Sunday, April 19, 2020

சீனா - CHINA


சீனா
தி.ம.இராமலிங்கம்


இன்று உலக மக்கள் அனைவராலும் உச்சரிக்கப்படும் நாடு “சீனா”. காரணம் அங்குதான் உருவாக்கப்பட்டது அல்லது பரவியது ”கொரோனா – கோவிட்-19” என்கின்ற உயிர்கொல்லி உயிரி. உலக மக்கள் மடிவதற்கும், உலக பொருளாதாரம் அழிவதற்கும் முக்கிய காரணம் சீனர்கள்தான் என்று உலக மக்கள் கொதிக்கின்றனர். சீனர்கள் ஏன் இவ்வாறு செய்தனர்? சீனர்கள் பயங்கரவாதிகளா? தற்போது சீனாவை ஆளும் திரு.சி ஜின்பிங்க் (Xi Jinping) பயங்கரவாதியா? உலகை ஆதிக்கம் செலுத்த சீனா இவ்வாறு செய்ததா? என்றெல்லாம் கேள்வி எழுகின்றது. சீனர்கள் உண்மையில் யார்? என்று பார்க்க எனது மனம் என்னைத் தூண்டியது. ஒரு நாட்டின் மக்களை பற்றி அறிய அவர்கள் பின்பற்றும் அரசின் கொள்கையை அறிவதைவிட அவர்களுடைய ஆணி வேர் எங்கிருக்கின்றது? என்று பார்த்தால் தெரிந்துவிடும். மக்கள் பின்பற்றும் மதம்தான் அவர்களுடைய ஆணிவேர். சீனர்கள் பயங்கரவாதிகளாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்கள் பின்பற்றும் மதம் இடங்கொடுக்கின்றதா? என்று பார்க்க முனைந்ததின் விளைவே இச்சிறிய ஆய்வு.

சீனமக்களின் மதம் எதுவென்று கேட்டால்?... நாம் உடனே இந்தியாவிலிருந்து சென்று ”புத்த மதம்” என்போம். உண்மைதான். புத்த மதம் மிகப்பழமையான மதம். அன்பு நிறைந்த மதம். ஆன்ம நேயத்தை போதித்த மதம். உயிர்க் கொலையை மறுத்த மதம். புலால் உண்பதை கண்டித்த மதம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று போதித்த மதம். ஆனால் சீனா உட்பட புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளில் உள்ள மக்கள் புத்த மத போதனைகளுக்கு நேர்மாறாக இருப்பதை பார்க்கின்றோம். புத்த மதக் கொள்கைகளை அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார்கள். புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளில் பெரிய பெரிய புத்தர் சிலைகள் அமைத்து பக்தி மார்க்கத்தில் வழிபாடு செய்கின்றார்கள். அந்த வழிபாட்டை பார்க்கும் அந்நியர்கள் மனதில், “இந்த பூனையும் பால் குடிக்குமா?” என்று அவர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலத்தின் மீதும் மிகுந்த மரியாதை உண்டாகும். ஆனால், உண்மையில் புத்தர் சொன்ன அடிப்படை (ஆணி வேர்) ஒழுக்கங்களை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.



உலக மாந்தர்களின் துன்பத்திற்கு உண்மையான காரணம் என்ன? என்று கண்டுபிடித்து சொன்னது புத்தம். ஆனால் இன்று உலக மக்களின் துன்பத்திற்கு புத்த மதத்தை சார்ந்தவர்களே காரணமாகிவிட்டார்கள். புலால் உண்ணக்கூடாது என்று சொன்ன புத்த மதத்தை பின்பற்றும் சீனர்கள்தான் இன்று உலகிலேயே கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள். அதாவது, நாய், பூனை, பன்றி, ஆடு, மாடு, கோழி, முட்டை, பாம்பு, உடும்பு, மீன், பூரான், பூச்சி வகைகள் இப்படி எதனையும் விட்டு வைக்காமல் கொடூரமான முறையில் அவைகளை உண்கின்றார்கள். இவர்கள் மத ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை, மனித ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை. சீன அரசும் தம் மக்களை முறைபடுத்த தவறி விட்டது. தாங்கள் செய்வது தவறு என்கின்ற எண்ணமே வராத அளவிற்கு அம்மக்கள் சென்றுவிட்டனர். எல்லாம் சகஜநிலையாகிவிட்டது. அவர்களை மதமும் கட்டுப்படுத்தவில்லை, அரசும் கட்டுப்படுத்தவில்லை. இவ்வளவு அட்டூழியம் செய்யும் சீனர்கள் தம் இன மனிதர்களையும் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும்?  பிற உயிர்களை கொலை செய்பவன், மனிதனையும் கொலை செய்ய அஞ்சமாட்டான். காரணம் மட்டுமே அவனுக்குத் தேவை. காரணம் பிறக்கும்போது காரியம் முடிந்துவிடும். உலக நாடுகளை அடக்கி ஆளவேண்டும் என்கின்ற சீனர்களின் காரணமே கொரோனா என்கின்ற காரியத்தில் முடிந்திருக்குமோ? என்கின்ற அச்சம் இயல்பாக நமக்கு எழுகின்றது.

