Saturday, April 13, 2024

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 சன்மார்க்கர்கள் அனைவருக்கும் எமது ”பகைக்கேடு” (குரோதி) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


ஆளும் அருளால் அழியும் பகைக்கேடு
நாளும் நன்மையே நினைக்க - நீளும்
குரோதி ஆண்டில் கூடி ராமலிங்கமே
விரோதி யகற்ற வருவான்.
                                       -இராமலிங்க அந்தாதி-1000







Friday, April 5, 2024

வள்ளலார் சர்வதேச மையம்

 அருட்பெருஞ்ஜோதி                               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                          அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளலார் சர்வதேச மையம்
மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பு
24-04-2024 மீண்டும் விசாரணை



03.04.2024 அன்று பாஜக சார்பில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.S.வினோத் இராகவேந்திரன் அவர்களால் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண். W.P.9141/2024 வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமையக்கூடாது என்கின்ற பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்  நகல் மேலே பகிரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதியரசர்கள் தமிழக அரசை வள்ளலார் சர்வதேச மையம் குறித்த தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கும் விதமாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வழக்கோடு சேர்த்து தமிழ் வேங்கை ஐயா தொடுத்த பொது நல வழக்கு எண்.W.P. 8190/ 2024 05.04.24 இன்று வந்த வழக்கும்   விசாரணைக்காக வந்தது இந்த வழக்கில் மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடுக்கவில்லை என்பதனை உறுதி செய்யும் விதமாக இரண்டு நாட்களுக்குள் ரூபாய் ஒரு இலட்சம் கட்டும்படி உத்தரவு இடப்பட்டுள்ளது. அவர்களும் இரண்டு தினங்களுக்குள் கட்டும் பட்சத்தில் வருகிற 24 4 2024 அன்று இந்த இரண்டு வழக்கையும் சேர்த்து ஒன்றாக விசாரணைக்காக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஜெரால்ட் ராபர்ட் வழக்கறிஞர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறக்கட்டளை
=================================================================

வடலூர் பெருவெளி தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் தொடுத்த பொது நல வழக்கு எண் W/P: 8190/2024 ஆகும்.
இதே காரணத்திற்காக மற்றொரு தரப்பினர் தொடுத்த வழக்கு எண் W/P: 9141/2024 ஆகும்.
எனவே வரிசை எண்படி எனது வழக்கு தான் முதல் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.
வடலூர் தலைமைச் சங்கத்தின் தலைவர் D.நாகலிங்கம் (அருள் நாகலிங்கம்) எனது மணுவிற்கு எதிராக குறுக்கீட்டு (இன்பிலீடிங்) மனு தாக்கல் செய்ததால், நீதித்துறை பதிவாளரிடம் இது குறித்து விளக்கம் அளித்து பின்பு எனது வழக்கு விசாரணைக்கு வர கால தாமதம் ஏற்பட்டது.
பெருவெளியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எமது போராட்டம் 13/09/2022 அன்று தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றது முதல் கடந்த 19 மாதங்களாகத் தொடர்கிறது.
எனவே எமது வழக்கு விளம்பரத்திற்கான தாக்கல் செய்யப்பட்டது அல்ல என்பதை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் நீரூபிப்போம்.
தயவுடன்
கா.தமிழ்வேங்கை
விழுப்புரம்
9486176734

08-04-2024 அன்று வடலூர் மக்கள் சர்வதேச மையம் கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்:


10.04.2024.வளர்மதி மண்டபத்தினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் காட்சிப்பதிவு.
கைது செய்யப்பட்ட அனைவரும் வடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள வளர்மதி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்க்க வரும் அனைவருக்கும், பத்திரிக்கை நிருபர்களுக்கும் தடை.




                                                                        21-04-2024

சர்வதேச மையம் - இடைக்காலத் தடை (நீதி மன்றம்)
###########
 
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்க வளாகத்தின் பெருவெளியில் தமிழக அரசு 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணியை தொடங்கியது. கட்டுமானப் பணியை மேற்கொள்ள அடிக்கல் நாட்டியவுடன் பா.ஜ.க வின் ஆன்மிகம் மற்றும் ஆலயமேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் திரு.வினோத் ராகவேந்திரன் அவர்கள் ஏப்ரல் - 3-ம் தேதி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.மூத்த வழக்கறிஞர் திரு.சுரேஷ் நடராஜன் அவர்கள் வாதாடினார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் விசாரணையின் கீழ் வந்த இந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன் விசாரணை இன்று ஏப்ரல் 24ல் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் அறிக்கையை பார்வையிட்டு விசாரித்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, வடலூர் பெருவெளியில்  அவ்விடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆணை வழங்கி அதுவரை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தார்.
 மேலும் இது கோயில் சம்பந்தமான வழக்கு என்பதால்,வழக்கை நீதிபதிகள் திரு.மகாதேவன் மற்றும் திரு.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Message.





















மேலே குறிப்பிடப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணை 24.4.2024ல் வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட ஆணை.

இந்த ஆணையில்  சர்வதேச மைய கட்டுமானப் பணியை செய்வதற்கு எந்த தடை ஆணையையும்  பிறப்பிக்கவில்லை.

மேலும் அரசின் சார்பாக வள்ளலார் குறிப்பிட்ட பாடல்கள் தமிழில் உள்ளதாலும் இவ்வழக்கு கோயில் தொடர்பானதாக உள்ளதாலும் புதிய வேறு அமர்விற்கு மாற்றி ஆணையிடப் பட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடையவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்த புதிய அமர்வில் முறையிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தவிர மற்றவர்கள்
வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுபவர்கள் சொல்வது போன்று தடை விதிக்கவில்லை தடை விதிக்கவில்லை.
 அவர்கள் வழக்கம்போல் 
உண்மைக்கு மாறான செய்தியை அல்ல அல்ல 
வதந்தியை பரப்பி கொண்டு ள்ளார்கள்.

இவர்கள் இப்படித்தான்.
இவர்களுக்கும் உண்மைக்கும் வெகுதூரம் என்பதை நடுநிலையாளர்கள் 
புரிந்து கொண்டால் போதும்.
செந்நெறி பா.தண்டபாணி


Wednesday, April 3, 2024

வள்ளலார் முத்திரை மாநாடு

 அருட்பெருஞ்ஜோதி                   அருட்பெருஞ்ஜோதி
  தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளலார் முத்திரை மாநாடு

வள்ளலார் முத்திரை மாநாடு அழைப்பிதழ் இறையருளால் வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி. மாநாடு அமைப்பாளர் கருணைமிகு.க.கண்ணதாசன் அவர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் நன்றி. மாநாடு சிறக்க வாழ்த்துகள். அருட்பெருஞ்ஜோதி.

