Showing posts with label கள்ளக்குறிச்சி. Show all posts
Showing posts with label கள்ளக்குறிச்சி. Show all posts

Thursday, June 20, 2024

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளம் நிறைந்த "கள்ளக்குறிச்சி" என்று சொல்லும் வகையில் ஊர் பெயரும் அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போதுவரை 33 ஆடவர்கள் மரணித்துள்ளனர்.
தனி மனித ஒழுக்கம் அற்ற மானிடர்களின் அன்றாட நிகழ்வானது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பலனும் இன்றி துக்கத்தையே கொடுக்கும்.
தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய, உலகில் வேறெந்த மொழியும் சொல்லாத, அறக் கருத்துகள் அடங்கிய திருக்குறள், திருவருட்பா போதனைகள் அனைத்தும் இங்கே பயனற்று போகின்றன.
இதற்கு அரசு என் செய்யும்? டாஸ்மாக் கடையை திறந்து வைத்திருப்பது அரசின் இழிவான ஒழுக்கச் செயல். அதையும் மீறி குழியில் வீழ்கின்றது சமுதயாம்.
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... நெஞ்சம் பொறுப்பதில்லை...

--TMR

RAMALINGAM T M