Sunday, September 22, 2024

குழந்தை பெறுவதை நிறுத்து

குழந்தை பெறுவதை நிறுத்து

RAMALINGAM T M
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?

++++++++++++++++++++++++++++++++++
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?
கண்டிப்பாக சாபம் இல்லை. அதுவும் ஒரு வாழ்க்கை முறை.
ரஃபேல் சாமுவேல் என்கிற இளைஞர் ஆரம்பித்த இயக்கம் தான் "Stop Having Babies". இவர் ஒரு ஆன்டிநேட்டலிஸ்ட். அதாவது குழந்தை பெற்று கொள்வதற்கு எதிரானவர்.
ரஃபேல், சில வருடங்களுக்கு முன் தன் பெற்றோருக்கு எதிராக ஒரு வினோதமான வழக்கு தொடர்ந்தார். அவருடைய சம்மதத்தை பெறாமல் அவரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது தவறு என்றும், அதற்கு ஈடாக தன் வாழ்நாளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பெற்றோரே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவரது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவரது பெற்றோர் இருவரும் வழக்கறிஞர்கள். அவர்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களாக தெரியவில்லை. அவரது தாயார், "எனது மகன் சுய சிந்தனை கொண்டவனாக வளர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் அவனுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இந்த வழக்கை கிழி கிழி என கிழித்து விடுவேன்" என்று கூறி இருக்கிறார்.
கேட்ட மாத்திரத்தில் ஆன்டிநேட்டலிஸ்ட்கள் இயற்கைக்கு புறம்பான மனித நேயமற்ற வெறுப்பு மிகுந்தவர்கள் என்று தோன்றுகிறது அல்லவா? அவர்கள் நிலைப்பாட்டுக்கான காரணங்களை கேட்டால் அந்த எண்ணம் மாறி விடும்.
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுகமானது அல்ல. ஒவ்வொரு படியிலும் போட்டி, பொறாமை, போராட்டம், வேலைவாய்ப்பு திண்டாட்டம், தோல்வி, ஏமாற்றம், சமூக கட்டுப்பாடு, நோய், இயலாமை என்று கசப்பான அனுபவங்கள் நிறைந்தது. வாழ்க்கையை பற்றிய கசப்பான உண்மைகளை அனுபவங்களை அறிந்திருந்தும் அவற்றை ஏன் குழந்தைகள் மீது (அதுவும் தன்னுடைய குழந்தைகள் மீது) திணிக்க வேண்டும்?
பெற்றோராக நம் குழந்தைகளின் நன்மைக்காக எதை வேண்டுமானாலும் செய்வோமேயானால், அவர்களை ஏன் நாமே இந்த இன்னல்களுக்கு உட்படுத்த வேண்டும்?

பெற்றோருடைய அன்பு நிபந்தனை இல்லாதது, சுயநலம் இல்லாதது என்றாலும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காரணம் அனைத்தும் சுயநலமானது

என் குலம் தழைக்க வேண்டும்

என் வியாபாரத்தை எனக்கு பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

என்னை வயதான பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

சின்ன குழந்தைகள் செய்யும் குறும்பு முகபாவனைகள் அழகாக இருக்கும். அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கொஞ்சி விளையாட வேண்டும்

குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் ஊர் என்னை என்ன சொல்லும்? அந்த அவமானத்தை நான் தாங்குவதை விட, வாழ்க்கை வீசும் இன்னல்களை வாழ்நாள் முழுவதும் என் குழந்தை எதிர் கொள்ளட்டும் என்று எண்ணம்

நாம் வாழும் உலகத்தை சிறந்ததாக ஆக்க, நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை களைய, பூமியை பசுமையாக்க பெரிதாக நாம் முயற்சி செய்யவில்லை. இன்னமும், பசி பட்டினி தண்ணீர் பற்றாக்குறை வன்முறை வன்புணர்வு எல்லாமும் ஜம்மென இருக்கிறது.
ரஃபேல் ஆரம்பித்துள்ள Stop Having Babies இயக்கத்தின் முக்கியமான நோக்கங்கள் -
கண்டிப்பாக ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அப்படி கட்டாயப்படுத்தவும் கூடாது. நம்மை பெற்றுவிட்டதாலேயே நாம் நம் பெற்றோருக்கு கடமை பட்டவர்கள் அல்லர். மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்கிற அழுத்தத்தின் பேரில் குழந்தைகளைப் பெற்று அவர்களை வதைக்க வேண்டாம் என்பதே நோக்கம்.
==================================
வள்ளற்பெருமானின் இறவாவரத்தை பெறுவதைவிட மிகச்சுலபமானது, ஒரு ஆன்மாவை இப்பூமியில் பிறக்காமல் செய்வது சுலபம், அதுவே புண்ணியம். அதுவே அனைத்து பிறவா ஆன்மாவிற்கும் நாம் அளிக்கும் வரம். - TMR.
===================================

Saturday, September 21, 2024

பூமியில் அமைதியான இடம் எது?

