பாலியல் வன்கொடுமை
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சமீப காலமாக இந்தியாவில் அதிக அளவில்
நடப்பதை ஊடகங்களின் மூலமாக அறிந்து ஆண்கள் அணைவரும் வெட்கப் படவேண்டியதாக அசிங்கப்
படவேண்டியதாக உள்ளது. சில சமயங்களில் பாலியல் வன்கொடுமை கொலை செயலில் சென்றுக் கூட
முடிந்து விடுவதை பார்க்கும்போது இதனை தடுக்க என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை,
புரியாத புதிராகவே உள்ளது. பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு மதத் தலைவர்கள்,
பல்வேறு ஊடகங்கள், சட்டத் துறையினர்கள், மகளிர் அமைப்பினர்கள் இவைப் போன்ற பல்வேறு
துறையினர்களும் தனித்தனியாக தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும் இதனை தடுத்து நிறுத்த
முடியவில்லை, ஏன்? ஏன்? ஏன்???
மனிதன் என்பவன் உண்மையில்
மிருக வம்சமா?
சத்தியமாகச் சொல்
நீ மனிதன் தானா? என்ற பழைய சினிமா பாடல் வரியினுக்கு ஒவ்வொரு ஆடவரும் தனது மனசாட்சியினை
ஆதாரமாக வைத்து சிந்தித்தாலே, உடனே தெரிந்து விடும் நீ மனிதனா? மிருகமா? என்று, ஆனால்
அது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக உள்ளது தான் இப்போது பிரச்சனை. நம்முடன் பழகுபவர்களில்
யார் மிருகம்? எப்போது மிருக குணம் வெளிப்படும்? என்று யாருக்கும் தெரியாது. பிரமச்சரியம்
பற்றி உபதேசம் செய்பவர்களையே இந்த பெண் இன்பம் என்ற மாயை, பாலியல் வன்கொடுமை என்ற மிருகசெயலுக்கு
மாற்றி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
கண்போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன
போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
இப்படி மனிதர்கள் போன பாதையை மறந்ததினால் வந்த வினைகள் தான் இப்படிப்பட்ட
பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணம்.
சரி, இவற்றை தடுக்க என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறுபட்ட
ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை இங்கே தொகுப்பாக பார்ப்போம்.
அனைத்துப் பெண்களும்
மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள்:
# வெளியில் செல்லும் பொழுது தற்காப்பிற்காக மிளகாய் பொடி, கண் எரிச்சல் தெளிப்பான்களை
எடுத்துச் செல்லலாம்.
# தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளலாம்.
# விரலமில்லாத ஆடைகளை அணியலாம், உடல் முழுக்க ஆடைகளால் மறைக்கலாம்.
# ஆண் நண்பர்களை முற்றும் தவிர்க்கலாம்.
# சிறிய வயதிலேயே திருமணம் செய்திடலாம்.
# கைப்பேசி உபயோகத்தை தவிர்க்கலாம்.
# இரவில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.
# உறுப்பை மறைத்து பூட்டு போட்டுக் கொள்ளலாம்.
# விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் கவர்ச்சியான காட்சிகளை தவிர்க்கலாம்.
இவைப் போன்று கருத்துகளை இன்னும் விரிக்கின் பெருகும் என்க…
அனைத்து ஆண்களும்
பாலியல் வன்கொடுமையை செய்யாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் சார்ந்த, மனிதாபிமானம்
சார்ந்த, பல்வேறுமதங்களில் உள்ள நெறிமுறைகளை இதுவரை யாரும் ஊடகங்களில் கூறியதாக எனக்குத்
தெரியவில்லை.
ஆனால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்ட பின்பு அந்த ஆடவனை எப்படி தண்டிக்கலாம்?,
அந்த தண்டனையின் மூலம் மற்ற ஆண்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கி இந்த வன்கொடுமையை இனி
தடுக்கலாம் என்கிற ரீதியில் பல கருத்துகளை பல்வேறுபட்ட ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை
இங்கே தொகுப்பாக பார்ப்போம்,
# மரண தண்டனை அளிக்கலாம்.
# பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளலாம்.
# உறுப்புகளை வெட்டிவிடலாம்,
# ஆண்மை தன்மையை நீக்கிவிடலாம்,
# ஆயுள் இருக்கும் வரை சிறை தண்டனை அளிக்கலாம்,
# விபச்சாரத் தொழிலையும் அரசே ஏற்று நடத்தலாம்.
# கைகளில் அழியா வண்ணம், மற்றவர்களுக்கு தெரியும் வண்ணம் பச்சை குத்தலாம்.
இவ்வாறு பெண்கள் மேற்கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளையும், தவறு செய்த ஆண்களுக்கு
கொடுக்கக்கூடிய தண்டனைகளையும் பலர் மேற்கொண்டவாறு பகிர்ந்துக்கொண்டதை பார்த்தோம்.
இப்படி என்னதான் பெண்கள் தடுப்புமுறைகளை கையாண்டாலும், தவரிழைத்த ஆண்களுக்கு
தண்டனைகள் கொடுத்தாலும் இந்த பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க முடியுமா? ஆக
இதற்குத் தீர்வுதான் என்ன???
அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து மத சார்பாக கலந்துக்கொண்டவர்
தமது கருத்துகளை தெரிவிக்கும் முன்பு “சகோதர
சகோதரிகளே” என்று அணைவரையும்
அழைத்து நமது நாட்டின் சகோதர பாசத்தை வெளிப்படுத்திய “விவேகானந்தர்”
நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்! அந்த சகோதர
சகோதரி பாசம் – நட்பு – உறவு – இப்போது வேகமாக மறைந்து வருவதையே இப்படிப்பட்ட கொடுமைகள்
நடக்க முக்கிய காரணமாக உள்ளது. சமுதாயத்தில் நாம் அணைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதனை
நமது குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம்
உணர வைக்கவேண்டும்.
