Showing posts with label சுத்த சன்மார்க்க வெற்றி. Show all posts
Showing posts with label சுத்த சன்மார்க்க வெற்றி. Show all posts

Wednesday, August 30, 2023

சுத்த சன்மார்க்க வெற்றி

 சுத்த சன்மார்க்க வெற்றி

கலித்தாழிசை

(தி.ம.இராமலிங்கம்)

அரைநொடிப் பொழுதினிலே அருட்பெருஞ் ஜோதியிலே
நரைதிரை போக்கியே நடந்துவந்தப் பாதையிலே
இரையற்ற உடம்பிலே இறைகண்ட களிப்பிலே
துரைஎன்று உரைத்து தண்டனிட்டு அழுகின்ற
 
காலமதைப் பாரேனோ! - 1

இத்தேகம் அழியாமல் எண்சாணும் என்னதடி
உத்வேகம் எழுந்ததடி உண்பதெலாம் அமுதமடி
வித்தெல்லாம் முளைக்க விண்ணாகி வியக்கின்றேன்
முத்தேகம் ஆனதடி முயங்கிய சன்மார்க்கத்தில்
 
கண்டதெல்லாம் இன்பமடி! 2

கண்ணும் கருத்தும் உன்மேலிருக்க இறையே
மண்ணும் நெருப்பும் மெய்யில் மேவுமோ
விண்ணருள் எல்லாம் விண்டேன் இத்தருணம்
எண்ணமும் அற்று என் கண்ணம்மா!
 
என்னவனைப் பாரேனோ! 3

வல்லானென சன்மார்க்கர் வாயார உரைக்க
கல்நெஞ்ச  உலகரெல்லாம் கருத்தி லிசைந்து
கொல்லாமை புலாலுண்ணாமை நிலை பெற்று
எல்லா உயிர்களும் என் கண்ணம்மா!
 
இன்புற்றிருக்கப் பாரேனோ! 4 

மனமெனும் பேயை மணந்து வந்தேன்
இனமான மாயையில் வாழ்ந்து வந்தேன்
சினமெனும் நாயை வளர்த்து வந்தேன்
தினமும் சாயைஉலகில் என் கண்ணம்மா
 
திக்குமுக்காட வந்தேனோ! 5
 
தித்திக்கும் திருவருட்பா தினமும் படித்தாலும்
சித்திக்கும் முத்திக்கும் சிந்தனை செய்தாலும்
பத்திக்கும் பாவைமுகம் பார்த்து விட்டால்
எத்தனை ஜென்மமடி என் கண்ணம்மா!
 
தனித்திருக்க மாட்டேனோ! 6