தி.ம.இராமலிங்கம்
கடலூர்
9445545475





Monday, April 1, 2024

வடலூர் மாதப்பூசம் நாட்காட்டி - 2024-25

அருட்பெருஞ்ஜோதி                  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

வடலூர் மாதப்பூசம் நாட்காட்டி - 2024-25



Sunday, March 31, 2024

காம சித்தி - 3

                                     அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

காம சித்தி - 3


"செய்ய மலர் மெத்தையின் மேல்
வையம் புகழ் மதனும்
தேவி ரதியாளு மேவு சயன மதில்
சேர்ந்து முகத்தோடு முகமார்ந்து
கண்ணோடு கண்ணை
சிந்தை மகிழ்ந்து வைத்து
கந்த மலர் புணைந்து
தேசமெல்லாம் புகழும்
வாசம்பல அணிந்து
தேக்குபரி மளமாம் பாக்கு
மதன்கை யிலிட்டு
தெருளாக வெற்றிலையைச்
சுருளாக வே மடித்து
சேயிழையாள் மணக்கும்
வாயினாலே கடித்துக்
கொடுத்தாள் சில சுருளைத்
தொடுத்தாள் மதனலீலை
சித்தங் களி கூந்தார்
மெத்தப்புளக மிட்டார்
செஞ்சிலைக்கு வஞ்சி கொஞ்சி
ஹிதமாய் மையல் மிஞ்சி
தேசிகவேள் மடி மேலே
சுகமாவே படுத்தாள்
செங்கையினாலே எடுத்து
இங்கிதமாய் அனைத்து செவ்வை
பிடித்து கொவ்வை இதழ்கடித்து
தீனமுதங் கொடுத்து மீன
மிலங்குந் துவிஜன்
சிற்றிடையாள் சேலை தன்னை
முற்றுகையால் அவிழ்த்தார்
சேமரதி காமனிடை சோமன்
றனை உரிந்தாள்
திடமா யிருவர்களும் துடை
மேல் துடைபோட
சேல் விழியாள் காமியத்தைக்
கால் வழியாய் ஓடவிட்டாள்
திங்கட்குடையேனும் ஆலிங்கனங்கள்
ஐந்து விதம்
செய்தோர் சுவைத்து எய்தோர்
நெருடி
தின்கைம் மூலத்தைஉண்டு உள்களவு
மாங்கானியைத்
தித்தீப்பாய்ச் சுவைத்து அந்திப்
படவிழியின்
தேக்கித் திசைமுகச் சோமன்
நாக்கின்பமாக வைத்து
தேங்கிடாது சுகம் ஓங்கி
யிடாது நாகம
செல்வாதித் தலையில் புலவலாம யழுத்திச்
சீலம ருந்தியிலே ஏலமாகச் சிரித்தென்
கமு கொப்பாங் கழுத்தை
தன் கரத்தா லணைத்துச்
சேர்த்துக் குணங்குறிகள் பார்த்துத்
தனத்த வதில்
தீதில முதநிற்குமிடம் கோதில்
பதி நயந்து நிலைக்க
தரித்தே யிறக்குமிடம் பரிந்
தேய் சேருமிடம்
தீங்கின்விடை தானப்பாங்கலவ
வென் றுப்பிட்டிச்
செவ்வுள்ளந்தான் வருஷக்கவ்வி
விரல் சுவைத்து
தேன்கூட்டிலே குளவிதான்
கூர்ந்து போவதுபோல்
சொல்லகிதம் பத்தில் விரல்மெல்லந்
விரசுழற்கரித்
தெள்ளமுத மெய் முழுதும்
வெள்ளமதன் பாய்ந்து
கலவித்தாக வூடிக்கட்புனல்
குளக்கு நல்லார்
புலவிதீர் செவ்விநோக்கிப்
புணர் போகந்துய்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்
படு தரும் தானங்
கலைஞர் கைபெய்துங் காலங்
கழிப்பவ ரெண்ணிலாதார்."
- திருவிளையாடல் புராணம்.
பிரணய கலகத்துக்குப் பின்னே புணர்ச்சி இன்பந் துயத்தல் என்பது முன்னுள்ள காதலை அதிகம்
மிகுதிப்படுத்தி வைப்பத்தறுக்குரிய ஓர் உபயமேயாகும்.
"கண்ணுதலியோ கிருப்பக்காம
னின்றிட வேட்கக்கை
விண்ணுறு தேவராதி மெலிந்தமை
யோரார் மால்தான்
எண்ணிவேண் மதனயேவ
எரி விழித் திமவான் பெற்ற
பெண்ணினை புணர்ந்துயிர்க்குப்
பேரின்ப மளித்த தோரார்"
- சிவஞான சித்தியார்.
ஆண்கள் பெண்களின் மோக வலையில் சிக்குவதேன்.....?
"மலரினில் நீலவானின்
மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்
அலகிலா அறிவுகண்ணால்
அனைத்தையும் நுகருமாதே."
- சி.சு.பாரதியார்.
ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதாநந்த சுயம் பிரம்மகாசபராபரவாஸ்து வானது
நாமரூபமற்றது. அதனிடத்தில் அக்கினியிற்சூடுபோல அபின்னா சக்தியென்ற ஒரு சக்தி உண்டாகி, நாம ரூபமுள்ள உலகம் தோன்றுகிறது, அந்த உலக தோற்றத்தின் விருப்பம் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று தொழிலை நடத்துவதற்கு பிரம்மன், விஷ்ணு, ருந்திரன் (சிவன்) என்றும் அவர்களுக்கு
"பெண்பாலுகந்தினேற் பேதா யிருநிலத்தோர்
விண்பாலியோ ரெய்தீவீடுகாண் சழலோ"
- திருவாசகம்.
"சத்தி தன்வடிவே தென்னிற்
றடையிலா ஞானமாகும்"
- சிவஞான சித்தியார்.
"வார்கொண்ட வனமுலையாள்உமை பங்கன்கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்"
- திருத்தொண்டத்தொகை.
" அம்மையாப்பரே யுலகுக்கு
அம்மை யப்பறென்றறிக"
- திருக்களிற்றிறுப் பாடியார்.
" போகமா யிருந்துயிரக்குப்
போகத்தை புரிதலோரார்"
- சிவ ஞானசித்தியார்.
"அவனசைந்திடி லொருவணு வசைந்திடும்
அவனாசை யாவிடிலணு வசைந்திடாது
சிவன் சக்தி யோடுறிற் செகம் விரிந்திடும்
சிவன் தனித்திட்டில் விரி சேகமொடுங்குமால்"
- முதுமொழி.
இப்படி முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என மூன்று சக்தியை படைக்கப்பட்டுள்ளது. சக்தியும் சிவமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து நிற்கும் தன்மைக்கொண்டதல்ல, இவை பூவும் வாசமும் போலவே அநாதி. அதாவது உயர்வு தாழ்வு இல்லாமல் ஒத்த உலகத்தில் உள்ள உயிர்களை இயக்குகின்றன.
"அருளது சக்தியாகும் அரன்
றனக்கருளை யின்றித்
தெருள் சிவமில்லை அந்தசிவ
மின்றிச் சக்தியில்லை"
- சிவ ஞானசித்தியார்.
"சக்தியாய்ச் சிவமாகித் தனிப்பா
முக்தியான முதற்ப்பொருள்"
- திருவிளையாடற் புராணம்.
" சிவமெனும் பொருளுமாதி சக்தியொடு
சேரினெத் தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடினியங்குதற்கு
மரிதரிதெனா மறை யியம்பும்"
