Sunday, February 24, 2013

சைவ உணவு சாத்தியமா? No.4

சைவ உணவு சாத்தியமா? No.4
ஜாகிர் நாயக்: 

மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

மறுப்புரை:

இந்தக்கேள்வியும் நமது ஆதி தோற்றத்தையே நினைவுப்படுத்துகிறது. ஆதி மனிதனின் தோற்றம் பொதுவாக தற்போதுள்ள மனித தோற்றத்தைவிட சற்று உயரமாகவும், பருமனாகவும் இருப்பார்கள். அவனது இரப்பையும் மாமிச உணவை பெற்று செரிக்குமளவிற்கு சற்று விசாலமானது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. இதை எப்படி அறிவது? நீங்கள் ஆதிமனிதன் போல மாமிசத்தை நெருப்பில் சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டு பாரும், அது செரிக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும், முதலில் சாப்பிடமுடியுமா என்பதே கேள்வி? மனிதன் மாமிச பச்சினி என்றால் அதன் சமைக்காமல் சாப்பிடவேண்டும், முடியுமா? ஆனால் சைவ உணவை பச்சையாக சாப்பிடலாம். ஆகவே இறைவன் தற்போது சத்தியமாக மாமிச உணவை செரிக்கும்படியானதொரு உடலமைப்பை நமக்கு கொடுக்கவில்லை என்பதனை அறியவேண்டும்.

ஜாகிர் நாயக்: 

5. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.
மிகச்சரியான கருத்து, வரவேற்கத்தக்கது.
ஜாகிர் நாயக்: 

ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.
மறுப்புரை:

இந்துக்களின் வேதம் என்று நீங்கள் இங்கே குறிப்பிடுவது 'மனு சாஸ்திரம்' ஆகும். இந்த மனுசாஸ்திரத்தை பற்றி 99 சதவிகித இந்துக்களுக்கு ஒன்றும் தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கிருத்துவர்களுக்கு ஒரு வேதம் - அது பைபிள், அதன் ஆசிரியர் இயேசு, இஸ்லாமியர்களுக்கு ஒரு வேதம் - அது குரான், அதன் ஆசிரியர் நபிகள் நாயகம், ஆனால் இந்துக்களுக்கு என்று தனிப்பட்ட வேதம் எதுவுமில்லை, தனிப்பட்ட ஆசிரியரும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் சட்ட புத்தகத்தினை எழுதிய 'மனு'விற்கு மனித தன்மையே அவரிடம் இல்லை என்பதை சுருக்கமாக பார்ப்போம், மனு சாஸ்திரம் மனு என்பவர் எழுதியதால் மனுசாஸ்திரம் என்று அழைக்கப்பட்டாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கார் குறிப்பிடுகின்றார். இந்நூலின் காலம் கி.மு 200 க்கும் கி.பி 200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும்,கி.மு170க்கும் 150 க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்காரும் கருதுகின்றனர். கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ்.சர்மா கருதுகிறார்.

சுயாவாம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று சான நிறையும் வல்லமையும் செல்வமும் வீறும், திறனும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே. நால் வருணத்தரும் மற்றோரும் கடைப்பிடிக்கத் தக்க அவரவர் செயல்கள், கடமைகள் எமக்கு உணர்துவீராக என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் தோற்றம் குறித்தும் கூறிவிட்டு பின் எமது குமாரரான பிருகு முனிவர் முனிவர்களை நோக்கி கூறியசெய்திகளே மனு சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேத பிராமணன் நம்பிக்கை துரோகம் செய்து,மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான்.அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேத வேள்விகள் , பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பிராமணர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி பாதுகாக்கும் மனு தர்மம் உருவாகயுள்ளது.

ஆகவே ஒரு கொடூரமான மிருக மொழியில் உருவான நியாயமற்றதை கற்பித்ததால்தான் இப்போது உலகில் இம்மொழியும் மனு சட்டமும் வழக்கில் இல்லாது ஒழிந்தது. மேலும் இவ்வாறான வேதம் என்ற பசுமாட்டுத்தோலை போர்திய புலியான மற்ற சமஸ்கிருத நூலும் இந்து மதத்திற்கு தலைமையேற்க முடியாமல் போயிற்று.

