Sunday, January 28, 2024

கோவணமும் மேலாடையும் என்னாச்சு?

 கோவணமும் மேலாடையும் என்னாச்சு?



வள்ளலார் அறையில் மறைந்தபின்பு, அவர் உடுத்தியிருந்த கோவணம், மேலாடை இவைகள் என்னாயிற்று? என்பது ஒரு நிருபரின் கேள்வி.
அதனை அவிழ்த்து வைத்துவிட்டுதானே அவர் தமது உடம்பை மறைத்திருப்பார்! அந்த ஆடைகள் அந்த அறையில் இருந்தனவா? என்பதே கேள்வி.
வள்ளலார் தமது தேகத்தை மறைத்தபோது அவைகளும் சேர்ந்தே மறையும். அதனை அவிழ்த்து வைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு முன்பே வள்ளலார் பல முறை (தன் ஆடையுடன்) மறைந்திருக்கின்றார் என்பது வரலாறு. தன் உருவை சிலருக்கு காட்சிக்கு உட்படுத்தும்போது ஆடையுடனே வெளிப்பட்டிருக்கின்றார்.
அந்த அறையில் எதுவும் இல்லை என்பது அரசாங்கத்தின் பதிவாக இருக்கின்றது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
அப்படியெனில், அந்த ஞான தேகம் என்பது - ஆடையுடன்தான் இருக்குமா? எனில், இதற்காண பதில், அவ்வனுபவம் அடைந்தவர்களுக்கும் இறைவனுக்குமே தெரியும். நான் ஞான தேகம் அடைந்தப்பிறகு இதற்கான விடையினை தெரிவிக்கலாம் என இருக்கின்றேன். நன்றி.
--TMR

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.