Friday, January 2, 2026

சன்மார்க்க குரவர் நால்வர்

 சன்மார்க்க குரவர் நால்வர்


வணக்கம்,

நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.

1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்

இந்த சன்மார்க்க குரவர் நால்வர்களின் அருள் வரலாற்றை ஓதி நாமும் உய்வு பெறுவோமாக!

இன்னூல் திரு. சீனி. சட்டையப்பர் அவர்களின் துணைவியாரும், சன்மார்க்க பெருமாட்டியும் ஆன திருமதி மணிமேகலை அம்மாள் அவர்களின் நினைவாக வெளி வந்தமை குறிப்பிட தக்கது.

நன்றி!



Thanks : Dr. RamaPandurangan. Ex. Edu.Dpt. Dir (Madurai)

சன்மார்க்க குரவர் நால்வர்


கீழ் காணும் இணைப்பினைச் சுட்டி மின்னூல் பெறுக். 

https://www.vallalarspace.org/Download/V000041461F

(or)

https://drive.google.com/file/d/1P1PqA8EgrD2wTHc03HymZSiA9EiTZCAD/view?usp=sharing

https://drive.google.com/file/d/1mrhPh7VDLBH1wpjdvLPpGMmPdOq5AmGm/view?usp=sharing

Sunday, December 28, 2025

வடலூர்

 வடலூர்


சந்து பொந்தெல்லாம் அரசு
       சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
      சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
      அடிவாங்கும் சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே        
      வடலூர் வந்தால் நரகமாமே.

சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்

              சமைத்து வறியோர்கள் என்றும்

இன்பமாய் உண்டு மகிழவும்

              ஐக்கிய சன்மார்க்கச் சபை

நின்று நிர்வாகம் பார்க்கும்

              நாள் தருமச் சாலையில்

என்று வருமோ சன்மார்க்கம்

            அன்றே தழைத்து ஓங்குமே.  

புலை கொலை தவிர்த்தோர்
            புரியும் நிர்வாகம் வடலூரில்
தலை எடுத்து உலகிலே
            தருமம் ஓங்க சாகாக்
கலை பயிற்றுவித்து சன்மார்க்க
            கலை ஞர்கள் நிறைந்து
அலை அலையென வருவிக்க
            உறும் நன்நாள் இந்நாளே. 

தனித்த சன்மார்க்க அரசு
தழைக்கும் உலக மெங்கும்
பனிவிலகி தெளிந்த காட்சியாய்
பரமனே ஆளும் ஆட்சி
கனிந்தது புறஇனத்தா ரெல்லாம்
கலங்கி நடுநடுங்கி ஓட
இனி வடலூரை ஆள்வது
ஐக்கிய சன்மார்க்க சபையே.

கயிரைக் கண்டு பாம்பாய் 
    கதிகலங்கி நின்ற காலஞ்சென்று
துயிலெழுந்து பார்க்க இன்று
     தயா ஒளியால் உண்மை
பயின்று வடலூர் அருளாட்சியை
     பற்றியே உரித்தாகுக எல்லா
உயிர்களுக்கும் எனது புத்தாண்டு
     ஆங்கில நல் வாழ்த்துகளையே.
-TMR

TMR

VALLALAR

TMR

TMR

HAPPY NEW YEAR 2026








Friday, December 19, 2025

பாதுகை

                                                                   பாதுகை

இரக்கமே உருவான பாதம்
உகத்திலே வருவித்த பாதம்

கரங்கூப்பி தொழுகின்ற பாதம்
காண்பதற்கு அரிதான பாதம்

நரகர்கள் அறியாத பாதம்
நாடியமூவருக்கும் எட்டாத பாதம்

வரங்கள் கோடிதரும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே

 

இளமை எனுமோர் சுகமும்

            இறைவன் எனுமோர் அருளும்

வளமை எனுமோர் பொருளும்
வினைக ளற்றமதி முகமும்

களவு கொள்ளும் அழகும்
குடி கொள்ளும் சன்மார்க்கம் 

வளரும் காரணப்பட்டி லோங்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

நரை திரைமூப் பகற்றி
நாளை இல்லை என்ற

உரை அகற்றி என்றும்
இளமை யோடு இருக்கும்

கரை அடைந்து சன்மார்க்கக்
 காலத்தை நமக் கினி

விரைந் தருளும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கந்தசாமி தொண்டனுக்கு செய்தக்
கருணையால் கிடைத்தப் பாதம்

