Sunday, February 18, 2024

துக்கம்

கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும்,

குற்றி தைத்த காலுக்கோர் செருப்பு இல்லை என்பார்க்கும்,

பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்,
கனக தண்டிமேலுக்கு ஓர் பஞ்சனை இல்லை என்பார்க்கும்,
விசனம் ஒன்றே.
-யாரோ.
தனக்கு துன்பம் வரும்போதெல்லாம் சுவாமி தயானந்தா அவர்கள் இப்பாடலை நினைந்து சாந்தம் கொள்வார்கள்.
கூழுக்கு உப்பு வாங்கக்கூட பணம் இல்லை, முள் குத்திவிடுமே என தம் கால்களுக்கு செருப்பு வாங்கக்கூட பணம் இல்லை போன்ற மிகவும் வறியவர்களுக்கும் -
பால் அருந்த சர்க்கரை வாங்கப் பணம் இல்லை என்னும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் -
பல்லக்கில் செல்வோர்க்கு அதில் தாம் சாய்ந்துக்கொள்ள ஒரு பஞ்சனை இல்லையே என்று கவலைப்படும் பெரும் பணக்காரர்களுக்கும் -
இவ்வாறு யாவருக்கும் “துக்கம்” என்பது ஒன்றாகவே உள்ளது.



வெங்காய இடத்தினிலே வெம்பாதப் பழமுண்டு
தங்காத உயிரினிலே தம்பாத அழகுண்டு
மங்காத ஒளிதனிலே மன்மதனைக் கண்டுவிட்டால்
சிங்கார தேகமாகி என் கண்ணம்மா
சிக்காமல் போவேனோ.
-TMR.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.