கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும்,
குற்றி தைத்த காலுக்கோர் செருப்பு இல்லை என்பார்க்கும்,
பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்,
கனக தண்டிமேலுக்கு ஓர் பஞ்சனை இல்லை என்பார்க்கும்,
விசனம் ஒன்றே.
தனக்கு துன்பம் வரும்போதெல்லாம் சுவாமி தயானந்தா அவர்கள் இப்பாடலை நினைந்து சாந்தம் கொள்வார்கள்.
கூழுக்கு உப்பு வாங்கக்கூட பணம் இல்லை, முள் குத்திவிடுமே என தம் கால்களுக்கு செருப்பு வாங்கக்கூட பணம் இல்லை போன்ற மிகவும் வறியவர்களுக்கும் -
பால் அருந்த சர்க்கரை வாங்கப் பணம் இல்லை என்னும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் -
பல்லக்கில் செல்வோர்க்கு அதில் தாம் சாய்ந்துக்கொள்ள ஒரு பஞ்சனை இல்லையே என்று கவலைப்படும் பெரும் பணக்காரர்களுக்கும் -
இவ்வாறு யாவருக்கும் “துக்கம்” என்பது ஒன்றாகவே உள்ளது.