 பூமியில் அமைதியான இடம் எது?

இந்த பதிலில் குறிப்பிடப்போவது ஒரு ஆளில்லாத தீவோ அல்லது ஒரு பாலைவனமோ கிடையாது மாறாக அது ஒரு சிறிய அறை. ஆம், Microsoft நிறுவனம் அவர்களுடைய தலைமை கிளையின் (Redmond Washington, USA) Building 87-ல் அமைத்துள்ள ஒரு ஆன்-எகோயிக் சேம்பர் (Anechoic Chamber) அறைதான் உலகிலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும்.

RAMALINGAM T M

இது எந்த அளவிற்கு அமைதியான இடமென்றால் இந்த அறையின் பின்னனி இரைச்சலின் (Background Noise) அளவு -20.35 dBA (டெசிபல்). இந்த இடத்தில் உருவாகும் இரைசலைக் குறைப்பதற்காகவே ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள் (Sound Absorbing Wedges) அறைகளின் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.


ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள்

இந்த இடமானது Microsoft நிறுவனம் தங்களுடைய மின்னணு சாதனங்களின் ஒலித்திறனை பரிசோதிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இந்த இடமானது மின்னசோட்டாவின் Orfield Laboratories-ல் அமைக்கப்பட்டுள்ள Anechoic Chamber-ஐ விட சிறந்ததாகும்.இருப்பினும் Orfield Laboratories-ல் உள்ளதைப் போல இந்த இடத்தில் மனிதர்களுக்கு அனுமதி கிடையாது .இந்த இடமானது 2015-ல் உலகின் மிக அமைதியாக இடம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மனிதர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அமைதியான இடம் மினசோட்டா-வின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamber ஆகும். 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த அறையின் பின்னணி இரைச்சலின் அளவு சுமார் -9.4 dBA ஆகும். இது எந்த அளவுக்கு அமைதியான இடமென்றால் ஒரு மனிதனால் தனியாக இங்கு 45 நிமிடம் கூட இருக்க முடியாதாம். அதற்கு மேல் இருக்க முயற்சித்தால் அந்த மௌனமே நம்மை பைத்தியமாக்கி விடுமாம்.

இதற்கான காரணத்தை இந்த ஆராய்ச்சி கூடத்தின் நிறுவனரான Steven Orfield கூறியது,' தனியாக வெளிச்சமில்லாமல் இந்த அறையில் ஒருவர் இருந்தால் சில நிமிடங்களில் இந்த அறைக்கு அவர்களின் கேட்கும் திறன் தகவமைந்து விடும். முதலில் அவர்களுடைய இதயத்துடிப்பே அவர்களுக்கு கேட்க ஆரம்பிக்கும், பின்னர் சுவாசிக்கும்போது நுரையீரல் சுருங்கி விரியும் சத்தமும் கேட்க ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக வயிற்றின் உள்ளுறுப்புகளின் அசைவுகளின் சத்தம், இரத்த ஓட்டத்தின் சத்தமெல்லாம் நம் காதுகளில் கேட்கும்'. அதாவது உள்ளே சென்ற சில நிமிடங்களில் நாமே ஒலிமூலமாக மாறிவிடுவோமாம்‌! இதுவே நமக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் பதற்றமாக்கி கட்டுப்பாட்டை கடந்தால் நாம் பைத்தியமாகவும் வாய்ப்புள்ளதாம்.


உலகிலேயே மொத்தமாக ஆறு Anechoic Chamber அறைகள்தான் உள்ளனவாம். ஏனெனில் இதுபோன்ற அறைகளை உருவாக்க அதிகம் செலவாகும். அதாவது ஒரு ஆனெகோயிக் சேம்பர்-ஐ உருவாக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 700 கோடி இந்திய ரூபாய்) செலவாகுமாம்.

வாசித்தமைக்கு நன்றி…!





Friday, September 13, 2024

புத்தகங்களை வாசிக்கும் நேரம்

 புத்தகங்களை வாசிக்கும் நேரம்:

=========================
RAMALINGAM T M

தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகத்சிங்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தார் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னார் காந்தியடிகள்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவார் சார்லி சாப்ளின்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சர்ச்சில்.
தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாரர் ஜவஹர்லால் நேரு.
புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னார் அறிஞர் அண்ணா.
ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
“கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.
ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விவேகானந்தர்.
கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.
இறைவன் அறிவுறுத்த, நூல் அனைத்தும் பொய் என்றார் வள்ளலார். ஆனால், ”பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் ( 70 X 10 X 400 X 1000 X 1000 = 28000,00,00,000 கிலோ ) கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம். என்றும் கூறுவார் வள்ளலார்.
வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
புத்தகங்கள் ஏதும் பேசாது, அவைகள் ஊமை தன்மையைக் கொண்டுள்ளன. புத்தகங்களை வாசிக்க வாசிக்க மெளனத்தையே கற்றுக்கொள்வாய்.
-TMR