இன்றைய உலகில் தான் சார்ந்த ”மதம்”தான் ஒரு மனிதனை அடையாளப்படுத்துகின்றது. இன்றைய உலகில் ஆன்ம நேயத்தை வலியுறுத்தும் மதங்கள் மூன்றுதான். இந்து, புத்தம், ஜைனம் இவை மூன்றுந்தான் ஆன்ம நேயத்தை சொல்கின்றன. இந்து மதம் ஆன்ம நேயத்தை சொன்னதே தவிர அதனை வலியுறுத்தவில்லை. இந்து மதத்தில் தென்னாட்டில் “சைவம்” என்கின்ற சமயமே உண்டு. சிவபெருமான் அதன் கர்த்தர். ஆனால் சைவ சமயத்தை பின்பற்றும் பெரும்பாலர்கள் அசைவர்கள்தான். இந்து மத வடநாட்டு வேதங்கள் உயிர் பலியிடுதலை வழிபாடாக சொல்லியிருக்கின்றது. அதனால் இந்து மதம் “ஆன்ம நேய விடயத்தில்” தோல்வியை தழுவுகின்றது. புத்தம், ஜைனம் இவை இரண்டு மதங்களும் ஆன்ம நேயத்தை சொன்னதுடன் மட்டுமல்லாது அதனை வலியுறுத்துவும் செய்கின்றன. புத்த மதத்தில் ஹீனயான புத்தர்கள் ஆன்ம நேயத்தை கடைபிடிக்கின்றார்கள். உலகில் இவர்கள் சொற்பமே. புத்த மதத்தின் மற்றொரு பிரிவான மகாயானமே உலகெங்கும் உள்ளது. இப்பிரிவினர் ஆன்ம நேயத்தை கடைபிடிப்பதில்லை. மேலும் புத்த மதத்தில் கடவுள் புறக்கனிக்கப்படுகின்றார். கடவுள் இல்லாத ஒழுக்க நெறி தீய விளைவையே தரும். எனவே ஆன்ம நேயம் சொன்ன புத்த மதமும் தோல்வியடைகின்றது. அடுத்ததாக ஜைன மதத்தில் ஆன்ம நேயம் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் கடவுள் மறுக்கப்படுகின்றது. அதனால் ஜைனமும் தோல்வியடைகின்றது. இன்றைய ஜைனர்கள் பக்தி வழியில் நடக்கின்றனர். அது விதிவிலக்கு.

மற்ற மதங்கள் எல்லாம் மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்துகின்றன. அதாவது முகமதியம், கிறுத்துவம் போன்ற மதங்கள் ஆரம்பத்திலேயே தோல்வியடைகின்றன. இவர்களுக்கு “ஆன்ம நேயம்” என்றால் என்னவென்றே தெரியாது. இவர்கள் மதம் போன போக்கில் போவார்கள். இவ்வுலகில் மதம் சொன்னதைத்தாண்டி “நல்லது” என எதுவுமில்லை என்ற வாதம் இவர்களுடையது. எனவே இம்மதங்களும் தோல்வியடைகின்றன. (இவ்விரு மதங்களை பின்பற்றுபவர்களில் ஆன்ம நேயர்களும் உள்ளனர். அவர்கள் விதிவிலக்கு.)


இதனை எல்லாம் ஆராய்ந்த வள்ளற்பெருமான், “மதங்கள் எல்லாம் பொய் பொய்யே…அவற்றில் புகாதீர்” என்று உலக மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கின்றார். கேட்பார் யார்? ஆன்ம நேயம் உள்ள மக்கள் வசிக்கும் உலகில் போர் வருமா?, மனிதனை சுற்றியுள்ள மற்ற உயிர்கள் கொலையுறுமா? மதம் தலை தூக்குமா? எங்கும் அமைதி அல்லவா நிலவும்! அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் நினைப்பவன், எவ்வாறு மனித உயிர்களை கொல்ல நினைப்பான்? அதனால்தான் வள்ளலார் “சன்மார்க்கர்கள் உலகை ஆள வேண்டும்” என்கின்றார்.

சரி… விடயத்திற்கு வருவோம். சீனர்களில் பெளத்தம் சார்ந்தவர்கள்தான் உள்ளார்களா? என்றால் இல்லை. அந்நாட்டில் பெளத்தம் அல்லாது ‘கன்பூசியம்’ மற்றும் ‘தாவோயிசம்’ என்கின்ற மிகப்பழைமையான மதங்களையும் சீனர்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். இவ்விரு மதங்களை பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கன்பூசியம்:
சீனாவில் கன்பூசியஸ் (Confucius) அவர்கள் கி.மு.551-ல் பிறந்தார். கி.மு.479-ல் இறந்தார். இவர் போதித்த மெய்யியல் கோட்பாடே கன்பூசியம் என்று வழங்கப்படுகின்றது. சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இன்றும் இவரது கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.


கடவுள் நன்மை, தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகின்றார். நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர்” என்கின்றது கன்பூசியம். எவ்வளவு உண்மை இதில் பொதிந்துள்ளது பார்த்தீர்களா! இவர் சொன்ன இந்த இரண்டு வரிகளை விளக்க வேண்டுமானால், நீண்டு எழுதிக்கொண்டே இருக்கலாம். சரியானவர்களால் மட்டுமே சரியானதை தேர்வு செய்ய முடியும். மற்றவர்கள் சரியில்லாததை சரியானதாக எடுத்துக்கொள்வார்கள். உலகில் உள்ள பெரும்பாலர்கள் சரியில்லாதததையே சரியானதாக எடுத்துக்கொள்கின்றனர்.

இவருடைய தத்துவங்கள் தனிமனித ஒழுக்கங்களையே சார்ந்துள்ளது. எனினும் ஆன்ம நேயம் என்பது இவருடைய தத்துவத்தில் இல்லை. ”ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு கன்பூசியசிடம் வந்தது, உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா? அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.”  இவரது கருத்துப்படி குதிரை சிறிய உயிரினமானாலும், குதிரைகளுக்கு என்னவானது என்றுதானே முதலில் கேட்டறிந்திருக்க வேண்டும். இல்லையே!. ஆனாலும் இவருடைய தத்துவங்களை ஆன்ம நேயத்துடன் பின்பற்ற ஏதுவாகவே உள்ளது. (கடவுள் நம்பிக்கையுடனும் ஆன்ம நேயத்துடனும் நாம் இவ்வுலகில் உள்ள எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம். ஆன்ம நேயத்துக்கு தடையாக உள்ள மதக்கோட்பாடுகளை நீக்கிவிட்டு மற்றதை பின்பற்றினால் அனைத்து மதங்களும் நல்லனவையே) கன்பூசியத் தத்துவங்களில் சிலதை பார்க்கலாம்…

உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் லஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.

"நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்".

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை".

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்".

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".

கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி, “என் வாயில் என்ன தெரிகிறது?” என்றார். “நாக்கு” என பதில் அளித்தார் சீடர். “பற்கள் இருக்கிறதா?” என்று கேட்டதும், “இல்லை” என்றார் சீடர். “இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்றார் கன்பூசியஸ். எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.
“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்” 
1. நல்ல பண்புகள்.
·         நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
·         நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
·         நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.
·         நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
·         உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.
·         கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
·         நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.
2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்
·         அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
·         ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
·         சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
·         பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
·         புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
·         அன்போடு பழகுவார்கள்.
·         நிலைமாறாமல் இருப்பார்கள்.
·         தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
·         ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
·         அனைவரையும் அரவணைப்பார்கள்.
·         எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
·         தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
·         சட்டத்தை மதிக்கிறார்கள்.
·         சுதந்திரமாக வாழ்வார்கள்.
·         பொறாமைப்பட மாட்டார்கள்.
3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்
·         பணிவன்பு
·         சகித்துக்கொள்ளும் தன்மை
·         சக மனிதர்கள் மீது நம்பிக்கை
·         விடாமுயற்சி
·         கருணை
4. மென்மையான குணங்கள் எவை?
·         மனஉறுதி
·         விடாமுயற்சி
·         மென்மையாகப் பேசுவது
5. கெட்ட குணங்கள்
·         பாசாங்கு செய்தல்
·         கோபப்படுவார்கள்.
·         சண்டை செய்வார்கள்.
·         வதந்திகளை பரப்புவார்கள்.
6. படிப்பு
·         சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
·         படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
·         உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
·         நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
·         ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.
7. தலைவர்
·         பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
·         நம்பிக்கைக்குரியவர்.
·         உயிரைத் துச்சமாக மதிப்பர்.
·         நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
·         நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
·         அமைதியாக இருப்பார்கள்.
8.கடவுள்,கோயில்,சடங்குகள்
·         கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.
·         பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.
9. வெறும் சில
·         கெட்டதை எண்ணாதே
·         நேர்மையின் வழியில் நட
·         தன்னடக்கத்துடன் இரு
·         மனஉறுதியுடன் இரு
·         கண்ட நேரத்தில் சாப்பிடாதே
·         வயிறு நிறையச் சாப்பிடாதே.
·         மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
·         எளிமையாக இரு
·         தவறு செய்தவர்களை மன்னித்திடு

தாவோயிசம்:
தாவோயிசமும் சீனாவின் மிகப் பழமையான தத்துவங்களாகும். தாவோயிசத்தின் வேர்களானது கி.மு 4 ஆம் நுாற்றாண்டு வரையாவது செல்கிறது. ஆரம்பகால தாவோயிசம் அதன் அண்டவியல் கருத்துக்களை இயற்கைவாதிகளின் தத்துவங்கள் (இங்யாங்) மற்றும் இயற்கைவாதிகள் வசமிருந்தும், சீன கலாச்சாரத்தின் பழமையான நூல்களில் ஒன்றான யிஜிங் இடமிருந்தும் பெற்றுள்ளது எனலாம். இந்த நுாலானது, இயற்கையின் மாற்று சுழற்சிகளுக்கு இணங்க மனித நடத்தையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு தத்துவம் சார்ந்த வழியை விவரிக்கிறது. லாவோ சீ (சீனம்: 老子; பின்யின்lǐozǐவேட்-கில்சு: லாவோட்சு) என்ற கற்பிதக் கோட்பாடு கொண்ட தாவோ தே ஜிங் என்ற கையடக்கப் புத்தகமும் பின்னர் ஜுவாங்சி எழுதிய எழுத்துக்கள் கொண்டுள்ள கருத்துக்களே தாவோயிச மரபின் மூலக்கருத்துக்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

மாறுதல் தானாக நிகழும் என்பது லாவோ சீ கூறிய கோட்பாடு. இதுவே 'தாவோயிசம்' என அழைக்கப்பட்டது. இராபினெட் அவர்கள் தாவோயியம் வெளிப்படுவதற்கான நான்கு கூறுகளை அடையாளம் கண்டுள்ளார். அவை:
1.   தத்துவார்த்த தாவோயியம், அதாவது தாவோ தே ஜிங் மற்றும் சுவாங் சி
2.   பேரின்பம் அல்லது மெய்யின்பத்தை அடைவதற்கான உத்திகள்
3.   நீண்ட வாழ்க்கை அல்லது சாவின்மையை அடைவதற்கான வழிமுறைகள்
4.   ஆவிகளைத் துரத்தும் நடைமுறை
ஓஷோ அவர்கள் "தாவோ"இயத்தின் கருத்துகளை முன்வைத்தும் 'சுவாங்க்தஸு' கூறிய பொன்மொழிகளை முன்வைத்தும் "நீங்கள் நிறைய சேர்த்து வைத்துள்ளீர்கள். மிகவும் நிறைய சேர்ந்து விட்டதால் உங்களுக்குள் எதுவும் ஊடுருவி செல்ல முடியாது. உங்கள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. நீங்கள் மறையும்போது, நீங்கள் இல்லாதபோது கதவுகள் திறந்து கொள்கின்றன. பிறகு, நீங்கள் அளவிட முடியாத விண்ணைப்போல் ஆகிவிடுகின்றீர்கள். இதுதான் உங்களுடைய இயற்கைத் தன்மை. இதுதான் 'தாவ்(TAO)' என விளக்கம் தருகிறார்.

டாடே சிங் மற்றும் சுவாங்சியால் நிறுவப்பட்ட டாவோயிசம் முதலில் ஒரு தத்துவமாக உருவெடுத்து பின்னா் ஒரு மதமாக மாறியது. டாவோ என்னும் சொல்லிற்கு “பாதை” “வழி” என்று பொருள். ஆனால் இது மெய்ப்பொருள் குறித்து ஆய்வு செய்யும் இயலில் உணரமுடியாத விளக்க முடியாத அண்டம் முழுவதும் பரவியுள்ள ஒரு சக்தியைக் குறிக்கும். அனைத்து சீன தத்துவங்களும் நன்னெறிவாழ்க்கை வாழ சரியான வழியைத் தேடும் முயற்சியாக இருந்தாலும், டாவோயிசம் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கருத்துகளைச் சுட்டுவதால் இதற்கு டாவோயிசம் எனப் பெயா் வந்தது. இது செயலற்ற தன்மை (wu wei), மென்மையின் பலம், தன்னிச்சை, ஒத்திசைவு போன்றவற்றைப் போதிக்கின்றது. கன்பூசியஸ் அறிவுரைகளுக்கு மாற்றாக இது தோற்றமளித்தாலும், “புறத்தில் கன்பூசியஸ் அறிவுரையைப் பின்பற்றவும் அகத்தில் டாவோயிசத்தைப் பின்பற்றவும்” என்னும் மரபுத் தொடா்புக்கு ஏற்ப இரண்டு தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உலகை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி மேற்கொள்ளப்படும் பல செயல்கள் உண்மையில் ஊறு விளைவிக்கின்றன என்ற அசைக்க முடியாத எண்ணத்தைக் கூறி இந்த உலகை மேம்படுத்த இது போன்று இயற்கையையோ மனித நடவடிக்கைகளையே ஊறுவிளைவிக்கும் செயல்களை செய்யாமல் தடுப்பதை வலியுருத்துகிறது. ஒற்றுமையாக இருப்பதும் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை மேற்கொள்வதுமே சிறந்த வழியாகும் என்று வலியுறுத்துகிறது. 

கிறுத்துவம்:
சீனா 1949 – ஆம் ஆண்டு முதல் பொதுவுடமைத் தத்துவத்தை கடைபிடித்துவரும் நாடாகும். பொதுவுடமை என்பது மதத்தை வெளியேற்றி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். எனவே சீனாவில் அதன் பண்டைய மதங்களான புத்தம் (புத்தம் இந்தியாவில் தோன்றி சீனாவிற்கு செல்லினும், அது அந்நாட்டின் கலாச்சாரத்தை ஏற்று சீன புத்தமாக மாறியது), கன்பூசியிசம், தாவோயிசம் ஆகிய இவை மூன்றும் சீனாவின் கலாச்சாரத்துடன் இணைந்த மதங்களாகும். இவையின்றி கிறுத்துவமும், முகமதியமும் சீனாவில் ஊடுறுவிய மதங்களாகும். அதனால் இந்த இரண்டு மதத்திற்கும் சீனாவில் அதிக கட்டுப்பாடு உண்டு. இவ்விரு மதங்களும் சீன கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சீனாவின் அரசியல் சரத்து 36, மத நம்பிக்கையில் சீனர்களுக்கு முழு சுதந்தரத்தை அளிக்கின்றது. ஆனால் சுதந்தரம் என்பது, சட்டத்தின் அனுமதியில்லாமல் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்ற அர்த்தம் கிடையாது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சீன அரசு.
சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், கிறுத்துவ வழிபாட்டு தலங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்சுகளின் வழிபாட்டுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.

முகமதியம்:
கிறுத்துவர்களை போலவே சீனாவில் இஸ்லாம் மதத்தினரும் தங்களது மத அடையாளங்களை இழந்து மிகுந்த கட்டுப்பாடுகளுடனே வாழ்கின்றனர். சோவியத் யூனியன் பிளவுபட்டதிற்கு வஹாபிகளும், மிஷனரிகளும் முக்கிய காரணம் என சீனா நம்புகின்றது. எனவே இவ்விரு மதத்தத்துவங்களை சீனா விரும்புவதில்லை. அடக்கியே ஆள்கின்றது. மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் கஷ்கர் பகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.  

