Friday, August 14, 2026

எல்லா உயிர்களுக்கும் சுதந்தர தின வாழ்த்துகள்

 

எல்லா உயிர்களுக்கும் சுதந்தர தின வாழ்த்துகள்


மனிதர்களிடமிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்தரம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

- TMR

9445545475



Friday, August 7, 2026

சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?

சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?



என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்                           இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
          பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
          உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
         மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.

என் இயல் போல் பிறர் இயலை எண்ணாதே, என்னைப்போல் பிறரை எண்ணாதே. பிறர் போல் நால் இல்லை. நான் தனித்து இருக்கின்றேன். இதனை நான் இறுமாப்பாய் சொல்லவதாக நினைத்துவிட வேண்டாம். 

எனது அருட்பெருஞ்ஜோதி அல்லாது வேறொருவரிடம் எனக்கு ஒரு சிறிதும் பற்றில்லை.

எனக்கு உற்றவரும், மற்றவரும், எனது பொருளும், எனக்கான என் உயிரும், எனது உடலும், எனது உணர்வும், உயிர் உணர்வால் அடைந்த சுகமும் 

திருச்சிற்றம்பலத்தில் அதாவது என் இறைவன் இருக்கும் இடத்தே நிலைபெற்றுவிட்டது.

எனவே நான், பிறர் போல, பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல, அலியும் அல்ல. இது குறித்து நீ என்று அறியப்போகின்றாயோ?

என, தன் மனதிடம் வள்ளலார், தனது உண்மை நிலையை எடுத்துரைப்பதை பாருங்கள். 

ஆறாம் திருமுறையில் அனுபவ மாலையில் இப்பாடலை பாடியிருக்கின்றார்.

பாலியல் மாயையை கடந்து, நாமெல்லாம் ஆன்மா என்கிற நிலையை அடைய, இந்தப்பாடலை சன்மார்க்கிகள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொள்ள வேண்டும். சாகாதவனே சன்மார்க்கி என்ற நிலையை அடைய வேண்டுமானால், நமது ஆன்மா குடிகொண்ட இந்த உடல், பிற அசுத்த உடலுடன் உறவு கொள்வதை தடுத்து, நிர்மலனாகிய இறை உடலுடன் உறவு கொள்ள வேண்டும். 

இறைவனின் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதே சன்மார்க்கிகளில் இலட்சியமாக இருக்க வேண்டும்.

இதற்கு தடையாக இருப்பது உடல் உறவிற்காக செய்யக்கூடிய திருமணங்கள். இந்த திருமணங்கள் உலகியல் மனிதர்களுக்கு அவசியம் வேண்டும். நாம் இங்கு சன்மார்க்கிகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். யார் ஒருவர் ஒளி தேகத்திற்கு இச்சை கொள்கிறார்களோ? அவர்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். 

மோக மாந்தருக்கு உரைத்திலேன், இது சுகம் உன்னும் யோக மாந்தருக்கு உரைத்தேன் என்பார் வள்ளலார்.

ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையாருக்கு கோசத்தடிப்பு உண்டாகாது, என்பார் வள்ளலார். 

வள்ளலார் திருமணம் செய்தாரே? என்று யாரேனும் உங்களில் கேட்டால், நீங்களும் எதிர் பாலினத்தாரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் உடலுறவில் வள்ளலார் போல் ஈடுபடாமல் இருவரும் இருங்கள். இராமகிருஷ்ணரும் அவ்வாறுதான் இருந்தார். உங்களால் முடிந்தால் அவ்வாறு இருங்கள். 

பிரம்ம குமாரிகள் அமைப்புதான் வள்ளலாரின் ஆன்ம தத்துவத்தை கடைபிடித்துவருகின்றவர்கள். 
இதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும், உரையாடும் போதும் "ஓம் சாந்தி" என்று கூறிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


இதன் பொருள் "நான் ஒரு அமைதியான ஆன்மா" என்பதாகும். 

மனிதர்கள் அனைவரும் உடல் அல்ல, தூய்மையான ஆன்மாக்கள் என்ற உண்மையை உணர்கின்றார்கள்.

ஆன்மாவிற்கு பாலினம் ஏதுமில்லை என்பதை தங்களது நடத்தையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும்போது முதலில், எதிரில் நிற்ப்பவரின் நெற்றிப்பொட்டைப் பார்த்துதான் பேசுவார்கள். 

