Wednesday, June 25, 2025

திருமறைப்பா

 திருமறைப்பா

ஆசிரியர்
(வள்ளலார் இராமலிங்கம்)

















Friday, May 9, 2025

அப்பா நான் வேண்டுதல்

 அப்பா நான் வேண்டுதல்

Vallalar


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்

 

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்

 

செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

 

தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.




 

Tuesday, May 6, 2025

51 வருடம்

51 வருடம் 

வள்ளற்பெருமான் தனது காயத்துடன் இவ்வுலகில் வெளிப்பட வாழ்ந்த காலம் 51 வருடம்.

இதன் மூலம் அவர் வெளிப்படுத்தும் சுத்த சன்மார்க்கச் செய்தியாக நான் கருதுவது,
சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் மிகச்சரியாக தங்களது 51 ஆவது அகவையில் முத்தேகம் பெற வேண்டும். 51 வயதிற்கு மேல் தனது தேகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் புகைப்படத்தில் காயம் விழக்கூடாது. இன்னும் பல...
இன்னும் சில நாட்களில் 51-ஆம் வயதில் நான். வள்ளலார் தமது காயத்தை மறைத்தது 1874. நான் சரியாக 100 வருடம் கடந்து 1974-ல் பிறப்பு. 3500-க்கும் மேற்பட்டு சுத்த சன்மார்க்க மரபு பாடல்களும், சில சன்மார்க்கம் சார்ந்த கட்டுரைகள் இயற்றியும், சில சன்மார்க்க நடைமுறைகளை பின்பற்றியும், ஒரு பெண்ணைக்கூட தொடாமல் இருந்தும் - பணம், உலகியலில் ஆழ்ந்ததால், சுத்த சன்மார்க்கத்தில் தோல்வியின் விளிம்பில் நான்....
--TMR

T M RAMALINGAM


Thursday, April 24, 2025

இராணுவ நடவடிக்கை தேவையா?

இராணுவ நடவடிக்கை தேவையா?

T M RAMALINGAM

 பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலேயே உயிரிழந்தது, தன்மானப் பிரச்சனையை இந்திய அரசிற்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
இதற்கான பதில் நடவடிக்கைகளாக நமது பிரதமர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.
வியாபர முடக்கம், இரு நாட்டு எல்லைகள் முடக்கம், வான் எல்லை முடக்கம், தூதர்கள் வெளியேற்றம், அந்நாட்டு மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது, வீசா முடக்கம், நதி நீர் முடக்கம் போன்ற பொருளாதாரம் அரசியல் சார்ந்த பாதிப்புக்களை அந்நாட்டிற்கு கொடுத்து அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதே மிகச் சிறந்தது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் இந்தியர்களின், இந்திய குடியுரிமையை ரத்து செய்யும் சட்டம் வரவேற்கத்ததக்கது.
சிம்லா ஒப்ந்தம் ரத்து எனச்சொல்லி இந்தியா மீது போர் தொடுத்த பாகிஸ்தானை எதிர் கொள்வோம்.
மாறாக, நமது நாடு இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதாக இதுவரை சரியான செய்திகள் இல்லை. இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது. நமது நட்பு நாடுகள் நம்மை பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உற்சாகப்படுத்துகின்றன. அவர்கள் வலையில் வீழ்வதைவிட, இராணுவ போர் நமது அழகான பூமிக்கு அழகல்ல. போர் தொடுக்க வேண்டுமானால், அரசியல் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து அவர்களை முடக்குவதே ஒரு நாட்டின் நாகரீகமான போர் ஆகும். அப்படிப்பட்ட போரினை நாம் தற்போது செய்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட போரினை உறுதியாக இறுதிவரை செய்தாலே போதும். பாகிஸ்தான் முடங்கிவிடும்.
இராணுவ ரீதியான போர் இந்தியாவின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளும். மாறாக இராணுவ போர் செய்வதின் மூலம் ஆகும் செலவுகளை, காஷ்மீர் பாதுகாப்பிற்காக செலவுச் செய்து மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகளை விரைவில் வரச்செய்வதில்தான் இந்தியாவின் உண்மையான வெற்றி உள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து, குடும்பத்தின் கட்டுக்கோப்புகளையும் இழந்து வாடும் நமது குடும்பத்தார்களுக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வோம்.
--TMR

Sunday, April 13, 2025

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

T M RAMALINGAM

வருகின்றார் நம் வள்ளலார் உலகநிறைவாகி
இருக்கின்றார் அவர் அடிதொழுது - உருகிட
விசுவாவசு வருடம் விளங்கிட ராமலிங்கமே
பசுபதி யாகினான் பாரீர்.
 
                                                --இராமலிங்க அந்தாதி - 1001