Sunday, September 29, 2024

உடன்கட்டை

உடன்கட்டை

RAMALINGAM T M
உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!

இது 1798ல் எழுதப்பட்டது ..
அவர் பெயர்: Donald Campbell ..
--
பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் ..

இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை ..

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் ..

வெள்ளை சேலை கட்டி இருந்தாள் ..

தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள் ..

அவளைச் சுற்றி 20 பெண்கள்
நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள் ..

அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்
..
முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் ..
உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள் ..

பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் ..

இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள் ..

இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள் ..

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள் ..

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார் ..
மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள் ..

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார் ..

அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன் ..

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன் ..

500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு அழைத்தார் ..

சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார் ..

நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் ..
அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள் ..

பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள் நெற்றியில் தடவினார்கள் ..

பிறகு அந்தப் பெண் சிதைக்கு அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள் ..

சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது ..
இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல் அருகில் அமர்ந்தாள் ..

பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை, திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள் ..

தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார் ..

பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள் ..

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள். ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள் ..

அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார் ..

பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் ..

பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள் ..

பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள் ..

பிறகு,இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள் ..

குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள் ..

பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள் ..

இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது ..

இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார் ..

ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார் ..

பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள் ..

பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார் ..

பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள் ..

அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது ..

ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது ..

சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது ..

நான் அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் ..

என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது ..

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும், ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது ..
தோழர் yazh Vellingiri
Via இம்சை அரசி தென்றல்

Sunday, September 22, 2024

குழந்தை பெறுவதை நிறுத்து

குழந்தை பெறுவதை நிறுத்து

RAMALINGAM T M
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?

++++++++++++++++++++++++++++++++++
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?
கண்டிப்பாக சாபம் இல்லை. அதுவும் ஒரு வாழ்க்கை முறை.
ரஃபேல் சாமுவேல் என்கிற இளைஞர் ஆரம்பித்த இயக்கம் தான் "Stop Having Babies". இவர் ஒரு ஆன்டிநேட்டலிஸ்ட். அதாவது குழந்தை பெற்று கொள்வதற்கு எதிரானவர்.
ரஃபேல், சில வருடங்களுக்கு முன் தன் பெற்றோருக்கு எதிராக ஒரு வினோதமான வழக்கு தொடர்ந்தார். அவருடைய சம்மதத்தை பெறாமல் அவரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது தவறு என்றும், அதற்கு ஈடாக தன் வாழ்நாளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பெற்றோரே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவரது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவரது பெற்றோர் இருவரும் வழக்கறிஞர்கள். அவர்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களாக தெரியவில்லை. அவரது தாயார், "எனது மகன் சுய சிந்தனை கொண்டவனாக வளர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் அவனுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இந்த வழக்கை கிழி கிழி என கிழித்து விடுவேன்" என்று கூறி இருக்கிறார்.
கேட்ட மாத்திரத்தில் ஆன்டிநேட்டலிஸ்ட்கள் இயற்கைக்கு புறம்பான மனித நேயமற்ற வெறுப்பு மிகுந்தவர்கள் என்று தோன்றுகிறது அல்லவா? அவர்கள் நிலைப்பாட்டுக்கான காரணங்களை கேட்டால் அந்த எண்ணம் மாறி விடும்.
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுகமானது அல்ல. ஒவ்வொரு படியிலும் போட்டி, பொறாமை, போராட்டம், வேலைவாய்ப்பு திண்டாட்டம், தோல்வி, ஏமாற்றம், சமூக கட்டுப்பாடு, நோய், இயலாமை என்று கசப்பான அனுபவங்கள் நிறைந்தது. வாழ்க்கையை பற்றிய கசப்பான உண்மைகளை அனுபவங்களை அறிந்திருந்தும் அவற்றை ஏன் குழந்தைகள் மீது (அதுவும் தன்னுடைய குழந்தைகள் மீது) திணிக்க வேண்டும்?
பெற்றோராக நம் குழந்தைகளின் நன்மைக்காக எதை வேண்டுமானாலும் செய்வோமேயானால், அவர்களை ஏன் நாமே இந்த இன்னல்களுக்கு உட்படுத்த வேண்டும்?

பெற்றோருடைய அன்பு நிபந்தனை இல்லாதது, சுயநலம் இல்லாதது என்றாலும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காரணம் அனைத்தும் சுயநலமானது

என் குலம் தழைக்க வேண்டும்

என் வியாபாரத்தை எனக்கு பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

என்னை வயதான பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

சின்ன குழந்தைகள் செய்யும் குறும்பு முகபாவனைகள் அழகாக இருக்கும். அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கொஞ்சி விளையாட வேண்டும்

குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் ஊர் என்னை என்ன சொல்லும்? அந்த அவமானத்தை நான் தாங்குவதை விட, வாழ்க்கை வீசும் இன்னல்களை வாழ்நாள் முழுவதும் என் குழந்தை எதிர் கொள்ளட்டும் என்று எண்ணம்

நாம் வாழும் உலகத்தை சிறந்ததாக ஆக்க, நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை களைய, பூமியை பசுமையாக்க பெரிதாக நாம் முயற்சி செய்யவில்லை. இன்னமும், பசி பட்டினி தண்ணீர் பற்றாக்குறை வன்முறை வன்புணர்வு எல்லாமும் ஜம்மென இருக்கிறது.
ரஃபேல் ஆரம்பித்துள்ள Stop Having Babies இயக்கத்தின் முக்கியமான நோக்கங்கள் -
கண்டிப்பாக ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அப்படி கட்டாயப்படுத்தவும் கூடாது. நம்மை பெற்றுவிட்டதாலேயே நாம் நம் பெற்றோருக்கு கடமை பட்டவர்கள் அல்லர். மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்கிற அழுத்தத்தின் பேரில் குழந்தைகளைப் பெற்று அவர்களை வதைக்க வேண்டாம் என்பதே நோக்கம்.
==================================
வள்ளற்பெருமானின் இறவாவரத்தை பெறுவதைவிட மிகச்சுலபமானது, ஒரு ஆன்மாவை இப்பூமியில் பிறக்காமல் செய்வது சுலபம், அதுவே புண்ணியம். அதுவே அனைத்து பிறவா ஆன்மாவிற்கும் நாம் அளிக்கும் வரம். - TMR.
===================================

Saturday, September 21, 2024

பூமியில் அமைதியான இடம் எது?

