Sunday, February 18, 2024

வள்ளலார் சர்வதேச மையம்

  வள்ளலார் சர்வதேச மையம்

அருட்பெருஞ்ஜோதி                               அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                        அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

17-02-2024 அன்று ”வள்ளலார் சர்வதேச மையம்” அடிக்கல் நாட்டு விழாவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். 



பன்னாட்டு மையத்திற்காக வடலூர் வெளியிலிருந்து 3.42 ஏக்கர் நிலம் மட்டும் சர்வதேச மையத்திற்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளார்கள். 

வள்ளலார் கொள்கையினை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில்....

தியான மணடபம்,

தகவல் மையம்,

கலையரங்கம்,

மின் நூலகம்,

முதியோர் இல்லம்,

கழிப்பறை வசதி,

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி,

வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம்,,

அணுகு சாலை வசதியுடன் சுற்றுச்சுவர்

போன்ற அனைத்து வசதிகளும் இந்த பன்னாட்டு மையத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கம் மேலோங்க - தமிழக அரசு 100 கோடி செலவில் செயல்படுத்தும் இந்த சர்வதேச மையம் வெற்றி பெற -  காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம், தமிழக அரசுக்கு  இதன் மூலம் வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றது.

-தி.ம.இராமலிங்கம்.

9445545475




 




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.