Sunday, September 8, 2024

INDIA

 INDIA

++++








பல வெளிநாட்டவர்கள் இந்தியா அழுக்காக இருக்கிறது, இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்று கேலி செய்கிறார்கள். நாம் உண்மையில் அவ்வளவு மோசமானவர்களா?
நம் நாட்டு மக்களிடம் சுத்தம் சுகாதாரம் என்பது நன்றாக படித்தவர்களிடம் கூட இல்லை என்பதைத்தான் இந்த கேள்வி காட்டுகிறது. நாம் சுத்தமாக இல்லை என்பதை நாம் கண்ணாடி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அது கடினம் என்றால் அடுத்தவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் அல்லது சுவிட்சர்லாந்து அல்லது ஜப்பானை பார்த்து எந்த நாட்டினர் ஆவது "அவர்கள் சுத்தமாக இல்லை!!" என்று சொல்கிறார்களா? இந்தியா தன்னைப் போன்ற ஒரு நாட்டை பார்க்க வேண்டும் என்னால் பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பங்களாதேஷ் மட்டும் தான் பார்க்க வேண்டும். இந்த மூன்று நாடுகளை தவிர சுத்தமில்லாத நகரங்களை கொண்ட நாடு உலக வரைபடத்திலேயே கிடையாது. ( ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகள் இருக்கலாம்)
மும்பை, அதைவிட Silicon city என்று அழைக்கப்படும் பெங்களூர், கொல்கத்தா கேக்கவே வேண்டாம் எல்லா இடங்களிலும் ஒரு விஷயம் மிகவும் பொதுவானது.
அங்கு ஒரு Slum, Redlight area கண்டிப்பாக இருக்கும். அதுவும் இந்த Contrast அதாவது ஒருபுறம் வளர்ச்சி மறுபுறம் குப்பைமேடு என்று இந்திய நகரங்கள் இருப்பது வெட்கக்கேடு!
லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் மருத்துவமனையின் வாசலில் குப்பை இருக்கும். அந்தக் மோசமான சுகாதாரம் உள்ள சாலைகளை தாண்டி சுகாதாரமற்ற மக்களைத் தாண்டி டாக்டர்கள் நர்சுகள் சொகுசாக உள்ளே சென்று அந்த மருத்துவமனையின் கழிவுகளை குப்பைகளை வெளியேற்றுகிறார்கள். சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் நடந்த குற்றச்சாட்டு இந்த மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவது சம்பந்தமாக ஏற்படும் ஊழல் பற்றியும் சொல்லுகிறது.
நீங்கள் உங்கள் ஊரை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தால் வியாதியே வராது. குப்பையை தாண்டி சென்று மருத்துவமனையில் வைத்தியம் செய்து கொள்ளும் பணக்காரர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
மருத்துவமனை மட்டும் அல்ல, கோவில் கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் எந்த இடமும் நம் நாட்டில் குறிப்பாக பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் இல்லவே இல்லை.
உண்மையில் வெளிநாட்டு மக்கள் பார்ப்பது மிகவும் கம்மி. டாஸ்மாக் பார், சிவப்பு விளக்கு பகுதி, சேரிகள் போன்ற இடங்களை அவர்கள் சரியாக பார்க்கவில்லை என்று தான் கூறுவேன். மொத்த இடங்களையும் அவர்கள் பார்த்தால், திகைத்து போய் விடுவார்கள்.
இதைப் பற்றி எழுதுவதற்கு மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. நம் நாடு இந்த விஷயத்தில் திருந்தும் வாய்ப்பு இல்லவே இல்லை. இதைப் பற்றி இதற்கு மேல் எழுத எனக்கும் விருப்பமில்லை! நீர் நிலம் காற்று ஆகாயம் என்று மட்டுமல்ல, நாடு நகரம் காடு கிராமம் நதி கடற்கரை எங்கெல்லாம் நம் மனிதர்கள் போகிறார்களோ, அங்கெல்லாம் இந்திய மக்கள் சென்று வந்ததற்கு அடையாளமாக, ஏதோ தேசியக் கொடியை வைப்பது போல் குப்பைகளை போட்டு விட்டு வருகிறார்கள்.
வீதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதே எச்சில் துப்பிச் செல்வது, நடக்கும் போது வீதியில் எச்சில் துப்புவது போன்ற தீய பழக்கங்கள் இயல்பாக நம்மிடையே குடிகொண்டு விட்டது.
அதிலும் பிளாஸ்டிக் குப்பைகளை வெளியேற்றுவதில் பிலிப்பைன்ஸ் இந்தியா இரண்டு நாடுகளும் உலகத்தில் முன்னணியில் இருக்கிறது. பஞ்சபூதங்கள் நீர் நிலம் காற்று ஆகாயம் எல்லாம் இங்கு முழுமையாக மாசு கலந்து இருக்கிறது.