தற்போது இந்துமதம் அவரவர்கள் வட்டாரத்தில் / சமூகத்தில் / மொழியில் வாழ்ந்த நல்ல பெரியோர்களின் வழிகாட்டுதலில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கோயில்களின் கருவரைக்குள் மட்டும் சில முன்னாள் புலால் உண்டவர்களை சுத்தப்படுத்தி வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் இந்து மக்கள். 

மனுசட்ட கொடூரதில் ஒரு சில...

கணவன் துராசாமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோகனாயிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது(மனு 5;154)

கணவன் சூதாடுகிறவனாகயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாக
இருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதமு நீக்கி வைக்க வேண்டியது.(9;78)

பாலியமாக விருந்தாலும் யவ்வமாக விருந்தாலும் வார்த்திபமாக விருந்தாலும் ஸ்திரீகள் தன்தன் வீடுகளில் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.(மனு;5;147)

பாலியத்தில் தகப்பனின் ஆஞ்ஞையிலும்,யவ்வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும்,கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லாது, ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்க கூடாது.(மனு;5;148)

பெண்கள் விபச்சாரப்பான்மையுடையவர்கள் என்பதாக மிகமிகக் கீழ்தரமாகக் கொச்சைப்படுத்துவதில் மஹா மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்(மனு 2;213)

தாய்,தங்கை,பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாய் உட்காரக் கூடாது(மனு,2;215)

மாதர்களின் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்(மனு9 ;15)

மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்றன(மனு 9;19)

மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்(மனு,9;14)

ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையை உண்டு பண்ணலாம்(மனு 9;52)

பிள்ளையில்லாமல் அந்த குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது.(மனு,9;59)

கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக்கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டியது.(மனு 9;190)

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்;தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதன் உயர்ந்தவன்;தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம் எனவே அவன் முடிவுபடி நடக்க(மனு 11;84)

அரசன் பிராமணர் அறிவுரை கேட்பது நன்று. அது ஆக்கம் தரும்.அவர்களின் முடிவிற்கும் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்(மனு7;37)

வைதீகமாயிருந்தாலும் லவுதீகமாயிருந்தாலும் அக்நியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் தகப்பன் மரியாதையையும் சத்திரன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது(மனு 2;135)

 இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டத்தை இந்து மக்கள் வேதமாக ஏற்கவில்லை என்பதே எனது முடிவு, ஏனெனில் இந்துக்களில் பெரும்பாண்மையோர் இச்சட்டத்திற்கு எதிராக சைவ உணவு பழக்கத்தில் உள்ளனர். 
ஜாகிர் நாயக்: 

இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே.
மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்
மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.
இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.

மறுப்புரை:
இவ்வேதங்களை எழுதிய புலால் உண்பவர்கள் மனம் திருந்தி சைவத்தை தமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு இந்துக்களாக வாழ்வதை நாம் பார்க்கிறோம். எனவே இவ்வாறு எழுதியவர்களை மன்னிப்போம், எழுதியதை மறப்போம். நமது தமிழ் சமுதாயத்தில் இதே காலகட்டத்தில் (மனு சட்டம் இயற்றிய காலம்) தோன்றிய 'திருவள்ளுவர்' முதல் தற்காலத்தவரான 'வள்ளலார்' வரை புலால் உண்பதனை வன்மையாக சாடியுள்ளார்கள். எனவே மதங்கள் என்றைக்கும் மனக்காது, அதில் துர்வாடை வீசிக்கொண்டேதான் இருக்கும். முடிந்தால் மதங்களுக்கு வெளியே வந்து உண்மையான இறை அனுபத்தை அணுபவியுங்கள் அல்லது 'எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள்' என்ற குரானின் கட்டளைபடி, அந்தந்த மதங்களில் கூறியவற்றில் எது நன்மையோ அதனைமட்டும் பின்பற்றுவோம். மதங்கள் என்பது கூறிய கத்தியை போன்றது, அதனை கொலைசெய்யவும் பயன்படுத்தலாம், உயிர்பிழைக்க அறுவைசிகிச்சை செய்யவும் பயன்படுத்தலாம், அது அம்மதங்களை பயன்படுத்தும் மனிதர்களை பொறுத்தது, நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை சிந்திக்கவேண்டும்.

மறுப்புரை தொடரும் - 4




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.