் - வடலூர் பெருவெளியினை தானமாகப் பெற்றார் அல்லது யாசகம் செய்து பெற்றார் என்று செய்தி பரப்புவது.

2.வடலூர் பெருவெளி பற்றின தவறான கருத்து யாதெனில்?

வடலூர் பெருவெளியானது பார்வதிபுர மக்களால் வள்ளலாருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது என்று செய்தி பரப்புவது.

மேற்காணும் இரண்டு செய்திகளும் தவறானவை. உண்மை நிகழ்வினைப் பற்றி நாம் இப்பதிவில் பார்ப்போம்....

1.வள்ளலார் பூமி தானம் பெற்றார் என்பது முதல் பொய்யுரை. வள்ளலார் யாரிடமும் சென்று எமக்கு பூமி தானம் வழங்குங்கள் என்று கேட்டதுமில்லை. அவ்வாறு யாரும் தரவுமில்லை. யாசகம் செய்யுமிடத்தில் வள்ளலார் இல்லை. அவரது சக்தி என்னவென்பது அனைவருக்கும் தெரியும், தெரிந்தும் இவ்வாறு அனைவரும் பேசுவது, நீங்கள் அனைவரும் அவரை பிச்சைக்காரனைவிட மிகக் கேவலாமாக எண்ணுவதாகவே உள்ளது. (நீங்கள் யாவரும் அவ்வாறு நினைத்து பேசவில்லை என்பது எமக்குத் தெரியும். இருந்தாலும் வள்ளலார் தானம் பெற்றார் என்றால் அதன் பொருள் பிச்சைக்காரன் என்பதுதான். என்பதை இனியேனும் நீங்கள் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்)

”வள்ளலார் கருங்குழியில் வசித்தத்தருணம், கருங்குழி கிராமத்தில் புருஷோத்தம ரெட்டியாருடைய அம்மான் பாலு ரெட்டியாருக்குள்ள குஷ்டத்தை வள்ளலார் விபூதி அருளிக் குணமாக்கினார். 

கருங்குழி முத்துநாராயண ரெட்டியார் என்பவருக்கு நேர்ந்த கண் குற்றத்தை வள்ளலார் விபூதிக் கொடுத்து குணமாக்கினார். இம்முத்துநாராயண ரெட்டியார் தமது சொத்து யாவையும் வள்ளலார் பெயருக்கு எழுதிவிட்டார். இதையறிந்த வள்ளலார் அச்சொத்துக்களை கருங்குழி சீனிவாச பெருமாள் கோவிலுக்கு எழுதிவிடும்படி கட்டளையிட்டனர். அங்ஙனமே ரெட்டியார் செய்தனர்.” (ச.மு.க. பிரபந்தத்திரட்டு நூல் - பக்கம்-88)

மேற்காணும் வரலாற்று செய்தி எதனைக் குறிக்கின்றது? என்பதை அன்பர்கள் கவனிக்கவும். வடலூர் பெருவெளி வள்ளலாருக்கு கிடைக்கும் முன்பே இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வள்ளலார் நினைத்திருந்தால், முத்துநாராயண ரெட்டியாரின் நிலங்களை தமதாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. கருங்குழி சீனிவாச பெருமாள் கோயிலுக்கு எழுதிவைக்கச் சொல்லிவிட்டார். இதன் மூலம் வள்ளலார் தானம் பெறக்கூடியவர் அல்லர் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது. 

அப்படியே அவர் அச்சொத்துக்களை தனதாக்கிக்கொண்டிருந்தாலும், இதனை தானம் வாங்கியதாக கொள்ள முடியுமா? தானம் என்பது என்ன? பிரதி உபகாரம் ஏதுமின்றி கொடுப்பதும் வாங்குவதும்தான் தானம் என்பதாகும். ஆனால் இங்கு வள்ளலார் ஒருவருக்கு மருத்துவம் பார்த்து அவரது நோயினை தீர்த்தப்படியால், நோய் தீர்ந்த அந்த ஒருவர் அதற்கு பிரதிபலனாக அவரது சொத்தினை வள்ளலாருக்கு எழுதி வைக்கின்றார். இங்கே பிரதி உபகாரம் இருப்பதால் இதனை தானம் கொடுத்தார் என்றோ, தானம் பெற்றார் என்றோ கொள்ளக்கூடாது. இதனை மருத்துவக் கூலி என்றுதான் சொல்ல வேண்டும். 

சரி... நாம் தற்போது கருங்குழி சீனிவாசப் பெருமாள் கோவிலைப் ப|ற்றி சுருக்கமாகக் காண்போம். (இலட்சுமி நாராயணத் திருக்கோயில்)

இத்தள பெருமாளிடம் பக்தி கொண்டவர் நமது வள்ளலார். திருவருட்பா பாடல் கொண்ட திருத்தலம். மேலும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் இடிக்கப்பட்ட சமயம், உற்சவமூர்த்தியைப் பாதுகாக்க முயன்ற திருமால் அடியார்கள் கருங்குழி திருக்கோயிலுக்கு கொணர்ந்து பாதுகாத்து வந்தனர். பின்னர் இதனை அறிந்த இராமானுஜர் கருங்குழி வந்து இப்பெருமாளைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியே திருப்பதி அடைந்து அங்கு பிரதிஷ்டை செய்தார். 

விஜயநகர் மாமன்னர் அச்சுதப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். இத்திருத்தலத்தில் உள்ள சீனிவாசன், பாண்டவர்கள் வனவாச சமயம் நடந்து நடந்து புண்ணான திருப்பாதங்களைக் கொண்ட கண்ணபிரானாக உள்ளார். இவர் கல்யாண சீனிவாசனாக திருமணத்தடை அகற்றுபவராகவும் உள்ளார்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் ராஜகோபுரம் அமைக்க அஸ்திவாரம் எழுப்பப்பட்டு திருப்பணிகள் தொடராது நின்றுவிட்டன. சிதிலமடைந்த இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஏராளம் இருந்தும் அவை மற்றவர்கள் வசம் அகப்பட்டு விட்டதால் பக்தர்கள் மூலமாகவே தினசரி வழிபாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

சரி... நாம் தற்போது மீண்டும் வள்ளலார் செய்திக்கு வருவோம். மேற்காணும் கருங்குழி செய்தியிலிருந்து வள்ளலார் எவரிடமும் தானம் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆனால்... வடலூர் பெருவெளி.... எப்படி....?

2.வடலூர் பெருவெளி பார்வதிபுர மக்களால் வள்ளலாருக்கு தானமாகத் தரப்பட்டது என்ற செய்தியில் உள்ள உண்மை என்னவாக இருக்கும்?

02-02-1867-ஆம் ஆண்டு வடலூர்க் குடிகள் (பார்வதிபுரம் மக்கள்) சிலரிடமிருந்து இனாமாகப் பெற்றதே வடலூர் பெருவெளி என்று திருவருட்பா உரைநடை நூலிலும், வடலூரிலுள்ள கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளதை ஆதாராமகக் கொண்டே, மக்கள் அனைவரும் வடலூர் பெருவெளியை வள்ளலார் தானமாகப் பெற்றார் என்று பேசிவருகின்றனர். 

1858 ஆம் ஆண்டிலிருந்து 1867 ஆம் ஆண்டு முற்பகுதி வரை வள்ளலார் கருங்குழியில் வசிக்கின்றார். 02-02-1867-க்குப்பிறகு வடலூர் வாசியாக வள்ளலார் விளங்குகின்றார். வடலூர் பெருவெளியை எதற்காக வள்ளலார் பெறுகின்றார்? தருமச்சாலை அமைத்து அன்ன விரயம் செய்யவே முதற்கண் அவ்வெளி அவருக்கு வழங்கப்பட்டது. அப்படி என்றால், இன்றைக்கு 150 வருடத்திற்கு முன்பு வடலூர்க் குடிகள் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர்களாகவும், குடிசை வாசிகளாகவும், உண்ண உணவும் இன்றி தவித்திருக்க வேண்டும். அவர்களுக்கு உணவு வழங்கவே வடலூர் பெருவெளி வள்ளலார் கைக்கு வருகின்றது.

அப்படியிருக்க வடலூர்க் குடிகளால் வள்ளலாருக்கே தானம் கொடுக்கும் வகையில் அவர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே இருப்பினும், அவர்கள் எதற்கு வள்ளலாருக்கு எந்தவித பிரதி உபகாரமும் இன்றி நிலத்தை வழங்க வேண்டும்? வடலூர் குடிகளுக்கு வள்ளலாரால் யாதொரு பயனும் இல்லை. யாரோ ஒரு சாமியார் என்ற அளவில் மட்டுமே வள்ளலாரை வடலூர் குடிகள் அன்று நினைத்திருக்கக் கூடும். வள்ளலாரும் வடலூர் குடிகளை நோக்கி சென்றதாக வரலாறு இல்லை. அவர்களிடம் யாதொரு சித்தாடலும், அதிசயமும், நோய் தீர்த்தலும் வள்ளலார் செய்யவே இல்லை. யாரிடமும் எமக்கு தானமாக நிலம் வழங்குங்கள் என்று கேட்கவும் இல்லை. கருங்குழியிலிருந்து உடனே வடலூருக்கு இடம் பெயருகின்றார் வள்ளலார். வள்ளலார் வடலூர் வந்து சிறிது சிறிதாக இப்பெருவெளியை தனதாக்கிக் கொண்டதாக வரலாறும் இல்லை. வடலூர் பெருவெளியை கருங்குழியிலிருந்து உடனே அடைகின்றார் வள்ளலார். இது எப்படி சாத்தியம்? 120 ஏக்கர் என்பது மிகப்பெரிய வெளி. அன்றைக்கு வடலூர் குடிகள் இருந்த வசிப்பிடமே 120 ஏக்கர் இருந்திருக்காது. 