சிவபெருமானை உச்ச ஆன்மீகத் தந்தையாகக் கருதி ராஜயோகத் தியானம் (Raja Yoga Meditation) பயிற்றுவிக்கின்றார்கள். வள்ளலார் போன்று தூய்மையான வெள்ளாடைதான் (ஆண்களும், பெண்களும்) அணிவார்கள். அசைவ உணவு உட்கொள்வதில்லை.

இந்த அமைப்பினர் யார் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. உடல் உறவு செய்யின், தனது ஆன்மாவானது பரிசுத்த நிலையை இழந்துவிடும் என்ற இரகசியத்தை தெரிந்தவர்கள் இவர்கள். 
சுத்த சன்மார்க்கிகளுக்கும் வள்ளலார் இதனை மறைமுகமாக போதித்துள்ளார். 

இதனால் மட்டும் மரணமில்லா பெருவாழ்வை பிரம்ம குமாரிகள் அடைவார்களா? என்றால் இல்லை. சுத்த சன்மார்க்க ஒழுக்கங்களில் இவர்கள் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றார்கள். சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை விடுத்து மற்ற ஒழுக்கங்களை கடைபிடிக்கின்றார்கள். ஆக, யாரும் முழுமையான அனைத்து ஒழுக்கங்களையும் கடைபிடிப்பது இல்லை.

இப்போது தெரிகின்றதா? ஏன், வள்ளலாருக்குப் பிறகு யாரும் ஒளி உடம்பு பெறவில்லை என்று!


வள்ளலார் சொல்லும் இந்த இரகசியத்தை நாம் சற்று விரிவாகச் சொன்னால், நீ எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கின்றாய்? என்று என் மீது சண்டைக்கு வரும் சன்மார்க்கர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நான் என்ன வென்று சொல்வது? நீங்கள் புதியதாக ஒரு கருத்தை சொல்லாதீர்கள். பைத்தியக்காரன் நீ, இல்லறம் அல்லாது நல்லறம் அல்ல, இப்படியெல்லாம் பதில்கள் வருவதை நினைக்கும் பொழுது, ”கண்ணுக்கு தெரிந்தவரையில் சன்மார்க்கர்களை எங்கும் காணோம்”  என்றே வருத்தப்பட வேண்டியிருக்கின்றது. 

பாலின மாயையை நான் இன்னும் கடக்கவில்லை. ஆனால் முயற்சியில் இருப்பது உண்மை. இதன் உட்பொருளை உணர்ந்திருக்கிறேன். நீங்கள் அதாவது சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்காவிட்டாலும், இவ்வொழுக்கத்தை பரப்புவதில்தான் நியாயம் உண்டு. நம்மால் முடியாவிட்டாலும், எதிர்கால சன்மார்க்கிகள் இவ்வொழுக்கத்திற்கு வருவார்கள். யாரேனும் ஒருவராகிலும் ஒளி உடம்பை பெறுவார்கள். அந்த நோக்கத்திற்காகவது “சன்மார்க்கத்தில் திருமணம் வேண்டாம்” என்பதை பிறருக்கு சொல்லுங்கள்.

நன்றி, வணக்கத்துடன் உங்கள் தி.ம.இராமலிங்கம்.
9445545475




Thursday, August 6, 2026

பிரம்ம குமாரிகள் Brahma Kumaris:

 Brahma Kumaris:

பிரம்ம குமாரிகள் அமைப்புதான் வள்ளலாரின் ஆன்ம தத்துவத்தை கடைபிடித்துவருகின்றார்கள்.
இதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும், உரையாடும் போதும் "ஓம் சாந்தி" (Om Shanti) என்று கூறிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன் பொருள் "நான் ஒரு அமைதியான ஆன்மா" என்பதாகும்.
மனிதர்கள் அனைவரும் உடல் அல்ல, தூய்மையான ஆன்மாக்கள் என்ற உண்மையை உணர்கின்றார்கள்.
ஆன்மாவிற்கு பாலினம் ஏதுமில்லை என்பதை தங்களது நடத்தையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்கள்.
ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும்போது முதலில், எதிரில் நிற்ப்பவரின் நெற்றிப்பொட்டைப் பார்த்துதான் பேசுவார்கள்.
சிவபெருமானை உச்ச ஆன்மீகத் தந்தையாகக் கருதி ராஜயோகத் தியானம் (Raja Yoga Meditation) பயிற்றுவிக்கின்றார்கள். வள்ளலார் போன்று தூய்மையான வெள்ளாடைதான் (ஆண்களும், பெண்களும்) அணிவார்கள். அசைவ உணவு உட்கொள்வதில்லை.
இந்த அமைப்பினர் யார் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. உடல் உறவு செய்யின், தனது ஆன்மாவானது பரிசுத்த நிலையை இழந்துவிடும் என்ற இரகசியத்தை தெரிந்தவர்கள் இவர்கள். சுத்த சன்மார்க்கிகளுக்கும் வள்ளலார் இதனை மறைமுகமாக போதித்துள்ளார்.
--TMR

