Friday, July 5, 2024

கோட்டம்

 கோட்டம்:

++++++++

RAMALINGAM T M


நாம் இதுவரை “கோட்டம்” என்ற தமிழ்ச்சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது “வள்ளலார்”தான் என்று நம்பி இருந்தோம். சென்னையில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலை தனது பாடல்களால் புகழும் பொழுது வள்ளற்பெருமான் அக்கோயிலை “கந்த கோட்டம்” என்று புகழ்கின்றார். இவ்வாறு “கோட்டம்” என்ற சொல்லை முதன் முதலில் வள்ளலார் பயன்படுத்தினார் என்பது வரலாறு.
வள்ளலாரை பின்பற்றி, கோட்டம் என்ற வார்த்தையினை பயன்படுத்தியவர் கலைஞர் ஆவார். அவர் வள்ளுவருக்கு நினைவிடம் அமைத்து, அவ்விடத்திற்கு “வள்ளுவர் கோட்டம்” என்று சென்னையில் அமைத்தார்.
ஆனால், இந்தக் ”கோட்டம்” என்ற சொல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலேயே தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளதை மதுரை கல்வெட்டு கூறுவது வியப்பாக உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் “வள்ளலார்” என்கின்ற புகழும் பெருமானாருக்கு உண்டு. ஒரு வேளை மதுரை கல்வெட்டில் உள்ள “கோட்டம்” என்கின்ற தமிழ் வார்த்தையினை, தான் இருந்த இடத்திலிருந்தே இறை அருளால் வள்ளலார் அறிந்து “கந்த கோட்டம்” என்று பாடி இருப்பாரோ? என்கின்ற ஐயம் ஏற்படுகின்றது.
வாழ்க தமிழ்க் கோட்டம் வள்ளலார்!

T M RAMALINGAM
091 9445545475
vallalarmail@gmail.com

வடலூர் மாதப் பூசம் - ஜூலை 2024

RAMALINGAM T M

 

Thursday, June 20, 2024

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளம் நிறைந்த "கள்ளக்குறிச்சி" என்று சொல்லும் வகையில் ஊர் பெயரும் அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போதுவரை 33 ஆடவர்கள் மரணித்துள்ளனர்.
தனி மனித ஒழுக்கம் அற்ற மானிடர்களின் அன்றாட நிகழ்வானது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பலனும் இன்றி துக்கத்தையே கொடுக்கும்.
தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய, உலகில் வேறெந்த மொழியும் சொல்லாத, அறக் கருத்துகள் அடங்கிய திருக்குறள், திருவருட்பா போதனைகள் அனைத்தும் இங்கே பயனற்று போகின்றன.
இதற்கு அரசு என் செய்யும்? டாஸ்மாக் கடையை திறந்து வைத்திருப்பது அரசின் இழிவான ஒழுக்கச் செயல். அதையும் மீறி குழியில் வீழ்கின்றது சமுதயாம்.
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... நெஞ்சம் பொறுப்பதில்லை...

--TMR

RAMALINGAM T M


Tuesday, June 18, 2024

உயிர் எவ்வழியே செல்கிறது?

 உயிர் எவ்வழியே செல்கிறது?

RAMALINGAM T M

1. உயிர் எப்படி உடலுக்குள் எந்த வழியில் சென்றதோ அந்த வழியில் வெளியே போய்விடுமோ.
2. ஆணின் உயிரனுக்கள் (விந்து ) பெண்ணின் கருப்பை பையை அடையும் போது 3 கோடி உயிரனுக்கள் உயிருள்ள அனுக்களாக சுற்றித் திரியும். அந்த உயிர் ஆணின் விந்துக்குள் எப்படி அந்த உயிர் சென்றது
3. 3 கோடி விந்தனுவில் எப்போதோ ஒரு உயிர் மட்டும் கருவாக மாறுகிறது. அப்படியாயின் எத்தனை உயிரை கணவனும் மனைவியும் சேர்ந்து கொல்கிறார்கள். அந்த உயிர்களுக்கு என்ன ஆனது.
மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்தான் முதன் முதலில் விந்தனுவில் உயிரனுக்கள் பூட்சி போல நீத்துவதை கண்டு பிடித்தார். "Lot of animals" இது தான் அவர் சொன்னது. விந்துவில் உயிருள்ள அனுக்கள் இருப்பதாலேயே குழந்தை உருவாகிறது என்பது கலிலியோ க்கு தெரியாது நபிகளுக்கு தெரியாது. அவ்வளவு ஏன் உலகத்தை படைத்து அதில் அனைத்து உயிரினகளையும் படைத்ததாக சொல்லப்படுகிற இயேசுவுக்கே தெரியாது
மருத்துவ விஞ்ஞானித்திற்கே விந்துக்குள் எப்படி உயிர் உள்ள அனு உண்டானது என்று புலப்படவில்லை. விந்து எலும்பு மஜ்ஜை யில் உருவாகுவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அதெல்லாம் சரி உயிர் அனு எப்படி ஆணின் மஜ்ஜை குள் சென்றது.
மரணம் என்பது மீளா துயில். அவ்வளவுதான். உங்கள் உடம்பு எதோ ஒரு காரணத்திற்காக செயல் இழந்துவிட்டது. அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.
கண்டுபிடித்து சரியாக சொல்லுங்களேன்.
உயிரோடுதான் இருக்கிறீர்கள். சட்டென்று சொல்லி விடலாமே...