Sunday, January 13, 2013

தைப் பூசத்திருவிழா அழைப்பிதழ் - 2013


தைப் பூசத்திருவிழா அழைப்பிதழ் - 2013


தமிழ் நாள்
ஆங்கில நாள்
கிழமை
விழா விபரம்
13 தை
26.01.2013
சனி
மருதூர், காலை 08.00 மணிக்கு நற்கருங்குழி, வடலூர் சத்தியதருமச்சாலை, மேட்டுக்குப்பத்தில், சித்திவளாகத் திருமாளிகை, ஆகிய இடங்களில் கொடி கட்டுதல் 10.00 மணிக்கு வடலூர் சத்திய ஞான சபையில் கொடி கட்டுதல்

தை 14
27.01.2013
ஞாயிறு
வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
காலை 06.00 & 10.00 மணி,
மதியம் 01.00 மணி,
இரவு 07.00 & 10.00 மணி.

தை 15
28.01.2013
திங்கள்
வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்    காலை 06.00

தை 16
29.01.2013
செவ்வாய்
மேட்டுக்குப்பத்தில் திருவருட்பிரகாச வள்ளற் பெருமானார் முத்தேக சித்தி பெற்று திருக்காப்பிட்டுக் கொண்ட சித்திவளாகத் திரு அறைதரிசனம்.
மதியம் 12.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை.


      ஆன்மநேயம் சார்ந்த சன்மார்கர்களுக்கும், அன்புள்ள பொதுமக்களுக்கும் வள்ளலாரின் சார்பில் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன், 

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தணிப்பெருங்கருணையால் வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் வள்ளலார் முன்னிலையில் மேற்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற உள்ளது. 

      அவ்வமையம் தாங்கள் அணைவரும் தவறாமல் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளையும் திருவருளாம் பெருஞ்ஜோதி திருக்கருணையையும் பெற்று இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ உள்ளன்போடு அழைக்கிறேன்.    

 அன்பெனும் பிடியுள் 
தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.