Wednesday, August 5, 2026

Follow my Network Marketing - TMR Team Channel

 

Follow the ALEXA TMR TEAM channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbDNke14yltS6yvsIB0z






குறைந்த செலவில்,
(0.06 BNB / ரூ.3,900)
👑
அற்புதமான நஷ்டமில்லாத தொழில் வாய்ப்பு
🎯
ஆறு மாதங்களில் ரூ.25 கோடி கிடைக்கும்
👇
தெரிந்துகொள்ள வாங்க !!
🎯
Topic: ALEXA

Today 08.00 - 09.00 PM
(DAILY)

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/89763506782?pwd=6DPnhCM5cRbRUwnwVaxSuKGicM2RK4.1

Only interest people can join our new whatsapp group
https://chat.whatsapp.com/H4vCzLzSOabFFSKqmp68jb?s=sh&p=a&ilr=0

Referral Link: (Copy and past to your Trust Wallet)
https://openalexa.com/en.html?ref=0x6c38d327d021811950f7eee01a5fb8d26a2b1f02

Whatsapp No.: 9445545475


Follow TMR Channel


 





Follow the TMR CHANNEL channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbDW7XI3mFY7siSmq43f

Saturday, July 11, 2026

விண்வெளி முட்டைகள்:

 விண்வெளி முட்டைகள்:

=======================

VALLALAR
TMR



விண்வெளி முட்டைகள்:
==================
நமது சூரிய குடும்பத்தின் எல்லையிலிருந்து எட்டிப் பார்த்தால், சடைசடையாக விண்வெளி முட்டைகள் தெரிவதை இப்போழுது கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட ஒரு முட்டைக்குள் நமது பூமியும் சுற்றுகின்றது. நமது முட்டையின் ஒரு பகுதி கொடைக்கானலில் வெறும் கண்களுக்கே தெரிகின்றது என்பதும் ஆச்சரியம்.
முட்டை (அண்டம்) என்றாலே அது உயிர்தான். ஒவ்வொரு முட்டையிலும் எண்ணற்ற உயிரினங்கள் நம் புவியைப் போன்று வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவை எப்போது நம் கண்களுக்குத் தெரியும்?
”இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.” என்ற வள்ளலார், அண்டங்களிளெல்லாம் உயிர்கள் வாழ்வதாகவும் கூறுகின்றார்.
'அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவறிவோம் ஆங்கே உந்துறும் பல் பிண்டநிலை அறிவோம், சீவன் உற்ற நிலை அறிவோம்...' ( திருவருட்பா-2132)
என, மிகச் சாதாரணமாக பாடுகின்றார். இதன் உண்மையை விஞ்ஞானம் அறிவது என்பது நடவாத காரியம்.
”முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி”
--TMR

Wednesday, July 8, 2026

கால் பந்தாட்டம்

கால் பந்தாட்டம்

தி.ம.இராமலிங்கம்



 "கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்தாட்டத்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு மிக அருகில் இருப்பீர்கள்." 

சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு இந்தியத் துறவி பலம் பொருந்திய உடலுக்காகவும்,சுறுசுறுப்பான வாழ்க்கைக்காகவும் மக்களுக்கு இப்படி உபதேசித்தார்...

மேலும் அவர் கால்பந்து குறித்து கூறும் போது;

"கால்பந்து விளையாடும்போது மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. எங்கே மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாகிறதோ அதுவே தெய்விகம்... ஆன்மிகம்’’ என்பார்....

துறவிகள், பகவானைப் பற்றி பேசியே பார்த்த இந்தியா போன்ற நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி..

பலம் பொருந்திய உடலின் தேவைக்கு, கால்பந்தாட்டத்தினை பரிந்துரைக்கிறார். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அது தேவையானதாய் இருக்கிறது.

இத்தகைய, முற்போக்கான கருத்தினை அன்றைய காலகட்டத்திலேயே பேசிய அந்தத் துறவி தான் சுவாமி விவேகானந்தர்.

உலகமே தற்போது நடந்து கொண்டிருக்கும், பிஃபா கால்பந்தாட்டத்தில் கண்ணுற்றிருக்கின்ற இவ்வேளையில் இதைச் சொன்னால் பொருத்தப் பாடாக இருக்கும்...

