Wednesday, January 14, 2026

பொங்கல் வாழ்த்துகள்

 பொங்கல் வாழ்த்துகள்

==================
PONGAL




நிழலென தொடரும் பசியெனும்

நோயினை அனைத் துயிருள்ளும்
தழலென கொதிக்கும் கூற்றினை
தனதுதாழுங் குணத்தால் விரட்டும்
உழவனை எல்லாம் வல்லவனென
ஊர்தோறும் போற்றி கொண்டாடும்
பழந்தமிழனின் விழாவில் இன்பம்
பெருகி பொங்கல் பொங்கட்டுமே.
-TMR

Tuesday, January 13, 2026

வள்ளலார் பேருந்து நிலையம்

 வள்ளலார் பேருந்து நிலையம்

12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.

ரூ 7.53 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன் அவர்கள், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

K.N.NEHRU - Tamil Nadu Minister for Municipal Administration & Water Supply

vallalar bus stand

VALLALAR BUS STAND

VALLALAR BUS SATND

VALLALAR BUS STAND


சில முரண்பாடுகள்

 சில முரண்பாடுகள்

TMR


ஞான சபையில் புலால் உண்பவர்கள் செல்வதால் தவறில்லை, ஏனெனில் நான் புலால் தவிர்க்கும் முன் ஞான சபைக்குள் சென்றதால்தான் சன்மார்க்கத்திற்கு வந்தேன். ஞான சபையில் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும் என வள்ளலார் சொல்லவில்லை, என சிலர் கூறுகின்றனர்.

வள்ளலாரின் வடலூரை புனித நகரமாக ஆக்காவிடினும் பரவாயில்லை,  அவர் உருவாக்கிய ஞான சபையில் 20 நபர்கள் அமரக்கூடிய அந்த மிகச்சிறிய இடத்தையாவது புனிதமாக இருக்க விடுங்கள்.  

அடுத்து,

RAMALINGAM TM


புலால் உண்ணும் பார்வதிபுற மக்களிடம் வள்ளலார் ஏன் நிலத்தை தானமாகப் பெற்றார்? என சிலர் கேட்கின்றனர்?

வடலூர் பெருவெளியினை வேட்டவலம் ஜமீன்தாரர் அவர்களே வள்ளலாருக்கு தானமாக கொடுத்தார். வள்ளலார் அந்நிலத்தை தானமாக பெறுவதற்கு முன் அந்த ஜமீன்தாரரை தனது கொள்கைக்கு ஆட்படுத்திய பிறகு அவரை புலால் மறுக்கச் செய்தப் பிறகே வடலூர் நிலத்தை அவரிடமிருந்து தானமாகப் பெற்றார்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் சில சட்ட வரையறைகளுக்காக அந்நிலத்தை பட்டா செய்ய ஜமீன் ஏற்பாடு செய்த சில பார்வதிபுற மக்கள் அந்நிலங்களுக்காக கையொப்பம் மட்டுமே இட்டனர். ஆனால் அந்நிலத்திற்கும் கையொப்பம் இட்ட பார்வதிபுற மக்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.

அடுத்து,

VALLALAR


ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவதற்கு வடலூர் தருமச்சாலையை பயன்படுத்துவது சரிதானா?

நான் இவ்வாறு தருமச்சாலையில் மாலை போட்டுக்கொண்டதால்தான் இன்றைக்கு நான் சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றேன். இன்று நான் முழுதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதால், மாலை அணிந்து சபரி மலைக்குச் செல்வதில்லை.

எனவே தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் வந்து மாலை போட்டுக்கொள்வது தவறல்ல. வள்ளலார் தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை போடக்கூடாது என எங்கும் சொல்லவில்லை, என ஒரு சன்மார்க்கி கூறுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன சொல்ல?

ஐயப்ப மாலை போடுவதற்கு அனுமதி அளித்த இந்து நலத் துறை வன்மையான கண்டனத்திற்கு உரியது.

நன்றி.

https://www.facebook.com/reel/1982273392720324



Thursday, January 8, 2026

பௌத்தக் கொடி நாள்

                                                           பௌத்தக் கொடி நாள்

TMR


ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை ‘பறையர் வரலாறு’ நூலை எழுதியவரும், பௌத்த சிந்தனையாளருமான கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.
பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.
1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு(World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன மாலசேகரா அவர்கள், பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம) வாழ்க்கையைக் குறிக்கிறது.
3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக் குறிக்கிறது.
4.வெண்மை நிறம்- மாசற்ற தம்மத்தைக் குறிக்கிறது.
5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.
ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

Tuesday, January 6, 2026

மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு

                                              மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு


இருபது வயதுள்ள இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று, ‘சிரங்கு” என்று கூற, “சில நாள் பொறுத்துக் குணமாகும்” என்றனர். அப்படியே சிரங்கில்லாத உடம்பு முழுவதும் பெருஞ்சிரங்காகியது. பின்பு வருந்த, மேட்டுக்குப்பக் கேணியில் மூழ்க குணமாகியது.

--பிரபந்தத்திரட்டு - பக்கம் 124 (அ.திருநாவுக்கரசு பதிப்பு)