Sunday, October 22, 2017

அக்டோபர் மாதத்தில் அன்று…



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

அக்டோபர் மாதத்தில் அன்று…

05-10-1823 – இன்று வள்ளற்பெருமான் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 05.30 மணியளவில் இப்பூமிக்கு வருவிக்க உற்றார்.

22-10-1873 – வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் முதன் முதலாக சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருபதேசம் செய்த நாள்.

26-10-1870 – “என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன் அஞ்சவேண்டாம்” என்று வள்ளற்பெருமான் உலகியல் மக்களுக்கு அறிவித்த நாள்.

11-10-1880 – வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்டபின் அவர் வெளி வராததால் வடலூர் நிலங்களுக்கு வரி கட்ட அரசாங்கத்தார் ஏஜெண்டுகளை நியமிக்க ஓர் அறிக்கை வெளியிட்ட நாள்.

01-10-1889 – ஞானசபையின் உட்புறமுள்ள இரண்டு அறைகளில் மேற்புற அறையில் விநாயகரையும், கீழ்புற அறையில் முருகப் பெருமானையும் பிரதிஷ்டை செய்ய ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் முயற்சி செய்யும் சமயம், சிலர் ஆட்சேபனை செய்ய பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அதனை கைவிட்டார்.

26-10-1870 – சுமார் ஒரு மாதத்திற்கு முன்னாள் (செப்டம்பர் – 1870-க்கு முன்னர்) தம் உருவை மறைத்து இருந்த வள்ளற்பெருமான் மீண்டும் இன்றைய தேதியில் புற உலகிற்கு வெளிப்பட்டார்.

11-10-1880 – ஜனவரி மாதம் 30-ஆம் நாள் 1874-ஆம் ஆண்டு  வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக்கொண்டதை அடுத்து, “தேவஸ்தான தருமஸ்தானங்களில் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்கபிள்ளை என்பவர் ஏழு வருட காலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி 302-ஆம் எண் பட்டாவை 1- ஆறுமுக முதலியார், 2- வக்கீல் வெங்கிடேச ஐயர், 3- சபாபதி குருக்கள், 4- நயினா ரெட்டியார் ஆகிய நால்வரையும் ஏஜெண்டுகளாக நியமிக்க இருக்கின்றேன்” என்று சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிட்டார். பின்னர் 01-03-1881 –ஆம் ஆண்டு பசலி 1290-91 மேற்குறித்த நான்கு ஏஜெண்டுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.