இன்றைக்கு நடக்கிற பிஃபா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிற இசுபெயின் (Spain) அணியினை எந்த கோலும் அடிக்கவிடாமல் தடுப்பாட்டம் (Defend) ஆடி, ஆட்டத்தை சமன் செய்து உலகையே தன் பக்கம் ஒரு குட்டித் தீவு திரும்ப வைத்திருக்கிறது. இணையத்தையே கலக்கிய அந்த தீவின் பெயர் கேப் வெர்டே (Cabo Verde).இந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய இசுபெயின்(Spain) அணி ஏழு முறை கோல் அடிக்க முயற்சித்தும், சீனப் பெருஞ்சுவர் போல் நின்று அதனைத் தடுத்தார் ஆட்ட நாயகனான கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் ஓசின்யா.

நமது சென்னையில் இருக்கக்கூடிய ஒரு சட்டமன்றத் தொகுதியின் அளவே,மக்கள் தொகை உடைய நாடு தான் கேப் வெர்டே (Cabo Verde).

ஐந்து லட்சத்திற்கு சற்று அதிகமான மக்கள் தொகை உடைய அந்தத் தீவு, தன்னுடைய முதல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று விளையாண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான நாக் அவுட் ( knockout) சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

நாக் அவுட் சுற்றில், நடப்புச் சாம்பியனும் மேலும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி(Messi) இருக்கக்கூடிய அர்ஜென்டினாவை இன்றைய நாளில் எதிர்கொள்ளப் போகிறது...

மெஸ்ஸிக்காக, விளையாட்டை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், மெஸ்ஸியோடு இந்தக் குட்டித் தீவு மோதுவதை பார்க்கவும் ரசிகர்கள் மத்தியில் ஆவல் பற்றி இருக்கிறது...

விஷயத்துக்கு வருவோம்....ஒரு குட்டித் தீவு,இவ்வளவு சாதனை செய்யும் போது கோடிக்கணக்கான மக்கள் வாழக்கூடிய இந்தியா, இளைஞர் பட்டாளம் நிரம்பிய இந்தியா...

உலகமே பங்கேற்கும் ஒரு பெரிய போட்டியில் தகுதி கூட பெறாமல் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று...

எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு விளங்காத அரசியலை செய்து அன்றாட பரபரப்பிலேயே வாழ்ந்து பழகிய நாம், கிராமத்து பாட்டிகள் சொல்வார்களே...

"வாயப் பாத்துட்டு உட்கார்ந்து இரு"என்று இங்கே கால்பந்தாட்டத்தில் அடுத்தவர்களின் காலைப் பார்த்துக்கொண்டு, உட்கார்ந்து இருக்கிறோம்.

இன்னும் இந்திய மக்கள் சரிவர கால்பந்து விளையாடுவதில்லையா??? அல்லது வழக்கம்போல் இந்திய கால்பந்து விளையாட்டில் தனியாக அரசியல் விளையாடுகிறதா???

ஆராய்ந்து, அறிய வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது.

Anyway!!!!

 குட்டித் தீவுக்கு (கேப் வெர்டே) மனமார்ந்த வாழ்த்துகள்.

 ஓ இந்தியா விழித்தெழு! உன்னுடைய ஆன்மீகத்தால், உலகை வெற்றி கொள்.

-சுவாமி விவேகானந்தர்

ரா. சுரேஷ்


Tuesday, July 7, 2026

இறந்துபோன எனது உடல்கள்

இறந்துபோன எனது உடல்கள்

TMR

 வணக்கம் நண்பர்களே... 

இரண்டு நாட்களுக்கு முன்னர், எனது முகநூல் பக்கத்தில், பல வருடங்களுக்கு முன்னர் நான் பதிவிட்ட எமது புகைப்படங்களில் சிலவற்றை ஒருவர் பார்வையிட்டு அதனை லைக் செய்ததால், அந்தப்படங்களை தற்போது நான் பார்வையிட நேர்ந்தது. 

அது எனது படம்தான். ஆனால் அந்தப்படங்கள் பதினைந்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் அதனை தற்பொழுது பார்க்கையில், அந்த இளமை, அந்த காலம் எல்லாம் எப்படி போயிற்று? என வியக்க வைக்கின்றது. 

அந்த புகைப்படங்கள் எல்லாம், இறந்துபோன எனது உடல்கள், இறந்து போன எனது காலங்கள் என்பதல்லவா உண்மை. 

