பௌத்தக் கொடி நாள்
Thursday, January 8, 2026
பௌத்தக் கொடி நாள்
Tuesday, January 6, 2026
மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு
மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு
இருபது வயதுள்ள இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று, ‘சிரங்கு” என்று கூற, “சில நாள் பொறுத்துக் குணமாகும்” என்றனர். அப்படியே சிரங்கில்லாத உடம்பு முழுவதும் பெருஞ்சிரங்காகியது. பின்பு வருந்த, மேட்டுக்குப்பக் கேணியில் மூழ்க குணமாகியது.
--பிரபந்தத்திரட்டு - பக்கம் 124 (அ.திருநாவுக்கரசு பதிப்பு)
Friday, January 2, 2026
சன்மார்க்க குரவர் நால்வர்
சன்மார்க்க குரவர் நால்வர்
வணக்கம்,
நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.
1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்
இந்த சன்மார்க்க குரவர் நால்வர்களின் அருள் வரலாற்றை ஓதி நாமும் உய்வு பெறுவோமாக!
இன்னூல் திரு. சீனி. சட்டையப்பர் அவர்களின் துணைவியாரும், சன்மார்க்க பெருமாட்டியும் ஆன திருமதி மணிமேகலை அம்மாள் அவர்களின் நினைவாக வெளி வந்தமை குறிப்பிட தக்கது.
நன்றி!
Thanks : Dr. RamaPandurangan. Ex. Edu.Dpt. Dir (Madurai)
கீழ் காணும் இணைப்பினைச் சுட்டி மின்னூல் பெறுக்.
https://www.vallalarspace.org/Download/V000041461F
(or)
https://drive.google.com/file/d/1P1PqA8EgrD2wTHc03HymZSiA9EiTZCAD/view?usp=sharing
https://drive.google.com/file/d/1mrhPh7VDLBH1wpjdvLPpGMmPdOq5AmGm/view?usp=sharing
Sunday, December 28, 2025
வடலூர்
வடலூர்
சாராயக் கடைகள் நடுவில்
சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்
சமைத்து வறியோர்கள்
என்றும்
இன்பமாய் உண்டு மகிழவும்
ஐக்கிய சன்மார்க்கச்
சபை
நின்று நிர்வாகம் பார்க்கும்
நாள் தருமச் சாலையில்
என்று வருமோ சன்மார்க்கம்
புரியும் நிர்வாகம் வடலூரில்
தலை எடுத்து உலகிலே
தருமம் ஓங்க சாகாக்
கலை பயிற்றுவித்து சன்மார்க்க
கலை ஞர்கள் நிறைந்து
அலை அலையென வருவிக்க
உறும் நன்நாள் இந்நாளே.
தழைக்கும் உலக மெங்கும்
பனிவிலகி தெளிந்த காட்சியாய்
பரமனே ஆளும் ஆட்சி
கனிந்தது புறஇனத்தா ரெல்லாம்
கலங்கி நடுநடுங்கி ஓட
இனி வடலூரை ஆள்வது
ஐக்கிய சன்மார்க்க சபையே.























