Saturday, December 14, 2013

நம் தலைமேல் ஒரு பாரம்

நம் தலைமேல் ஒரு பாரம்

வணக்கம்! ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சிறப்பு நிலையின் வரலாற்றை நாம் இப்பகுதியில் சற்று சுருக்கமாக காண்போம்.


மெளண்ட்பேட்டன் திட்டம்

இந்தியாவிற்கு சுதந்தரம் அளிக்கப் படுவதற்காக மார்ச் 1947-ல் கிளமன்ட் அட்லி, மெளண்ட்பேட்டன் பிரபுவை இந்தியாவிற்கு அனுப்பினார். இதுவரை எந்த வைசிராய்க்கும் அளிக்காத அதிகாரங்களை எல்லாம் அவருக்கு அளித்து இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவர் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பேசி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு "மெளண்ட்பேட்டன் திட்டம்" அல்லது "பிளான் பால்கன்" (Mount Batton Plan or Plan Balkanisation) என்று பெயர். இதன்படி இந்தியா மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா என உருவாக்கப்பட தீர்மானிக்கப்பட்டு, இத்திட்டம் இங்கிலாந்து மந்திரி சபையின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இங்கிலாந்து மந்திரிசபை இதனை அங்கீகரித்தது.

இந்தியாவில் உள்ள சமஸ்தானங்கள் தம் விருப்பத்திற்கு ஏற்றவகையில் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இம்முடிவுகளின் அடிப்படையில் ஜூலை 1947-ல் இந்திய சுதந்தரச் சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆகஸ்டு 14, 1947-ல் பாகிஸ்தானும், ஆடஸ்டு 15, 1947-ல் இந்தியாவும் சுதந்தரம் பெற்றன.


காஷ்மீர் மன்னர்கள்
டெல்லி சுல்தான்கள் ஆட்சி முடிவடையும் காலத்தில் வட இந்தியப்பகுதியில் சிறு சிறு அரசுகள் சில தோன்றின. அவ்வகையில் காஷ்மீரை "சிக்கந்தர் ஷா" என்பவர் ஆண்டுவந்தார். இவருக்கு ஐடேல் பிரக்கர் (Idol Breaker) அல்லது (Butshikhan) பட்சிகான் எனப்பெயர்.

காஷ்மீரில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பாக வைஷ்ணவம் சிறந்து விளங்கியது. 18-ம் நூற்றாண்டில் இறுதியில் இப்பகுதியின் சிறந்த மன்னராக "சாகிகான்" என்ற மன்னர் விளங்கினார். இவரது வேறுபெயர் "ஜெயிலுனாபுடின்". இவர் இந்துக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை நீக்கியதால் இவருக்கு "காஷ்மீரின் அக்பர்" (Akbar of Kasmir) எனப்பெயர்.

இவர் காஷ்மீரத்தின் வூலார் ஏரியில் (Wular lack) மத்தியில் அழகிய தீவு ஒன்றினை உருவாக்கி அதற்கு (Zaina Lanka) ஜைனா லங்கா எனப்பெயரிட்டார்.

இவ்வாறு இறுதியில் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது ஒரு சீக்கிய மன்னர் "ஹரிசிங்" என்ற மன்னர் காஷ்மீரை ஆண்டுவந்தார்.


காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு
 
பாகிஸ்தான், தனது எல்லையோரம் அமைந்துள்ள காஷ்மீர் மன்னருக்கு பல வகையிலும் நெருக்கடிகள் தந்தது. எல்லையோரம் வசித்த பழங்குடியினர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, காஷ்மீரைக் கைப்பற்றத் தூண்டியது. அந்தப் பழங்குடிகள், காஷ்மீர் மீது போர் தொடுத்தார்கள். பாகிஸ்தான் ராணுவமே அவர்களுடன் சேர்ந்து தலைநகர் நகர் நோக்கி வந்தது. அப்போது, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் உதவி கேட்டு, ஜவஹர்லால் நேருவிடம் முறையிட்டார்.
காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ உதவி கோரிக்கை குறித்து அக்டோபர் மாதம் 25ந் தேதி இந்தியாவின் இராணுவ குழு இதுபற்றி விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை தாங்கினார். இறுதியாக காஷ்மீர் சமஸ்தானத்திற்குள் இந்தியா நுழைய கூடாது என்றும், ஆனால் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவதாக சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டால் , இராணுவ உதவி அளிக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறினார்(Lord Mountbatten final advise was that Indian troops should not enter into an independent country but should do so only when the State had acceded to India) . இதன் அடிப்படையில் இந்தியாவின் சார்பாக வி.பி.மேனன் உடனடியாக ஜம்மு சென்று மகாராஜாவின் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி முறைப்படி இணையும் ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்த இணைப்புக்கு இந்தியாவின் சார்பாக மவுண்ட்பேட்டன் தனது ஒப்புதலை அளித்தார்.இதன் பின்னர் உடனடியாக ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்று மலைவாழ் பழங்குடிக் கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்திக் காஷ்மீர் காக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ந் தேதி முறைப்படி காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ருப்பினும் காஷ்மீரின் மூன்றில் ஒருபகுதியினை பாகிஸ்தான் கைபற்றியது. அதனை சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. காஷ்மீரின் மூன்றில் இரண்டுபங்கைத்தான் இந்திய இராணுவத்தால் தக்கவைக்க முடிந்தது. ிறகு ஹரிசிங்குக்குப் பதில் அவரது மகன் கரன்சிங், மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.



 

ஐக்கிய நாட்டுசபை தலையிடுதல்
 
இந்தியாவிடம் இணைந்த காஷ்மீரை பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.

ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை.


தனித்தன்மைகள் காக்கப்படும் - உறுதிமொழி
ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த நமது பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதி மொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்ததது, வருகின்றது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை 5வது மாநிலமாக அறிவித்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை கில்ஜித் பல்திஸ்தான் என்ற பெயரில் புதிய மாகாணமாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் கிலானி தலைமையில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி கில்ஜித் பல்திஸ்தான் என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியான உள்நாட்டு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

பாகிஸ்தான் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, இன்னொரு முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துளளன. மற்ற கட்சிகள் நிராகரித்துள்ளன.

நிபந்தனை / உறுதிமொழி / 370-வது பிரிவு


 
அப்போது செய்யப்பட்ட இணைப்பு உடன்பாட்டில் காஷ்மீரின் சூழ்நிலைகள், சிறப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சில சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் கேட்டதற்கு இணங்கவே இந்திய அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. அதற்கான ஜனாதிபதியின் பிரகடனம் 1952 நவம்பர் 17-ம் தேதி அமலுக்கு வந்தது.
1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் கையளிக்கப்படும்.

2. இந்திய அரசின் வாக்குறுதி: ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டுச் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பின்னர் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடனான இணைப்பு இறுதியாக்கப்படும்.

இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உண்மைகள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்க அனுமதி இல்லை"

காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்.

ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.

காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை.
 

இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறத

ஆனால் () கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,

இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தத


The Constitution of Jammu and Kashmir
Preamble. - We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves - ………
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.

இது என்ன கூறுகிறது?

ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள். (இரட்டை குடியுரிமை என்றால் அங்கு இந்தியக்கொடியையுமம், காஷ்மீரக்கொடியையும் சேர்த்தே பறக்கவிடவேண்டும். ஒன்றைவிட்டு ஒன்றைமட்டும் ஏற்றுதல் தவறு)

மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக் கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது.

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

144. Flag of the State:


144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஒரு மசோதா விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டால், குடியரசு தலைவர் எத்தனை முறை வேண்டுமானலும் திருத்தம் செய்ய கோரி மாநிலத்திற்க திருப்பி அனுப்பலாம். துமிழகத்தில் நில உச்ச வரம்பு மசோதாவிற்கு ஆறு முறை திருத்தம் செய்ய வேண்டி திருப்பி அனுப்பட்டது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஒரு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு சென்றால் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது முறையாக காஷ்மீர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால், குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்கப்படும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஷேக் அப்துல்லா 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ந் தேதிக்கு முன் பாகிஸ்தான் சென்ற காஷ்மீர் முஸ்லீம்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் பூர்வீகச் சொத்தும் மீட்டுக் கொடுக்கப்படும் என்ற வகையில் Resettlement Act-ஐக் கொண்டு வந்ததை மறந்து விடக்கூடாது.