இறந்துபோன எனது உடலை, இறந்துபோன எனது இளமையை, நானே தற்போதுள்ள உடலால் பார்க்கின்றேன். நமது புகைப்படங்கள் அல்லது நமது வீடியோக்கள் எல்லாம் நமது இறந்துபோன பிணத்தின் வடிவங்கள்தான் என்று நினைக்கையில், இப்போதுள்ள உடலும் இறந்துக்கொண்டே தன்னை புதுப்பித்துக்கொள்வதை உணரமுடிகின்றது. 

வள்ளலார், தனது உடலை புகைப்படத்தில் பதியசெய்யாமைக்கு காரணம் இதுவாகத்தான் இருக்குமோ?. தனது இறந்துபோன உடலை புகைப்படமாகக்கூட தானும், இவ்வுலகமும் பார்த்துவிடக்கூடாது என்ற காரணத்தால், வள்ளலார் தனது உடம்பினை ஒளி உடம்பாக மாற்றினார், அதனால் அவரை புகைப்படமாகக்கூட நம்மால் பார்க்கமுடியாமல் போனது. நன்றி, 

அருட்பெருஞ்ஜோதி.


  


 

 


Friday, July 3, 2026

பூம்புகார் - சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

 சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

TMR

பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை.
சீர்காழி - பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு தென்புறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் இன்று சிதைந்து போய் கிடக்கிறது.
சம்பாபதியம்மன் கோயிலையும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அப்படி ஒரு சிறப்பு கொண்ட வரலாற்றுச் சின்னங்கள் தற்போது சிதிலமடைந்து கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் சம்பாபதி அம்மன் பற்றியும் சதுக்க பூதம் பற்றியும் சொல்கிறேன் கேளுங்கள்.
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக பெருமைவாய்ந்த ஒன்று மணிமேகலைகாப்பியம், ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று அப்படின்னு சொல்வாங்க. இக்காப்பியத்தின் முக்கிய நாயகி மணிமேகலை, கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்த மகள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு கண்ணகி மதுரையை எரித்து பின் கேரள எல்லையில் கோயில் கொள்கிறாள்.
மாதவி தன் மகளை ஒரு புத்த துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டுவிடுகிறது.
அத்தீவில் இறங்கியவுடன் மணிமேகலைக்கு தனது முன்பிறப்பு நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் ஏன் அவளை மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று மந்திரங்களையும் கற்றுக்கொடுகிறது. ஓர் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தனுப்புகிறது.
அதிலிருந்து எடுக்க எடுக்க குறையாத உணவை புகார் நகரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கி வருகிறாள். ஆனால் மன்னன் உதயகுமரன், மணிமேகலையை தன்னை மணந்து கொள் என அவளை வற்புறுத்துகிறான்.அவளோ பயந்து கொண்டு இந்த குச்சரகுடிக்கையில் ஒளிந்து கொள்கிறாள்.
மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் புகார் நகர் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் நிலை கொண்டமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர்
இந்த சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் இது தான் என்கிறது மணிமேகலை காப்பியம்.
சம்பாபதி அம்மன் கோயிலை அக்காலத்தில் குச்சரக்குடிகை என அழைப்பார்கள். இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது.
வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா எனும் தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு.
.
சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன இந்த சதுக்க பூதங்கள்.
யாரையெல்லாம் தண்டிக்கும் என இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்.
பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது செய்து பொருள் சேர்க்கும் அமைச்சர்கள், பொய்சாட்சி சொல்பவர் பொதுப்பணத்தை கையாடல் செய்பவர்கள், - இவர்களை எல்லாம் சதுக்க பூதங்கள் கடுமையாக தண்டிக்கும் என்கிறார் இளங்கோவடிகள்.
சரி கோயில் பகுதிக்கு போகலாம் வாங்க..
ஆனால், இப்படியொரு பெருமை வாய்ந்த கோயில் இருப்பதே இங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது சாய்க்காடு சிவன் கோயில். இதன் தென் புறம் செல்லும் தெருவில் சென்று இடதுபுறம் உள்ள
அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த பகுதியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.
ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிகை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு தகர கொட்டகையில் புதிதாய் குடிவைத்திருக்கிறார்கள். பழைய கோயில் சிதைந்து மண்மேடாக உள்ளது அந்த குடிகை வாயிலில் இரண்டு பூதங்களும் உள்ளன.
வடக்கு நோக்கிய இக்குடிகையின் எதிரில் பெரிய உருவில் இரண்டு சதுக்க பூதங்கள் ஆண்பூதம் ஒன்றும் பெண் பூதம் ஒன்றும் சம்பாதியை காவல் காக்கின்றன.
தற்போது அங்குள்ள சம்பாதியை மட்டும் எடுத்து தனி கோயில் கட்டி வைத்துள்ளனர். உடன் விநாயகர் உள்ளார். வாயிலில் பைரவர் உள்ளார். எதிரில் சிம்மமும் பலிபீடமும் உள்ளன.
சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அவளை, சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது. பெயர் மருதவாணன்.
செங்கல் சுதையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சதுக்க பூதங்கள் மற்றும் ஒரு பெரிய குதிரை சிலைகள் 2000 ஆண்டு பழமையானவை எனப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன.
இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன. நம் மக்களின் மூளையில் திணிக்கப்பட்ட இரண்டே வார்த்தை திராவிடம் ஆரியம்.
தமிழ் தமிழ் என பெருமை பேசும் நாம் மூன்றாயிரம் வருடம் பழமை கொண்ட இக்கோயிலை கூட காப்பாற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது.
'சிலப்பதிகாரத்தில் அறம்' எனும் எனது புத்தகத்தில் பூம்புகாரில் இருந்த சதுக்கங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
கடம்பூர் விஜய் முகநூலில் இதுகுறித்து எழுதியிருந்தார்.
திமுகழக ஆட்சியில் புனரமைப்பு தொடங்க வேண்டும் என கேட்டுப் பதிவிட்டேன். பூம்புகாரை புனரமைப்பு செய்து உள்ளனர்.
இந்த வரலாற்று சின்னத்தின் புதுப்பொலிவை தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் முயற்சியெடுத்து செய்யவும்.
மீள்பதிவு.
Rajamoorthy J