வடலூர்க் குடிகளால்தான் இவ்வெளி வந்ததாக எப்படி கருதமுடியும்?  சுமார் 50 வடலூர்க் குடிகள் இவ்வெளியை தானமாக தந்தார்கள் என்றால், இவர்கள் 50 குடிகளும் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள்? வள்ளலாரும் இவர்களிடம் நிலம் கேட்கவில்லை. இவர்களே மனமுவந்து கொடுக்க வள்ளலார் இவர்களுக்கு யார்? 50 நபர்களில் 40 நபர்கள் தானத்திற்கு ஒப்புக்கொண்டாலும் 10 நபர்கள் நான் கொடுக்க முடியாது என்று சொல்லக்கூடிய வாய்ப்புதானே அதிகம். அப்படி என்றால் அப்பெருவெளி முழுமையாக இல்லாமல் நடு நடுவே அந்த 10 நபர்களின் இடம் இருந்திருக்கும் அல்லவா? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் பெருவெளி தானத்தில் உள்ளன. 

பெருவெளி இனாம் பத்திரத்தில் உள்ள, தானம் கொடுத்த நபர்களை இன்றைக்கு உள்ள பார்வதிபுர மக்களுக்கு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அப்பத்திரம் உண்மை அல்ல. பார்வதிபுர மக்களில் யாரும் தானம் அளிக்கவில்லை. 

அப்படியெனில், வடலூர் பெருவெளி யாரால் வந்தது? அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் திட்டமிட்டபடி வந்தது! அத்திட்டத்தின்படி வள்ளலார் வேட்டவலம் நோக்கி நகர்த்தப்படுகின்றார்.

”வள்ளலார் பசியால் வருந்தும் ஆயிரங்கணக்காண மக்களுக்கு அன்னமளிக்க ஒரு பொது இடம் தருமச்சாலையாக அமைக்கத் திருவுளம் கொண்டார். அவ்வாறு கட்டப்படும் தருமச்சாலை நாலு பக்கத்து ஜனங்களுக்கும் போக்குவரவுக்குரிய நடுப்பாங்கில் அமையவேண்டுமென்று தமது அன்பர்களுக்கு கட்டளையிட்டனர். பல அன்பர்கள் பலப்பல இடம் குறித்தனர். ஒரு கால் வள்ளலார் தாமே சென்று வடலூர்ப் பெருவெளியில் நின்று இங்கே அமைத்தல் வேண்டும் என்று ஆஞ்ஞாபித்தனர். அவ்விடத்தைக் குறித்ததற்குக் காரணம், சிதம்பரம், கூடலையாற்றூர், விருத்தாசலம், திருவதிகை, திருஇரும்மை மாகாளம், திருப்பாதிரிப்புலியூர், தியாகவல்லி முதலிய ஸ்தலங்களுக்கு மத்திய இடமாயும் தென்பெண்ணையாறு, கெடிலநதி, வெள்ளாறு, மணிமுத்தாநதி முதலிய நதிகளால் சூழப்பட்டாதாயுள்ள வடலூர்ப் பெருவெளி வழியாய்ச் செல்வார்க்குப் பசிதீர்த்து அனுப்புவதற்கு வசதியுள்ள தருமச்சாலை உண்டாக்குவதே, அன்றியும் சிதம்பரத்தின் ஸ்தூல லிங்கமாகிய நான்கு கோபுரங்களும் அவ்விடத்தே நின்று நோக்குவார்க்குத் தரிசனமாதலாலும் என்பது,

நடிப்பார் வதிதில்லை நற்கோபு ரத்தின்

அடிப்பார்வை யும்வடக்கே யார்ந்து - கொடிப்பாய

நின்று வளர்மலைபோ னெஞ்சேபார்த் தாற்றெரியும்

இன்றெவ் விடத்தெனிலிப் பாட்டு. (திருவருட்பா நெஞ்சொடுகூறல் -8)

என்ற பாசுரத்தால் விளங்கும்.

மேலும் நகர வாசனையை விட்டுத் தனியே ஓரிடத்திலிருந்து அருள் நிலையிலேயே திளைக்க வேண்டுமென்று வள்ளலார் கொண்ட பெருவிருப்புமாகும். அவ்வடலூரில் பிள்ளைப் பெருமான் மீது அன்பர்கள் எண்பதுகாணி நிலம் பட்டா செய்தனர்.” (ச.மு.க. பிரபந்தத்திரட்டு நூல் - பக்கம்-103)

இவ்வாறு வடலூர்ப் பெருவெளி எவ்வாறு வரப்பெற்றது என்பதனை, எமது தந்தைவழிப் பாட்டனாரும் - வள்ளலாரின் அணுக்கத்தொண்டருமான ”காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை” அவர்கள் தான் எழுதிய பிரபந்தத்திரட்டு நூலில் குறித்துள்ளார்கள். 

வடலூர் பெருவெளியில், மன்னர் காலத்து இடிந்தக் கோட்டையும், சிவலிங்கமும், குளமும் மண்ணில் நம் கண்களுக்கு தெரியும் வகையில் புதையுண்டு உள்ளன. அப்படி எனில் அவ்விடம் எவ்வாறு குடிமக்களுக்கு சொந்தமாக இருக்க முடியும்? அன்றைக்கு ஒரு ஜமீந்தாரருக்கு அவ்விடம் சொந்தமாக இருந்தது. அந்த ஜமீந்தாரர்தான் வேட்டவலம் ஜமீன்தார் அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதிராய அப்பாசாமி பண்டாரியார். அதை அன்பர்கள் அறிந்த சமயம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், வேட்டவலம் ஜமீந்தாரரிடமிருந்தே வள்ளலாருக்கு அழைப்பு வருகின்றது.

வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்க்கு மனைவியர் இருவர்ஒருவரை பிரம்மராசஷசி பற்றிக்கொண்டிருந்ததுமற்றொருவருக்கு மகோதரம்இத்துன்பங்கள் நீங்க மந்திரவாதிகள் கூறுகின்றபடி உயிர்க்கொலை பலசெய்தும் குணமாகவில்லைவள்ளலாரது மகிமையைப் பிறராலறிந்த பண்டாரியார் வள்ளலாரை அழைத்துவரும்படி தக்க முதியோரை அனுப்பிதன் மனத்தில் தோன்றியபடி இரண்டு ஒரேமாதிரியான நாற்காலிகளை அமைத்து அவ்விரண்டில் தான் குறித்த நாற்காலியில் உட்காருவராயின் மஹான் எனத் தீர்மானிக்கலாமென்று எண்ணியிருந்தனர்.

வள்ளலார் வீட்டிற்குள் நுழையத் தெருவாயிற்படியில் வரும்போதே பிரமராசஷசி பிடித்தமனைவியார் வந்துவணங்கி "உத்தரவு கொடுக்க வேண்டும் நான் போய் வருகிறேன்என்று கூறி விபூதி பெற்றனர்வள்ளலார் உட்சென்று பண்டாரியார் மனத்தில் எண்ணிய நாற்காலியில் அமர்ந்தனர்பண்டாரியார் இவரே உள்ளபடி மஹான் எனத்தெளிந்து தன் துன்பங்களை முறையிட்டனர்வள்ளலார் அவரது இளையமனைவியர்க்கு மூன்று வேளை விபூதி கொடுத்துக் குணமாக்கினர்அன்றியும் அக் குடும்பத்தாரைச் சுத்த போஜனமுடையராய்ச் செய்தனர்.

(ச.மு.க. பிரபந்தத்திரட்டு - பக்கம் 103)

இவ்வாறு வேட்டவலம் ஜமீன்தாரரை தாவர உணவிற்கு மாற்றமைடையச் செய்துவிடுகின்றார் வள்ளலார். பிறகு, ஜமீன்தாரர் வள்ளலாரின் விருப்பத்தை அன்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டு, அவரின் விருப்பத்தினை, அதாவது வடலூர் பெருவெளி அன்பர்கள்  மூலமாக வள்ளலாருக்கு பட்டா மாற்றம் செய்யப்படுகின்றது. 

”வடலூர் பார்வதிபுரம் என்பது பைமாஷ்படி ஏற்பட்ட பெயர்” என்று ச.மு.க. பிரபந்தத்திரட்டில் பக்கம் 103-ல் அடிக்குறிப்பாகக் காணலாம். பைமாஷ் என்பது ஆங்கிலேயர் காலத்து நில அளவை முறை. இம்முறையில் நாம் நிலங்களை சதுர வடிவத்தில் அளப்பது ஆகும். ஒரு சதுரத்துக்கு 420 சதுர மீட்டர் ஆகும். தற்போது இது வழக்கத்தில் இல்லை. 1857-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இடத்திற்கு தக்க வெவ்வேறு காலக்கட்டங்களில் முக்கோண விதிகளை பயன்படுத்தி நிலங்களை அளக்கின்றோம். சர்வே எண் முறை அமலுக்கு வருகின்றது. 

