நான் கடவுள்


பாதுகை
இரக்கமே உருவான பாதம்
உகத்திலே வருவித்த பாதம்
கரங்கூப்பி தொழுகின்ற பாதம்
காண்பதற்கு அரிதான பாதம்
நரகர்கள் அறியாத பாதம்
நாடியமூவருக்கும்
எட்டாத பாதம்
வரங்கள் கோடிதரும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே
இளமை எனுமோர் சுகமும்
இறைவன் எனுமோர்
அருளும்
வளமை எனுமோர் பொருளும்
வினைக ளற்றமதி முகமும்
களவு கொள்ளும் அழகும்
குடி கொள்ளும் சன்மார்க்கம்
வளரும் காரணப்பட்டி லோங்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
நரை திரைமூப் பகற்றி
நாளை இல்லை என்ற
உரை அகற்றி என்றும்
இளமை யோடு இருக்கும்
கரை அடைந்து சன்மார்க்கக்
காலத்தை நமக் கினி
விரைந் தருளும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே.
கந்தசாமி தொண்டனுக்கு செய்தக்
கருணையால் கிடைத்தப் பாதம்
சிந்தனை செய்வோர்க்கு என்றும்
சங்கடம் தீர்க்கும் பாதம்
தந்திரம் சொல்லி இன்பமுற
தன்னை அறிவிக்கும் பாதம்
வந்தனை செய்வோரைக் காக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
கல்லார்கள் கற்கவே சாகாக்
கல்வி அளிக்கும் பாதம்
எல்லா உயிர்களும் இன்புறவே
இரக்கம் நல்கும் பாதம்
கொல்லான் புலால் மறுத்தானை
கைகூப்பி தொழும் பாதம்
வல்வினை போக்கும் எங்கள்
வள்ளல்நின் பொற் பாதமே.
நன்மை ஈன்றுநம்மை யென்றும்
நீங்காத ஒளிதேகப் பாதம்
ஒன்பது ஓட்டைக் குள்ளே
ஒளிந் திருக்கும் பாதம்
சின்மயம் சச்சிதா னந்த
சிவ மாக்கும் சன்மார்க்க
வன்மை விரைந்து கொடுக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
வெளிக்குள் வெளி கடக்கும்
வித்தை தெரிவிக்கும்
பாதம்
எளியோருக் கெல்லாம் தனது
அடிமுடி காட்டும் பாதம்
தெளிந்தோ ருக்கெல்லாம் நின்
தரிசனம் தந்து அருள்
வெளிச்ச மளித்து இருள்நீக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
சதிசெய்த வலையில் சிக்கி
சாதி மதம் சமயமெனும்
பொதி சுமந்து பாரினில்
பாழாய் இளைத் திளைத்து
மதிகெட்டு மதுவும் குடித்து
மயங்கிப் பாடையில் மாளும்
விதி என்பதில்லை எனும்
வள்ளல்நின் பொற் பாதமே.
உண்டு உண்டு மகிழவே
உண வளித்து நின்னைக்
கண்டு களிப்பு மடைந்து
கதிரும் மதியுமாக நின்று
எண் ணிரண்டு அறியவே
ஏங்கி நிற்கும் சன்மார்க்க
வண்டுகள் தேடும் தேனன்றோ
வள்ளல்நின் பொற் பாதமே.
விலை மதிப்பறியா பொன்னே
வினை சூழ்ந்தறியா கண்ணே
மலை மேலாடிடும் காற்றே
மரண மில்லா பெருவாழ்வே
அலை கடலில் வீழ்ந்தாடும்
எம்போல் வாரை சன்மார்க்க
வலையில் பிடித்துச் சமைக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
--TMR
எடுத்துச்செல்வோம்
திக்கெட்டும் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துச்செல்வோம்!
1.அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு சேட்டிலைட் ”வள்ளலார் டி.வி.’ சேனல் உருவாக்க வேண்டும்.
2. அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு ‘வள்ளலார் எஃப்.எம்.’ உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு சன்மார்க்கச் சங்கமும், தங்களுக்கென ஒரு வெப் சைட், முகநூல் பக்கம், யூட்யூப் சேனல் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
மேற்காணும் யாவும் பொது வெளியில் மக்களுக்குச் சென்று சேரும் ஊடகங்களாகும். அனைத்து மார்க்கங்களும் கோடிகளை செலவு செய்து சேட்டிலைட் டி.வி. சேனல் வைத்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவது பாராட்டத்தக்கது. சுத்த சன்மார்க்கமும் அவ்வரிசையில் இணைய வேண்டும்.
டெலகிராம், வாட்சாப் போன்றவைகள் அவரவர்கள் சங்க உறுப்பினர்களை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவை எல்லாம் நமக்கு தெரிந்த விடயங்கள்தான். எனினும் முயற்சி வேண்டும் என்பதற்கே இப்பதிவு. ’நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்’ ஆனால், ‘என்னால் ஆவது ஒன்றுமில்லை”,
உயிரெல்லாம் எனக்கே உறவாக
உயிர்நலம் பரவ வரம்வாங்க
பயிரெல்லாம் செழித்து வளமோங்க
பாரினில் வறுமைகள்
புறம்போக
வயிரெல்லாம் மகிழ்ந்து பசியாற
வள்ளலாய் உலகினில்
விளையாட
துயிலெழுந்து சாகாக்கல்வி பெறநான்
தயவாய் இருக்க வேண்டுவனே.
கடவுள் நிலை யறிந்ததும்
கண்ணீர் பெருகி ஓடுதே
கடலெனும் பிறவி அறுந்ததும்
கருணை எங்கும் நிறைந்ததே
நடனம் என்னுள் கண்டதும்
நல்லமுதம் எனக்குள்
ஊறுதே
இடமும் வலமுமாகி நடுவாய்
இறை மயமாக வேண்டுவனே.
நினைத்தவை எல்லாம் நடக்குதே
நிலைத்தவை என்றும் வருகுதே
வினைகள் எல்லாம் பயந்தோடுதே
விதைத்தவை என்னுள்
மலருதே
எனைமறந் துள்ளம் உனைநாடுதே
என்றும் உனக்கடிமை
என்றானதே
மனையெல்லாம் தீபம் ஒளிரவே
மங்களமாய் இருக்க
வேண்டுவனே.
புலையும் கொலையும் விடாது
புரியும்
தெய்வீகம் நீடாது
இலையில் தானம் போடாது
அறங்கள் செய்யக் கூடாது
மலைகள் சுற்றினால் போதாது
மனங்கள் சுத்தம் ஆகாது
சிலைகள் என்றும் பேசாதுஎன்
சிவத்தின் ஓசைகேட்க வேண்டுவனே.
.
ஆவது ஒன்றுமில்லை என்னால்
உனக்கு கிஞ்சித்தும்
புகழில்லை
ஈவது எனையன்றி வேறில்லை
உனையன்றி எனக்கு
பெயரில்லை
சாவதும் பிறப்பதும் வழக்கில்லை
சுத்த சன்மார்க்கமிருக்க
பயமில்லை
போவது பிணமென பிறர்இழியாத
பொன்னான மேனி
வேண்டுவனே.
ஆயிரம் ஆயிரம் கோடி
அணி விளக்கு ஏற்றுவித்து
பாயிரம் பலகோடிப் பாடி
பாரினில் அற்புதம்
செய்வித்து
தாயினும் தயவுடையத் தமிழ்
தந்த ஒளியேஎன் வள்ளலே
ஆயினும் அருட்பெருஞ் ஜோதி
அருளாலர் வர வேண்டுவனே.
தருகின்றேன் உனக்கே எனது
தேக போகஜீவ சுதந்தரத்தை
பெருங் கருணையால் நீதான்
பெற்றுக் கொண்டு உனது
அருட் பெருஞ்ஜோதி அருளால்
என்னை நீதான் ஆளும்
திருவருள் சுதந்தரம் பெறும்
திருநாள் வர வேண்டுவனே.
ஒரு தேசத்தை அழிக்க,