Tuesday, December 24, 2013

கிறுத்து பிறந்தநாள் வாழ்த்துகள்

ஒரு ஏழைத் தச்சனுக்குப் பிறந்தவர் இயேசு. அன்றைக்கு நடப்பில் இருந்த மதத்தை எதிர்க்க வேண்டும் என்றால் இயேசுவின் அந்தஸ்து மற்றதைவிட மிக உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டுமல்லவா? இயேசு சஞ்சலமின்றி கூறினார்,

"என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்"

என்றார். தேவனாகிய கர்த்தரே தனது பிதா என்றும், தான் சாட்சாத் அவரின் குமாரன் என்றும் கூறினார். இல்லையெனில் அவரின் புதிய சிந்தனைகளுக்கு அங்கே கேட்கும் செவிகளே இருந்திருக்காது. அப்போது யூதர்கள் அவருக்கு செவி சாய்க்கவில்லை. அவர்கள் கேலி பேசினார்கள். அவர்களை நோக்கி இயேசு மீண்டும் கூறினார்,

"நீங்கள் தாழ்விலிருந்து உண்டானவர்கள். நான் உயர்விலிருந்து உண்டாவன். நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் அல்ல". என்றார்.

மரியாளின் கணவன் யோசேப்புவின் கனவில், கர்த்தருடைய தூதன் தோன்றி, "தாவீதின் குமாரணாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்".

இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த கணக்கறியீர் - (திருஅருட்பா)

உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்

ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர் - (திருஅருட்பா)

உலகியலர் அனைவருக்கும் எமது கிறுத்து பிறந்தநாள் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.