Friday, November 30, 2012

MARRIAGE INVITATION

திருமண அழைப்பிதழ்

வருகின்ற டிசம்பர் 2012 வது மாதம் ஆங்கில நாட்காட்டின்  படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதாவது இம்மாதத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் முறையே 5 நாட்கள் இடம்பெறுகின்றன.  இப்படிப்பட்ட மாதம்  846 வருடத்திற்கு ஒரு முறை தான் வரும்படியாக உள்ளது. எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தை கொண்டாட உலகமே ஆவலுடன் உள்ளது.

மேற்கண்ட சிறப்பு வாய்ந்த டிசம்பர் 2012 மாதத்தில் 10-ஆம் நாள் எங்களது சகோதரியான தி.மஞ்சுளா & இர.இராமலிங்கம் அவர்களின்  திருமணம் கடலூர் கூத்தப்பாக்கத்தில் "சண்முகா" திருமண மண்டபத்தில், எல்லாம்வல்ல அருட்பெரும்ஜோதியின் திருஅருள் சம்மதத்துடன் நடைபெறஉள்ளது என்பதனை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்றைய தினமே (10-12-2012) சிதம்பரத்தில் "ராமதாஸ்" திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு வரவேற்ப்பு நிகழ்சியும் உள்ளது 

அவ்வமையம் தாங்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்துமாறு இதன்மூலம் அழைக்கிறோம். 

இப்படிக்கு தங்கள் அன்புள்ள 

தி.ம.இராமலிங்கம் - கடலூர் 
தி.ம.சதீஷ்  கண்ணன்  - மயிலாடுதுறை 
மு.ச.அருள்  - காரைக்காடு 
ம.சரவணன்  - ஊரப்பாக்கம் - சென்னை 
மு.ச.குமரேசன்  - காரைக்காடு 













Wednesday, November 28, 2012

BEST ANTHEM OF THE WORLD


வணக்கம்,

 நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த  தேசிய கீதம் என்ற சிறப்பினை அளித்துள்ளது. பெங்காலி மொழியில் எழுதப்பட்ட இப்பாடலை பாடாத இந்தியர் யாரும் இல்லை எனலாம், இதன் மூலம் பெங்காலி மொழி தெரியாத இந்தியரும் இல்லை எனலாம். இப்பாடலை ரபீன்ரநாத் தாகூர் அவர்கள், இரண்டாம் ஜார்ஜ் மன்னர் அவர்களை வரவேற்பதற்காக (வரவேற்ப்பு பாடல்) எழுதப்பட்டது என்றும் கூறுவர். அப்படிப்பட்ட நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த  தேசிய கீதம் என்று சிறப்பித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிப்பதாகும். 

ரபீன்ரநாத் தாகூர் அவர்களுக்கு 1913 ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக நோபல் பரிசு கிடைத்தது  என்பதையும் இத்தருணத்தில் நினைத்து மகிழலாம்.





தி.ம.இராமலிங்கம்.

Tuesday, November 27, 2012

ARE YOU VEGTARIAN


நீங்கள் சுத்த சைவமா ?? இன்றிலிருந்து நீங்களும் அசைவம்தான்
என்ன தான் நீங்கள் சுத்த தாவர உணவாளன் என்று பெருமிதம் கொண்டாலும். அனைவராலும் விட முடியாத ஒன்று பால், பால் சார்ந்த உணவுகள். ஜீவகாருண்யம் பேசுபவர்கள் மாட்டின் பாலைத் திருடுவதேனோ என்றக் கேள்விக்கு பதில்லை. 

சமணர்கள் என்பவர்கள் மிகவும் ஆச்சாரமான, கடுமையாக சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். தண்ணீரைக் கூட வடிக்கட்டி குடிப்பவர்கள், தப்பி தவறியும் பூச்சிகளை விழுங்கிவிடக் கூடாது என்பதால்.