 பூமியில் அமைதியான இடம் எது?

இந்த பதிலில் குறிப்பிடப்போவது ஒரு ஆளில்லாத தீவோ அல்லது ஒரு பாலைவனமோ கிடையாது மாறாக அது ஒரு சிறிய அறை. ஆம், Microsoft நிறுவனம் அவர்களுடைய தலைமை கிளையின் (Redmond Washington, USA) Building 87-ல் அமைத்துள்ள ஒரு ஆன்-எகோயிக் சேம்பர் (Anechoic Chamber) அறைதான் உலகிலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும்.

RAMALINGAM T M

இது எந்த அளவிற்கு அமைதியான இடமென்றால் இந்த அறையின் பின்னனி இரைச்சலின் (Background Noise) அளவு -20.35 dBA (டெசிபல்). இந்த இடத்தில் உருவாகும் இரைசலைக் குறைப்பதற்காகவே ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள் (Sound Absorbing Wedges) அறைகளின் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.


ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள்

இந்த இடமானது Microsoft நிறுவனம் தங்களுடைய மின்னணு சாதனங்களின் ஒலித்திறனை பரிசோதிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இந்த இடமானது மின்னசோட்டாவின் Orfield Laboratories-ல் அமைக்கப்பட்டுள்ள Anechoic Chamber-ஐ விட சிறந்ததாகும்.இருப்பினும் Orfield Laboratories-ல் உள்ளதைப் போல இந்த இடத்தில் மனிதர்களுக்கு அனுமதி கிடையாது .இந்த இடமானது 2015-ல் உலகின் மிக அமைதியாக இடம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மனிதர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அமைதியான இடம் மினசோட்டா-வின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamber ஆகும். 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த அறையின் பின்னணி இரைச்சலின் அளவு சுமார் -9.4 dBA ஆகும். இது எந்த அளவுக்கு அமைதியான இடமென்றால் ஒரு மனிதனால் தனியாக இங்கு 45 நிமிடம் கூட இருக்க முடியாதாம். அதற்கு மேல் இருக்க முயற்சித்தால் அந்த மௌனமே நம்மை பைத்தியமாக்கி விடுமாம்.

இதற்கான காரணத்தை இந்த ஆராய்ச்சி கூடத்தின் நிறுவனரான Steven Orfield கூறியது,' தனியாக வெளிச்சமில்லாமல் இந்த அறையில் ஒருவர் இருந்தால் சில நிமிடங்களில் இந்த அறைக்கு அவர்களின் கேட்கும் திறன் தகவமைந்து விடும். முதலில் அவர்களுடைய இதயத்துடிப்பே அவர்களுக்கு கேட்க ஆரம்பிக்கும், பின்னர் சுவாசிக்கும்போது நுரையீரல் சுருங்கி விரியும் சத்தமும் கேட்க ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக வயிற்றின் உள்ளுறுப்புகளின் அசைவுகளின் சத்தம், இரத்த ஓட்டத்தின் சத்தமெல்லாம் நம் காதுகளில் கேட்கும்'. அதாவது உள்ளே சென்ற சில நிமிடங்களில் நாமே ஒலிமூலமாக மாறிவிடுவோமாம்‌! இதுவே நமக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் பதற்றமாக்கி கட்டுப்பாட்டை கடந்தால் நாம் பைத்தியமாகவும் வாய்ப்புள்ளதாம்.


உலகிலேயே மொத்தமாக ஆறு Anechoic Chamber அறைகள்தான் உள்ளனவாம். ஏனெனில் இதுபோன்ற அறைகளை உருவாக்க அதிகம் செலவாகும். அதாவது ஒரு ஆனெகோயிக் சேம்பர்-ஐ உருவாக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 700 கோடி இந்திய ரூபாய்) செலவாகுமாம்.

வாசித்தமைக்கு நன்றி…!





Friday, September 13, 2024

புத்தகங்களை வாசிக்கும் நேரம்

 புத்தகங்களை வாசிக்கும் நேரம்:

=========================
RAMALINGAM T M

தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகத்சிங்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தார் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னார் காந்தியடிகள்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவார் சார்லி சாப்ளின்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சர்ச்சில்.
தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாரர் ஜவஹர்லால் நேரு.
புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னார் அறிஞர் அண்ணா.
ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
“கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.
ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விவேகானந்தர்.
கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.
இறைவன் அறிவுறுத்த, நூல் அனைத்தும் பொய் என்றார் வள்ளலார். ஆனால், ”பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் ( 70 X 10 X 400 X 1000 X 1000 = 28000,00,00,000 கிலோ ) கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம். என்றும் கூறுவார் வள்ளலார்.
வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
புத்தகங்கள் ஏதும் பேசாது, அவைகள் ஊமை தன்மையைக் கொண்டுள்ளன. புத்தகங்களை வாசிக்க வாசிக்க மெளனத்தையே கற்றுக்கொள்வாய்.
-TMR