"பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழா
அன்புடையீர் வந்தனம்!
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு-சமரஸபஜனை ச.மு.கந்தசாமி ஐயா இயற்றிய "பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழாவிற்கு தங்களையெல்லாம் அன்புடன் அழைக்கின்றோம்.
வருகின்ற மாதப்பூசம் 06-01-2015 அன்று வடலூரில் ஞானசபைக்கு அருகில் உள்ள "கருணீகர் இல்லத்தில்" நூல் வெளியீட்டு விழா மதியம் 03.00 மணியிலிருந்து 06.00 மணிவரை, திருவருட்பிரகாச வள்ளலார் தலைமையில் நடைபெற உள்ளது.
ச.மு.க., அவர்களின் வழிவந்த திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள்
பதிப்பில் வெளிவரும் இந்நூலை முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் வெளியிடுகின்றார். இந்நூலின் முதல் பிரதியினை காரணப்பட்டு K.V.S.இராமலிங்கம் அவர்கள் பெறுகின்றார்கள்.
இவ்விழாவில் பல்வேறு சன்மார்க்கிகள் சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்ற இருக்கின்றார்கள். ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் அமைந்துள்ள இந்நூலின் விலை
` 350/- க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு விழா அன்று இந்நூலை அன்பர்களுக்கு ` 200/- க்கு ச.மு.க., அறக்கட்டளை வழங்க முன்வந்துள்ளது.
இந்நூலிற்காக முன்பதிவு செய்தவர்கள், தங்களது பெயர்களைக்கூறி இவ்வெளியீட்டு விழாவில் நூலினைப்
பெற்றுக்கொள்ளலாம். இவ்விழாவிற்கு வர இயலாதவர்களுக்கு நூல் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தாங்கள் அனைவரும் வடலூர் வந்து கலந்துக்கொண்டு, அன்றைய தினம் நிகழும் மாதப்பூச ஜோதி தரிசனத்தையும் கண்டு
களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.