சிந்தனை செய்வோர்க்கு என்றும்
சங்கடம் தீர்க்கும் பாதம்

தந்திரம் சொல்லி இன்பமுற
தன்னை அறிவிக்கும் பாதம்

வந்தனை செய்வோரைக் காக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கல்லார்கள் கற்கவே சாகாக்
கல்வி அளிக்கும் பாதம்

எல்லா உயிர்களும் இன்புறவே
இரக்கம் நல்கும் பாதம்

கொல்லான் புலால் மறுத்தானை
கைகூப்பி தொழும் பாதம்

வல்வினை போக்கும் எங்கள்
வள்ளல்நின் பொற் பாதமே.


நன்மை ஈன்றுநம்மை யென்றும்

            நீங்காத ஒளிதேகப் பாதம்

ஒன்பது ஓட்டைக் குள்ளே

            ஒளிந் திருக்கும் பாதம்

 சின்மயம் சச்சிதா னந்த

            சிவ மாக்கும் சன்மார்க்க

வன்மை விரைந்து கொடுக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

வெளிக்குள் வெளி கடக்கும்

            வித்தை தெரிவிக்கும் பாதம்

எளியோருக் கெல்லாம் தனது

            அடிமுடி காட்டும் பாதம்

 தெளிந்தோ ருக்கெல்லாம் நின்

            தரிசனம் தந்து அருள்

வெளிச்ச மளித்து இருள்நீக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

சதிசெய்த வலையில் சிக்கி

            சாதி மதம் சமயமெனும்  

பொதி சுமந்து பாரினில்

            பாழாய் இளைத் திளைத்து

மதிகெட்டு மதுவும் குடித்து

மயங்கிப் பாடையில் மாளும்

விதி என்பதில்லை எனும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

 உண்டு உண்டு மகிழவே

            உண வளித்து நின்னைக்

கண்டு களிப்பு மடைந்து

            கதிரும் மதியுமாக நின்று

எண் ணிரண்டு அறியவே

             ஏங்கி நிற்கும் சன்மார்க்க

வண்டுகள் தேடும் தேனன்றோ

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

விலை மதிப்பறியாப் பொன்னே

            வினை சூழ்ந்தறியாக் கண்ணே

மலை மேலாடிடும் காற்றே

            மரண மில்லா பெருவாழ்வே

அலை கடலில் வீழ்ந்தாடும்

            எம்போல் வாரை சன்மார்க்க 

வலையில் பிடித்துச் சமைக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.


--TMR




T.M.RAMALINGAM

VALLALAR



VALLALAR


TMR

Wednesday, December 17, 2025

எடுத்துச்செல்வோம்

 எடுத்துச்செல்வோம்

இராமலிங்கம்


திக்கெட்டும் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துச்செல்வோம்!

1.அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு சேட்டிலைட் ”வள்ளலார் டி.வி.’ சேனல் உருவாக்க வேண்டும்.

2. அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு ‘வள்ளலார் எஃப்.எம்.’ உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு சன்மார்க்கச் சங்கமும், தங்களுக்கென ஒரு வெப் சைட், முகநூல் பக்கம், யூட்யூப் சேனல் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

மேற்காணும் யாவும் பொது வெளியில் மக்களுக்குச் சென்று சேரும் ஊடகங்களாகும். அனைத்து மார்க்கங்களும் கோடிகளை செலவு செய்து சேட்டிலைட் டி.வி. சேனல் வைத்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவது பாராட்டத்தக்கது. சுத்த சன்மார்க்கமும் அவ்வரிசையில் இணைய வேண்டும்.

டெலகிராம், வாட்சாப் போன்றவைகள் அவரவர்கள் சங்க உறுப்பினர்களை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவை எல்லாம் நமக்கு தெரிந்த விடயங்கள்தான். எனினும் முயற்சி வேண்டும் என்பதற்கே இப்பதிவு. ’நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்’ ஆனால், ‘என்னால் ஆவது ஒன்றுமில்லை”,