Showing posts with label கண்களை நம்பாதே. Show all posts
Showing posts with label கண்களை நம்பாதே. Show all posts

Monday, February 25, 2013

கண்களை நம்பாதே


கண்களால் காணப்படும் இக்காட்சியையே நாம் தவறாக புரிந்துக்கொள்கிறோம். ஆனால் நாம் நமது கண்களால் காணா கடவுளை மட்டும் சிலைகளாகவும், வண்ண கற்பனை படங்களாகவும் பார்ப்பது நியாயமா? அவை உண்மையாக இருக்குமா? சத்தியத்தை போதிப்பது சுத்த சன்மார்க்கம் மட்டுமே, அங்கே தான் கடவுளின் உண்மை நிலையினை தெரிந்துக்கொள்ளலாம். சாதிகளும், சமயங்களும், மதங்களும் மேற்கண்ட படங்களைப் போலவே நம்மை மயங்கவைக்கும். மீண்டும் மீண்டும் பார்த்தாலும், படித்தாலும் அதிலிருந்து உங்களால் உண்மையை காண இயலாது. 

'அண்டாவிற்குள் குண்டான் அடங்கும்; குண்டானுக்குள் அண்டா அடங்காது; எனவே எது எதைவிடப் பெரியது என்பதைப்போல மதச்சண்டைகள் தான் அங்கு காணலாம்.

வழிபாடு என்ற பெயரில் சிலைகளுக்கு ஊற்றும் பாலும், தேனும், பஞ்சாமிர்தமும் உண்மையில் இறைவனை சென்றடைவதில்லை, இனிமேலாகியும் உயிரற்ற கல்லாலும் செம்பாலும் ஆகிய வடிவங்களுக்கு அப்சேகம் என்ற வழிபாடு செய்து வீண்போவதை தவிர்ப்போம்.

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
  தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
  வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
  கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதாது
ஏமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
  எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே (திருவருட்பா)