Wednesday, May 8, 2024

எக்காலம்?

 பிறப்பெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்:

++++++++++++++++++++++++++++++++++

அப்பா நான் பிறந்தநாளை எண்ணி
    அணுவள வேணும் மகிழ்ந்தறியேன்
இப்பாரில் உயிர்கள் பிறக்கக் கண்டால்
    இடிவிழுந்தார்ப் போன்று அவை
தப்பாமல் மடியவேக் கண்டுளம் நடுங்கி
    துன்பமே மேலோங்கி நின்றேன்
எப்போதும் நின்னடி நிழல் தன்னில்
    எவ்வுயிரும் இன்பமுறச் செய்வாயே.

--TMR
RAMALINGAM TM

உயிரிறக்கம் சிறிதும் உணர்ந் தறியேன்
    உடல் மலமற்றிருக்க அறியாது தினம்
பயிருண்டு வாழும் கொடிய னானேன்
     பழமும் பாலும் கொண்டு மூச்சுக்
கயிற்றை பிடித்திருந்தேன் மதி மண்டலம் 
    கசியும் அமுதை பருகக் காணேன் 
பயிலும் சன்மார்க் கத்தால் என்று
    பிடிப்பேனோ சாகா வரத்தை நானே.  

RAMALINGAM TM

 
எவ்வுயிரும் இன்புற்றிருக்க நினைந்து இவ்வுலகம்
செவ்வாடை துறப்பது எக்காலம்?

RAMALINGAM T M


இராமலிங்க அபயமென்று இரக்கமே உயிராகி
காமமற்று இருப்பது எக்காலம்...

RAMALINGAM TM

பொல்லா ஆணவம் அழியநான் இவ்வுலகில்
செல்லா காசுகளாவது எக்காலம்...

RAMALINGAM TM

ஈன உலகில் ஊனுடம் பெடுத்து
ஞான சித்தராவது எக்காலம்...

RAMALINGAM TM

பச்சைத் திரை படர்பாசிவிலகி ஆகாரத்தில்
இச்சையற் றிருப்பது எக்காலம்...

RAMALINGAM TM

                                       RAMALINGAM TM
நல்லறம் பிடித்துச் சாகாமல் மண்குழி

இல்லம் துறந்து பறப்பது எக்காலம்?
RAMALINGAM TM

மாடத்தின் ஒளியாய் மாயை உலகில்
ஓடம்போல் மிதப்பது எக்காலம்?

VALLALAR


நரைதிரை மூப்பவை நண்ணா துலகில்
கரை சேர்வது எக்காலம்?
VALLALAR

உயர்ந்தவனாய் நடிக்கும் என் வஞ்சக
இயற்கையாவும் நொடிவது எக்காலம்?

VALLALAR
பொருளாலர் போன்றே பொழுதெல்லாம் போகநான்
அருளாலர் ஆவது எக்காலம்?

VALLALAR
ஏங்கிய ஏக்கமெல்லாம் உயிர்த் துலகில்
ஓங்கி உத்தமனாவது எக்காலம்?
VALLALAR
அருவுருவ மாகிமனித உயிரெல்லாம் வள்ளலார்
விருது பெறுவது எக்காலம்?
RAMALINGAM TM

கண்டம் தாவும் கணை ஏவியென்னநீ
அண்டம் ஆள்வது எக்காலம்?.
RAMALINGAM TM
நிறைவான வாழ்வில் நரைதிரை மூப்பிலும்
இறைவனைக் காட்டும் சிரிப்பு.
VALLALAR
மரண மில்லா மாமருந்தை இத்
தருண மெனக்கு அருளேஅருளே.
RAMALINGAM TM
அகல் விளக்காய் அகம் விளங்கிச்
சகத்துள் சன்மார்க்கம் காண்.
RAMALINGAM TM
ஓரிறை மார்க்கத்தால் ஒளிதேக மடைந்து
பேரின்பம் காண்பது சன்மார்க்கம்.
RAMALINGAM TM

வளியற்ற தேகமாய் வருந்தி வீழாமல்
ஒளியுற்று நீடுவாழ்க நீ.
RAMALINGAM TM
மரபுசார் ஆன்மீகம் மறந்துஇனி மக்கள்
குரல் ஒலிக்கும் சன்மார்க்கம்.
VALLALAR

உனக்கு நீயே உண்மையென போதித்து
எனக் குறவாகிய சன்மார்க்கம்.
RAMALINGAM TM
ஞானசித்தர் காலமிது இடர்நீங்கி இனி
ஈனஉலகம் வாழும் வாழும்.
VALLALAR

சாவதுதான் இறுதியென சான்றோர்கள் கூறும்
பாவங்களே பாடங்களாய் ஆனது.
RAMALINGAM TM



RAMALINGAM TM







           

           

           

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.