இவ்வாறு பைமாஷ் அளவில் இருந்த இடத்தை வள்ளலாருக்கு பட்டா மாற்றம் செய்ய, அவ்விடத்தை பலரது பெயருக்கு பிரித்து எழுதி, அவர்கள் மூலம் வள்ளலாருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார்கள். ஜமீன்தாரர் கட்டளைப்படி அன்றுள்ள வடலூர்க் குடிகளை இதற்காக பயன்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு வேட்டவலம் ஜமீன் நிலம் வள்ளலாருக்கு கை மாறுகின்றது. 

வேட்டவலம் ஜமீன் இல்லையெனில் இவ்வுலகிற்கு இன்றைய வடலூர் பெருவெளி கிடைத்திருக்காது. வள்ளலார் மறைவிற்கு பின்பு அவ்விடம் (வடலூர் பெருவெளி) மீண்டும் திரு.அப்பாசாமி பண்டாரியார் அவர்களின் பெயருக்கே பட்டா பெயர் மாற்றம் அடைந்ததே இதற்கு சாட்சி. அப்பாசாமி பண்டாரியார் வள்ளலாருக்கு அடிமைப்பூண்டு வடலூரிலேயே வந்து தங்கி வடலூரிலேயே 05-03-1883-ஆண்டு உயிர் நீத்தார். அப்பாசாமி பண்டாரியார் மறைவிற்குப் பிறகு அவரது தம்பி சர்க்கரய்யா பண்டாரியார் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படுகின்றது. இன்றைய வடலூர் பெருவெளி வள்ளலார் பெயரில் இல்லை. சர்க்கரய்யா பெயரில்தான் இருக்கின்றது. இவரது பெயரில் உள்ள பெருவெளியைத்தான் இன்று இந்து சமய அறநிலையத்துறை கையாள்கின்றது. எனவே சுத்த சன்மார்க்கிகள் யாவரும் வேட்டவலம் ஜமீன் குடும்பத்திற்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டவர்களாவர். பட்டா பெயர் மாற்றத்திற்கு பெயரளவில் அவருக்கு அன்று உதவிய பார்வதிபுர மக்களுக்கும் நன்றிக்கு உரியவர்களே. 

இதன் மூலம் நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவெனில், வடலூர் பெருவெளியானது பார்வதிபுர மக்களால் வள்ளலாருக்கு தானமாக கொடுக்கப்பட்டது என்ற பொய்யுரையினை இனிமேலும் யாரும் முழங்க வேண்டாம். என்ன உண்மையோ அதனைச் சொல்லுங்கள். ”மருத்துவக் கூலியாக வேட்டவலம் ஜமீன்தாரர் வள்ளலாருக்கு கொடுத்ததே வடலூர் பெருவெளி.” நன்றி.

-தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com

https://vallalarr.blogspot.com/2015/09/blog-post.html

   






   



        

Thursday, February 22, 2024

மனிதனும் மந்திரமும்

மனிதனும் மந்திரமும்

மனிதன் எந்த ஒரு விடத்தை மனதார தன் ஆழ்மனதோடு சம்மந்தப்படுத்தி சொன்னாலும் அந்தவார்த்தைகள் எல்லாமே மந்திரங்கள். தமிழ் மொழியே ஒரு மந்திர மொழி தான். உலகிற்க்கு எந்த மொழிக்கும் இல்லாத தனி சிறப்பு தமிழுக்கு உண்டு.