- சௌந்தரியலஹரி.
"கண்ணுதலி யோகிருப்ப காம
னின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவராதி மெலிந்தமை
யோரார் மால்தான்
எண்ணிவேன் மதனயேவ வெரிவிழித்
திமவான் பெற்ற
பெண்ணினை புணர்ந்துயிர்க்குப்
பேரின்ப மளித்த தோரார்"
- சிவ ஞானசித்தியார்.
"ஆதரித்த முதிர்கோல் தோய்த்த
வவயவமைக் குந்தன்மை
யாதெனத் திகைக்கு மல்லான்
மதனற்கு மெழுத வொண்ணா"
- பெரிய புராணம்.
"நல்ல சிவ யோகரையும்
போகியரக யாக்கவல்ல
நஞ்சக் கண்ணின்
வல்லமையை சொல்லு முலைவஞ்சியரின்
மிஞ்சுபடு வலையிற்சிக்கி' என்பதற்கிணங்க
போகியா யிரு துயிர்க்குப்
போகத்தை அளித்த வோரார்
யோகியாகி யோகமுக்தி யுதவுவது மோரார்"
- சிவ ஞானசித்தியார்.
இந்த பேரண்டம், ஆண் பெண் என அமைந்திருப்பதை போல உலக படைப்பிலடாங்கிய ஏழு வகை பிறவி, 84 லட்சம் ஜீவராசிகளும் ஆண் பெண் வடிவமாக படைக்கப்பட்டுள்ளன.
உடல் கூற்று சாஸ்திரத்தின் படி ஜீவராசிகளின் சரீரத்தில் இடது பக்கத்தில் தண்மை (சொந்த) நாடியும், வலது பக்கத்தில் வெம்மை (எதிர் பாலின) நாடியும் ஓடுகின்றன. யோக சாஸ்திரங்களில் தண்மையை சந்திரகலையென்றும், வம்மையை சூரியக்கலையென்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இருநாடியும் சமமாக செயல்படும் போது அந்த ஜீவராசிகளுக்கு துன்பம் என்பதே இல்லை.
"அச்சமு நாணுமடனு முந்துறத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வெண்ப"
- தொல் காப்பியம்.
"ஈறிலாதவ ளோருத்தியே யைந்தொழிலியற்ற
வேறு வேறு பேர் பெற்றன"
"மாறு மதியும் ஆதித்தனும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபயமும்
பாறுபடா இன்பம் பார்மிசை பொங்குமே"
- திருமந்திரம்.
அண்ட பிண்டங்கள் யாவும் ஆண் பெண் வடிவாகிருதலை நிரூபிக்கும் கடவுளாக ஒரு பாதி ஆணும் மறு பாதி பெண்ணுமாகிய அர்த்தநாரீஸ்வர மூர்த்தி அவதரித்து நிற்கின்றார். இதை தொடர்ந்தே நம் முன்னோர்கள் ஆதிக்கடவுளை "அம்மை அப்பன்" என்று கூறினார்கள்.
"புன்னகையால் கைகள்புரள்
வதனால் நாணத்தால்
மன்னு மச்சத்தால்முகந்தால் வாட்
கண்ணால் - இன்மொழியால்
போலிவெறுப்பொயிலால் பூவையர்கள் ஆடவரை
மாலியற்றிப் பிணிப்பார் மற்று"
"அரைக்கண் கடைக்கண் அரும்பர்வை பைய
உரைக்குமொழி நணமுற்று - நிறைகின்ற
புன்னகை ஒய்யாரம் பொருந்து நடைமாதற்குப்
பொன்னகை போலுள்ள பொருள்"
"கருவிழியை மேலேற்றிக் காட்டுவாள் ஓர் சார்
உருவுளைந்து வீழ்த்தடுவாள் ஓர்சார் - திருமடந்தை
ஒக்குமிவள் நாணால் ஒரு சாரார் தலைவளைப்பால்
மிக்க ஒயில் ஒரு சார் விளக்குவாள் - தக்கமுகச்
செந்தாமரையைத் ஒரு சார் கண்
அந்தாமரை நீளமா மென்று - சந்தேகம்
கொள்ளத்திருபுவாள் கோலம் இது வென்று
விள்ளப் புகுவதெல்லாம் வீண்"
"மதிமண்டல முகமும் வாரிச்சேர் கண்ணும்
மதிபொன்போல் மேனி வனப்பும் - சுதிவண்டை
வெல்லும் அளகமும் வேழ நிகர் மார்பகமும்
ஒல்லும் இனிய உரைவழக்கும் -நல்ல
செயற்கையுள்ள இந்தச்சேழிழைக்கு நீங்கா
இயற்க்கையாயுள்ள எழில்"
"முகத்திற் சிறுநகைப்பு மெய்கலக வாட்கண
சுகந்திற் சிறந்த தீஞ் சொற்கள் - உகக்குமிடை
அங்கைப்பிடி நடையிங் காமிலற்றில் யாது சிறு
மங்கைக்கீ யாது வனப்பு"
- ஸ்ரீ பர்த்ருஹரி சிங்கார சதகம்.
அதாவது, பெண்கள் சிலர் புன்சிரிப்பாலும், கைகளை புரட்டுவந்தாலும், கூச்சத்தாலும், பயத்தாலும், முக நயத்தாலும், வாள் போன்ற கடைக்கண் பார்வையாலும் கொஞ்சும் வார்த்தையாலும், பொய்யான வார்த்தையாலும், சொகுசான தோரணையாலும் ஆண்களை மயக்கி தன்வசப்படுத்துவார்கள்.
மேலும், கடைக்கண்ணால், அரைக்கண் பார்வையால், இனிய காம கசிவும் வார்த்தைகளால், நாணத்தோடு கூடிய புன்னகையால், அழகான தலுக்கு மினுக்களான நடையால் ஆண்கள் பெண்களிடம் மயங்குவார்கள்.
இதைத் தவிர பெண்கள் அவளது கரு விழியை மேலேற்றி காட்டுவாள், அவள் உடல் துவண்டு கீழே விழுவதைப்போல் பாசாங்கு காட்டுவாள்; வெட்கத்தில் தலைக்குனிவாள்; மிக ஒயிலாக தன் சொகுசை காட்டுவாள்; அவளின் செந்தாமரை முகத்தைக் காட்டுவாள், அவளின் கண்களை அது நீலமலரோ என சந்தேகிக்கும் படித் திருப்புவாள்
இதெல்லாம் பெண்களின் இயல்பான கோலம் என்கிறது மேலே உள்ள பாடல்.
மேலும் பெண்களுக்கு இயற்கையாயுள்ள அலங்காரங்கள்
நிலவுபோன்ற முகம், தாமரை மலர்களைப் போன்ற கண்கள், தங்கம் போன்ற உடல், தேனெடுக்க வரும் வண்டை வெல்லும் அழகிய கருங்கூந்தல், யானை மத்தகம் போன்ற மார்புகள், இனிய மதுரமான மொழிகள்,
புன்னகை பூத்த முகம், கலகவிழிகள், காதுக்கினிய மொழிகள், பெண் யானை போன்ற ஒய்யார நடை, இதெல்லாம் இளம் பெண்களுக்கு அழகை தரும்.
இதுமட்டுமா.......?
கால் கொலுசு சில்சில்லெனா கதை படிக்க, கை வளையல்கள் சலசலக்க, மார்பில் கிடைக்கும் மணிமாலைகள் மௌனம் பேச, நெற்றியில் குங்கும சாந்து கும்முன்னு மண;மணக்க, அன்ன நடை நடந்து செல்லும் பெண்களைப் பார்த்தால் முற்றும் துறந்த ஞானிகளும் அவள் பின்னே சென்று ஒரு அடிமை வேலைகாரன் போலவே பணிவிடை செய்வான் என்பதில் சந்தேகமில்லை,
(இதெல்லாம் கண்ணால் பார்க்க கூடாது என்றுதான் காடு மலை னு சுத்தினார்கள் அன்றே யோகிகளும், சித்தர்களும்)