அவர்களிடம் இருந்து தான் பௌத்தம், இந்து மதம் தாவர உணவுப் பழக்கத்தைக் காப்பியடித்தன அது தனிக் கதை. ஆனால் சமணர்களால் கூட பால் உண்பதை விட முடியவில்லை. சமண துறவிகள் கூட பால், பால் சார்ந்த உணவை உண்கின்றார்கள். பால் என்பது விலங்கின் ரத்தம் என்பதை நாம் அறிவோம். அது குட்டிகளுக்கு கொடுக்கவே தயார் செய்கின்ற பாலை நாம் பறித்து பருகுகின்றோம் அல்லவா. 

மனிதனுக்கு புரதம் மிக மிக அவசியம். புரதம் என்பது விலங்குகள் ஊடாகவே நமக்கு அதிகம் கிடைக்கின்றது. மாமிசம் உண்ணா விட்டாலும், விலங்குகள் தரக்கூடிய பாலை பருகித் தான் ஆக வேண்டும் என்ற நிலை மனிதனுக்கு உள்ளது. 

அடுத்த முறை எவராவது தாம் சுத்த சைவம் என உதாறினால், நீங்கள் பால் குடிப்பீர்களா என கேளுங்கள் . ஆம் ! என்றால் அவர் சுத்த சைவம் இல்லை, சுத்த பேத்தல் என்று கூறி அனுப்பிவிடலாம்.



தி.ம.இராமலிங்கம். 

Wednesday, November 21, 2012

GURU POOJA

சன்மார்க்க அன்பர்களுக்கு அருள்பெறும் வணக்கங்கள்: 

நேற்று (20.11.2012 - செவ்வாய் கிழமை) கடலூர் மாவட்டம் காரணப்பட்டு கிராமத்தில் திருவருள் சம்மதத்தால், வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்  அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் 86-வது குருபூஜை இனிதே நடைபெற்றது. 


அவ்வமையம் சிறப்பு பேச்சாளராக திரு.அருட்பா அருணாசலம் கலதுக்கொன்டு வள்ளலாரின் சன்மார்க்க கருத்துகளையும், வள்ளலாரின் பொற்பாத குறட்டின் (வள்ளலாரின் பொற் பாதுகை இங்கே உள்ளது) மகிமைகளையும்  மற்றும் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் சிறப்புகளையும் எடுத்து இயம்பினார்.



 மேலும் சில அன்பர்கள் சொற்பொழிவு நிகழ்தியப் பிறகு அனைவர்களுக்கும்  அன்னதானம்,காரணப்பட்டு கிராம மக்களால் மிகவும்  சிறப்பாக அளிக்கப்பட்டது.




இவ்வருட குருபூஜையில் எமக்கு தெரிந்து, சென்னையில் இருந்து வந்திருந்த திரு.வினோத் அவர்களும் மேட்டுக்குப்பத்தில் இருந்து வந்து ஆன்மலாபம் பெற்ற சில அன்பர்களையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.






மேலும்  இப்பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் சில புகைப் படங்களையும்  காண்போம்...




இறுதியாக இக்குருபூஜையின் ஒருங்கிணைப்பாளரான திரு.பழனி அவர்களுக்கு, திரு. அருட்பா அருணாசலம் அவர்கள் பொன்னாடை சாற்றி சிறப்பித்தார்கள்


மற்றும் இப்பூஜையில் அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் வழி தோன்றல்களான திருமதி கவ்சல்யா நடராஜன் (காரணப்பட்டு), திரு.அ.திருநாவுக்கரசு மல்லிகா (மேலழிஞசிப்பட்டு), திரு.அ.மணிவண்ணன் விஜயா (ஊரப்பாக்கம் - சென்னை ), திரு.அ.முருகாநிதி சரஸ்வதி (காரைக்காடு) ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆன்ம இலாபம் அடைந்தனர்

தி.ம.இராமலிங்கம்.

Wednesday, November 14, 2012

GURU POOJA INVITATION


If interest to visit at Karanappattu, please contact to 9445545475 / vallalarmail@gmail.com

T.M.RAMALINGAM.