Thursday, January 8, 2026

பௌத்தக் கொடி நாள்

                                                           பௌத்தக் கொடி நாள்

TMR


ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை ‘பறையர் வரலாறு’ நூலை எழுதியவரும், பௌத்த சிந்தனையாளருமான கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.
பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.
1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு(World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன மாலசேகரா அவர்கள், பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம) வாழ்க்கையைக் குறிக்கிறது.
3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக் குறிக்கிறது.
4.வெண்மை நிறம்- மாசற்ற தம்மத்தைக் குறிக்கிறது.
5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.
ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

Tuesday, January 6, 2026

மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு

                                              மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு


இருபது வயதுள்ள இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று, ‘சிரங்கு” என்று கூற, “சில நாள் பொறுத்துக் குணமாகும்” என்றனர். அப்படியே சிரங்கில்லாத உடம்பு முழுவதும் பெருஞ்சிரங்காகியது. பின்பு வருந்த, மேட்டுக்குப்பக் கேணியில் மூழ்க குணமாகியது.

--பிரபந்தத்திரட்டு - பக்கம் 124 (அ.திருநாவுக்கரசு பதிப்பு)




Friday, January 2, 2026

சன்மார்க்க குரவர் நால்வர்

 சன்மார்க்க குரவர் நால்வர்


வணக்கம்,

நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.

1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்

இந்த சன்மார்க்க குரவர் நால்வர்களின் அருள் வரலாற்றை ஓதி நாமும் உய்வு பெறுவோமாக!

இன்னூல் திரு. சீனி. சட்டையப்பர் அவர்களின் துணைவியாரும், சன்மார்க்க பெருமாட்டியும் ஆன திருமதி மணிமேகலை அம்மாள் அவர்களின் நினைவாக வெளி வந்தமை குறிப்பிட தக்கது.

நன்றி!



Thanks : Dr. RamaPandurangan. Ex. Edu.Dpt. Dir (Madurai)

சன்மார்க்க குரவர் நால்வர்


கீழ் காணும் இணைப்பினைச் சுட்டி மின்னூல் பெறுக். 

https://www.vallalarspace.org/Download/V000041461F

(or)

https://drive.google.com/file/d/1P1PqA8EgrD2wTHc03HymZSiA9EiTZCAD/view?usp=sharing

https://drive.google.com/file/d/1mrhPh7VDLBH1wpjdvLPpGMmPdOq5AmGm/view?usp=sharing

Sunday, December 28, 2025

வடலூர்

 வடலூர்


சந்து பொந்தெல்லாம் அரசு
       சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
      சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
      அடிவாங்கும் சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே        
      வடலூர் வந்தால் நரகமாமே.

சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்

              சமைத்து வறியோர்கள் என்றும்

இன்பமாய் உண்டு மகிழவும்

              ஐக்கிய சன்மார்க்கச் சபை

நின்று நிர்வாகம் பார்க்கும்

              நாள் தருமச் சாலையில்

என்று வருமோ சன்மார்க்கம்

            அன்றே தழைத்து ஓங்குமே.  

புலை கொலை தவிர்த்தோர்
            புரியும் நிர்வாகம் வடலூரில்
தலை எடுத்து உலகிலே
            தருமம் ஓங்க சாகாக்
கலை பயிற்றுவித்து சன்மார்க்க
            கலை ஞர்கள் நிறைந்து
அலை அலையென வருவிக்க
            உறும் நன்நாள் இந்நாளே. 

தனித்த சன்மார்க்க அரசு
தழைக்கும் உலக மெங்கும்
பனிவிலகி தெளிந்த காட்சியாய்
பரமனே ஆளும் ஆட்சி
கனிந்தது புறஇனத்தா ரெல்லாம்
கலங்கி நடுநடுங்கி ஓட
இனி வடலூரை ஆள்வது
ஐக்கிய சன்மார்க்க சபையே.

கயிரைக் கண்டு பாம்பாய் 
    கதிகலங்கி நின்ற காலஞ்சென்று
துயிலெழுந்து பார்க்க இன்று
     தயா ஒளியால் உண்மை
பயின்று வடலூர் அருளாட்சியை
     பற்றியே உரித்தாகுக எல்லா
உயிர்களுக்கும் எனது புத்தாண்டு
     ஆங்கில நல் வாழ்த்துகளையே.
-TMR

TMR

VALLALAR

TMR

TMR

HAPPY NEW YEAR 2026