சரி இந்த அழகுடைய பெண்களை மெல்லியவள் என்றும், பேதைகள் என்றும், பெண் தெய்வங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த உத்தம குலப்பெண்களை அவரவர் சமய சடங்கின் படி திருமணம் செய்து குடும்ப தர்மத்தை கடைபித்து அந்த பெண்ணோடு சிற்றின்ப சுகம் அனுபவித்து, குழந்தை பெற்று சரியை கிரியை யாதிகள் கருமங்கள் மூலமாக
ஆத்மசாந்தியடைய வேண்டும் என்பது தான் வேதாகமத்தின் கட்டளை.
"பெண்கள் உடம் பென்னும் பெருங்
காட்டில் மார் பென்னும்
கண்ண கன்றமேடு கலந்
திருக்ரும் - உண்ணிலவி
மன்மதனாங் கள்வன் மகிழ்ந்
திருக்கிறான் மனமே!
நின் னைவலிப்பான்
போகேல் நீ "
"மணிமந்த் ரௌஷத்தில் மகறாப் பெண் மோகம்
தனியா மயக்கந்தருமே - பிணிபோலக்
கால் கைகள் சேரா இருகண் சுழலச் சித்ததில்
மால் பெருக்குமில்லை யொரு மாற்று "
காம வெறி கொண்ட ஆண்கள் இந்த உண்மை தெரியாமல்
பெண்களை ஒரு காமம் தனிக்கும் யந்திரமாக நினைத்து, அல்லும் பகலும் அவர்களது மோக வலையில் சிக்கி உழல்வதினால் அவர்கள் அடைய வேண்டிய சுகம் பெரும் தூக்கமாக முடிகின்றது. அவர்கள் இம்மையில் அடையவேண்டிய பல சுகங்களை இழந்து மறுமையிலும் பெரும் துக்கத்தை அடைவார்கள் என்பது நிச்சயம்.
தற்கால நாகரீத்தவர்கள் பெண்களை தெய்வமாக பாவித்து, அவர்களுக்கு சர்வ சுதந்திரங்களைக் கொடுத்து அவர்களின் வேலைக்காரர் போல ஆண்கள் நடந்துக்கொண்டால் அது விபரீத பலனையே கொடுக்கும் என்பதை அனுபவத்தில் அறியலாம்.
"காதல் ஒருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவிலும் கை கொடுத்து
மாதர் அறங்கள் பழமைக்காட்டிலும்
மாட்சி பேறச் செய்து வாழ்வமடி "
- சி. சு. பாரதியார்
"முகத்துக்கண்கள் முறுக்கித் திருத்தியே
அகத்துக்கண்ணை அறுத்துப் பிளந்த பின்
வகுத்த ஜோதி மணிவிளக் கென்னுள்ளே
தொகுத்துப்பார்க்கச்சுகம் பெற்றாய் நெஞ்சமே"
மனிதர்கள் தங்கள் முகத்திலுள்ள இரண்டு கண்களையும், மனக்கண்ணால் பார்த்து இல்லற வாசிகளுக்குரிய உபதேச மந்திரத்தை ஓதி பிராண வாயுவாகிய சுவாசத்தை உள்ளே இழுக்கவும், மேலே வாங்கவும் பழக்கம் செய்து வருவது அவர்கள் கடமையாகும்.
ஆனாலும் இந்த பழக்கம் மனிதர்களுக்கு மிக அழகில்லை ஆனாலும் இந்த அப்பியாசத்தை யோக பழக்கமுள்ள மகாத்மாக்களை தொடர்ந்து முடிந்த வரை பயற்சி செய்து வரவேண்டும். இந்த அப்பியாசம் உடலுக்கு ஆதாரமாக இருப்பதோடு ஆயுளையும் அதிகப்படுத்தும்.
மனிதர்கள் எப்போதும் அரிய பெரிய தவங்கள் செய்து, தன்னையும் தனக்கான ஆதாரத்தலைவனையும் (ஜீவன் எனும் சிவனையும்) அறிந்து உடலை பரிசுத்தமாக்குவதற்கு மலக்கூத்து மக்கா என்று சொல்லப்படா நின்ற நாசி வழியா இருக்கின்றதென்று
யோக சாஸ்திரம் கூறுகின்றது.
இதை யோகாப்பியாசமுள்ள மெய்ஞான நிஷ்டர்களுக்கு அனுபவ உண்மையாக கூறுவார்கள். மலைக்கூத்து மக்கா என்ற பழக்கத்தால் பிராண வாயுவை உள்ளே இழுத்து மூலதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா எனும் ஆறு ஸ்தலங்களிலே முறையாக பாக்கவமாய் நிறுத்தி பின்னர் அதை மேல் எழுப்பி மனதை நிலைக்கச் செய்தலே தவத்துக்கெல்லாம் மேலேனா தவம் என்று சொல்லப்படுகிறது.
இந்த அப்பியாசத்தினால் பிராண வாயுவானது ஆறு ஆதரத்திற்கு மேலே ஏறினால் அந்த சுவாசத்தின் கடூரமான அக்கினி சூடானது தலையிலுயுள்ள மூளை வலுவடைந்து வளர்ச்சி பெரும். ஆனால் இது உடலை வளர்க்க தெரியாத ஏழைகளுக்கும் வயதில் முதிர்ந்தவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதனால், உடல் பலம், மனோதிடம் அறிந்து ஆரம்பத்திலே ஒரு நல்ல தகுதியான குருவிடம் இந்த பயற்சியை கற்று பயணடைய வேண்டும். பெண் போகம் (காமம்) விரும்பும் ஆண்கள் இந்த அப்பியாசத்தை செய்யும் போது
பிராண வாயுவானது நாசி முனை - உண்ணாவின் புரையாகிய இரு காலங்களுக்கு மேல் செல்லாமல் மெதுவாக சமன படுத்த வேண்டும்
இல்லையெனில் உடல் அதிக சூடாக மாறும்.
அக்கினி சுவாலையாக வரும் சுவாச உஷ்ணமானது விந்துவுக்கு இடமாகிய பாத மட்டிற்கு சென்று விந்துவை இளகச் செய்து தலை அளவில் முட்டி,
அங்கிருந்து நாதம் என்ற மணியோடு கலந்து ராஜாவாகிய நாதமும், விந்துவாகிய மந்திரியையும் ஒன்று கூட்டி புரடி வாசலால் வெளியாகி வீணா தாண்டின் (முதுகெலும்பு) துவாரத்தின் வழியாக வந்து முதுகின் கீழேயுள்ள குளத்தில் (பள்ளத்தில்) வந்து சேரும்.
அந்த இடத்தில் வந்த போது அது எண்ணம் என்ற தடையை ல் உடைத்துக்கொண்டு தின்னிக்குத்தியறாய் மூலதாரமென்கிற ஆண்குறி துவரத்தின் வழியாக குத்திதுப்பாயும். அப்படி விந்து வெளியேறும் போது அது உடல் பலத்தையும் ஆயுள் பலத்தையும் குறைய செய்யும்.
இது தான் மாயா விலாச மோக வாரிதியில் ஆழ்திடும் பாழான சிற்றிடை பெண்கள் சிற்றின்பத்தில் ஆழ்ந்த இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஆண்களின் பிறப்பு இறப்புகளாக்கின்றன என்பது சர்வ சாதாரணமாகியுள்ளது.
அவ்வாறு அதிக துன்பத்தையும் கஷ்டத்தையும் துன்பத்தையும் உண்டாக்கிக் கொள்ளாமல் தனக்கு நிகரான சமத்துவ குணமும் அறிவும் கொண்டுள்ள பெண்களோடு ஆண் உறவுக்கொள்ளும் போது அந்த பெண்ணை பல வித மதன லீலைகளால் உச்சாகப்படுத்தி அவளின் சுரோணிதத்தை முதலில் வெளியேற்றிய பின் பிறகு ஆணின் விந்துவை நீதானமாக வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதன காம சாஸ்திரம் கூறும் இரகசியம்.