பொதுவாக பஞ்சாட்சர எழுத்து மந்திரங்களை பிரணவத்தோடு சேர்த்து உச்சரிக்கும் போது வான்காந்த அலைகள் நமது ஊண்காந்த அலைகளோடு மோதி ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த அதிர்வலைகள் நமது உடலில் வந்து நிரம்பும். இப்படி நிரம்பி வழியும் போது நமக்கு சில அமானுஷ்ய மாற்றங்கள் நிகழும். இதன் மூலம் நாம் சொன்ன மந்திரத்திற்க்கான சித்தி கிடைத்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளலாம்.
இப்போ நமக்கு மந்திர சித்தி என்ற வான்காந்த அலைகள் நம் உடலில் அதாவது ஊண்காந்த அலைகளுடன் கலந்துவிடும். இது எப்படி தெரியுமா....
சிறிய கற்பனை ஒரு வெத்து பாட்டிலில் நீர் ஊற்றினால் அது எப்படி நிரம்பி மேல்நோக்கி எழுமோ அதேப்போல நம் உடலில் வான் காந்த அலைகள் மந்திரம் சொல்ல சொல்ல மெதுவாக நிரம்பிக்கொண்டே இருக்கும்,
இதை நாம் எண்ண அலைகளாக மாற்றினால் அதை வைத்தே பிறகுக்கு நன்மையும் செய்யலாம் தீமையும் செய்யலாம்.
ஒரு மனித மூளைக்கும் இன்னொரு மனித மூளைக்கும் நமது மனவலிமையால் ஒருவரை ஒருவர் பார்க்காமலே சமிக்ஞை அனுப்ப முடியும்.
உதாரணமாக ஒருவர் சென்னையில் இருக்கின்றார். இன்னொருவர் மும்பையில் இருக்கின்றார் அவர் புகைப்படம் மட்டும் தான் உள்ளது, வேறு எந்த தகலும் தெரியாது. ஆனால் இவருக்கு ஒரு பெண்ணின் மேல் உள்ள முறையற்ற அன்பை பிரித்து வைக்க வேண்டும் மென்றால் எந்த பெண் என்ற அடையாளத்தையும் சமிக்ஞை மூலம் செலுத்தி அந்த பெண்ணையும் நிரந்தரமாக பிரித்து விடலாம்.
இப்படியாக சென்னையில் இருக்கும் நபர் எந்த ஒரு ஊடகங்களும் இல்லாமல் அவரின் மன வலிமையைக்கொண்டே ஒரு செய்தியை மும்மையில் உள்ள நபரின் மூளைக்கு சமிக்ஞை மூலம் அனுப்ப முடியும். அந்த செய்தியை மும்பையில் உள்ளவரால் உணர முடியும்.
சென்னையில் உள்ளவர் ஒரு பூவை நுகர்ந்து அந்த சமிக்ஞையை அனுப்பினால் 10×10 ரூமில் மும்பையில் இருப்பவருக்கு அதே வாசனை உணர முடியும்.
இதே முறையில் தான் நாம் அஷ்ட கர்மங்களையும் செய்யலாம். ஒருவரின் புகைப்படத்தை வைத்தே அவருக்கு வசியம், மோகனம், ஸ்தம்பனம், பேதனம், வித்வேடனம், உச்சாடனம், ஆக்ரூடனம், மாரணம் என எதையும் செய்யலாம்.
இது எப்படி சாத்தியம் என்றால்.....
ஒரு வானொலி நிலையத்தில் ஒளிபரப்பபடும் ஒலி அலைகள் எப்படி காற்றலைகளாக மாறி பல மைல் தூரம் கடந்து டிரான்சிஸ்டர் மூலம் ஃப்ரீக்வன்ஸியை பிரித்து அதே ஒலி அதிர்வை ஏற்படுத்தி அங்கே அனுப்பும் பாடல் நம்மால் கேட்க முடிகின்றதோ,
தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அனுப்படும் ஒலிஒளிகள் கூட காற்றின் மூலம் கடந்து பின் நிலையான ஒலி ஒளி அலைகளாக மாறுகின்றதோ அதேப்போல தான் மனம் ஒடுங்கிய ஒருவர் அதாவது மனம் செம்மையான ஒருவர் தனது மன வலிமையால் எங்கிருந்துக்கொண்டும் இன்னொருவரை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும், காக்கவும் முடியும்.
மனிதனின் மூளைக்கு (அ) மனதுக்கு இவ்வளவு சக்தி உண்டு. இதை பயிற்சியின் மூலம் அறிந்துக்கொண்டால் மிக துல்லியமாக நாம் ஒரு இலக்கை குறிவைத்து நமது எண்ணலைகள் மூலம் பல சாகசங்களை நிகழ்த்தலாம்.
மனம் செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்பார்கள். அந்த மனதை செம்மைப்படுத்த கூட இன்றைய காலத்தில் மந்திரங்கள் ஓதவேண்டிய நிலையில் இருக்கின்றார் அதிலும் சரியான குருமார்கள் இல்லாமல் சிலர் இத்தகய கலைகளை கற்க முடியாமலும் ஆதங்கப்படுகின்றார்கள்.
இதை தவிர்த்து வாதைகள் மூலமாகவும், சில பிசாசுகளின் மூலமாகவும், சிலர் துர் தேவதைகள் மூலமாகவும் மேற்சொன்ன செயல்களை நிகழ்த்துகின்றார்கள்.
நான் மனவலிமையிலும், தூய தெய்வீக சக்தியாலும் நேரடியாக என்னை வளர்த்த சித்த குருமார்களினாலும் பல முறை செய்து பார்த்து வெற்றியும் கொண்டுள்ளேன்.....
இன்னும் சிலர் துர்தேவதை, துர் ஆத்மாக்களை வைத்தும் செய்வார்கள் அது எப்படி வேலை செய்யும் என்பதை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்.
மனிதனுக்கு ஆன்மாவும் உண்டு பூத உடலும் உண்டு. ஆனால் பேய் பிசாசுகள், துர்மரணமடைந்த ஆவிகள் போன்றவைக்கு பூத உடல் இல்லை.
இதனால் அதுக்கள் புலனை அடக்க வேண்டியதில்லை அதற்க்கு இயல்பாகவே அந்த அமானுஷ்ய சக்தி உண்டு.
ஆகையால் அந்த தீய சக்திகளையோ, அல்லது தூய சக்திகளையோ இயக்க மனிதனுக்கு அந்த தந்திர யுத்தி தெரிந்ததால் அவைகளை ஏமாற்றி தனக்கு ஆகவேண்டிய காரீயங்களை நிறைவேற்றிக்கொள்வான். இப்படி பல பேரை நான் பார்த்துள்ளேன்.
ஆனால் இது விஷ பாம்பு வாயில் விரல் விட்டு விளையாடுவதை போன்றது என்றாவது ஒரு நாள் நம்மை ஜோலி முடித்துவிடும். ஆகவே இந்த மந்திர யோகங்களில் பாதுகாப்பான முறை மனோவசிய சக்தி மூலம் அஷ்டகர்மங்களை செய்வது, அல்லது தூய எண்ணம் கொண்ட தேவதைகளை வணங்கி நமக்கான காரீயங்களை செய்வது இது மட்டுமே நம் ஆயுள் முழுக்க நிலைக்கு தீய சக்திகளால் நம் ஆயுளே விரைவில் முடிக்கும்.
மந்திர யோகம் என்றால் என்ன...?
------------------------------------------------------
மந்திரம் என்றவுடன் நமக்கெல்லாம் ஒரு பயம் நம்மையே அறியாமல் நம்மை பற்றிக்கொள்ளும். காரணம் நம் முன்னோர்கள் நமக்கு மந்திரம், மாந்திரீகம் என்று சொல்லும் போது அதை சார்ந்த பயத்தையும் சேர்த்தே விதைத்து வைத்துள்ளார்கள். உண்மையில் மந்திர யோகம் என்பது கொடிய கலை அல்ல. அது தெய்வீகமான கலை மிகவும் மிருதுவான கலை ஆனால் இதை கண்டு ஏன் மக்களுக்கு இன்னும் பயம். இதன் இரகசியம் தான் என்ன..?
சித்தர்கள் பொதுவாக எந்த மதத்திற்க்கு சொந்தமானவர்களும் அல்ல
சித்தர்களுக்கு மதமே இல்லை.
இயற்கையான மனித உடலை வருத்தி தியானம் செய்து யோகம், ஞானம், சோதிடம், வைத்தியம் போன்ற கலைகளை கண்டாராய்ந்து அதில் தேர்ச்சியும் பெற்றார்கள்.
ஒரு மனிதனுக்கு மன வலிமை பெற்றால் அவன் ஞான சித்தியடைகின்றான். அவனேயே சித்தன் என்று அழைக்கப்படுகிறான். மனதை அடக்க வேண்டுமானால் முதலில் மூச்சை ஒடுக்க வேண்டும். மூச்சை ஒடுக்கும் பயிற்சி தான் யோகம். இந்த யோகத்தின் மூலமாக மனிதன் அஷ்டமா சித்தியை பெறுகின்றான்.
அது என்ன அஷ்டமா சித்து சிலருக்கு உண்மையில் இதன் அர்த்தம் தெரியாது ஆக இந்த பதிவில் அதை பற்றி படித்தால் தான் மாந்திரீகத்தின் உண்மையை உணர முடியும்.
அஷ்டமா சித்துவில் ஒவ்வொரு சித்துவும் ஒவ்வொரு சிறப்பம்சங்களை பொற்றுள்ளது. அதை சுருக்கமாக பார்க்கலாம்.....
(1) அனிமா:-
இந்த சித்து இருந்தால் தனது பூத உடலை சுருக்கலாம். அதாவது ஒரு அணு அளவுக்கு கூட சிறியதாக தன் உடலை மாற்றிக்கொள்ளலாம். இன்றும் சில கோவில்களில் மிக சிறிய சிற்பங்கள், நுண்ணிய சில வேலைபாடுகள், ஒற்றை தூன்களின் கடுவே சுழல் கல், யாழி வாயில் பந்து போன்ற சுழல் கற்கள் இதேல்லாம் எப்படி வைத்தார்கள் என்று மனித சிந்திக்க முடியாத சில வித்தைகளை மிக சிறிய உருவில் இருந்து சித்தர்கள் உருவாக்கிய சிற்பங்களே அவைகள்.
(2) மகிமா:-
இந்த சித்துவை ஒரு மனிதன் பெற்றிருந்தால் தனது உடலை பூதாகரமாக மாற்றலாம். அதாவது மலையை விட மலமடங்கு பெருத்த உயர்ந்த உடலாகவும் கூட நாம் நினைத்த மாத்திரத்தில் மாறலாம். புராணங்களில் விஸ்வரூப கதையில் வரும் மிகப்பொரிய உடல்களை போன்றும் இந்து சித்துவால் மாற்றிக்கொள்ள முடியும். இந்த சித்துவால் கூட தஞ்சை பெரியகோவில் கோபுர 80டன் விமானத்தை ஒரு சித்தன் தூக்கி நிறுத்தியிருக்க முடியும்.
(3) கரிமா:-
இந்த சித்து பெற்ற ஒருவனால் மாய தோற்றம், சூட்சம உடலாக இந்த உடலை மறைத்துக்கொண்டு எங்கும் எதிலும் ஊடுறவ முடியும்.
(4) இலகிமா:-
இந்த சித்துவால் தன் உடலை மிக லேசான பஞ்சு மாதிரி மாற்றிக்கொண்டு காற்றில் மிதந்து செல்லலாம். ஆகாய மார்க்கம் எங்கும் சென்று வரலாம்.
(5) பிராத்தி:-
இது தான் அடைய நினைக்கும் எந்த ஒரு பொருளையும் நினைத்தவுடன் அடைந்துவிடும் அற்புதமான சித்து இது.
(6) பிரகாமியம்:-
இது இயற்கை விதிக்கு எதிராக செயபடும் சித்து, புயல், மழை, பூகம்பம், சுனாமி, சூறாவளி போன்ற செயல்கள் நிகழும் போது இதற்கிடையில் நாம் அவைகளுக்கு எதிராக செயல்பட முடியும்.
(7) வசித்துவம்:-
இது அனைத்து உயிர்களையும், பஞ்ச பூதங்களையும் வசியப்படுத்தும் மகா வசிய சித்துமுறையாகும்.
(😎 ஈசத்துவம்:-
இந்த சித்தியானது தன்னை இறைவடியாக மாற்றிக்கொள்வது எந்த ஒரு ஜட பொருளுக்கும் உயிரூட்டி காக்கவும், அழிக்கவும் முடியும் இது சிவனுக்கு நிகரான செயல்பாடுகளை கொண்டது. இப்படியாக எட்டுவகையான சித்துக்களை தான் அஷ்டமா சித்து என்கிறார்கள்.
இந்த ஈசத்துவம் என்பது தான் மாந்திரீக கலை. இது ஒரு அற்புதமான சித்து இதிலும் எட்டு வகை கர்மா உண்டு.....
(1) வசியம்,
(2) மோகனம்,
(3) ஸ்தம்பனம்,
(4) பேதனம்,
(5) வித்வேடனம்,
(6) உச்சாடனம்,
(7) ஆக்ரூடனம்,
(😎 மாரணம்.
இதில் மாரணம் என்பதுதான் அழித்தலுக்கான கர்மா, இதை சரியான இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உதாரணமாக... சில நோய்களை அழிக்கலாம், எதிரிகளை அழிக்கலாம், சில தூர் தேவதைகளை அழிக்கலாம், பில்லி சூன்யங்களை அழிக்கலாம், ஒரு ஊருக்கே பிரச்சனையாக இருப்பவனை பிறர் நலனுக்காக ஒருவனை அழிக்கலாம்.
அதாவது ஒருவனால் ஒரு ஊரே பல பிரச்சனைகளை சந்திக்கின்றது,
அல்லாது ஒரு குடும்பம் பாதிக்கப்படுகின்றது என்றால் அவனை கொல்வதில் தவறில்லை. ஆனால் இந்த கலையை தவறாக பயன்படுத்தினால் அதுக்கான தண்டனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.
