Sunday, December 26, 2021

தம்பிப்பாளையம் ஸ்ரீமத் வீரசைவ சோலை சிவயோக சுவாமிகள்

 தம்பிப்பாளையம் ஸ்ரீமத் வீரசைவ சோலை சிவயோக சுவாமிகள்                 விருப்பாக்கம்மாள் – 136-ஆவது மகா குருபூஜை பெருவிழா:

அருள் வாக்கியம்

முக்தியளிக்கும் பக்தியளிக்கும் முதல்வியினிருள் வாக்கியஞ்

சித்தியளிக்குஞ் செல்வமளிக்குஞ் செகமெலாம் வரவழைக்கும்

புத்தியளிக்கும் புண்ணியமளிக்கும் புலைகொலை யொழித்தோர்க்கு

நித்தியமளிக்கும் நிளையளிக்கும் நின்மலி வாக்கியந்தானே.

 

வடலூர் வள்ளற்பெருமானுக்கு அருள் வாக்கியம் வழங்கியும், ஸ்ரீ உமாதேவியால் ”சோலை” என்று அருட்பெயர் பெற்ற தளமாகிய தம்பிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஜீவசமாதியுமாகிய ஸ்ரீமத் சோலை வீரசைவ சிவயோக சுவாமிகளது குருபூஜையும், அவரது துணைவியார் விருப்பாக்கம்மாள் குருபூஜையும் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு மார்கழித் திங்கள் 12-ம் நாள் (27-12-2021) திங்கள் கிழமை அஸ்டமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நன்னாள் காலை 10-.00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. அவ்வமயம் அன்பர்கள் அனைவரும் வந்திருந்து குருபூஜை அருளை பெற அழைக்கின்றோம்.

 

கடலூர் விருத்தாசலம் சாலையில் குள்ளஞ்சாவடியை அடுத்து தம்பிப்பாளையத்தில் ஸ்ரீமத் சோலை வீர சைவ சிவயோகசுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் இருக்கும் கிணற்றில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வற்றாமல் இன்றும் உள்ளது.

மடத்தின் நிர்வாகி பால சுப்ரமணியன் கூறும்போது, ஸ்ரீமத் சோலை வீர சைவ சிவயோகசுவாமிகள் மடம் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் நவாப் காலத்தில் ஸ்ரீமத் சோகை வீர சைவ சிவயோக சுவாமிகளால் நிறுவப்பட்டது. மத்தில் வீர சைவ சிவயோக சுவாமிகள் 1885ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-தேதி ஜீவ சமாதியடைந்தார். அவரது சமாதிக்கு அருகில் அவரது மனைவி விருப்பாக்கம்மாள் ஜீவ சமாதியடைந்துள்ளார்.

இந்த தலத்தில் வடலூர் இராமலிங்க அடிகளாருக்கு ஸ்ரீமத் சோலை வீரசைவ சிவயோக சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

இங்குள்ள கிணறு மடம் நிறுவும்போது தோண்டப்பட்டது. கிணற்றின் ஆழம் 15 அடியாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராம பொது மக்கள் கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினர். இருந்தும் கிணற்றில் இது வரை தண்ணீர் வற்றாமல் உள்ளது. இங்குள்ள வீரசைவ சிவயோக சுவாமிகளருள் பெற்ற மாமரத்தில் ஆண்டு தோறும் மா விளைச்சல் அதிகமாக இருக்கும்.

இங்கு சிவன், விநாயகர், சுப்ரமணியர், உமாதேவி ஆகியோருக்கு கோயில் கட்டி 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மையிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.








 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.