To be Continue Part - 4
Thanks to Face Book Sitharkalin Kural



காம சித்தி - 2

                                     அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

காம சித்தி - 2

ஒரு காலத்தில் மாயபுரி எனும் கிராமத்தில் புரி அட்டக பூஷண கோவில் நிஷ்டாபரராக இருந்த சதானந்த பிரம்மம் எனும் பிரம்ம நிஷ்டர் ஒருவர்
இல்லறத்தின் உயர்வை அறிந்தவராகவும் சிறுவயதிலே துறவற ஆசிரமத்தை ஏற்படுத்தி சற்குரு அருளால் மகா வாக்கிய உபதேசம் பெற்று பிரம்ம நிஷ்டபராய் தவம் செய்து
ஏகாந்தமாய் இருந்த போது அவருக்கு திருவள்ளுவ பெருந்தகை எனும் ஒரு இல்லற ஞானியை பார்க்க மனம் எங்கியது.
உடனே சதானந்த பிரம்ம நிஷ்டர் திருவள்ளுவர் வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் வள்ளுவர் தான் எழுதிய குறள் பற்றி அவரது மனைவி வாசுகி தேவியாருடன் பேசிக்கொண்டுந்தார். பிரம்மநிஷ்டரோ வள்ளுவர் வீட்டில் நடக்கும் பேச்சுக்கள்
ஆத்மா ஞானசம்மந்த மானதாக இருக்கும் என்று மதித்து அந்த வீட்டு வாசப்படியில் நின்று நடக்கின்ற விசயத்தை உற்றுக் கவனித்தார். அந்த நேரத்தில் வாசுகி தேவிக்கு வள்ளுவர்
"பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்"
- திருக்குறள்
என்ற திருக்குறட்பாசுரம் சொல்லி அதற்கு வியகியானமாகக் குளிர்ந்த மொழி பழகும் பத்மினி சாதி பெண்களின் ஈறுகளில் இன்றும் சுரக்கும் நீர், பாலும் தேனும் கலந்தாற்போல சுவையுள்ளதாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டுருந்தார்.
இதைக்கேட்ட பிரம்மநிஷ்டர் ஆச்சரியமுற்றார். பெரியவரான திருவள்ளுவர் வார்த்தை பொய்யாகாது
உண்மையாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே போகும் போது
காட்டில் விறகு வெட்டி அசந்து மெய்மறந்து தூங்கும் ஒரு வேடுவ பெண்ணை பார்த்து திருவள்ளுவர் சொன்னதை சோதித்து பார்க்க அவள் வாயில் இருபாலொழுகும் எச்சிலை சுவைத்தார். அது புகையிலை நாற்றமாக இருக்கவே சீ....!சீ.....! என்று துப்பினார்.
வெற்றிலைப்பாக்கு புகையிலை சேர்த்து மென்று ஒழுகும் ஆபாசத்துக்கா தேனும் பாலும் கலந்த ருசி என்று வள்ளுவர் வர்ணித்தாரென்று மனம் வருந்தி திரும்பி நேராக வள்ளுவர் வீட்டுக்கு வந்து "வள்ளுவரே நீங்கள் இயற்றிய குறள் அனுபவத்துக்கு ஒவ்வாததும் சுத்த பொய் நிரம்பியதென்றும் கூறினார்"
இதை கேட்ட வள்ளுவர் திடிக்கிட்டு வெளியே ஓடிவந்து பிரம்ம நிஷ்டரை விதிப்படி வணங்கி வீட்டுக்குள் அழைத்து சென்று உபசரிப்பு முடிந்த பின் "சாமி குற்றம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள்.... அடியேன் இயற்றிய அநுபவ உண்மையைத் மெய்பிக்கும் வரை ஐயன் இங்கே இருக்க வேண்டும்" என்று வேண்டினார்.
பிறகு அந்த பிரம்ம நிஷ்டரை தமது சீடர் ஏலேலசிங்க செட்டியார் அபிமானித்திருக்கும் காமரூபிணி எனும் தேவதாசி வீட்டுக்கு சென்று, திருக்குறள் காமத்துப்பாலின் பெருமையை சுவாமிகளுக்கு மெய்ப்பித்து அடியேன் இயற்றிய நூலுக்கு அங்கீகாரம் தருவது உங்கள் கடமை என்று கேட்டுக்கொண்டார்.
அவ்வாறே அந்த தாசியானவள் திருவள்ளுவர் கோரிக்கையை ஏற்றுகொண்டு பிரம்ம நிஷ்டாரை சந்தித்து வணங்கி அவர் பிரம்ம தேஜஸ் ஜொலிக்கும் திருமுகத்தை உற்று நோக்கினாள். அப்போது அவள் மனதில் ஒரு வகை ஆச்சரியம்.
"இந்த பெரியவர் யாராக இருக்கலாம்...?
இவர் பால்ய சந்நியாசி, பிரம்ம நிஷ்டர், ஆத்ம தேஜஸ் இவர் முகத்தில் ஜோலிகிறது ஆயிரம் கோடி சூரியனைபோல் விளங்கும் இவரது திருமுக அழகுக்கு ஈடு சொல்ல யார் உள்ளார்கள்...?" என்று மனதுக்குள்ளே நினைத்து அவரின் அமுதவாக்கினை
கவனித்தாள்.
திருவள்ளுவர் விருப்பத்துக்கிணங்க, அந்த பெரியவரை உயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்த்தி சுகந்த வாசனைக்கொண்டு அவளே பன்னீரால் குளிக்க வைத்து உடல் மாசு கழுவும் விபூதியை உடலெங்கும் பூசினாள், களப கஸ்தூரி கலவைச் சந்தனத்தில் நெற்றியில் திலகமிட்டாள், அறுசுவை உணவுளை ஊட்டினாள்.
அந்த பெரியவரை மெல்ல மெல்ல அந்தபுறத்தில் இருக்கும் தனது பள்ளியறைக்கு அழைத்து சென்று அங்குள்ள அம்சதுளிகா எனும் மஞ்சனத்தின் மீது அமரசெய்து இனிய கீதங்களை பாடி அந்த பிரம்ம நிஷ்டரின் மனதை குதுகுளிக்க செய்து சரச சல்லாப வார்த்தைகளால் அவர் மனதை வசப்படுத்தினாள். மேலும், பல வகை லீலாவினோதங்கள் செய்தாள்.
ஆத்ம நிஷ்டாநு பரராகிய பிரம்ம நிஷ்டர் மாய விலாசத்தில் மயங்கினார். காமரூபிணி என்னும் அந்த தேவதாசியின் சிங்கார லீலா வினோதங்களைக்கண்டு அவளிடம் வயப்பட்டு, பல விதமாய் அவளைப் புகழ்ந்தார்.
"வெய்ய மதன் விடுஞ்சரங்கள் வேதனையை
விளைந்தன வால
பிரிந்தினிச் சிறிதுந் தரிக்கலேன் பிரிவை
பேசினு நெய்விடுந் தீப்போ
லெரிந்துளங் கருகிமயங்கல் கண்டில்லையோ
வெங்கணும் கண்ணுடை யெந்தாய்
புரிந்த சிற்பொது விற் றிருநடம் புரியும்
புண்ணியா வென்னுயிர்த் துணைவா
கரைந்திடா துறுதற்கிது தகுதருணங்
கலந்தருள் கலந்தரு லெனையே"