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாச்சாரத்திற்கு முழுமையாக மாறிவிட வேண்டும் என அந்த நாட்டில் 2019-ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்லாமிய மக்கள் தொழுவது, நோன்பு இருப்பது, தாடி வைப்பது, ஹிஜாப் அணிவது சட்டப்படி குற்றமாகும் என சீனாவின் அதிகாரப்பூர்வ “ குளோபல் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. உலகமயமாக்கலில் மதச்சார்பற்ற தேசம் உருவாவதை பற்றி பேசினாலும் மதச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மதச் சண்டைகளால் சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைகிறது.
சீனா மிகப்பெரிய கம்யூனிஸ நாடாக இருந்தாலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆகையால், அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், அரசியல் உள்ளிட்டவையில் பிற இன மக்களையும் சீன கலாச்சாரத்திற்குள் கொண்டு வர சீனமயமாதலை மேற்கொண்டு வருகின்றனர். சீனமயமாதலின்படி, சீனாவில் இஸ்லாம் பழகுவது, படிப்பது குற்றமாகும். பெண்கள் ஹிஜாப் அணிவது, ஆண்கள் தாடி வளர்ப்பது, நோன்பு இருத்தல், தொழுகை செய்வது குற்றமாகக் கருதப்படும். இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
18 வயதிற்கு குறைவானவர்கள் மசூதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சியில் பணியாற்றுபவர்கள் ரம்ஜான் கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. உய்கார் இன இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது குழந்தை கருவுற்று 9 மாதங்கள் முடிந்தாலும் கூட கரு கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றது. சீனாவை விட்டு வெளியேற கூடாது என்பதற்காக அவர்களின் பாஸ்போர்ட் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.
கம்யூனிஸ நாடான சீனாவில் இஸ்லாம் தவிர கத்தோலிக், புத்த மதம், டாவோயிசம், புரோட்டஸ்டன்ட் உட்பட 5 மதப் பிரிவுகள் உள்ளன. சீனாவின் சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் முயற்சி இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் என்ற பார்வை இருக்கும். அது தவறாகும்.
“ 2017 செப்டம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள ஐந்து முக்கிய மதங்களின் மன்றங்கள், சீன பண்பாட்டுடன் மதங்கள் ஒருங்கிணைந்த ஒன்றாக இருப்பதற்கு ஒருமித்தமாக சம்மதம் தெரிவித்ததாக ” குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஊடுறுவிய மதங்கள் தங்களது சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை சீன நாட்டிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
சரி அன்பர்களே… நமது அண்டை நாடான சீன மக்களின் கலாச்சாரமும், மதங்களும் அவர்களை ஒரு சீரான ஒழுக்கத்துடனே நடைபயில வைத்துள்ளன. ஆட்கொள்ளி உயிரிகளை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனால் தனது ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மற்றவர்களுக்கு இரண்டு கண்ணு போகவேண்டும் என்ற நோக்கில் அதனை பரவ விட்டிருப்பார்களோ? என்ற ஐயம் எனக்கு ஏற்படவே செய்துள்ளன.
மதம் காட்டும் வழி மறைமுகமாக இருந்தாலும், வெளிப்படையாக சட்டத்தின் ஆட்சிதான் அங்கு நடைபெறுகின்றது. எனினும் அம்மக்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? எல்லாவற்றிக்கும் அடிப்படை “ஆன்ம நேயம் இல்லை” என்பதே வெளிப்படையாக தெரிகின்றது. இவ்வுலக மக்கள் ஆன்ம நேயத்தை உணர வேண்டும். ஆன்ம நேயம் வந்துவிட்டால், எங்கும் அமைதி அமைதியே. பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கமும், பொருளாதாரத்தில் வல்லரசாக வேண்டும் என்ற எண்ணமும் சீன நாட்டினை குறுக்கு வழியில் ஆனம நேயமற்ற, மனித நேயமற்ற வழிகளில் இட்டுச் செல்கின்றது. எண்ணற்ற தத்துவ ஞானிகள் அவதாரம் செய்த சீனா ஒரு புனித பூமியாகும். இன்றைய சீனர்கள் அதனை உணர்ந்து தங்களது செயல்பாடுகளை திருத்திக்கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல ”உண்மை” அவர்களை மன்னித்து நேர்வழியில் அவர்களுடைய எண்ணங்களை அடைய வழிகாட்ட வேண்டுமென வேண்டி முடிக்கின்றேன். நன்றி.
தி.ம.இராமலிங்கம்.

For e-book
https://drive.google.com/file/d/1h6u9OrR2qZHPRIfjWB2jPYKz6oAV-LU2/view?usp=sharing

Friday, April 17, 2020

மாதப் பூசம் - MONTHLY POOSAM - 2020-21

MONTHLY POOSAM - 2020-21


அன்பர்களே...! நடப்பு நிதி ஆண்டில் 02-04-2020 வியாழன் அன்று நமது வடலூரில் மாதப்பூசத்தன்று பக்தர்கள் இன்றி ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூர் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றது முதல் முறையாகும். கொரோனா (கோவிட்-19) தொற்றால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. எனினும் தருமச்சாலை மட்டும் தினமும் இயங்கி வருகின்றது மகிழ்ச்சியளிக்கின்றது. 



02-04-2020 அன்று பக்தர்கள் இன்றி வடலூரில் ஜோதி தரிசனம் நடந்ததை ஒரு அன்பர் தமது கைப்பேசியில் வீடியோ எடுத்த காட்சி மற்றும் புகைப்படம். 



உலகம் முழுதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருப்பினும், நமது வடலூர் தருமச்சாலை பணிகள் மட்டும் என்றும் உயிர்ப்பு நிலையில் இருப்பதை தந்தி தொலைக்காட்சி மூலம் காணவும்.





30-04-2020 அன்றும் வடலூர் வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசனம் நடைபெறும். கொரோனா காரணமாக ஊரடங்கு    மே - 03 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். இல்லங்களில் இருந்து குடும்பத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விளக்கேற்றி தொழவும். நன்றி. 
தி.ம.இராமலிங்கம்.

27-05-2020 - வடலூர் வரலாற்றில் மூன்றாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசன - மாதப்பூசம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு மே-31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. 


23-06-2020 - அன்று நடைபெற இருக்கும் மாதப்பூசம் நான்காவது முறையாக தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு இன்னும் இந்தியா முழுதும் நீடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் (சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது) மூடப்பட்டுள்ளதால் வடலூர் ஞான சபையும் ஜோதி தரிசனம் காட்ட இயலாமல் உள்ளது. ஆகையால் அன்பர்கள் இம்மாதமும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நன்றி.

21-07-2020, 17-08-2020 மற்றும் 13-09-2020 மாதப்பூசங்களும் கொரோனா தொற்றால் தொடர்ந்து 7-ஆவது மாதமாக தடைபட்டுள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Thursday, April 16, 2020

உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?


உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?
--தி.ம.இராமலிங்கம்.  