Wednesday, July 1, 2026

உயிர் அறம்

உயிர் அறம்

வள்ளலார்


எல்லா உயிர்களும் இவ்வுலகில் மரியாதையாக வாழ உரிமை உண்டு. திருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன தமிழ அரசு, அந்நூலின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசை நடத்த வேண்டும். குறைந்த பட்சம் தமிழக அரசு, ஓர் உயிரின் மரணத்திற்காவது மரியாதை கொடுக்க வேண்டும். சினிமாக் காரர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது மட்டும் அறம் அல்ல. அதே அறம் எல்லா உயிர்களிடத்தும் காண்பிக்கப்பட வேண்டும்.

”தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.”
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்??
இவ்விடயத்தில் - சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பாராட்டுக்கள். தமிழக அரசு மேல் முறையீட்டினை செய்திருக்கக்கூடாது. அறத்திற்கு புறம்பாக தமிழக அரசு செயல்படுகின்றது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR

Sunday, June 21, 2026

தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

 தமிழ்நாட்டில் ஓர் புனித நகரம் - வடலூர்

HOLY CITY

https://vadalurpunithanagaram.com


🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥

🕊️ வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் ஆதரவு கையெழுத்து இயக்கம்! 🕊️

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமி நமது வடலூர். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வாழ்ந்து காட்டிய அந்த மகானின் மண்ணை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக "புனித நகரமாக" அறிவிக்க வேண்டும்!

நமது முக்கிய கோரிக்கைகள்:

வடலூரைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்:

🚫 இறைச்சிக் கடைகள் மற்றும் மாமிச உணவகங்கள்

🚫 மதுபானக் கடைகள்

🚫 போதை வஸ்துக்கள் விற்பனை

ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்!

நீங்கள் ஏன் கையெழுத்திட வேண்டும்?

இது வெறும் கையெழுத்து அல்ல; ஒரு ஜீவனின் உயிர் மூச்சு! நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கையெழுத்தின் பின்னாலும், வாய் பேச முடியாத ஓர் உயிரின் வலியும் வேதனையும் துடைக்கப்படும். கசாப்புக் கத்தியிலிருந்து ஓர் உயிரைக் காப்பாற்றும் மாபெரும் புண்ணியத்தில் நீங்களும் பங்குகொள்ள வேண்டாமா? உங்களின் ஒரு கையெழுத்தால் ஒரு உயிர் துன்பத்திலிருந்து மீட்கப்படும்!

🌐 உடனே இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்:

👉 

https://vadalurpunithanagaram.com

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

1. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு e-Sign (டிஜிட்டல் கையெழுத்து) பதிவு செய்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும்.

3. இந்தப் பதிவை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் பகிரவும்!