- திருவருட்பா
இவ்வாறு பிரம்ம நிஷ்டர் ஆத்ம சுகம் போல் சிற்றின்ப சுகத்தை வினோதமாய் அனுபவிக்கவும், தாசியானவள் பிரம்ம நிஷ்டரின் போக சுகத்தை மிக உல்லாசமாய் அனுபவித்து,
"காத்திருந்தாலும் கலிதீருமே கண்ணாட்டியுன் முகம்
பாத்திருந்தாலும் பசியாருமோ இடபாகமதில்
வீற்றிருந்தாலும் வினைதீருமோ
மெல்லிநல்லருளைச்
சேர்த்தணைத்தாலும் சிவபோக ஞானம் சித்திக்குமோ"
தாசி காமரூபிணியும் பிரம்ம நிஷ்டரும் மன்மத சுகாநந்த லீலா வினோதங்களை மாறி மாறி அனுபவித்து வரும் காலங்களில் பிரம்ம நிஷ்டர் தாசியின் அதரங்களை சுவைக்க அது தேவாமித்தம் போல் இருப்பதைக்கண்டு அதிசயித்து
வள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறள் காமத்துப்பாலில் கூறியது அனுபவ உண்மையே என்பதை கண்டு
உடனே மஞ்சனத்து மேலிருந்து கீழே இறங்கி நேராக திருவள்ளுவர் வசிக்கும் குடிசைக்கு ஓடிவந்தார்.
"வள்ளுவா! நீ செய்த சாஸ்திரம் மெய்! மெய்!! மெய்யே!!!
ஆனால் மனமானது விஷயாந்தகாரத்தில் மூழ்கும் போது தான்" என்றார்.
இது கர்ண பரம்பரையாய் வெளி வந்தது. அதனால் மெய்யாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால், இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மனோலையமே உண்மையான மன்மத விகாரத்திற்கு காரணமாகிறது.
மனமென்பது அந்த கரணத்தில் வாயுவின் (காற்றின்) அம்சம் கூடிய விருத்தி அதனால், வாயுவைபோல அலையும் தன்மையது. சங்கற்பவிகற்கள் பல விருத்தியுடையது இதற்கு அதிதேவதை சந்திரன் என்றும்,
ஸ்தானம் கண்டமென்று சொல்லப்பட்டுள்ளது.
"மனமேவ மனுஷ்யானாம் காரணம்
பந்த மோக்ஷதஹா:"
என்று ஸ்மிருத்தி வாக்கியம் கூறுவதால்
மனிதர்களுக்கு கர்மபந்ததை உண்டாக்குவதும் மனம் தான், மோட்சம் எனும் ராஜியத்தை அளிப்பதும் மனம் தான்.
"பொன்போல விலங்கு மனஞ் சஞ்சலத்தால் குரங்காம்
புத்தி விசாரித்தரியும்
பொலிவதனா லரவாந்
தன்போல விலையெனலா லகங்கார மதமாம்
தனை நிகராஞ் சித்தமொரு
தன்மையினா னாயாம்
மின்போ லுஞ் சலனமன மசையம னிறுத்தி
விசாரிக்கும் புத்தியினை
மெய்ப்பொருட் பால் விடுத்து
வன்போடு வருமாகங்காரத் தினையுங் கடித்தால்
வைத்த விடத்திருந்து
சித்த மகத்துவம் தருமே
- உபநிடதம்
இத்தகைய சலிக்கும் குணமுள்ள மனதை குரங்கென்றும், பாம்பென்றும், நாயென்றும் அதன் செயலை கண்டு பிரம்ம நிஷ்டர் கூறுகின்றார்.
"மணமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சின மாள் வித்து ஓரிடத்தே சேர்த்துப் புனமேய
தண்டுழா யன்டையத்தான தான்காணு மஃதன்றே
வண்டுழாம் சீரார்க்கு மாண்பு"
- நம்மாழ்வார்.
"மனனெனு மோர் குரங்கு" என்று வடலூர் இராமலிங்க சுவாமிகள் கூறுகின்றார்.
இந்த மனமானது பேயினால் பிடிக்கப்பட்டால்
அதன் கோலா கலத்தைச் சொல்லத்தான் கூடுமோ...?
எழுததான் முடியுமோ....?
பூர்வ வாசனையாகின்ற கள்ளும் குடித்து, அகங்காரமாகிற தேளும் கொட்டி, ஆசா பாசமென்ற பேயியும் பிடித்தால் அத்தகைய மனதின் சுபாவத்தை ஒவ்வொருவரும் ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் போதும் அவர்களே புரிந்துகொள்வார்கள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிவிடலாம், பூமியில் உள்ள மணல்களை எண்ணிவிடலாம். நீரை ஸ்தம்பனம் செய்யலாம், காற்றை ஸ்தம்பனம் செய்யலாம். இதெல்லாம் ஒரு பெரிய காரியமே இல்லை.
நகர் நாய் போல அங்குமிங்கும் ஓடி அலையும் மனதை அடக்குதல் என்பது தான் கஷ்டதிலும் கஷ்டம்.
மனதை ஜெயித்தவன் எவனோ அவனே மாயையை ஜெயித்தவனாகிறான். அவனுக்கு தான் மோட்ச சாம் ராஜ்ஜியத்தின் கதவுகள் திறக்கப்பட்டுருக்கின்றன.
ஆகையால் மன்மதன் - ரதி என்று சொல்வதெல்லாம் மனதின் சேஷ்டையாகும். மாயையை காணுவது கூடாதது போல் மன்மதனும் ஒருவர் கண்ணுக்கு தோன்றாதவனாய் உருவிலியென பெயர் பெற்றிருக்கிறான்.
மனிதர்கள் மனதின் சேஷ்டைகளில் லயப்பட்டு தான்றோன்றிகளாய் தன்னிஷ்டம் போலவே அலைந்து கெட்டுப்போவார்கள் என்று
பண்டையக்கால ரிஷிகள்,
பிரம்மசரியம் - கிருகஸ்தம் - வனபிரஸ்தம் - சன்னியாசம் என நான்கு ஆஸ்ரமங்களையும் அவற்றை அனுஷ்டிக்க விதி நிஷேதகளையும் அனுகிரகித்துள்ளார்கள்.
பிரம்மசரிய ஆஸ்ரமத்தைக் கிரமமாக அனுஷ்த்தோர் காம இச்சை உண்டானால், கிருகஸ்த தர்மத்தை அனுஷ்டித்து திருமணம் செய்த தன் மனைவியோடு புத்திரோத்பத்தியை உத்தேசித்துக் கலவி செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய,
இரவும் பகலும் சதா சர்வ காலமும் விந்துவை காம வெறிகொண்டு பெண் சம்பவர்க்கத்திலும் முஸ்டி மைதுனங்களிலும் செலவு செய்யும் படி எந்த சாஸ்திரமும் கூறவில்லை....
விந்து ஜெயம் அப்படியென்றால் என்னவென்று பார்க்கலாம்.
பல துளி இரத்தம் சுண்டியது ஒரு துளி வித்துவாகிறது. அத்தகைய விந்துவை ஜெயிக்கிறவன் யோகம் அறிந்த ஒருவனே.... எவன் விந்துவை ஜெயிக்கின்றனோ அவன் மிருதயு (எமன்) வை ஜெயிக்கின்றான்.