அன்புடையீர் வணக்கம்!
இத்தலைமுறை மக்கள் "சுனாமி" என்கின்ற ஆழிப்பேரலையை முதன் முதலாகக் கண்டார்கள். அதற்கு அடுத்ததாக ”உயிரி” தாக்குதல் என்பதை மிகப்பிரமாண்டமாக நாம் முதன் முதலாக பார்க்கின்றோம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் ஒன்றை உடனே பிரேக் போட்டு நிறுத்தினால் என்னவாகும்? வாகனம் விபத்துக்கு உள்ளாகி கவிழும். அதில் உள்ள மக்கள் உயிரிழப்பார்கள். பின்னால் தொடர்ந்து வருகின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நிலை குலையும். சாலை, சக்கரத்தின் உராய்வால் பழுதாகும்.
இப்படி ஒரு நிலையைத்தான் உலகம் தற்போது சந்திக்கின்றது. பொருளாதாரம் என்னும் வாகனம் உடனே நிறுத்தப்பட்டதால் உலகெங்கும் சொல்லொன்னா பாதிப்பு. வேறு வழியில்லை. உலகெங்கும் மயான அமைதி. மனிதன் தன்னுயிரை பாதுகாக்க வீடுகளில் முடங்கினான். மற்ற உயிரினங்கள் எல்லாம் சுதந்தரமாக திரிகின்றன. ஆனால், மனிதன் மட்டும் வீடுகளில் தஞ்சம் அடைந்தான். கண்ணுக்குத்தெரியாத ஓர் அணு உயிரி “கொரோனா” என்னும் பெயரில் மனிதனை மட்டும் கொலை செய்கின்றது.
எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை கண்ட மனிதன் தற்போது தமது கையறு நிலையால் வெட்கப்படுகின்றான். கண்ணுக்குத்தெரியாத ஒரு உயிரியிடம் தோற்றுவிட்டான். தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தங்களது கடவுள்களை மக்கள் உருவாக்கிக் கொண்டார்கள். மனிதன் தங்களது கடவுள் பெயரால் உயிர்க் கொலைகளை செய்கின்றார்கள். மற்ற உயிர்களை ஈவு, இரக்கமின்றி கொலை செய்து உண்கின்றார்கள். கடவுள் பெயரால் கோயில்களிலும், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரிலும் மற்ற உயிர்களை சிறையில் அடைக்கின்றார்கள், தனிமைப் படுத்துகின்றார்கள். ஆனால், தங்களது உயிருக்கு ஆபத்து என்றதும், தங்களது கடவுள்களை துணைக்கு அழைக்கின்றார்கள், மணி அடிக்கின்றார்கள், கை தட்டுகின்றார்கள், விளக்கேற்றுகின்றார்கள், பிரார்த்தனை செய்கின்றார்கள், ஜெபம் செய்கின்றார்கள், தொழுகின்றார்கள். அப்பப்பா… புலம்பித் தள்ளுகின்றார்கள். மனிதனால் ஒரு உயிர் தனிமைப்படுத்தப்படும் போது, அதன் வலி மனிதனுக்கு உணரவில்லை. இப்போது மனிதன் தனிமைப்படும் போது, அய்யோ… என அலறுகின்றான். ஒரு உயிரை கொலை செய்யும்போது மனிதன் அதன் வலியை உணரவில்லை. ஆனால், இப்போது தான் கொலையுறும்போது, அய்யோ… கொடுமை… என அலறுகின்றான். அப்போதும் மனிதன் திருந்துவதாக இல்லையே. சீனாவில் கொரோனா கொஞ்சம் அமைதி காத்தப்போது மீண்டும் சீன மக்கள் பழையபடி உயிர்களை கொன்று தின்ன ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனா பார்த்தது… மீண்டும் அங்கு தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே சில முக்கிய மாற்றங்களை உலக நாடுகள் இனி செய்தே ஆகவேண்டும்.
கொரோனாவால் உண்டாக்கப்பட வேண்டிய உலகலாவிய மாற்றங்கள்:
1.    இறைவன் மனிதர்களை கால்நடையாகத்தான் படைத்தான். அதனால் அவன் எங்கு பிறந்தானோ, அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவுதான் அவனது எல்லை. சுமாராக இருநூறு கிலோமீட்டர் சுற்றளவு என்றால், அந்த சுற்றுளவை அவன் தனது வாழ்நாளில் கடக்கக்கூடாது. அறிவியல் முன்னேற்றத்தால் வெளி நாடுகளுக்கு செல்ல நேர்ந்தால், ஓரிரு நாட்களில் தன் இருப்பிடம் திரும்பிவிட வேண்டும். நிரந்தரமாக பிறந்த இடத்தை துறத்தல் கூடாது. வேலை கிடைக்கும் இடத்தில் மக்கள் செல்வதை தடுத்து, மக்கள் இருக்குமிடத்தில் வேலை வழங்க அரசு முயல வேண்டும்.
2.    ஐம்பூதங்களும் மனிதன் தனிமைப்படும்போதுதான் மகிழ்கின்றன. மனிதன் உருவாக்கிய எண்ணற்ற தொழிற்சாலைகளால் ஐம்பூதங்களும் மாசடைந்தன. தற்போது அவைகள் தங்களை புதுப்பித்துக்கொண்டன. அதனால் மனிதன் இனி தொழிற்சாலைகளை இயக்காமல் நிரந்தரமாக மூடுதல் வேண்டும். அதற்கேற்ப தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் அனைத்தும் மிகவும் புனிதமானதாக அறிவிக்க வேண்டும்.  
3.    பிற உயிர்களை கொன்று தின்னும் பழக்கத்தை உலக மக்கள் உடனே விடவேண்டும். மீன்பிடித் தொழில், கோழி முட்டை உற்பத்தி, இறைச்சிக் கடைகள் ஆகியவை உலகில் எங்கும் இயங்கக் கூடாது. தாவர உணவுகளை மட்டுமே மனிதர்கள் உண்ண வேண்டும்.
4.    பிற உயிர்களை சிறை படுத்துதல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்.
5.    பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. அதனை மாபெறும் குற்றமாக அறிவித்து தண்டனை அளிக்க வேண்டும். குப்பைகள் அதற்கான இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை போட்டால் அதனையும் குற்றமாக கருதி தண்டனை அளிக்க வேண்டும்.
6.    புகை பிடித்தல், மது அருந்துதல் அறவே கூடாது. அதன் தயாரிப்புகளை உலகம் நிறுத்த வேண்டும்.
7.    உலகம் முழுதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது. அவைகளை சுற்றுலா தலமாக மட்டுமே நிர்வகிக்க வேண்டும். புதியதாக எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களும் கட்டக்கூடாது. உலக மக்கள் அவரவர்களது கடவுள் வணக்கங்களை அவரவர்களது வீட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். திருவிழாக்கள், மதத்தின் பெயரால் வரும் பல பண்டிகைகளை பொதுவெளியில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும். கடவுள் இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்… அவர் யார்? என்பதில் மக்களுக்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதால், உண்மை கடவுள் மக்கள் மத்தியில் வெளிப்படும்வரை, மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா கடவுள்களுக்கும் பொதுவெளியில் வணங்கத் தடை விதிக்க வேண்டும். கொரோனாவால் தற்போது நடைமுறையில் இருப்பது இதுதானே! எனவே இதனை நிரந்தரமாக்க வேண்டும். உண்மை கடவுளுக்கு, மனித இனம் தெரியப்படுத்தும் செய்தி இதுவாகும். உண்மை கடவுள் வெளிப்படும் நேரம் சமீபத்தில் இருப்பதாக அனைவரும் சொல்வதால், அவர் வெளிப்பட்ட பிறகு, பொதுவெளியில் கடவுள் வழிபாட்டை வைத்துக்கொள்ளலாம். அதுவரை வீட்டில் மட்டுமே கடவுள் வணக்கம் செய்ய வேண்டும்.
