Showing posts with label வீறியெழல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வீறியெழல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். Show all posts

Tuesday, April 14, 2020

வீறியெழல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


இராமலிங்க அந்தாதி



இங்கு எழில்மாறல் ஏடுகள் சொன்ன
அங்கக் கடவுள் எல்லாம் - மங்கியே
விகாரி ஆண்டில் வீழ ராமலிங்கமே
மகா மந்திர மணியாவான். - 995

வந்தனம் அன்பர்களே!

எழில்மாறல் தமிழ் வருடம் பிறக்கும்போது எழிலாகவும், செல்லும்போது எழில்மாறலாகவும் (அழகின்மை) சென்றது எவ்வளவு பெயர் பொருத்தமாக உள்ளது பாருங்கள். இராமலிங்க அந்தாதியில் இந்த எழில்மாறல் வருடம் பற்றி குறிப்பிடுகையில் ”ஏடுகள் சொன்ன அங்கக் கடவுள் எல்லாம் மங்கி விகாரி ஆண்டில் வீழும்” என்று குறிப்பிட்டதை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வீழ்ந்துக்கிடப்பதை பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

சரி… அன்பர்களே… இதோ இன்று, 60 தமிழ் வருடங்களில் 34 –ஆவது வருடமான ”வீறிஎழல்” வருடம் பிறந்துள்ளது. இராமலிங்க அந்தாதியில் குறிப்பிட்டுள்ளபடி இவ்வருடத்தில் வள்ளற்பெருமான் நமது உள்ளங்களில் ஓர் அருவாக இருந்து உலக மக்களுக்கு எல்லாம் ஆன்ம அறிவை பெருக்குவார். ஆன்ம அறிவால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பது வள்ளலாரின் சத்தியம். இந்த வீறிஎழல் ஆண்டின் துவக்கம் நமக்கெல்லாம் கடுமையானதாக இருந்தாலும், அந்தக் கடுமையால் நமக்கெல்லாம் ஆன்ம அறிவை உண்டாக்க இறைவன் முயல்கின்றான் போலும். அவனது செயல் வெற்றியடைய நாமெல்லாம் இவ்வருடத்தில் உழைப்போம். பிறக்கும் குழந்தை வீறிஎழுந்தால்தான் தாய் மகிழ்வாள். நாமும் இவ்வருடத்தில் ஆன்ம அறிவு பெற்று ஒரு புதியக் குழந்தையாக வீறிஎழுந்து இறைவனை மகிழ்விப்போம்.        

மணி ஓசையால் மனம் வீறியெழுந்து
அணி பெற்று ஆன்மஅறிவுப் - பணியை
சார்வரி வருடம் செய்ய ராமலிங்கமே
ஓர்அருவாக உள் இருப்பான். - 996

அனைவருக்கும் வள்ளலாரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.