இந்த மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வாழ்ந்து இந்த மக்களுக்கு இந்த அபாயகரமான சூழ்நிலை பழகி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை விதமான கழிவுகளும் நம் நாட்டில் மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும்! எனவே வெளிநாட்டவர் இல்லை, வெளி கிரகத்திலிருந்து ஒருவர் வந்தால் கூட இங்கிருக்கும் அசுத்தமான சூழ்நிலையை பார்த்தால் இந்த உலகத்தை விட்டே ஓடிவிடுவார்கள்!
குப்பைகளை எரிக்கக்கூடாது என்ற அடிப்படை அறிவுக்கூட இந்தியர்களிடம் இல்லையே. தெரு ஓரங்களில் சிறிய சிறிய குப்பைகளை எரிக்கும் பொது நபர்களை பல இடங்களில் பார்க்கலாம். மேலும் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களே வீதி ஓரங்களில் குப்பைகளை சிறிய அளவில் குவித்து எரிக்கின்றார்கள். விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை முடிந்து அங்குள்ள எச்சங்களை தீயிட்டு கொளுத்துகின்றார்கள்.
இத்தனை லட்ச கணக்கான மக்கள் இருக்கும் இந்திய நகரங்களில் நீங்கள் வெளிநாட்டவர் ஒருவர் கூட பார்க்க முடியாது. " நல்ல வேளை! யாரும் வெளிநாட்டினர் இதை பார்க்கவில்லை!" என்று பலமுறை நான் நினைத்து கொண்டு சில இடங்களை தாண்டிச் சென்றிருக்கிறேன். ஆனால், IT கம்பெனி Multiplex Mall Showroom என்று நகரங்களில் கட்டி வைத்து ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டும் உலகத்திற்கு படம் பிடித்து காட்டி, நாம் இந்தியா முன்னேறி விட்டதாக எல்லோரையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றிக் கொள்கிறோம். பஞ்சபூதங்கள் மட்டுமல்ல Noise pollution பொது இடங்களில் தேவையில்லாமல் ஒலி எழுப்பும் மக்கள் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள்! வீதிகளில் இரண்டு கோயில்கள் வைத்துக்கொண்டு அங்கே பக்தி என்ற போர்வையில் பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்க வைத்து நாள் முழுதும் தொடர்ந்து ஒலி மாசுகளை உருவாக்கும் புத்திசாலிகள் நம் நாட்டில்தான் உள்ளார்கள். திருமண விழாக்களில் சொல்லவே வேண்டாம். இந்தியாவில் வாகன ஓட்டிகள் எழுப்பும் சப்தத்திற்கு அரசு தடை விதிப்பதே இல்லை. இதில் பட்டாசு ஒலிகளும் இவ்வுலகை மாசுபடுத்துவதில் முதலிடத்தில் உள்ளன.
வெளிநாட்டுக்காரர் யாரும் நம் நாட்டுக்கு வருவதில்லை. ஆனால் இந்தியர்கள் எல்லா நாட்டிற்கும் சென்று விடுகிறார்கள். சென்று இந்தியாவின் மானத்தை வாங்குகிறார்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அது வெளியே தானே வழியும்?
அதுபோல்தான் இந்திய மக்கள் தொகை!! இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளின் மக்கள் தொகை ( குறிப்பிட்ட ஒரு மக்களால்) எக்கச்சக்கமாக பெருகிக்கொண்டே செல்வதால், இந்த மக்கள் தொகை உலகம் முழுவதும் நிரம்பி வழிகிறது!
பங்களாதேஷ் போல், இன்னும் சொல்ல போனால் பங்களாதேஷை விட அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகிவிட்டது. இந்தியாவில் BJP ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று சொல்லிக் கொண்டு எக்கசக்கமாக மக்கள் தொகை உள்ள இவர்கள் இப்போது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
முந்தையெல்லாம் படித்தவர்கள் மட்டும் தான் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள். இப்பொழுது பஞ்சாப் போன்ற மாநிலத்தில் இருந்து illegal migrants என்று பங்களாதேஷ் மக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அகதிகள் போல், அமெரிக்காவின் மெக்ஸிகோ கனடா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து அகதிகள் போல் ஊடுருவுகிறார்கள். இனி அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்தியர்களுக்கு மரியாதை இருக்காது.
- இந்தியன்