Showing posts with label தருமச்சாலை. Show all posts
Showing posts with label தருமச்சாலை. Show all posts

Friday, November 7, 2014

சுத்த சன்மார்க்கம் - ஹைக்கூ கவிதை



சுத்த சன்மார்க்கம்

சத்துவ நெறியில்
சத்திய பாதையில் நடக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஓர் இறைவன்
ஓர் இலட்சியம் கொண்டது
சுத்த சன்மார்க்கம்.

அனைத்திற்கும் அதீத
அன்பு மார்க்கம் உடையது
சுத்த சன்மார்க்கம்.

இறை உண்மை
அறிந்து அம்மய மாதல்
சுத்த சன்மார்க்கம்.

சாதி சமயச்
சடங் கெல்லாம் ஒழிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஆசாரக் கட்டுப்பாடு
ஆகாதென சுதந்தர மளிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

கருணை ஒன்றே
கடவுளை அடையும் சாதனமென்ற
சுத்த சன்மார்க்கம்.

மதங்களும் காணாத
மதாதீத இறைவனைக் காணும்
சுத்த சன்மார்க்கம்.

சாகாக் கல்வியால்
சாகா தேகம் அளிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஆன்ம நேய
ஆன்மாவை தயவால் தருகின்ற

சுத்த சன்மார்க்கம்.


ஞானதேகம்

ற்பூர மணம்
கற்பங் கடந்தும் வரும்
ஞான தேகமதுவே.

தோன்றியும் தோன்றா
தோற்றம் பெற்று ஓங்கும்
ஞான தேகமதுவே.

சர்வ சுதந்தர
சர்வாதிகார ஆட்சி பெறும்
ஞான தேகமதுவே.

மகாசக்தி யடைந்து
மரணமிலா மாண்பைப் பெறும்
ஞான தேகமதுவே.

காலாதீத மடைந்து
காணாததை காணச் செய்யும்
ஞான தேகமதுவே.

எங்கும் பூரணமாய்
எவ்வுயிரும் தானாய் நிற்கும்
ஞான தேகமதுவே.

பராபர அறிவாய்
பரமாய் நம்மை ஆக்கும்
ஞான தேகமதுவே.

தயவு ஒன்றே
தருமிந்த பராபர தத்துவ
ஞான தேகமதுவே.

காரண ரூபமாய்
காட்சி யளித் தருளும்
ஞான தேகமதுவே.

அளவு கடந்த
அற்புத மாற்றுத் தங்கமாகும்
ஞான தேகமதுவே.


தருமச்சாலை


சி என்னும்
பேராபத்தை விலக்க வந்த
தருமச் சாலையே.

ஜீவ காருண்ய
ஜோதி விளங்கி ஒளிரும்
தருமச் சாலையே.

யற்கை விளக்க
அருளைப் பெற உதவும்
தருமச் சாலையே.

தரும வழிநின்று
தனிப் பெருங் கருணையான
தருமச் சாலையே.

ஈந்து உண்ணும்
இயற்கை பழக்கம் அருளும்
தருமச் சாலையே.

ஆன்ம இலாபம்
அருளி பொருளை அருளாக்கும்
தருமச் சாலையே.

சாலைக்கு உரியோர்
சவத்தை புதைக்கச் சொல்லும்
தருமச் சாலையே.

அரக்கப் பசியை
அணையா அடுப்பால் அணைக்கும்
தருமச் சாலையே.

உடலை பிரியாது
உயிரைக் காக்கும் சத்திய
தருமச் சாலையே.

பசித் துன்பம்
போக்கிய புண்ணியரை இறைவனாக்கும்
தருமச் சாலையே.


ஞானசபை

ட்டம் பலமுடைய
அருட்பெருஞ் ஜோதியா ராடும்
திருஞான சபையே.

கடவுள் எனக்
கருதுவோர் பலரும் தண்டனிடும்
திருஞான சபையே.

இறந் தோரெலாம்
உயிர்ப்பித்து எழுப்பி யருளும்
திருஞான சபையே.

மூப்பினர் யார்க்கும்
மீண்டும் இளமை யளிக்கும்
திருஞான சபையே.

உண்மைக் கடவுளை
உண்மை விளக்கஞ் செய்கின்ற
திருஞான சபையே.

கருதிய வண்ணம்
களித்து இன்புறச் செய்யும்
திருஞான சபையே.

பெரு வாழ்வை
பெற்று வாழஅற்புத சித்தளிக்கும்
திருஞான சபையே.

திருவே திருவுள்ளம்
தாமே கொண்டு இயற்றிய
திருஞான சபையே.

அளவுபடா காலம்
அருள் ஓங்கும் வடலூர்
திருஞான சபையே.

அருட்பெருஞ் ஜோதியார்
அமர்ந்து விளையாடும் சத்திய
திருஞான சபையே.


சித்தி வளாகம்

நினைந்து நெகிழ
நித்திய தீப மொளிவீசும்
சித்தி வளாகமே.

எவரும் கண்டிடா
எல்லையை காட்டு விக்கும்
சித்தி வளாகமே.

முத்தேக சித்தரில்
முதல்வர் இராம லிங்கரின்
சித்தி வளாகமே.

உலகர் செய்யும்
உதவிபோல் கோடி செய்யும்
சித்தி வளாகமே.

வள்ளல் மீண்டும்
வருகின்ற வரந் தரும்
சித்தி வளாகமே.

கொடி கட்டிக்
கொண்டு உண்மை உரைத்த
சித்தி வளாகமே.

பேருபதேச பெரும்
பேச்சால் இறைநெறி புகன்ற
சித்தி வளாகமே.

மயங்கிய உலகில்
மகாமந்திரம் வெளிப்பட ஓதிய
சித்தி வளாகமே.

பெருங்கருணை யாலருட்
பெருஞ்ஜோதி அகவல் எழுதிய
சித்தி வளாகமே.

அரூப ரூபமாய்
இராம லிங்கர் வாழ்ந்துவரும்
சித்தி வளாகமே.