இந்த மகா வித்தையை பயன்படுத்தி அப்பாவி மக்களை சிலர் ஏமாற்றி இருக்கலாம். சிலர் தாமாகவே அச்சம் கொண்டுருக்கலாம். ஆனால் மாந்திரீகம் என்பது மூன்று தொழிலும் படைத்தல், காத்தல், அழித்தலையும் செய்யும் இதை முறையாக உண்மையாக செய்பவர் ஈசனுக்கு நிகரானவர்கள். மந்திர யோக கலை என்பது கூர்மையான கத்திப்போன்றது. இந்த கத்தியை வைத்து அறுவை சிகிச்சையும் செய்யலாம், கொலையும் செய்யலாம். மாந்திரீகத்தை யார் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே அதன் குணத்தை உறுதிப்படுத்தலாம். நல்லவர்களிடம் இருந்தால் நல்லதே நடக்கும்.
பொதுவாக மனிதன் உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் திரு மந்திரங்கள் தான். ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த வார்த்தையின் சத்தியாகவே நாம் மாறிவிடுவோம். உதாரணமாக "நான் கடவுள்" என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வந்தால் போதும் நீங்கள் ஒரு கடவுளாகவே மாறிவிடுவீர்.
"நான் ஒரு பைத்தியம்" என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் பைத்தியமாகவே மாறிவிடுவீர்கள். இது பொய் அல்ல.....
உண்மை......
நாம் பேசும் அகாரம், இகாராம், உகாரம், எகாரத்தில் மெய் எழுத்துக்கள் சேர்ந்தால் அது தான் மந்திரம்.
விளக்கமாக சொல்லவேண்டுமெனில்
க.ங.ச.ஞ.ட.ண.த.ந.ப.ம.ய.ர.ல.வ.ஸ.ஷ.ஜ. ஹ.க்ஷ. அஹ ஆகிய இருபது மெய் எழுத்துகளுடன் (ம்) என்ற எழுத்தை சேர்த்தால் மந்திர பீஜம் உண்டாகும்.
ஓம் என்பது பிரணவ மந்திரம் இது உயிராகும்..இந்த உயிர் எழுத்தை முதலில் கொண்டு அடுத்து மேல் உள்ள 20எழுத்துகளோடு "ம்" என்ற எழுதை சேர்த்துக்கொண்டு கடையில் "நம" என்று முடித்தால் இது ஒரு மந்திரம்.
அதாவது "ங" காரமும் "ம" காரமும் ஒவ்வொரு எழுத்துடனும் சேரும் மந்திரங்களை பல முறை உச்சரிக்கும் போது மனிதனுக்கு சித்தி முக்தி இரண்டும் கைக்கூடுகின்றது.
"ம" காரத்தில் சித்தியும் "ங" காரத்தில் முக்தியும் கிடைக்கின்றது.
இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் மாந்திரீகம் என்பது முதல் படி நிலை அதாவது.....
"ஓம் அங் நம" என்று நாம் மந்திரத்தை பல ஆயிரம் முறை திரும்ப திரும்ப சொல்லும்போது அந்த மந்திரம் சித்தியாகும். நமக்காக மந்திர சித்தி செய்துக்கொள்ளும் போது
"நம" என்றும், பிறருக்கும் சேர்ந்து சொல்லும் போது "நம்ஹ" என்று சொல்ல வேண்டும்.
கொஞ்சம் புரியும் படி எழுதுகின்றேன்
மெதுவாக படியுங்கள்.....
"அம்" (ஓம் அம் நம) என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொன்னால் எமனையே வெல்லலாம். அதாவது மரணமில்லாத பெருவாழ்வு சித்தர்களைப்போல ஜீவசமாதி நிலையை அடையலாம்.
(ஓம் ஆம் நம) என்ற மந்திரத்தை பிரயோகம் செய்தால் ஆகர்ஷண சக்தி நமக்கு கிடைக்கும் ஆகர்ஷண சக்தி என்பது எந்த ஒரு பொருளையும் நம்மிடம் தானாகவே வரவைக்கலாம்.
(ஓம் இம் நம) என்றால் உடலுக்கும் வலிமையை கொடுக்கும்.
(ஓம் ஈம் நம) நமக்கு வாக்கு பலிதம் உண்டாகும் இது ஜோதிடர்கள், குறியாடிகள் இந்த மந்திரத்தை செபித்துவரலாம்.
(ஓம் உம் நம) உச்சாடனம் என்ற கர்மம் கைகூடும்.
(ஓம் எம் நம) என்றால் மனிதனுக்கு சாத்வீக குணம் உண்டாகும்.
(ஓம் ஏம் நம) என்றால் அவருக்கு சகல வசியமும் உண்டாகும்.
(ஓம் ஐம் நம) என்றால் பெண்களுக்கு ஆண் வசியமாவார்கள்.
(ஓம் ஓம் நம) என்றால் சொல் பலிதம் உண்டாகும்.
(ஓம் ஔம் நம) என்றால் நாவில் கலைவாணி எனும் கல்வி அறிவு கூடும்.
(ஓம் கம் நம) என்றால் எந்த தடைகளும் அகலும்.
(ஓம் ஞம் நம) என்றால் கோபம் அதிகமாக வரும் உக்கிரமாக இருப்பார்கள்.
(ஓம் சம் நம) என்றால் ஜன வசியம் உண்டாகும்.
(ஓம் ஞம் நம) என்றால் மரணத்தை தள்ளிப்போடலாம்.
(ஓம் டம் நம) என்றால் வியாதிகள், விஷம் போன்றவைகளை ஒழிக்கலாம்.
(ஓம் ணம் நம) என்பது அனைவரையும் நம் மீது மோகம் கொள்ள வைக்கலாம்.
(ஓம் தம் நம) என்றால் பொன் பொருள் செல்வம் சேரும்.
(ஓம் நம் நம) என்றால் ஸ்தம்பணசித்தி அதாவது எதையும் தடுத்து நிறுத்தும் சக்தி கிடைக்கும்.
(ஓம் பம் நம) இது இது சகல பூத பேய் பிசாசுகளையும் துர்தேவதைகளையும் விரட்டும்.
(ஓம் மம் நம) என்றால் எதிரிகள் நம்மீது மோகம் கொண்டு அடிமையாகிவிடுவார்கள்.
(ஓம் யம் நம) என்றால்
மனதாலூம் உடலாலும் எந்த இடத்திற்க்கும் சஞ்சாராம் செய்யலாம்
அதாவது எட்டுதிக்கெங்கிலும் கடந்து சென்று வரலாம்.
(ஓம் ரம் நம) என்றால் நினைத்த இடத்தில் நெருப்பை மூட்டலாம்
அக்கி பூதத்தின் அருள் கிடைக்கும்.
(ஓம் லம் நம) என்றால் இந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கும் சக்தி கிடைக்கும்.
(ஓம் வம் நம) என்றால் வியாபாராம் தடையின்றி நடக்கும்.
(ஓம் ஸம் நம) என்றால் அனைத்து பலமும் வந்து சேரும்.
(ஓம் ஷம் நம) என்பதால் இராஜயோகம் கைக்கூடும்.
(ஓம் ஜம் நம) என்றால் எப்படிபட்ட துஷ்ட தேவதைகளும் விலகிப்போகும்.
(ஓம் ஹம் நம) என்று செபித்து வந்தால் தெய்வ உருவங்கள் நேரில் தோன்றும்.
(ஓம் க்ஷம் நம) என்றால் இந்த ஊண் உடலில் ஆக்கிரமிக்கும் துன்பம், துயரம், வியாதி, மூதேவி எனும் தரித்திரம், பில்லி சூன்யம், வைப்பு ஓம்பல் ஆகியவை தூசுபோல பறந்தோடிவிடும்.
இங்கு மந்திர யோகத்தின் அடிப்ப
படை தத்துவம் நான் சொன்ன மந்திரங்களை ஒவ்வொன்றாக ஒரு லட்சம் முறை தியானத்தில் அமர்ந்து செபித்து சித்திப்னொற்றால் பின் நீங்கள் முதல் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்புக்கு தயாராகலாம்.
எந்த ஒரு சூழலிலும் ஒரே நேரத்தில் இன்னொரும் மந்திரம் சேர்த்து சொல்லக்கூடாது. வேகமாக சத்தம் போட்டும் சொல்ல கூடாது மனதிலே அமைதியாக பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். வேக வேகமாக சொல்லக்கூடாது. நீங்களும் செய்துபாருங்கள். மந்திரம் என்பது பெரிய பெரிய சூத்திரமெல்லாம் ஒன்றுமே இல்லை. இது தான் உண்மையான மந்திர யோகத்தின் படிநிலை.....
இதன் அடுத்த பரிமாணம் தான் பஞ்சாட்சர மந்திரம். இப்படி ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சக்தியை கொண்டுள்ளது.......
பஞ்சாக்சர எழுத்தின் ரகசியம் என்ன?
------------------------------------------------------------------
மந்திர யோகத்தின் மூலம் ஐந்து அட்சரங்களே. அவைகள "ந-ம-சி-வ-ய" எனும் பஞ்சாட்சரங்கள் இந்த ஒவ்வொரு அட்சரங்களும் ஒவ்வொரு பூதங்களை சார்ந்துள்ளது.
ந - என்ற அட்சரம் மண் தத்துவமாகவும்,
ம- என்ற அட்சரம் நீர் தத்துவமாகவும்,
சி- என்ற அட்சரம் நெருப்பு தத்துவமாகவும்,
வ- என்ற அட்சரம் காற்று தத்துவமாகவும்,
ய- என்ற அட்சரம் ஆகாய தத்துவமாகவும் செயல் படுகின்றது.
இதனோடு ஓம் என்ற பிரணவம் சேரும் போது மந்திரம் உயிர்பொற்று வலுப்பொறுகின்றது. அதாவது பஞ்ச பூதங்கள் தான் மாந்திரீகத்தின் அடிப்படை தத்துவம் அல்லது மூலம் என்றுக்கூட சொல்லலாம். அஷ்ட கர்மங்களுக்கும் இந்த பஞ்சாட்சரங்கள் தான் ஆதாரமாகி நிற்கின்றது.
இந்த எழுத்துக்களை சித்தர்களே உருவாக்கினார்கள் என்றாலும், அந்த எழுத்தின் அதிர்வலையின் இரகசியங்களை துல்லியமாக கணித்துள்வார்கள் சித்த பொருமக்கள்.
பஞ்ச பூதமான இந்த உடலில் மனம் என்பது ஆகாய தத்துவத்தில் தான் இயங்குகின்றது.
இந்த ஆகாயத்தின் எல்லையும், மனித மனதின் எல்லையும் எவராலும் அறிய முடியாது இது தான் கடவுள் நிலை. கடவுளை உணர மட்டுமே முடியும் அதை ஒரு நாளும் பார்க்க முடியாது.
இப்போ நீங்கள் கடவுளை உணர மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுக்குள் இருக்கும் பஞ்ச பூதத்தையும் ஒரு நிலைப்படுத்துங்கள்.
அடுத்து மூச்சை மெதுவாக இழுத்து மெல்ல வெளியே விட்டு "ந ம சி வ ய" என்பதை ஓம் என்ற பிரணவத்தோடு சேர்த்து நிதானமாக சொல்லுங்கள்.
இப்படி தொடர்ந்து இந்த நமசிவய மந்திரத்தை சொல்லும் போது,
நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் ஒருநிலை பெறும். அதாவது ஒரு பெரிய பிரளயம் நமக்குள் ஏற்படுவதை நாம் தத்துரூபமாக உணரமுடியும்.
இந்தமாற்றம் நிகழ்ந்து மேலும் தெளிவடையும் போது மனம் கடவுள் நிலைக்கு சென்றுவிடுகிறது.
இந்த நமசிவய மந்திரத்தை அட்சர வடிமாக்கி அதை கட்டங்களில் அடைத்து அதுற்கு துணை எழுத்துக்களாக ஐயும், கிலியும், சௌவும், ரீயும், ஸ்ரீயும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பஞ்சபூதங்களின் வடிவமான நாற்கோணம், முக்கோணம், அறுங்கோணம், பிறை, வட்டம் ,
பொன்றவற்றினுள் அடைத்து அதற்குறிய மந்திர உச்சாடணங்களை கொடுத்தால் மந்திரம் மகா சக்தியாக உயிர்ப்பெறும்.
தொடர்ந்து இந்த பஞ்சாட்ரத்தை சொல்லி வழிபடுவதின் மூலம் அஷ்ட கர்மங்களும் சித்திபெறும்.
அதாவது, அஷ்ட கர்ம மந்திர
பஞ்சாட்சரம்
(1) வசியத்திற்க்கு - வ ய ந ம சி,
(2) மோகனத்திற்க்கு - சி வ ய ந ம,
(3) ஸ்தம்பனத்திற்க்கு - ந ம சி வ ய,
(4) பேதனத்திற்க்கு - ம வ ந சி ய,
(5) ஆக்ரூடனத்திற்க்கு - வ ந சி ய ம,
(6) வித்வேடனத்திற்க்கு - சி ய ம வ ந,
(7) உச்சாடனத்திற்கு - ய ம ந சி வ.
(😎 மாரணத்திற்க்கு - ம சி வ ய ந
இது மூலகுரு அகத்தியர் சொன்னது.
இதில் ஒரு வார்த்தை, அல்லது அட்சரம், தவறினால் அது நமக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எந்த ஒரு மந்திரமானாலும் அதை குறைந்தது ஒரு லட்சம் முறை செபிக்க வேண்டும், ஏனோ தானோ என்று செபிக்க கூடது மெதுவாக நிறுத்து நிதானமாக உச்சரிக்க வேண்டும். நாம் மந்திரங்கள் சொல்லும் போது மூச்சு கும்பக நிலையில் அதிக நேரம் இருக்கும் படி பார்த்துக்கொள்வது நல்லது. குரு ஆலோசனைப்படி இதை முறையாக கற்பது உங்களுக்கு நல்லது.
வசியம் என்றால் என்ன?
-------------------------------------------
இறைவனை தியானித்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்ம பிரயோகம் தான் வசியம் என்பது.