வடலூர் சத்திய ஞானசபையில், அகவல் பாராயணக்குழு அன்பர்களால் மாதப் பூச நன்னாளான இன்று (17/06/2026) இந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான இணையதளத்தை வடிவமைத்துத் தந்த தயவு ராகேஷ் ஐயா (மலேசியா) மற்றும் தயவு அருட்சிவமாறன் ஐயா (சென்னை) ஆகியோருக்கும், இதனை முன்னெடுத்து நடத்தும் வடலூர் புனித நகரம் அகவல் பாராயணக்குழு அன்பர்களுக்கும் சன்மார்க்க நெஞ்சங்களின் சார்பாக நன்றிகள்!

கையெழுத்திடுவோம்! உயிர்களைக் காப்போம்! வாரீர்! வாரீர்!

✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨

Thursday, May 21, 2026

வெற்றி

                                            வெற்றி

நாம் இதுவரை கண்டுவந்த அரசியல் காட்சிகள் முற்றிலும் ஒழிந்தன. திராவிட கட்சிகள் இலஞ்சத்தையும், ஊழலையும், போதையையும் ஊக்குவித்தன. அதனை ஒழிக்க பேச்சளவிலும் பேசமாட்டார்கள். மக்களுக்காக இறங்கி வேலை செய்யமாட்டார்கள். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வாகனங்களில் மட்டுமே உலா வருவார்கள். எல்லோரும் குறைந்தது மூன்று முறையாவது அமைச்சர்களாகவும், சட்ட மன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை நாம் மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால், தமிழகம் மீண்டும் பின்னோக்கி செல்லும். ஊழலும், இலஞ்சமும், போதையும் குடிகொண்டிருக்கும். ஊழலை முன்னிருத்தியே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். எந்த ஒரு புதிய நற்செயல்களையும் நாம் கண்டிருக்க முடியாது. (நான் த.வெ.க.விற்கு வாக்களிக்காததை நினைத்து இந்நேரத்தில் வருத்தமடைகின்றேன்.)

ஆனால், தமிழக மக்கள் கொடுத்த ’தமிழக வெற்றி கழக’ ஆட்சியானது, நாம் இதுவரை கண்டிராத புதிய மாற்றங்களை பதவியேற்ற பத்து நாட்களிலேயே தமிழக மக்களுக்கு கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

1.       அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சரவை அலுவலகங்கலளில் இலஞ்சம் பெறுவதையும் கொடுப்பதையும் தடுக்கும் நடவடிக்கைகள்.அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு அறிவித்தல். 

2.       அரசு மருத்துவமனைகளில் சுத்தம், சுகாதாரத்தை கண்கானித்து மேம்படுத்துதல். 

3.       அரசு அலுவலகங்களில் மக்கள் வந்தால் முதலில் மக்களை அமரவைத்து விசாரித்தல். 

4.       காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா முழு நேரமும் இயங்க உத்தரவு. அனைத்து புகார்களையும் சி.சி.டி.வி.யில் காணொலியாக பதியவைக்க உத்தரவு. 

5.       காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க த.வெ.க. வழக்கறிஞர்களை, ஒரு காவல் நிலையதிற்கு இரண்டு நபர்களை நியமிப்பது. 

6.       முதல்வர் தனது அலுவலகத்திற்கு செய்யும் மரியாதையாக, மதிய உணவுடன் காலையில் சென்று மாலை வீடு திரும்புதல்.இதன் காரணமாக தலைமை செயலக அலுவலர்கள் காலை பத்து மணிக்குள் தங்களது அலுவலகத்திற்கு வருகின்ற அதிசயம் நடைபெறுகின்றது. 

7.       மாநகராட்சி ஊழியர்களின் வருகையை நேரக்கட்டுப்பாட்டுக் கருவியில் (பயோ மெட்ரிக்) பதிவிடச்செய்தல். 

8.       வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள்போல் இல்லாமல், ஆங்கில உடை அணிந்து தமிழர் ஆட்சியினை கொடுக்கும் முதல்வர். 

9.       டாஸ்மாக் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது. உரிய நேரத்தில் திறந்து, மூடுதல், கள்ள விற்பணையை தடுத்தல். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துநிலையம், வழிபாட்டு இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடியது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் திராவிட கலாச்சாரத்தை ஒழித்தது. 

10.   போதை இல்லா தமிழ்நாடு காண, போதைப் பொருளை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தல். 

11.   அரசு டெண்டர்களில் இனி சட்டமன்ற உறுப்பினரகள், அமைச்சரகள் மறைமுகமாக எவ்வகையிலும் இடம் பெற தடைவிதித்தது. 