இந்தியா ஒப்பந்தத்தை மீறுதல்

அந்த இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்ட மவுன்ட்பேட்டனும் இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால், அந்த மக்களின் சம்மதத்தையும் கேட்ட பின்னரே செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையோடு இணைப்பு தற்காலிகமானதுதான் என்ற நிலையில் அதனை ஏற்றார். 1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையிலும் 'ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்' என்று நேரு கூறினார். பின்பு, 31 டிசம்பர் 1947இல், .நா. சபைக்குக் கொடுத்த புகாரிலும் அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, .நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் நேருவின் காலத்திலேயே மீறப்பட்டன. ‘வாக்கெடுப்பு பற்றி காஷ்மீரில் குரல்கள் ஒலித்தபோதெல்லாம் ரொம்பவும் கவனமாகத் தட்டிக்கழித்தார்.

பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது. இந்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தந்தது. பக்ஷி குலாம் முகமதின் அரசும் அதற்கு ஒப்புதலளித்தது. இதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 வெறும் காகிதப் புலியாயிற்று.

பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.

1958இல் இன்னுமொரு சட்டம் ஜம்மு-காஷ்மீரை மத்திய நிர்வாகச் சேவையின் கண்காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்தது.


காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அரசியலமைப்புச் சட்ட விதி 370 ன் படி கூடுதல்அதிகாரம் வேண்டுமானால் வழங்கலாம் என்றது.
ாஷ்மீர்மக்களின் நிலை

காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதென்றாலும் நிர்வாகத்தின் பிடி ராணுவத்தின் கையில்தான் என்பதை உணரலாம். இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருப்பது சர்வசாதாரணமான காட்சி. எங்களுக்குப் பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் - இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட - பதில் சொல்லத் தேவையில்லை. எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள்.


காஷ்மீர் மக்கள்மீதுள்ள நமது பார்வை
'காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படுத்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது. ஆனால், இவர்கள் காட்டுவதெல்லாம் இந்திய விரோத மனோபாவம்தான்.' இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம்.


என்ன தீர்வு
காஷ்மீரை பொறுத்தவரை மாஹாராஜா ஹரிசிங், இந்தியா, பாகிஸ்தான், .நா. எல்லோரும் சிலபல தவறுகளை செய்துவிட்டனர். இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரம் அடைந்த அன்று மாநிலங்கள் இவ்விரு நாட்டில் எந்நாட்டில்வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றே இங்கிலாந்து அறிவித்து நமக்கு சுதந்தரம் அளித்தது. ஆனால் இந்த ஹரிசிங் தனது சுயலாபம் மிகுதியால் தான் ஆண்ட காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைக்கவும், பிறகு இந்தியாவுடன் இணைப்பதற்கும் பேரம் பேசியதின் விளைவாகவும், திடமாக ஏதேனும் ஒரு நாட்டில் இணைக்க தவறியதாலும், இன்று இந்திய மக்களும், காஷ்மீரிகளும், பாகிஸ்தானியரும் அமைதியின்றி தவிக்கின்றோம்.

இறுதியில் ஹரிசிங் தமது மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க கையொப்பமிட்டப்பின்பு, காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்ரமித்தது மிகப்பெரியத் தவறு.

இந்தியா அப்போது பாகிஸ்தானின் ஆக்ரமிப்பை தடுத்து நிறுத்தியதே அன்றி, அது ஆக்ரமித்தப் பகுதியினை மீட்காமல் விட்டது தவறு. மேலும் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு நிபந்தனைகளை நீக்காமல் அதனை மீறியது தவறு. ஐக்கிய நாட்டு சபையுடன் செய்த ஒப்பந்தப்படி காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த தவறியதும் தவறு.

.நா. காஷ்மீர் மக்களின் தனிநாடு விருப்பத்தையும் வாக்கெடுப்பில் சேர்த்தது தவறு. ஒன்று அம்மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கவேண்டும். அல்லது பாகிஸ்தானுட இணைய விருப்பம் தெரிவிக்கவேண்டும். மூன்றாவதாக தனிநாடு கோரிக்கையினை வளர்த்தது ஐ.நா.வின் தவறு. இந்திய சுதந்தரம் அன்று பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாக செல்ல அங்கீகரித்தது இங்கிலாந்து. மற்ற மாகானங்கள் யாவும் இந்த இரண்டுநாட்டில் ஒன்றில் ஐக்கியமாகவேண்டுமே தவிற மேலும் ஒருதனிநாடாக உருவாக எந்த மாகானமும் முயலக்கூடாது.

