Thursday, April 24, 2025

இராணுவ நடவடிக்கை தேவையா?

இராணுவ நடவடிக்கை தேவையா?


 பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலேயே உயிரிழந்தது, தன்மானப் பிரச்சனையை இந்திய அரசிற்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
இதற்கான பதில் நடவடிக்கைகளாக நமது பிரதமர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.
வியாபர முடக்கம், இரு நாட்டு எல்லைகள் முடக்கம், வான் எல்லை முடக்கம், தூதர்கள் வெளியேற்றம், அந்நாட்டு மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது, வீசா முடக்கம், நதி நீர் முடக்கம் போன்ற பொருளாதாரம் அரசியல் சார்ந்த பாதிப்புக்களை அந்நாட்டிற்கு கொடுத்து அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதே மிகச் சிறந்தது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் இந்தியர்களின், இந்திய குடியுரிமையை ரத்து செய்யும் சட்டம் வரவேற்கத்ததக்கது.
சிம்லா ஒப்ந்தம் ரத்து எனச்சொல்லி இந்தியா மீது போர் தொடுத்த பாகிஸ்தானை எதிர் கொள்வோம்.
மாறாக, நமது நாடு இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதாக இதுவரை சரியான செய்திகள் இல்லை. இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது. நமது நட்பு நாடுகள் நம்மை பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உற்சாகப்படுத்துகின்றன. அவர்கள் வலையில் வீழ்வதைவிட, இராணுவ போர் நமது அழகான பூமிக்கு அழகல்ல. போர் தொடுக்க வேண்டுமானால், அரசியல் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து அவர்களை முடக்குவதே ஒரு நாட்டின் நாகரீகமான போர் ஆகும். அப்படிப்பட்ட போரினை நாம் தற்போது செய்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட போரினை உறுதியாக இறுதிவரை செய்தாலே போதும். பாகிஸ்தான் முடங்கிவிடும்.
இராணுவ ரீதியான போர் இந்தியாவின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளும். மாறாக இராணுவ போர் செய்வதின் மூலம் ஆகும் செலவுகளை, காஷ்மீர் பாதுகாப்பிற்காக செலவுச் செய்து மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகளை விரைவில் வரச்செய்வதில்தான் இந்தியாவின் உண்மையான வெற்றி உள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து, குடும்பத்தின் கட்டுக்கோப்புகளையும் இழந்து வாடும் நமது குடும்பத்தார்களுக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வோம்.
--TMR

Sunday, April 13, 2025

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


வருகின்றார் நம் வள்ளலார் உலகநிறைவாகி
இருக்கின்றார் அவர் அடிதொழுது - உருகிட
விசுவாவசு வருடம் விளங்கிட ராமலிங்கமே
பசுபதி யாகினான் பாரீர்.
 
                                                --இராமலிங்க அந்தாதி - 1001

Saturday, February 22, 2025

பொருள் என்னும் ஞானம்

 பொருள் என்னும் ஞானம்


சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நம்மவர்களுக்கும், மற்றும் உள்ள உலகியர்  யாவருக்கும் வந்தனம்.

அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால் இவ்வுலகியலில் பொருள் / செல்வம் சார்ந்த ஒரு திட்டத்தினை நான் இங்கு எடுத்துரைக்கின்றேன். உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றைச் சொல் “வள்ளலார்” என்பதை அறியுங்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டாக, திருவருட்பா என்னும் புனித நூலில் புதைந்து கிடக்கும் வார்த்தைகளை படித்த பெரும்பாலானோருக்கு, தங்கள் வாழ்வில் செல்வம் ஈட்டுவதென்பது திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது.

”இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்” எனக் கூறும் திருவருட்பா, எதனைப் பொருளாகப் பார்க்கின்றது?

“கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக” எனக் கூறுகின்றது.