12.   1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் முதன் முதலாக கூட்டணி அமைச்சரவை உருவாக்கியது. 

13.   இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்து, முன்னால் முதல்வரையும் தோற்கடித்தது. 

14.   அரசு விழாக்களில் தேசியத்தை முன்னிலைப்படுத்தி முதலில் வந்தே மாதரம் பாடலையும், பிறகு மாநிலத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைப்பது.

        பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்புப்படை அமைத்தது.

த.வெ.க. மாவட்டச் செயலாலர்களின் பல்வேறு அரசு துறைகளில் திடீர் ஆய்வுச் செய்து சீர்திருத்தம் செய்தல்.

பட்டியலினத்தவர்கள் ஏழு நபர்களுக்கு அமைச்சரவையில் இடம்  கொடுத்தது.

விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள், இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது.

இளைஞர்கள் அதிகமுள்ள அமைச்சரவையை தமிழக அரசு கண்டிருக்கின்றது.

 இந்து அல்லாத ஒருவர் (கிறுத்துவர்) முதன் முதலில் தமிழத்தின் ஆட்சியை பிடித்தது.

தற்போது உலகில் கோலாட்சும் ஏ.ஐ. க்காக (செயற்கை நுண்ணறிவு) ஒரு புதிய துறையை ஏற்படுத்தி அதற்கான ஒரு அமைச்சரையும் கொடுத்து, ஏ.ஐ. மூலம் இவ்வுலகம் பெறும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் எவ்வகையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்தது வரவேற்கத்தக்கது. உலகில் வேறெந்த நாட்டிலும் ஏ.ஐ.க்காக அமைச்சகம் இல்லை.

இவை போன்று தடாலடி மாற்றங்கள் இன்னும் நிறைய வரவேண்ட்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

வடலூரை புனித நகரமாக்க வேண்டும் என்பது சுத்த சன்மார்க்கர்களின் நீண்ட நாள் கனவு. அதனையும் நமது புதிய முதல்வர் நிறைவேற்றவேண்டும்.

கடலூர் மாவட்ட அமைச்சராக இன்று (21-05-2026) பொறுப்பேற்ற மாண்புமிகு B.இராஜ்குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

TMR


 

Friday, May 15, 2026

ஞானசரியை - PDF

 

ஞானசரியை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
     நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
     நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
     மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
     பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே  (1)

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
     புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
     உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
     மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
     சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே (2)

பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
     பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
     துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
     சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
     காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே (3)

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
     கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
     உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
     மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
     இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே (4) 


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
     எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
     அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
     பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
     மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே (5)

தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
     சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
     அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
     ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
     நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே (6)


நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
     நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
     தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
     சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
     உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே (7)

விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
     மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
     செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
     வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
     கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே (8) 


களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
     களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
     செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
     ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
     ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே (9)

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
     அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
     எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
     திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
     முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே (10)

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
     அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
     காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
     யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
     ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே (11)

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
     சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
     வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
     பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
     கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே (12)

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
     உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
     என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
     சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
     கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே (13)

தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
     தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
     வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
     சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
     உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே (14)

சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
     தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
     நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
     ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
     சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே (15)

நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
     நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
     என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
     செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
     முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே (16)
 

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
     முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
     எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
     தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
     படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே (17)

சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
     சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
     தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர் அனகமறிந் தழியாத ஞான
     அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
     முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே (18)

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
     நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
     வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
     தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
     யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே (19)

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
     கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
     மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
     புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
     சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே (20)

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
     திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
     உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
     மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
     தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே (21)

செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
     திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
     மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
     மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
     புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே (22)

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
     புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
     மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
     பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
     அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே (23)

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
     மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
     சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
     இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
     பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே (24)
 

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
     இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
     மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
     சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
     பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே (25)

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
     உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
     கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
     தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
     என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே (26)

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
     தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
     நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
     பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
     அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே (27)

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
     சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
     நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
     எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
     உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே (28)

For PDF file download....

 https://drive.google.com/file/d/1qLFkkwyCrIP9LGvbdwSHPIsy1kHiWLE0/view?usp=sharing

--TMR

http://www.vallalarr.blogspot.in