இது தன்னைத்தானே தன்னை இழக்காமல் மற்றவர்களை தன் வசம் ஈர்த்து, அவர்களை தனக்கு ஆயுட்கால ஆதரவாளராக்கிக்கொள்வது அதாவது தனக்கு ஆயுள் முழுக்க துணையாக ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் கவர்ச்சிக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்வதாகும்.
இந்த உலகில் இரசனை மிகுந்த இடத்தில் தான் காதல் அல்லது பாலிண ஈர்ப்பு அதிகமாக காணப்படும், இதை தனக்கு தானே ஒரு ரசிகரை ஏற்படுத்திக்கொள்ளும் முறை என்றுக்கூட சொல்லாம். இந்த இரசனையை செயற்க்கையாக உருவாக்க வேண்டுமென்றால் மனித உடலில் இரசாயண மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா...?
இதற்கு சித்தர்கள் மனோவசியம், சில ஆன்மாக்காளின் மூலம் மனதை மாற்றி அமைப்பது, சில யந்திர, தந்திரங்கள் மூலமாக மனதை மாற்றுவது,
சில சில உயிர்களை கொன்று அதன் மூலம் மருந்து தயாரித்து சாப்பிட கொடுப்பது என பல்வேறு வழிகளை கூறுகின்றார்கள்.
அசைவ முறை இடுமருந்தை பலர் செய்து கொடுத்து உண்ணச்சொல்லி விடுகின்றார்கள் இதனால் பக்கவிளைவுகள் தான் மிஞ்சும்.
இந்திரகோபம் பூச்சி, குழிபன்றி பூச்சி, தயிரன்னப்பூச்சி, ஆண்மகனின் இந்திரியம், பெண் மகளின் அண்டக நீர். மற்றும் மாதவிடாய் கழிவு போன்ற அருவருக்கதக்க பொருட்களின் மூலம் செய்யும் இடுமருந்துக்களை உண்ணக்கொடுப்பதால் இது குடலில் நின்று கேன்ஷர் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடும். ஆகவே ஒரு யோக வைத்திய முறையில் முடிந்தவரை உயிர் அணுக்களை வைத்து அசைவ இடுமருந்து தயாரிக்காமல், சைவ முறையில் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கும் இடுமருந்துக்களை செய்து கொடுத்தால் அதை உண்பவருக்கு இயற்கை வழியிலான இரசாயண மாற்றம் நிகழும். கணவன் மனைவிக்குள் மட்டுமே இந்த முறையை செய்ய வேண்டும். ஏனென்றால் கணவன் மனைவிக்கு இரத்தம் கலப்பு இருக்கும் அவர்களுக்கு உமிழ்நீர் மற்றும் இரத்தம் கலந்து மூலிகை இடுமருந்தின் மூலம் இனகவர்ச்சியை மீண்டும் தூண்டலாம்.
ஆனால் மற்றவருக்கும், சம்மந்தமில்லாதவர்களுக்கும் இதுப்போன்று உமிழ்நீர், இரத்தம், விந்து முறைகளை பயன்படுத்த கூடாது.
இதனால் பல பின் விளைவுகள் ஏற்படும். ஆகவே முடிந்தவரை மனோவசியத்தின் மூலம் யந்திர மந்திர தந்திர வழிகளில் வசியம் செய்வதே இன்றைய கால சூழலுக்கு சிறந்த முறையாகும்.
மந்திரம் கால் மதி முக்கால் என்பது வழக்கத்தில் செயலாக்கப் படாத அரிய மந்திரம். மதி முக்கால் என்பது, புத்திசாலிதானமாக மூலிகைகளின் தன்மைகளை அறிந்து, கூட்டி அதன் இயற்கையான மருத்துவ குணங்களை மேம்படுத்தி மாந்திரீக வழியில் அதனை செயலாற்றுவதே.
யந்திரங்கள் உண்மையா?
-----------------------------------------------
யந்திரம் என்பது அஸ்ட பந்தனங்களையும், எட்டுதிக்கெங்கும் உள்ளன காஸ்மிக் எனர்ஜிகளையும் கவர்ந்து இழுத்து நல்வினையை செய்யும் ஒரு அற்புத ஆற்றல் கொண்டது.
இந்த யந்திரங்களை முறையாக வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு யந்திரம் உண்டு. ஒவ்வொரு கர்மாவுக்கும் வேவ்வேறு யந்திரங்கள் உண்டு.
யந்திரங்களை எழுதும்போது எந்த தெய்வத்திற்க்கு எந்த உலோகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..?
எந்த நாட்கள்? எந்த ஹோரை? எந்த நட்சத்திரம்? என்று ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு நேர காலம் உண்டு.
இன்னும் சொல்ல வேண்டுமானால்
எந்த தெய்வத்திற்க்கு எந்த திசையை பார்த்தபடி அமர்ந்து எழுத வேண்டும்,
எந்த எழுத்தாணியைக்கொண்டு எழுத வேண்டும் எந்த ஆடையை அணிந்து எழுத வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றது.
ஒரு செப்புத்தகடோ, வெள்ளி தகடோ, காரீய தகடோ, தாமிர தகடோ இரும்பு தகடோ, தங்க தகடோ ஏதாவது ஒன்றை தேவையான தேவதைக்கு அல்லது தேவையான கர்மத்திற்க்கு அல்லது காரத்திற்க்கு தேர்ந்தெடுத்த பின் அதை,
1"×1" அல்லது 3"×3" அல்லது 6" ×6" அல்லது 9"×9" போன்ற அளவுகளில் வெட்டி தேவையான யந்திரத்தை தங்ககம்பி அல்லது செப்புக்கம்பியால் தகடில் ஓட்டை விழாமல் அந்த தேவதை அல்லது கர்மாவுக்கு ஏற்ற திசையில் அதற்க்கான நிற ஆடையை அணிந்து தகுந்த திதி, ஹோரை, நட்சத்திரத்தில் எழுதவேண்டும்.
யந்திரத்தை குறை இல்லாமல் எழுதி எடுத்து அதை எலுமிச்சை சாறு, இளநீர், பன்னீர், திருநீர், பால், தேன் போன்றவைகளில் தலா 10நிமிடங்கள் என்ற கணக்கில் வைத்து யந்திரத்தை சுத்தி செய்ய வேண்டும். யந்திர சுத்தி செய்த பின் எந்த காரணத்திற்காகவும் அந்த யந்திரத்தை வெறும் தரையில் வைக்க கூடாது.
யந்திர சுத்தி முடித்த பின், அதற்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டும். பின்னர் யந்திரத்திற்க்கு பிராணபிரதிஷ்டை செய்ய வேண்டும். பிராண பிரதிஷ்டை செய்யும் போது அதற்க்கான மந்திரங்களை சொல்லும் போது யந்திரத்தை வலது கையால் தொட்டுக்கொண்டே சொல்ல வேண்டும். இப்படி செய்வதால் தான் நாம் சொல்லும் மந்திர அதிர்வலைகள் யந்திரத்தினுள் முழுமையாக சேர்க்கப்படும். இந்த வேலைகளை நாம் செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்ய கூடாது. யந்திரத்தையும் தரையில் வைத்து எழுத கூடாது முழுமையான இந்த வேலை முடியும் வரை அந்த இடத்தை விட்டு எழும்பவே கூடாது. இப்படி நம் கையால் யந்திரம் எழுத முடித்தால் மட்டும்
தான் அந்த யந்திரம் முழுமையாக வேலை செய்யும்
கடைகளில் விற்பனை செய்யும் ரெடிமேட் யந்திரங்கள் விலை 8ரூபாய், 10ரூபாய் மட்டும் தான். இதை சிலர் வாங்கி ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கிறார்கள். இந்த ரெடிமேட் யந்திரங்களில் எந்த சக்தியும் இறங்காது. அப்படியே இறங்கினாலும் அது நிரந்திரமாக நிலைக்காது மொத்தத்தில் ரெடிமேட் யந்திரங்கள் வெறும் தகடு மட்டும் தான் அதில் எந்த பயனும் இல்லை. முறையான யந்திர முறையை அறிந்தவர்களிடம் பிரச்சனைகளை சொல்லுங்கள். அவர்களே உங்களுக்கான யந்திரங்களை தேர்வு செய்து உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். இனி போலி யந்திரங்களை வாங்கி ஏமார்ந்துப்போக வேண்டாம்
மனித உடலின் மிக பெரிய ரகசியம்:-
-----------------------------------------------------------------
விஞ்ஞானம் வளர்ச்சி இல்லாத காலத்தில் கருவறையில் குழந்தையின் வளர்சியை மட்டுமல்ல அதன் உருவாக்க தத்துவங்களையும் யோகிகளும் சித்தர்களும் மிக துள்ளியமாக கணித்துள்ளார்கள்.
ஒரு வளர்ந்த குழந்தையின் கையின் முழம் அளவுக்கணக்கில் 32முழம்,
குடல் 9மடிப்பாக மடிந்து இருக்கும் என்றும் உடலின் மயிர்த்துவாரங்கள் மூன்றரைக்கோடிகள் என்பதையும், நமது உடலிலே 7வற்றாத கடல் உள்ளனவாம். அது காது நீர், உமிழ்நீர், குடல்நீர், மூக்குநீர், மூத்திரம், சுக்கிலம் இதில் 7வது பெருங்கடல் குருதி என்பதாம். நவ துவாரங்களும், 76000நாடிகளுடனும் உருவாகுமாம்.
ஒரு உடலின் கட்டமைப்பு என்பது அவரவர் கையால் 8சாண் நீளமுடையதாகவும்..... வாய், கண்கள், மூக்கு, இரண்டு கால்கள், இரண்டு கைகள் என இந்த ஊண் உடல் 16கயிறுகளால் கட்டப்பட்டுள்ளதாக யோகிகள் கூறுகிறார்கள்.
ஒரு மனிதனின் ஆயுட்காலம் அவன் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பம் அனைத்தும் கருவறையில் இருக்கும் போது தீர்மானிக்கப்படுகிறதாம்.
கருவில் இருக்கும் போதே சிசுவின் உடல் கூட்டுக்குள் பத்துவகையான வாயுக்கள் குடியேறுகின்றனவாம்.
அது ... 1.பிராணன், 2.அபானன், 3.உதானன், 4.வியானன், 5.சமானன், 6.நாகன், 7.கூர்மன், 8.கிருகரன், 9.தேவதத்தன், 10.தனஞ்செயன். என்பவைகள்...
சித்தர்கள் யோகிகள் நமது உடல்கூற்று தத்துவங்களை அலசும்போது ஆன்மீக இறை தத்துவங்களையும் கலந்தே பொருளீடு சமன் படுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மனிதனின் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் முள்தண்டு எனும் இடத்தில் பாம்புப்போன்று தலைகீழாக சுருண்டுகிடக்கும் குண்டலினி வடிவமான இறைசக்தியை இயக்க தெரிந்தவனே யோகி அல்லது சித்தன் ஆகிறார்கள்.
இந்த உடலின் முதன்மையான இடம் தலைப்பகுதி இந்த இடத்தில் தான் ஆயிரம் தாமரை இதழ்களைக்கொண்ட தாமரையில் இறையை ஆக்கிரமிக்கும் (ஆன்டனா-towar உள்ளது) சஹஸ்ராரத்தில் குண்டலினி சக்தியை கொண்டுவந்து நிறுத்தி அமானுஷ்யங்களை நிகழ்த்துவார்கள் சித்தர்கள்.
மனித உடலில் நோய் தன்மைகளை அறிய வாத நாடி, பித்த நாடி, சிலோத்தும நாடி என மூன்று வகையாக பார்க்கிறார்கள். வாதநாடி என்பது வாயுவைக் காரணியாக கொண்டு இயங்கும், பித்த நாடி என்பது வெப்பத்தை காரணியக கொண்டும் இயங்கும்.
சிலோத்தமநாடி என்பது உடலில் உள்ள நீரை காரணியாக கொண்டு இயங்கும்.
இந்த மூன்று நாடிகளில் எந்த நாடி கூடினாலும் சரி, அல்லது குறைந்தாலும் சரி அது நோயின் அறிகுறியாக நாம் அறிகின்றோம்.
இதை இயற்கை முறையில் மூலிகைகளின் சத்துக்களை கொண்டே சரிப்படுத்தும் முறையை தான் சித்த மருத்துவம் என்றும். பிற்காலத்தில் மூலிகைகள் ( சீசனுக்கும்) பருவங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் உணவாக உட்கொள்ள மூலிகை பதப்படுத்துதல், மற்றும் உடலில் அதே மூலிகை சாரம் ஏற்றிய ரசமணிகள் என்றெல்லாம் மருத்துவங்களை வகைப்படுத்தினார்கள்.
இதில் மூலிகை தேவையான நேரங்கில் உண்டு உடலை சரி செய்யும் முறையை விட.....
பித்தம் வாயு கபம் எனும் மூன்றையும் சமமாக என்றும் வைத்துக்கொள்ள பேருதவியாக மூலிகை ரசாமணிகளே சிறந்த மருத்துவ முறை இதனால் உடலில் எந்த நோயும் நம்மை அனுகாது என்கிறார்கள். இது மருத்துவம் மட்டுமல்ல ஆன்மீக ஆற்றலுக்கும் இந்த ரசமணி பேருதவியாக இருக்கின்றது
சித்தர்கள் இந்த ஊண் உடலில் இருந்துக்கொண்டே பல பல சாகசங்களை செய்தார்கள் என்பது
இன்றும் நடைமுறையில் உள்ளது
இந்த உடலை மனத்தின் சொல்படி இயங்க செய்பவன் யவனோ அவனே சித்தன்.