கருணை என்பது ஆன்மாவின் இயற்கை குணம். சிவம் என்பது சச்சிதானந்தம். சுருக்கமாகக்கூறின் ஆன்மாவும் பரமான்மாவும் மெய்ப்பொருளாக விளங்குவதாக திருவருட்பா கூறுகின்றது. ஆனால் இவ்விரண்டினையும் நாம் எவ்வாறு காட்சியாகப் பார்ப்பது?

கருணையுள்ள ஆன்மாக்களை, சுத்த சன்மார்க்கிகளாக நாம் இவ்வுலகில் காட்சியாகக் காணலாம். சச்சிதானத்தை நாம் வடலூர் ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதியாகக் காட்சியாகக் காணலாம். ஆனால் இவை இரண்டினையும் காண ”உடம்பு’ என்னும் பொருளும் ”இடம் / பூமி” என்னும் பொருளும் தேவை. அதாவது உண்மையைக் காண பொய் தேவைப்படுகின்றது. அந்தப் பொய்தான் இந்த உலகியல் செல்வம். இந்தப் பொய்தான் மெய்ப்பொருளான கருணையையும் சிவத்தையும் நமக்குக் காட்டுகின்றது. செல்வம்தான் உங்கள் கருணையை வெளிப்படுத்தும். செல்வம்தான் வடலூரில் ஞானசபையினைக் கட்டியது, அனையா அடுப்பினையும், அனையா ஜோதியினையும் நமக்குக் கொடுக்கின்றது.

இவ்வாறு, கருணையையும், சிவத்தையும் காட்சியாக் காட்டும் செல்வம் என்னும் பொய்யை நாம் அனைவரும் முக்கியமாக சுத்த சன்மார்க்கிகளும் அக இனத்தார்களும் பெறுவது முக்கியம். செல்வம் அழியும் பொருள்தானே! நிலையாமை தத்துவத்தைக் கொண்டதுதானே! என கூறும் பழமை வாதங்கள் அறியாமை. “ஆற்றல் அழியாமை” கோட்பாட்டின்படி, செல்வம் என்னும் பொய்யும் என்றும் அழியாது. இந்தப் பொய்யினை மெய்யாக்குவதுதான் சுத்த சன்மார்க்கம். பொய்யுடம்பினை மெய்யாக்குவதும், பொய்ச்செல்வத்தை சிவச் செல்வமாக்குவதும் சுத்த சன்மார்க்கமாகும்.

எனவே, திருவருட்பாவில் வரும் ’பொருள்” என்பதின் புதிரை நீங்கள் விடுவிக்கும் பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண் முன்னே விரியும் என்பதனை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அறிந்து வைத்துள்ளனர். வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் வள்ளலார். ’இச்சையற்று நுகர்தல்” என்னும் சூத்திரத்தின் மூலம் நாம் இந்த செல்வம் என்னும் பொய்யுடன் விளையாட வேண்டும். இச்சையுடன் நுகர்ந்தால் இச்செல்வம் பல பிரச்சனைகளுக்கும் நம்மை தள்ளிவிடும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசை அற்றவர்களுக்கே எல்லாம் செயல் கூடும். 

பொருள் சேர்க்கும் இந்த ஞானத்தை நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் எவ்வாறு மேற்கொள்வது? நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த ஞானம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகின்றது.

எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றும் எனக்கு இருக்கும் பணமே போதும் என்றும் சொல்பவர்கள், கருணையையும் சிவத்தையும் உண்மையில் மறுக்கின்றார்கள். அல்லது தங்களது இயலாமையால் அவ்வாறு சொல்வார்கள். பணம் குறித்து நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உரையாடியிருக்கின்றோம்? எந்த அளவிற்கு ஆழமாக அலசியிருக்கின்றோம்? எனப்பார்த்தால், வியப்பே மிஞ்சும். காரணம், நாம் பணத்தைப் பற்றி பொதுவெளியில் பேசுவதேயில்லை.  பணம் என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற கருத்தை உடைத்தெரியுங்கள். 