விந்து விட்டால் (செத்து) நொந்து விட்டான் என்பார்கள். இந்த முறையை பற்றி ஹடயோகப் பிரதீபிகையில் யோக சாதன அத்தியாயத்தில் "வஜ்ரொலி" என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டுருகின்றது. இதை இல்லரவாசிகளாக கணவன் மனைவியோடு வாழுகின்றவர்கள் பின்தொடர்ந்தால் அவர்கள் உடல் வஜ்ரம் போல் இருப்பதோடு நீண்ட ஆயுளையும் பெற்று வாழ்வார்கள்.
புருஷ வஜ்ரோலி:-
வஜ்ரோலியின் முதல் அங்கமாகிய பிரக்கியை கூறுவதை கவனியுங்கள்.
ஈபம் (Lead) இரப்பர் குழாய் முதலியவற்றால் செய்யப்பட்ட ஒரு குழாய் செய்து அதை லிங்கத்துவாரதில் ஆண் குறி வாயு சஞ்சரிக்கும் பொருட்டு அடிக்கடி நெருப்பூது குழல்போல் மெல்ல பூதகாசம் செய்தல் அதாவது ஊதுதல்.
ஒருவன் சிறுநீர் கழிக்கும் போது அதை வாய்வு' னால் பலமாக மேலே இழுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், யோகப்பியாசம் செய்து வைத்த குருவின் முன்னிலையில் அவர் அபிப்ராயத்தை அனுசரித்து
மேலே இழுதல் வேண்டும். இவ்வாறு ஆறு மாதம் தினம் செய்தால் மகத்தான சித்தியைத் தரும் விந்து ஜெயம் உண்டாகும். விந்து ஜெயம் கொண்டவன் நூறு பெண்களோடு உறவுக்கொண்டாலும் விந்து வெளியேறாது. இதை மூலிகை முறையிலும் செய்யலாம். எதுவாக இருந்தாலும் குருவின் ஆலோசனைப்படி செய்வது சிறந்தது.
வஜ்ரோலி அப்பியாசமுள்ள பெண்ணின் சுரோணிதம் அற்பநிலையில் இருந்தாலும், அது வெளியாகி நாசமாவதில்லை அதனால் அந்த பெண்ணின் உடல் வஜ்ரம் போலிருக்கும். அவளது சுரோணிதமும் விந்து தன்மையடைக்கிறது. அதாவது மூலாதாரத்திலிருந்து எழும்பிய நாதம் இருதயத்தில் விந்து தன்மையடைகிறது. விந்துவோடு ஐக்கியமாகிறது.
ஆணின் பீஜத்திலிருந்து வெளியாவது சுக்கிலம் என்றும், பெண்ணின் யோனியிலிருந்து வெளியாவது சுரோணிதமென்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டும் ஒன்று சேரும்போது ஜீவ சிருஷ்டி உண்டாகிறது. அதாவது ஒரு உயிர் படைக்கப்படுகிறது. ஆணின் சுக்கிலம் சந்திர மயம், பெண்ணின் சுரோணிதம் சூரிய மயம் இந்த இரண்டின் சேர்க்கையால் பரம பதம் உண்டாக்கிறது. விந்துவானது சொர்க்கம் - மோட்ஷம் - தருமா தர்மங்கள் ஆகியவற்றை தரும். இதன் மத்தியில் இந்திராதி சகல தேவர்களும் சூட்சமாக வசிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
விந்துவும் சுரோணிதமும் வஜ்ரோலி அப்பியாசத்தால் ஒன்று பட்டு உடலில் தங்கி சகல சித்திகளையும் தருகின்றன
எந்த பெண் தனது யோனியை சுருக்கி சுரோணிதத்தை மேல் இழுத்து அதை உடலிலே தங்கவைக்கின்றளோ
அவள் திரிகா லக்யானியாவாள்
அவள் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லமை பெற்றுருப்பாள்.
இந்த வஜ்ரோலி அப்பியாசம் செய்யும் யோகிகள் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ரூபலாவண்யம், சரீர பலம், மனோரத பூர்த்தி முதலாகிய சகல சித்திகளையும் அடைந்தவர்கள் என்பது உண்மை.
இகத்துக்குரிய சகல போக போக்கியாதிகளைக் கொடுத்து மறுமையில் மோட்ச சாம்ராஜியத்தையும் கொடுக்கும் இந்த அபியாசத்திற்கு சிற்றின்பமே (இல்லற சுகம்) பேரின்பத்துக்கு வழியென்று சாஸ்திரங்கள் கூறுகின்ற
"மாதரிடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலினால் விடார் யோகங் கலந்தவர்
மாதர் உயிராசை கைக் கொண்டேவாடுவர்
காதலர் போற்றங்ஙன் காதலாஞ் சாற்றிலே"
- திருமந்திரம்.
ஆண்/பெண் இருபாலரும் ரதி மன்மதன் ஒரு தத்துவ விசாரணை செய்யும் போது
இது மனதில் ஏற்படும் சேஷ்டை என்று தான் வெளிப்படுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்த அப்பியாசித்தால் மன்மதனின் ஆடம்பரங்கள் எல்லாம் ஒருவழியாக அடங்கி சமன் படும்.
"சிற்றின்ப வேறியிற் படிந்துதோய்ந்து
கிடைக்கும்எவ்வினமும்பேரின்பம் அடையகூடும்"
- திருத்தக்க தேவர்.
வசீகர மார்க்கம்:-
"அங்கணை யருத்து விட்ட
அடலினை யாற்றாதீசன்
தனிய யோக நீங்கி தன்னுடல்
பாதியாக வெங்கடும் காமத்தீயால்
உடல் வெடித்திடப் போர்செய்த
திங்கள் வெண்குடை
யிற்றான்சேவடி சென்னி வைப்பான்"
- சிவபெருமான் உமதேவையாருக்கு உபதேசித்தது சிவஸ்வரோதயத்திலுள்ள சுருக்கம்....
அக்னி சாட்சியாக திருமணம் செய்துகொண்ட பெண்கள் ஆண்களோடு ஒற்றுமையாக இல்லாத காலத்தில் அந்த மனைவியை தன்வயப்படுத்துவதற்கு பல வகையான தந்திர மந்திர சிகிச்சைகள், கிரக தோஷ பரிகாரங்கள், மூலிகை மருந்து பிரயோகங்கள் செய்யலாம்.
சில சாஸ்திர முறையாக அனுபவத்தில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக திருமணமானவர்கள் அவரின் மனைவிக்கு மட்டும் உபதேசிக்க வேண்டும். பிற பெண்களிடத்தில் இதை செய்யக்கூடாது. மீறினால், பாவ தோஷங்களுக்கு ஆளாகி பல்வேறு நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
- திருக்குறள்.
திருவள்ளுவரின் இந்த வாக்கியப்படி
மனிதர்கள் எல்லோரிடத்திலும் அன்புடையவராய் இனிய வாசனங்களால் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது முறை.