ஒருவாறு நீதிப்படி நடுநின்று பார்த்தால் காஷ்மீர் மக்களிடையே தனிநாடு கோரிக்கையினை எடுத்துவிட்டு, இந்தியாவா? பாகிஸ்தானா? என்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தி இரண்டில் ஒரு நாட்டுடன் காஷ்மீரை இணைப்பதே சிறந்தது.

ஆனால், இன்றைய நிலையில் காஷ்மீரின் ஒருபகுதி ஏற்கனவே பாகிஸ்தானிடம் உள்ளது. அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாநிலமாக அறிவித்தாகிவிட்டது. அதனை இந்தியாவும் ஒன்றும் செய்யமுடியா நிலையில் உள்ளது. இந்தியாவிடம் உள்ள மற்ற காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானோ, மற்ற உலக நாடுகளோ, .நா. அமைப்போ ஒன்றும் செய்துவிடமுடியாது. எனவே இந்தியாவிடம் உள்ள காஷ்மீரிகள், நாங்களும் முழுமையான இந்தியர்களே! என்று தங்களை தேசிய நீரோட்டத்தில் தாங்களாகவே முன்வந்து கலந்துவிடுவதே சிறந்தது. தங்கள் மாநிலத்திற்கு என்று எவ்வித சிறப்பு அந்தஸ்தும் வேண்டாம், தனிக்கொடி வேண்டாம் என்று மற்ற இந்தியர்களை போல ஒன்றிணைவதே அவர்களுக்கு நல்லது. இல்லையேல் இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு அளித்து வருகின்ற தற்காலிக சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு அவர்களையும் சட்டரீதியாக ஒரு முழுமைப்பெற்ற இந்தியர்களாக அறிவித்துவிடுவதே நல்லது. இதனால் காஷ்மீர் மக்களும் இந்திய இராணுவத்திடமிருந்து விடுதலை அடைவார்கள். அவர்களது வாழ்க்கையும், பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டு அந்தந்த நாட்டு முன்னேற்றத்திற்கு செலவிட ஏதுவாகும்.

சமீபத்தில் நமது தலைமை நீதிமன்றம் சிவப்பு விளக்கினை யார் யார் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளது. தலைமை நீதிமன்றம் கூறியவுடன் நேற்று உடனே (13.12.2013) ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தன் வாகனத்தில் இருந்த சிவப்பு நிற விளக்கை அகற்றியதோடு, மற்ற அதிகாரிகளையும் அகற்றும்படி உத்தரவிட்டார், என்ற செய்தியினை இன்றைய நாளேட்டில் படிக்கமுடிந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிவப்பு சுழல் விளக்குடன் வேகமாகவந்ததை தடுத்து நிறுத்தி அதனை அகற்றி ஊதாநிற சுழல்விளக்கை மாற்றிக்கொண்டு செல்ல உத்தரவிட்ட ஜம்மு காஷ்மீர் நடமாடும் நீதிமன்ற நீதிபதியையும் பாராட்டவேண்டும். ஆனால் அதனால் காத்திருந்த நேரத்தில் ஒரு உயிர் பிரிந்தது வேதனையளிக்கிறது. இந்த எடுத்துக்காட்டுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் இன்றைய இந்தியாவின்மீதுள்ள பற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆனால் நேற்று சென்னையில் நடந்த (13.12.2013) மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மாநாட்டில் பெரும்பாலான அதிகாரிகள் சிவப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தில் வந்து கலந்துக்கொண்டார்கள். இந்தியர்களாகிய இவர்கள் நமது தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உத்தரவினைமட்டும் மக்கள் மதிக்கவேண்டுமாம். தமிழர்கள் காஷ்மீரிகளை பார்த்து திருந்தவேண்டும்.

உலக மக்கள் சுதந்தரமாகவும், அச்சமின்றியும், பொருளாதார முன்னேற்றத்துடனும் வாழவேண்டும் என்பதே நமது கனவாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.