ஐந்து மெய்யெழுத்தும் அடங்கிய ஒரே மந்திரம் - மஹா மந்திரம் “அருட்பெருஞ்ஜோதி” என்பதே. மேற்காணும் எம்மந்திரத்திலும் ஐந்து மெய் எழுத்துக்கள் ஒருங்கே அமையாதத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இம்மந்திரம் 19-ம் நூற்றாண்டில் வள்ளற்பெருமானால் இறைவன் இவ்வுலகிற்கு அருளியதாகும். மேற்காணும் தனித்தனி மந்திரங்களை சொல்லி அதற்கான தனித்தனிப் பலன்களை பெறுவதைவிட இந்த மஹா மந்திரத்தை சொன்னாலே அனைத்தும் ஒருங்கே நடக்கும். இம்மந்திரத்தை சொல்லிவர அவனே ஞானி ஆவான்.

மஹா மந்திரம் உட்பட எம்மந்திரம் ஆனாலும் அது பலிக்க வேண்டுமானால் நீங்கள் உணவு முறையில் தாவர உணவாளர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மறந்துவிடாதீர்கள்.

சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்கள்
(01) நமஹ;
(02) ஸ்வாஹா;
(03) ஸ்வதா;
(04) பட்;
(05) ஹு ம்பட்;
(06) வௌஷட்;
(07) வஷட்;
இந்த ஏழும் தான்....
நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு. அந்த வாக்கியம் "மந்திரத்தின் பலன் அதன் கோடியில்" என்பார்கள்.

இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம் அப்படித்தான்.....

பொதுவாக மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும்.
எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார் என்று நமக்கு தெரியாது....
இப்போது அந்த சப்த கோடி மந்திர ரகசியத்தை சொல்கிறேன்....
சப்த - ஏழு
கோடி - கடைசி,
இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில்தான் வருகிறது.

"(1)நம; (2)ஸ்வாஹா; (3)ஸ்வதா; (6)பட்; (7)ஹீ ம்பட்; (4)வௌஷட்; (5)வஷட்;
ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர, ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது.
ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு, அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் #சப்தகோடி #மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன.

நமஹா - என்றால்
ஐஸ்வர்யம் அளிப்பது.
சுவாஹா - என்றால்
தேவதைகளைத் திருப்தி செய்வது.
சுவதா - என்றால்
தைரியம், வசீகரம் கொடுப்பது.
பட் - என்றால்
விக்கினங்களைத் துரத்துவது.
ஹூ ம்பட் - என்றால்
காமாதிகளைப் போக்குவது.
வௌஷட் - என்றால்
தேவதைகளை இழுப்பது.
வஷட் - என்றால்
தேவதைகளை வசம் செய்வது.
(திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால், ஏழு முடிவுகளை வைத்தே மூவர் தேவாரங்களை ஏழு திருமுறைகளாக நம் முன்னோர்கள் வகுத்தனர்.)
மேலதிக குறிப்புக்கு:-
---------------------------------------
நமஹ:-
சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால் "ந" என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் சிவனுடையது என்று அர்த்தம்.

அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ; என்று உச்சரிக்கப்படுகிறது.

நமஹ - வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு.
வேறு பொருளும் உண்டு. 'நமஹ' என்ற வடமொழிச்சொல்லிற்கு 'போற்றி' என்றோ 'வணங்குகிறோம்' என்றோ பொருள் கூறலாம். மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது.

'ந' என்றால் 'இல்லை' என்று பொருள்.
'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது.

அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம்.

அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள்.

எவ்வளவு எளிமையான அழகான தத்துவம்

இப்பொருள் செறிந்த சொல்லாகிய நமஹ என்பதைச்சேர்த்து ஆண்டவனின் திருநாமத்தைச் சொல்லும்போது அது இன்னும் ஏற்றமுடையதாகிறது என்பது இந்து மதநூல்களின் கொள்கை
ஸ்வாஹா: -
ஸ்வாஹா அர்ப்பணம் என்று அர்த்தம். ஸ்வாஹா என்பது யாகசாலையில் குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் ஸ்வாஹா (ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும்.
(குறிப்பு: பௌத்த மதம் வேள்விக்கு எதிரானது)
ஸ்வாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதில் "சு" என்றால் நன்மையை குறிக்கும் சொல் "ஆ" என்பது அழைப்பைக் குறிக்கும்.
இறைவனை அழைப்பது. என பொருள்படும்.
ஸ்வாஹாதேவி என்பது பெண் தெய்வத்தின் பெயர். தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்கள் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்கள் ஆறு கரங்களாகவும் உள்ளது. யாக குண்டங்களில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களை ஸ்வாஹாதேவி பெற்று அக்னிதேவனிடம் சமர்பிப்பதாக சாஸ்திரம். அக்னி தேவன் மூலம் இறைவனுக்கு சமர்ப்பணம் ஆகிறது.
ஆக யாகத்தில் போடப்படும் பொருள் யார் அந்த யாகத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கட்டும். சுருக்கமாக "நன்மை உண்டாகட்டும்" என்ற அருமையான தத்துவம். இந்த அர்ப்பணம் தேவதைகளுக்குச் செய்வதற்கு மந்திர முடிவில் ‘ஸ்வாஹா’ என்று சொல்ல வேண்டும்.
ஸ்வதா:-
இந்த அர்ப்பணம் பித்ருக்களுக்குச் செய்யும் போது மந்திர முடிவில் "ஸ்வதா" என்று சொல்ல வேண்டும்.
ஹந்தா - இந்த அர்ப்பணம் மற்ற ஜீவன்களுக்கு செய்யும் போது மந்திர முடிவில் "ஹந்தா" என்று சொல்ல வேண்டும்.
வஷட்:-
தீயசக்தியினை அழிக்கும் மந்திரம் இது தெய்வசக்தியாக இந்த மந்திரம் மாறி பயன்தரும். இறை ஆற்றல் இந்த மந்திர ரூபமாக இப்படி மாறி நமக்கு நல்லதை செய்யும் என்று வேதம் சொல்லுது.
வௌஷட்:-
இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும் ஆற்றல்....
பட்:-
சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்....
ஹு ம்பட்:-
இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
இதில் சாதகன் என்பவர் தான் இந்த யாகம் நடத்த செலவு யாகம் நடத்துபவர்களுக்கு கூலி என அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்பவர். இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும் முன் இறைவனை எழுந்தருளச் செய்வதில் பங்கு வகிக்கும் சுவதா, வௌஷட், வஷட், பட், ஹூம் என்பது ஆச்சாரியாரின் முத்திரைகளும், பாவனைகளும் ஆகும்.
அஸ்த்ராய பட் என்று சொல்லி இரு கைகளையும் துடைத்துக்கொள்வது.
ஓம் சௌம் சக்தயே வௌஷட் என்று சொல்லி இரு கைகளையும் புனித நீரால் சுத்தப்படுத்திக் கொள்வது.

ஓம் ஹம் நம என்று , கட்டை விரல் தவிர்த்த எட்டு விரல்களை தாமரையாகப் பாவித்து கட்டை விரலை புத மேட்டில் வைத்து இறைவனுக்கு மங்கள ஆசனம் கொடுத்து இறைவனை எழுந்தருளச செய்வது.

ஓம் ஹூம் அகோர ஹ்ருதாய நம என்று சொல்லி சின் முத்திரை, யோக முத்திரை செய்து நியாசம் செய்வது. நியாசம் செய்வதில் இன்னும் பல முத்திரைகள் உண்டு. பஞ்ச பிரம்ம மந்திரம் என்று கூறப்படுகிறது.

அடுத்து ஓம் ஹௌம் என்ற மந்திரங்களின் மூலம், இறைவனுக்கு தேகம், கண்கள் இப்படியாக இறைவனுக்கு உருவம் கொடுப்பது.

நிறைவாக, ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் என்று சொல்லி இறைவனை பரமீகரணம் அதாவது சிரசில் இரண்டு கைகளையும் குவித்து இறைவனை வந்தனம் செய்வது.

இப்படியாக , பல பாவனைகள், முத்திரைகளினால் இறைவனுக்கு உருவம் கொடுத்து , ஆசனம் கொடுத்து அமரச் செய்து மலர்களால் இறைவனுடைய மகா மந்திரங்கள் சொல்லி நாமங்களை செபித்து , நிவேதனங்களை சமர்ப்பித்து ஆராதனை செய்வது தான் இறை வழிபாடு.
கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களும், அனைத்து ஆத்மாக்களும் கடவுளுக்கே சொந்தம் என்ற தத்துவத்தை நிரூபிக்கிறது சப்தகோடி மந்திரங்களினால் செய்யப்படும் வழிபாடும் ஆராதனைகளும்....
அதனால் தான் கடைசியில் அனைத்தும் "சர்வம் சிவார்ப்பணம்" என சொல்லி நிறைவு செய்ய வேண்டும்.

நன்றி.