Wednesday, February 8, 2023

NETWORK MARKETING AND GNANA MARKAM

 

NETWORK MARKETING AND GNANA MARKAM



அனைவருக்கும் வணக்கம்,

நான் உங்கள் டி.எம்.இராமலிங்கம், கடலூர். இவ்வுலகில் நமது வாழ்வியல் என்பது பணம் என்கின்ற ஒரு பொருளை மையமாக வைத்தே இயங்குகின்றது. அது போல் இவ்வுலகில் இறையியல் என்பது இறைவன் என்கின்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே இயங்குகின்றது.

இறையருளை பெறுவதற்கு நான்கு வழிகளை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அது என்னவெனில், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதே ஆகும். இவற்றில் ஞானம் என்பது மட்டுமே இறைவனை நேரடியாகக் காட்டி அவனுடன் ஒன்றிணையும் மார்க்கமாகும். ஞான மார்க்கத்தில் நமது மாணிக்க வாசகர் மற்றும் வள்ளலார் போன்ற மிகச் சிலரே ஞான மார்க்கத்தில் நடந்து இறைவனுடன் ஒன்றினைந்தவர்கள் ஆவார்கள். மற்ற மார்க்கங்களால் இறைவனுடன் ஒன்றிணைய முடியாது.

அதுபோல நமது வாழ்வியலில் நாம் பணம் என்கின்ற பொருளை ஈட்டி, அதுனுடன் நாம் ஒன்றிணைய வேண்டுமெனில், அதற்கான ஞான மார்க்கம்தான் இந்த நெட்வொர்க் மார்க்கட்டிங் ஆகும். பணம் ஈட்டுவதற்கு வேறு எந்த மார்க்கமும் ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நின்றுவிடும். நெட்வொர்க் மார்க்கட்டிங் மட்டுமே பணத்துடன் நம்மை நேரடியாக ஒன்றிணைக்கும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும்.

இறையியலில் ஞான மார்க்கம் கடைபிடிப்போர் ஒரு சிலரே. அதுபோல, வாழ்வியலில் பணம் ஈட்டுவதற்கு ஞானமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைய மறுக்கும் நிகழ்ச்சியே நம்து விதி எனலாம். விதியை மதியால் வெல்பவர்களே நெட்வொர்க் மார்க்கட்டிங் செய்வர். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணம் ஈட்டுவதற்கு இருக்கும் ஒரே ஒரு ஞான வழி இந்த நெட்வொர்க் மார்க்கட்டிங் மட்டுமே ஆகும்.

இறையியலிலும், வாழ்வியலிலும் நாம் ஞானவழியை கடைபிடிப்பதே நமது பிறப்பிற்கு ஒரு முழுமையை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி.     

T.M.RAMALINGAM

9445545475