Showing posts with label ஏனம்மா?. Show all posts
Showing posts with label ஏனம்மா?. Show all posts

Tuesday, July 18, 2017

ஏனம்மா?

ஏனம்மா?
=======

வெட்ட வெளியிடை உனைத்
தொட்டு கொஞ்சிட
மொட்டு விரியது பாரம்மா… அதை
விட்டு விலகிட
இட்டம் எனக்கில்லை ஏனம்மா?

காற்று வெளியிடை உனைப்
போற்றிப் பாடிட
ஊற்றும் ஊறுது பாரம்மா… அதை
ஏற்று அருந்திட
கூற்றும் மாண்டது ஏனம்மா?

சுத்த வெளியிடை உனை
முத்தம் கொடுத்திட
சத்தும் பெருகுது பாரம்மா… அதை
நித்தம் நினைத்திட
சித்தன் ஆகிறேன் ஏனம்மா?

அருள் வெளியிடை உனை
இருகிப் பிடித்திட
உருகிப் போகிறேன் பாரம்மா… அதைப்
பருகிப் பார்த்திட
அருகன் ஆகிறேன் ஏனம்மா?

சிவ வெளியிடை உனை
தவஞ் செய்திட
சவம் எழுந்தது பாரம்மா… அதை
புவனம் கண்டிட

நவநிலை ஆகிறேன் ஏனம்மா?-18-05-2016

--திருச்சபை.

--தி.ம.இராமலிங்கம்.