Sunday, February 24, 2013

சைவ உணவு சாத்தியமா? - 5

சைவ உணவு சாத்தியமா? - 5


ஜாகிர் நாயக்: 

7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
மறுப்புரை:

உண்மை, ஆனால் அந்த பாதிப்பால் நன்மைகளையே பெற்றன இந்து மதம். அது தன்னிடமிருந்த தீயதை விட்டுவிட்டு, மற்ற மத்திலிருந்த நன்மைகளை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு இந்து மதத்திற்கு அல்ல, மற்ற மதத்திற்கே என்று சொல்லலாம்.

ஜாகிர் நாயக்: 

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

மறுப்புரை:
நான் மேலே கூறியவாறு ஜைனமதத்தின் நன்மைகளை (ஒழுக்கங்களை) இந்துமதம் ஏற்றுக்கொண்டதாலும், தன்னுடைய மதத்திலுள்ள புலால் உண்பதனை விட்டதாலும், ஏற்பட்ட பாதிப்பு இந்து மதத்திற்கு அல்லவே! அதனால் இந்த பாதிப்பு அனைத்து மதங்களுக்கும் வந்தால் நல்லதே.

ஜாகிர் நாயக்: 

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
மறுப்புரை:

உண்மை, இதில் உண்மையைத் தவிர வேறேதுமில்லை.

ஜாகிர் நாயக்: 

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.
மறுப்புரை:
உண்மை, இதில் உண்மையைத் தவிர வேறேதுமில்லை.
ஜாகிர் நாயக்: 

ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும்.
மறுப்புரை:
தங்கள் முடிவு வரவேற்கத்தக்கது. 'ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியுமா?' முடியவே முடியாது. 'மனிதன் உயிர்வாழ தேவையான உயிர்கள்' யவை எனப் பார்ப்போம்,
நாம் மூச்சு விடுவதில் எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது, மரணிக்கிறது. முட்டை இல்லா கேக், பன், இட்லி, தோசையில் நொதித்தல் வினை உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்). இவைபோன்று உணவு தயாரிக்கும் போதும், நீர் அருந்தும்போதும் பல பாக்டீரியாக்கள் அழிகின்றன.
நம் தோலில் உள்ள செல்கள் கூட நாம் வளர வளர தம் உயிரை இழக்கின்றன. இவைப்போன்று சில கொலைகளை நாம் நமக்கே தெரியாமல், நம் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது. இவைப்போன்ற உயிர்களின் மரணம் மனித உயிர் வாழ்வதற்கு தே வையான ஒன்றாகும். ஆனால் இந்த மரணத்திற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
மேலும், வீட்டில் வரும் கொசு, மூட்டைப்பூச்சி, பூரான் போன்ற பூச்சி வகைகளை தற்காப்பிற்காகக்கூட கொல்லக்கூடாது. அவை வராமல் இருக்க நமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது வந்தால் கொல்லாமல் அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல் இதுவும் கொலையே. ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும் அது சார்ந்த கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல். இதனையும் தவிர்க்கவே வேண்டும். ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
பட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள் போன்றவை பட்டுப் புழுக்களை கொன்று தயாரிக்கப்படுவதால் இதனையும் தவிர்க்கவேண்டும். ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
முத்தால் ஆன ஆபரணங்களை தவிற்கவேண்டும். சிப்பி என்ற உயிரை கொன்றுதான் இது பெறப்படுகிறது. ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
(சிறு குறிப்பு): சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.
புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை தென்னம் பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

ஜாகிர் நாயக்: 

முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 
மறுப்புரை:
தாவரங்கள் சைவமும் அல்ல, அசைவமும் அல்ல, ஏனெனில் அவை தமது உணவினை தாமே தயாரிக்கின்றன, ஆகாயத்தில் உள்ள சூரியனையும், பூமியிலுள்ள மண், நீர் ஆதாரத்தை தவிர பூமியிலுள்ள வேறெதனையும் அது சார்ந்து இல்லை, என நினைத்தால் அது தவறு, தாவரங்களிலிலும் மற்ற உயிர்களைத்தின்று வாழக்கூடிய அசைவ தாவரங்களும் உண்டு. நமது தமிழ் சமுதாயத்தில் உதித்த தொல்காப்பியர் (கி.மு.711) 2724 ஆண்டுக்கு முன்னரே தாவரங்களும் ஓர் உயிரே! என்று கூறிவிட்டார்.
‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)

தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல், பூண்டு என்பன அடங்கும்.
இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை,
பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை
என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை ஆகின்றது.
மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு என்று பெயராகிறது.
அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல் ஆகின்றன.
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை.
நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள் ஆகும்.
சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்.
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை என்றாகின்றது.
தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை என்றே சொல்லப்படுகின்றன.
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது. வேறு எந்த மொழியிலும் தாவர இலைகளுக்கு இவ்வாறு பகுத்து பெயர் கூறும் மொழிஅறிவு இல்லை. இவ்வளவு பகுத்து சொன்ன தமிழனால் தாவர உணவும் அசைவம் என்றால் அதனை சைவத்துள் வைப்பானேன்? பார்போம்...
ஜாகிர் நாயக்: 

ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம்.
மறுப்புரை:
ஏறத்தாழ சுமார் 800 வருடங்களுக்கு முன்னரே தொல்காப்பியம் கூறிய உண்மையினை, தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937 கிழக்கு பெங்கால்) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.
டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living"
மறுப்புரை தொடரும் - 5




எப்படியோ தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதனை விஞ்ஞானம் ஒப்புக்கொண்டது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.