8.    உலகில் உள்ள அனைத்து வாகனங்களும் மின்சார சக்தியால் மட்டுமே இயங்கும்படி வடிவமைக்க வேண்டும். காற்று மாசு அறவே கூடாது.
9.    நாட்டு மக்களை காக்க வேண்டும் என, ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கே தங்களது மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றார்கள். இதனை தடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டு எல்லையும் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை மதித்து நடக்க வேண்டும். அது தொடர்பாக போர் ஏற்படக்கூடாது. மாறாக ஐ.நா. சொல்லும் தீர்ப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் இருக்கவே கூடாது. மக்களது வரிப்பணத்தை மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே உலக நாடுகள் செலவழிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் கூட, அமெரிக்கா இந்தியாவிற்கு 1000 கோடிக்கு இராணுவ பொம்மைகளை விற்கப்போகின்றதாம். இந்தியாவில் மக்கள் உணவிற்கு அல்லல் படுகின்றார்கள். இருக்க இடம் இல்லாமல் தெருவில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் இந்திய மக்களின் வரிப்பணம் 1000 கோடி ருபாய் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பது நியாயம் இல்லை. அதேபோல் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்தது வருத்தமளிக்கின்றது. எனவே இராணுவமில்லா நாடுகள் அமைய உலக நாடுகள் ஐ.நா.வின் மூலம் விடை காண வேண்டும். கொரோனா தாக்குதலால், இனி இராணுவத்திற்கு வேலையில்லாது உயிரி தொழில்நுட்பத்தை எல்லா நாடுகளும் கையாளும் என தெரியவருகின்றது. அதுபற்றி விரிவாக வேறு கட்டுரையில் காண்போம்.    
10.  உலகம் முழுதும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முதல் 15 நாட்கள் தொடர்ந்து மக்கள் தனித்திருக்க வேண்டும். தற்போது உள்ளது போல ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். 15-நாட்களுக்கு மட்டும் கொரோனா வந்து செல்வதும் நல்லதுதான்.
11. எந்த ஒரு நோய்களுக்கும் இயற்கை வைத்தியங்களான, சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய வைத்தியத்தையே உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும். இந்தத் துறையில் ஆய்வகங்கள் ஏற்படுத்தி புதிய ஊட்டச்சத்து உணவினை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஊட்டச்சத்து இல்லாததுதான் கொரோனா மற்றும் எந்த நோய்க்கும் முதல் காரணம். ஊட்டச்சத்து உள்ளவர்களை எந்த கொரோனாவும் ஒன்றும் செய்ய முடியாது.  அதனை நாம் பாரம்பரிய இயற்கை வைத்தியத்திலேயே அளித்து எந்த ஒரு கொடூர நோயினையும் குணமாக்க முடியும். மாறாக  மருந்து என்கின்ற வேதியியல் ஆங்கில மருந்தால் மக்களுக்கு எந்த நோயும் தீர வாய்ப்பில்லை. ஒரு நோய் தீர்ப்பது போன்று மறு நோயை உண்டு பண்ணுவதுதான் ஆங்கில மருந்தின் எதார்த்தமாக இருக்கின்றது. மேலும் உலக நாடுகள் மக்களின் நோய்களை முன்னிறுத்தி, மருந்து தயாரிக்கின்றோம் என மக்களது பணத்தை கொள்ளையடிக்கின்றார்கள். மருந்து தயாரிக்க பல தொழிற்சாலைகள் ஏற்படுத்தி உலகை மாசுபடுத்துகின்றார்கள். ஊழல் நிறைந்த இந்த அலோபதி முறையை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். மக்கள் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களது அரசு அலோபதியை தேர்ந்தெடுத்தால், அவ்வரசு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றது என்று உணர வேண்டும். தற்போது தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகில் பெரும் ஊழல் நடைபெற்று வருகின்றது. இந்நிலை மாற வேண்டும். மக்கள்தான் மாற்ற வேண்டும். புரட்சி வெடிக்க வேண்டும். ஜனநாயக அரசு, மக்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். சுகாதார விஷயத்தில் அரசு சொல்வதை மக்கள் கேட்டால்.. மக்கள் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் இருப்பர். நமது அரசர்கள் மட்டும் செல்வந்தர்களாக ஆகிவிடுவர். எனவே மக்கள்தான் திருந்த வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தற்போது இந்திய உச்சநீதி மன்றமும் பாரம்பரிய வைத்தியத்திற்கு தடைவிதித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. பாரம்பரிய வைத்திய சாலைகள் பெருக வேண்டும். பாரம்பரிய வைத்திய ஆராய்ச்சிகள் பெருக வேண்டும். மருத்துவமனைகள் இல்லாத நாடு, நாட்டு மருந்தகங்கள் மட்டுமே உள்ள நாடு, மெடிக்கல் இல்லா நாடு உருவாக மக்களிடம் விழிப்புத் தேவை, புரட்சி தேவை.
12. உலகில் மக்கள் எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும், அத்தொழில் பிற உயிர்களை சிறிதும் பாதிக்காதவண்ணம் உள்ளதா? எனவும், உலகில் உள்ள ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் இவைகளை பாதிக்காத வண்ணம் உள்ளதா? எனவும் ஆராய்ந்து அத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். மனிதன் உட்பட மற்ற உயிர்களுக்கும் பாதிப்பு உண்டானாலும், ஐம்பூதங்களுக்கு மனித செயல்களால் பாதிப்பு உண்டானாலும் கொரோனா போன்ற உயிர்கொல்லி உயிரிகள் வந்தே தீரும். மனித உயிர்களும் மனிதன் அல்லாத பிற உயிர்களும் ஐம்பூதங்களும்தான் நமக்குக் கடவுள். இவைகளுக்கு துன்பம் விளைவித்துவிட்டு, நாங்கள் எங்களது கடவுளை பூஜை செய்கின்றோம், ஜெபிக்கின்றோம், தொழுகின்றோம் என்பதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு.
அன்பு மக்களே… நாம் இதுவரை கொரோனா பாதிப்பால், உலகளவில் தேவையான மாற்றங்களை பற்றி படித்தோம். உலகம் என்பது நம்மில் இருந்துதான் துவங்குகின்றது. எனவே முதலில் நாம் திருந்துவோம். உலகம் தன்னால் திருந்தும். மனிதனிடத்தில் பெரும் மாற்றங்களை இறைவன் எதிர்பார்க்கின்றான் என்பதை நாம் கொரோனா மூலம் அறிய வேண்டும். கொரோனாவால் உயிர் இழந்த, உயிர் இழக்க உள்ள உலக மக்களுக்கு இறைவன் தனது அருளால் மன்னிப்பைக் கொடுத்து, மறு பிறவியும் மனிதப் பிறவியாகவே கொடுத்து அருள வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல உண்மையிடம் வேண்டுதல் வைக்கின்றேன்.
--தி.ம.இராமலிங்கம்.        
For e-book link
https://drive.google.com/file/d/1gYOBnooezOr9IfmLJgG2uuvicVUBIvol/view?usp=sharing