உடல் பொருள் ஆவி என மூன்றையும் புருஷனுக்கே தத்தம் செய்து ஓருயிர் ஈருடலாகிய மனைவியிடத்தில் ஏத்தகைய அன்பும் விசுவாசமும் வைத்திருக்கவேண்டும் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால், கால சக்ர மாறுதலாலும், கிரக தோஷங்களினாலும் ஒரு உத்தம புருஷனுக்கு ஒரு உத்தம மனைவி வாய்க்காமல் இருப்பது பிராத்த கருமத்தின் பயனே ஆகும். அதனாலே அத்தகைய மனைவியோடு கடும் வார்த்தைகள் பேசி அவள் மனதை புண்படுத்துவது அறிவாளிகளுக்கு அழகில்லை.
கவனியுங்கள்,
சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறுகின்றார்.
"ஹே பெண்ணே கவனமாக கேள்"
ஒரு புருஷன் தன் துணைவியாருக்கு சந்திர கலையில் சுவாசம் ஓடும் போது தன்னுடைய சூரிய கலை சுவாசத்தினால் அந்த சந்திரக்கலை சுவாசத்தை ஆகர்ஷணம் செய்து தன்னுடைய ஜீவ சுவாசத்தோடு சேர்த்து வந்தால் அந்த புருஷனும் மனைவியும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனமாறுதலின்றி ஒற்றுமையாய் பாலும் நீரும் போல் கலந்து குடும்ப வாழ்க்கை சுகங்களை அனுபவித்து வாழ்வார்கள்.
அடுத்ததாக,
ஒரு புருஷன் தன் ஜீவ சுவாசத்தினால் மனைவியுடைய ஜீவ சுவாசத்தை உள்வாங்கி மனைவியின் ஜீவ சுவாசத்தில் கொடுத்து ஒன்று சேர்த்தால் அந்த பெண் ஜென்ம பரியந்த பிரியமுள்ளவாளாய் இருப்பாள்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இரவு நேர கடைசி சாமத்தில் மனைவி அயர்ந்து தூங்கும் போது அவளின் சுழிமுனை நாடியை அவள் கணவன் உட்கொண்டல், அந்த மனைவியானவள் அவள் கணவன் உயிர் உள்ளவரை அவனைவிட்டு பிரியாமலிருப்பாள்.
"இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலாலன்றி மகிழாதே"
- ஔவையார்.
"அஞ்சி லோதிய ராடமைத்தோளியர்
வஞ்சமற்று மருவுதல் செய்திட
வெஞ்சி மேன்றி யிளையவர் யாவரும்
பஞ்சபணன் பதத்தை வணங்குவோம்"
ஆண்/பெண் இருவரும் மதன சாஸ்திரத்தின் படி ஆலிங்கனம் செய்யும் போதாவது, அல்லது ஆனந்தமாய் இருக்கும் போதாவது எந்த புருஷன் தன்னுடைய சூரிய சுவாசத்தினால்
மனைவியின் சந்திர சுவாசத்தை இழுத்து உட்கொள்கிறானோ அவன் மன்மதனைப்போல் தன் மனைவிக்கு மோகக்காரணாகிறான்.
சிவத்தினால் சக்தியையும், சக்தியினால் சிவத்தையும் எந்த புருஷன் ஒன்றுப்பட சேர்க்கின்றானோ அவன் அந்த லக்ஷணத்திலே நூறு பெண்களை மோகிக்க செய்வான்.
(சிவம் - சூரியன், சக்தி - சந்திரன்)
பெண்ணுடைய சூரிய சுவாசத்தில் ஆனுடைய சந்திர சுவாசத்தை கொடுக்கவேண்டுமெனில் 3,5,7,9 ஆகிய எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்.
பெண்ணுடைய சந்திர சுவாசத்தில் புருஷனுடைய சூரிய சுவாசத்தை கொடுக்க வேண்டுமெனில் 2,4,6 ஆகிய எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் வசீகரித்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
சூரியனையோ சந்திரனையோ ஆண்/பெண் ஆகர்ஷணம் செய்து ஒரு தாமரை பூவை அவர்கள் உதடுகளால் ஒத்தடம் கொடுத்து பின் அந்த பூவை முகத்தில் ஒத்திக்கொண்டு உடனே சுவாசத்தை அந்த பூவில் செலுத்த வேண்டும். இவ்வாறு மனைவி நித்திரை செய்யும் வரை புருஷன் செய்ய வேண்டும். பிறகு அவள் எழுந்தவுடன்
அவன் நேத்திரம், கழுத்து ஆகியவற்றை ஸ்தம்பனம் செய்ய வேண்டும். இவ்வாறு கணவன் மனைவி சுவாசத்தோடு கலந்தால் மனைவி கணவனோடு இன்புற்று வாழ்வாள்.
பெண்ணானவள் புணர்ச்சியில் நெய்யும் பாலும் கலந்த சம்பா அரிசியை சமைத்து நல்லெண்ணெய் உளுந்து கலந்த உணவை உண்டுவிட்டு முதலில் இடது காலை வைத்து அந்த புரத்தில் நுழைந்து புருஷனின் இடது பக்கமாக சென்று அமரவேண்டும். ஆண் என்பவன் நெய்யும் பாலும் கலந்த சம்பா அரிசியை சமைத்த அன்னத்தை உண்டுவிட்டு அந்தபுரம் செல்லும் முன்பு வலது காலை வைத்து அமரவேண்டும்.
ஆண் பெண் புணர்ச்சியில் இருக்கும் போது கீழ் கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
"அஹிரஸி ஆயுரஸி சர்வதஃ பிரதிஷ்டாஸி
தா தா த்வாம் ததாது, விதாதா
த்வாம் ததாது ப்ரஹ்மவர்ச்
சஸா பவேதி, ப்ரஹ்மா ப்ரு
ஹஸ்பதிர் விஷ்ணுஸ் சேமஸ்
ஹூர்யஸ்த தாச்விநொவ் பகோத
மித்ராவருனெள வீரம்ததாது
மே சுதம்"
- அஷ்டாங்க ஹ்ருதயம்.
இந்த பாடலின் விளக்கம், ஆண் பெண் இருவரும் புணர்ச்சி காலத்தில் பரிசுத்த மனதோடு சரீராரோக்கியம், ஆயுள் விருத்தி, சந்தான விருத்தி முதலிய உண்டாக வேண்டுமென்றும், பிரம்ம விஷ்ணு சூரியன் சோமன் வருணன் போன்றவர்களின் அனுகிரகமும்,
அவர்களை போன்ற பலமும் உண்டாக வேண்டுவது.
கணவன் மனைவி புணர்ச்சி செய்த பின்னர் குளித்து முடித்து சுகான வாசனை திராவியங்களை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். குளிர்ந்த காற்றில் உலாவ வேண்டும், இனிப்பான சிற்றுண்டிகளை சுவைத்து குளிர்ந்த நீர் பசும்பால், நீராகாரம் போன்றவற்றை சாப்பிட்டு சுத்தமான காற்று வீசும் இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.
இவ்வாறு இல்லற வாழ்க்கை நடத்துவோருக்கு போகத்தில் நஷ்டமடைந்த விந்து மீண்டும் விருத்தியாகும் என்கிறது.
To be continue.... Part - 3

Thanks to Face Book Sittharkalin Kural