மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026
நலந்தரும் திரு அருட்பாவை
நயமாய் திக்கெட்டும் தனது
பலத்த குரலால் பாடிப்பாடி
பிழைக்க வைத்தாய் சன்மார்க்க
உலகை அந்தோ மறப்பறியோம்
இன்று வள்ளல் மனதிலூன்றி
மலர்ந்து மணந்த தவமே
மழையூர் சதா சிவமே.
தனது காலம் முழுதும் திருவருட்பாவை தவிர்த்து வேறு ஏதும் எனது வாயால் பாட மாட்டேன் என முழக்கமிட்டு அவ்வாறே நடந்து காட்டினார். பல முறை சினிமா பாடல் பாடகராக வாய்ப்புக் கிட்டியும் அதனை தவிர்த்தார்.
ஒரு முறை, எங்கள் ஐயாவை போற்றி பாட வேண்டும் என (’ஐயா” என தங்கள் தலைவரை அழைக்கும் கட்சியினர்) கேட்க, அதற்கு மறுத்து, நான் எனது ஐயாவைத் தவிர (வள்ளலாரை) வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்ல, அக்கட்சியினரிடம் அடியும் வாங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த எங்கள் சகோதரரின் திருமண வரவேற்பில் திருவருட்பா பாடி எங்களை மகிழ்வித்ததை அன்புடன் நினைவு கூர்கிறோம்.
இவ்வாறு சன்மார்க்கத்தில் அதீத பற்று கொண்டவரின் அருட்பா குரல் என்றும் திருவருட்பா உள்ளவரை நீடும்.
-TMR

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.