Tuesday, April 14, 2020

வீறியெழல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


இராமலிங்க அந்தாதி



இங்கு எழில்மாறல் ஏடுகள் சொன்ன
அங்கக் கடவுள் எல்லாம் - மங்கியே
விகாரி ஆண்டில் வீழ ராமலிங்கமே
மகா மந்திர மணியாவான். - 995

வந்தனம் அன்பர்களே!

எழில்மாறல் தமிழ் வருடம் பிறக்கும்போது எழிலாகவும், செல்லும்போது எழில்மாறலாகவும் (அழகின்மை) சென்றது எவ்வளவு பெயர் பொருத்தமாக உள்ளது பாருங்கள். இராமலிங்க அந்தாதியில் இந்த எழில்மாறல் வருடம் பற்றி குறிப்பிடுகையில் ”ஏடுகள் சொன்ன அங்கக் கடவுள் எல்லாம் மங்கி விகாரி ஆண்டில் வீழும்” என்று குறிப்பிட்டதை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வீழ்ந்துக்கிடப்பதை பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

சரி… அன்பர்களே… இதோ இன்று, 60 தமிழ் வருடங்களில் 34 –ஆவது வருடமான ”வீறிஎழல்” வருடம் பிறந்துள்ளது. இராமலிங்க அந்தாதியில் குறிப்பிட்டுள்ளபடி இவ்வருடத்தில் வள்ளற்பெருமான் நமது உள்ளங்களில் ஓர் அருவாக இருந்து உலக மக்களுக்கு எல்லாம் ஆன்ம அறிவை பெருக்குவார். ஆன்ம அறிவால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பது வள்ளலாரின் சத்தியம். இந்த வீறிஎழல் ஆண்டின் துவக்கம் நமக்கெல்லாம் கடுமையானதாக இருந்தாலும், அந்தக் கடுமையால் நமக்கெல்லாம் ஆன்ம அறிவை உண்டாக்க இறைவன் முயல்கின்றான் போலும். அவனது செயல் வெற்றியடைய நாமெல்லாம் இவ்வருடத்தில் உழைப்போம். பிறக்கும் குழந்தை வீறிஎழுந்தால்தான் தாய் மகிழ்வாள். நாமும் இவ்வருடத்தில் ஆன்ம அறிவு பெற்று ஒரு புதியக் குழந்தையாக வீறிஎழுந்து இறைவனை மகிழ்விப்போம்.        

மணி ஓசையால் மனம் வீறியெழுந்து
அணி பெற்று ஆன்மஅறிவுப் - பணியை
சார்வரி வருடம் செய்ய ராமலிங்கமே
ஓர்அருவாக உள் இருப்பான். - 996

அனைவருக்கும் வள்ளலாரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.