Thursday, March 26, 2015

சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்



சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய
சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்
வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதிற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லசஷியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!.
**************************

அன்புடையீர்! வருகின்ற 29-03-2015 அன்று வடலூரி மாதப்புசம் நடைபெற உள்ளது. அவ்வமயம் வடலூர் வந்து வரம்பெற்றுச் செல்ல அழைக்கின்றோம். எல்லோருக்கும் மரணமிலா பெருவாழ்வு கிடைக்க எல்லாம் வல்லவனை வேண்டுவோம், முயலுவோம்.

-- காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் --

1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.