இலஞ்சம், ஊழல், வட்டி, அரசின் அதிகப்படியான வரிகள் போன்று மக்களை சுரண்டி வரும் பணத்தைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. ஒரு சிறந்த சுழற்சி திட்டத்தின் மூலம் மக்களின் பணம் பெருக்கப்பட்டு, அவை மக்களுக்கே சென்றடையும் திட்டத்தினால் நாம் பல தலைமுறைகளுக்கும் பயனடையலாம். இச்சமூகத்தில் பல சுத்த சன்மார்க்கச் செயல்களை செய்து காட்டலாம். 

திருவருட்பா சொல்லும் ’பொருள்” என்னும் புதிர் உங்களுக்கு விளங்கினால் மட்டும் இத்திட்டத்தில் சேர வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன். மேலும் கடலூர் டூரீஸ்டர் மூலம் நீங்கள் யாவரும் இவ்வுலகினை சுற்றிப்பார்க்கும் அதிசயமும் நிகழ இருக்கின்றது. இத்திட்டத்தினைக் காண கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்கவும். 

https://youtu.be/ACXnXfN6Wys?si=T8U31y5DOLJrSrAu


Join our Whatsapp Group

https://chat.whatsapp.com/GAsKBUm9Inj4d15dRXP9xr


இறைவன் உங்களின் செல்வத்தை அதிகமாக்கினால்,

நீங்கள் உங்களின் தர்மத்தை அதிகமாக்குங்கள்.

வருங்காலம் வருமை இல்லா காலம்.


பொருள் என்னும் ஞானத்தைப் பற்றின உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

--T.M.RAMALINGAM

9445545475

Monday, February 10, 2025

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அடுத்த வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் வள்ளலார் பக்தர்கள் மட்டுமே வசித்து வருகின்றார்கள், புலால் உண்ணாமல், தாவர உணவை மட்டுமே புசித்து அக இனத்தார்களாக வாழ்கின்றார்கள் என்று அறியும் பொழுது அகத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது.

நான் கடந்த 24 மணி நேரத்த்தில் புதுச்சேரி, சென்னை என சில உறவினர்கள் வீடுகள், பழகுநர்களின் வீடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. இவ்வில்லங்களில் எது புலால் உண்ணாத புனிதமான வீடு எனத் தெரியவில்லை. எங்கேயும் தண்ணீர் அருந்தவும் தயக்கம். அந்த அளவிற்கு எனது உறவினர்கள் இயற்கையாக பரம்பரையாக வந்த புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றார்கள். சிலரது இல்லத்தில் குடியும் சேர்ந்து விடுகின்றது. பாவ காரியங்களை மகிழ்ந்தும், மகிழ்ச்சிக்காகவும் செய்கின்றார்கள்.
தனித்திரு என்ற தனிமையே சிறந்ததாகத் தோன்றுகின்றது. இதற்கு ஒரு சிந்தனையை செயல்படுத்தலாம், எவ்வாறு நாம் சாப்பிடும் உணவு விடுதிகளில் சைவம் எனவும் அசைவம் எனவும் அறிவித்து மக்களை அழைக்கின்றார்களோ அவ்வாறு சைவம் மட்டும் உண்ணும் புனித இல்லங்கங்களின் வரவேற்பரையில் அல்லது வெளிப்புரங்களில் “புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்” என விளம்பரம் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமாகும் எனக் கருதுகின்றேன். சன்மார்க்க இல்லங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வாசகம் தாங்கிய ஸ்ட்டிக்கர் செய்து அதனை வடலூரிலும் சன்மார்க்க சங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு விற்பனைக்கு அல்லது இலவசமாக அளிக்கலாம். இவ்விளம்பரம் இல்லாத பாவ இல்லங்களில் நீர் அருந்ததுதலும் தவிர்க்க வேண்டும்.
”ஊன்சுவை உண்டு உடல் வளர்ப்பது பாவம்” என்பது வள்ளாரின் பார்வை மட்டுமல்ல, திருவள்ளுவர் முதற் கொண்டு அனைத்து புனிதர்களின் பார்வையாகும் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் வாழும் புனிதர்களுக்கு நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR