Sunday, December 28, 2025

வடலூர்

 வடலூர்


சந்து பொந்தெல்லாம் அரசு
       சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
      சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
      அடிவாங்கும் சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே        
      வடலூர் வந்தால் நரகமாமே.

சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்

              சமைத்து வறியோர்கள் என்றும்

இன்பமாய் உண்டு மகிழவும்

              ஐக்கிய சன்மார்க்கச் சபை

நின்று நிர்வாகம் பார்க்கும்

              நாள் தருமச் சாலையில்

என்று வருமோ சன்மார்க்கம்

            அன்றே தழைத்து ஓங்குமே.   

TMR

VALLALAR



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.