Friday, February 13, 2015

பிரபந்தத்திரட்டு


பிரபந்தத்திரட்டு

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு சமரசபஜனை ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் அருளிய சன்மார்க்க நூல் "பிரபந்தத்திரட்டு" 1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்களே வெளியிட்டார். இந்நூல் தற்போது சன்மார்க்க உலகில் கிடைக்கும் பொருட்டு மேலழிஞ்சிப்பட்டு திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பில் ச.மு.க. அறக்கட்டளையானது 06-01-2015 அன்று வடலூரில் வெளியிட்டது. பல சன்மார்க்க அன்பர்களின் கைகளில் தற்போது இந்நூல் தவழ்ந்துக்கொண்டிருக்கும்.
வடலூர் வர இயலாத அன்பர்கள் இந்நூலை தங்கள் வீட்டிலிருந்த படியே கீழ்காணும் விவரப்படி பெறலாம். இந்நூல் 850 பக்கங்களைக்கொண்டு உயர்ந்த பைண்டிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நூலின் விலை ரூ.400/- ஆகும். எனினும் ச.மு.க. அறக்கட்டளையானது ரூ.300/- விலைக்கு அஞ்சல் செலவு உட்பட விரும்பும் அன்பர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலம் தவிர மற்ற மாநிலங்களுக்கு ரூ.350/- க்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
இந்நூல் தேவைப்படும் அன்பர்கள் கீழ்காணும் வங்கிக்கணக்கில் ரூ.300/- செலுத்தி தங்களது முகவரியினை அடியில் காணும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி SMS அனுப்பவும்.
Account Name: T.M.RAMALINGAM
Account No.: 057401502097
Account No.: ICICI BANK, CHENNAI ARMENIAN STREET BRANCH,
IFSC Code: ICIC0000574
கைப்பேசி எண்: 9445545475
நூல்பற்றின சிறு விளக்கம்:
பிரபந்தத்திரட்டு நூலின் உள்ளீடு: ச.மு.க. அருளியது
1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்.
2.
இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை.
3.
பாதார்ச்சனைக் கீர்த்தனைகள்.
4.
சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சற்குரு வெண்பா அந்தாதி.
5.
அருட்பிரகாசர் அற்புத அந்தாதி.
6.
சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் கிளிக்கண்ணிகள்.
7.
சற்குரு புலம்பற் கண்ணி.
8.
இயற்கையுண்மை ஆனந்தக்கண்ணி.
9.
சன்மத சமரசாதீத சித்விலாச நாமாவளி.
10.
உத்தரஞான சிதம்பர நாமாவளி.
11.
திருவருட்பிரகாச வள்ளலார் நாமாவளி.
12.
வடற்சிற்சபை மாலை.
13.
அருட்பிரகாசர் அற்புதமாலை.
14.
குருநேச வெண்பா.
15.
திருவருட்பிரகாச வள்ளலார் வருகை - நன்னிமித்தம் பராவல்.
16.
கொலை மறுத்தல்.
17.
காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் பாமாலை.
18.
காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் கீர்த்தனை.
19.
காரணப்பட்டு விக்னேசுவரர் நாமாவளி.
20.
ஆளுடைய பிள்ளையார் நாமாவளி.
21.
சுப்பிரமணியக் கடவுள் சோடச வெண்பா.
22.
சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்.
23.
சடகோபர் நாமாவளி.
24.
விபூதிப்பிரசாத மகிமை.
25.
வெறிவிலக்கு.
26.
கற்பிலாப் பெண்டிர்.
27.
கற்புடையப் பெண்டிர்.
பிரபந்தத்திரட்டு நூலின் உள்ளீடு: வள்ளலார் அருளியது
1. ஒழிவிலொடுக்கச் சிறப்புப்பாயிர விருத்தியுரை
2.
தொண்டமண்டல விலக்கணம்
3.
இலக்கணப் பத்திரிகை - (சரித்திரக் குறிப்பில்)
4.
தமிழ்
5.
ஜீவகாருண்ய வொழுக்கம் (2-ம் பிரிவு)
6.
அற்புதக் குறிப்புகள்
மேற்கண்ட 27 தலைப்புகளின் உள்ளீடாக இந்நூல் உள்ளது. இதில் மொத்தம் 3507 பாடல்கள் உள்ளன. அதற்கான பாட்டு முதற்குறிப்பு அகராதியும் புதியதாக பதிப்பாசிரியரால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தலைப்பிற்கும் பதிப்பாசிரியரின் சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கும் கிடைக்காத நீங்கள் இதுவரை பார்த்திராத வள்ளலாரின் பாதரட்சை படம் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலில்தான் வள்ளலாரின் சரித்திரக் குறிப்புகள் முதன்முதலில் அவருடைய அணுக்கத்தொண்டரான ச.மு.க. அவர்கள் உரைநடையாகவும் கீர்த்தனையாகவும் எழுதி இவ்வுலகிற்கு வெளியிட்டார். அதன்பிறகே வள்ளலாரின் அற்புதங்கள் மக்களுக்குத் தெரிய வந்ததது என்பது இந்நூலில் சிறப்புகளில் ஒன்று. இவையன்றி வள்ளலார் அருளிய மேற்காணும் உரைநடை பகுதியும் இந்நூலில் உள்ளது. மேற்காணும் வள்ளலாரின் உரைநடைகள் 1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்கள் இந்நூலை வெளியிடும்போது முதன்முதலாக வெளிஉலகிற்கு வெளிவந்தவைகளாகும்.
மேலும் இந்நூலில் உள்ள சிறப்புகளை கீழ்காணும் முகநூல் முகவரியில் தொடர்ந்து நீங்கள் படிக்கலாம். நன்றி.
                 
https://www.facebook.com/profile.php?id=100009115988326
https://www.facebook.com/ramalingamweb  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.