“கற்பு என்று வந்தால்
அதனை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்” என்றானே “புரட்சிக் கவி பாரதியார்”
அவன்
பிறந்ததும் இந்த இந்திய திருநாட்டில் தானே! ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதனை நமது
குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம்
உணர வைக்கவேண்டும். பாலியல் வன்கொடுமை மற்றும் விலை மாதர்களின் தொடர்பால் பெண்கள் பலாத்காரத்தின்
மூலமோ அல்லது தாங்களே விரும்பியும் தங்களது கற்பை இழக்கையில் அதே நொடியில் ஆண்களும்
தாங்கள் உணராமலேயே தாங்களாகவே முன்வந்து தங்களது தவறான இச்சைக்காக தங்களது கற்பை இழக்கிறார்கள்
என்பதனை உணர்ந்து இக்காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.
அறனொன்றோ ஆன்றவொழுக்கு”
என்று திருக்குறளை
நமக்காக கூறிய “திருவள்ளுவர்” நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்!
இக்குறளின் படி “பேராண்மை” – பிறன்மனை
நோக்காத பேராண்மை இன்று எத்தனை பேரிடம் உள்ளது. இதனை ஒவ்வொரு இந்திய குடும்பங்களில்
உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம் உணர வைக்கவேண்டும்.
“நான் எனது மனக்கட்டுப்பாட்டிற்காகவும், எதிரில் வரும் பெண்களை பார்ப்பதை
தவிர்ப்பதற்காகவும் எப்பொழுதும் நடக்கும்பொழுது தலையை கீழே குணிந்தப்படி நிலத்தை பார்த்தே
நடப்பேன்” என்று தமக்கு தாமே
கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்ட நம் தேசத் தந்தை மகாத்மா “காந்தியடிகள்” நமது இந்திய திருநாட்டில்
தானே பிறந்தார்! அந்த தன்னடக்கம் இன்றைய ஆடவர்களுக்கு எங்கே சென்றது. இவரின் சத்திய சோதனையை ஒவ்வொரு இந்திய குடும்பங்களில்
உள்ள பெரியவர்களும் படித்து தங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வைப்பதின் மூலம் எதிர்காலதில்
ஒழுக்கமான இளைஞர்களை கண்டிப்பாக காணலாம்.
“கற்பிழந்தவளைக் கலந்திருந்தோனோ?, கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தோனோ?, காவல்
கொண்டிருந்த கன்னியை அழித்தோனோ?, கற்பமழித்துக்
களித்திருந்தோனோ?” என்று என்ன பாவம் செய்தேனோ? என்று பாவங்களை
பட்டியலிட்ட “வள்ளலார்”
தோன்றியதும்
நமது இந்திய திருநாட்டில் தானே! வள்ளலார் குழந்தைகளுக்காகவே இயற்றிய
“மனுமுறை கண்ட வாசகம்” என்ற அற்புத நூலையும் திருவருட்பாவினையும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களில்
உள்ள பெரியவர்களும் படித்து தங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வைப்பதின் மூலம் எதிர்காலதில்
ஒழுக்கமான இளைஞர்களை கண்டிப்பாக காணலாம்.
மனிதன் செய்யும் இப்படிப்பட்ட
பாவங்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனைகளாக வள்ளலார் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்,
# மனத்தால் செய்யும் பாவங்களுக்கு
சண்டாளாதி சரீரம் உண்டாகும்.
# வாக்கால் செய்த பாவங்களுக்கு
மிருகம் முதலான சரீரம் உண்டாகும்.
# தேகத்தால் செய்யும் பாவங்கட்கு
மரம் முதலான சரீரம் உண்டாகும்.
இதில் நமக்கு எந்த தேகமோ? இது
வெறும் பொய்யுரை என எண்ணிவிடாதீர்கள், உண்மையானது. “நான் உரைக்கும் வார்த்தையெல்லாம்
நாயகன் தன் வார்த்தை”
என்று வள்ளலார் கூறுவதால் இது வள்ளலாரின்
வார்த்தை அல்ல! இறைவனின் வார்த்தையே என்றுனர்தல் வேண்டும்.
நாம் என்ன மிருகங்களா? ஆதிவாசிகளா? அறிவியலில் பல முன்னேற்றங்களைக் கண்டு
தற்போது செவ்வாய் கிரகத்தில் வசிக்க தயாராகி வருகிறோம். இந்நிலையில் இப்படிப்பட்ட பழைய
முற்காலத்தில் உள்ள மனிதர்களைப் போல் தவறுகளைச் செய்யலமா? என்று ஒவ்வொரு அண்களும் நினைத்துப்
பார்த்து வெட்கப்படவேண்டும், வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு ஆணும் – பெண் என்னும் தாயின்
கருவரையிலிருந்து தானே உரு பெற்று, திரு பெறுவதற்காகத் தானே இப்பூலகில் வரபெற்றோம்.
அப்படிப்பட்ட கருவறையினை உடைய நடமாடும் கோவில்தான் நமது வணக்கத்துக் குரிய உயிருள்ள
கோவிலாகும் என்பதனை உணரவேண்டும்.
இத்திரு தந்தை நாட்டில், இவ்வாறு பல்வேறு மகான்கள் தோன்றி, பல்வேறு உபதேசங்களை
செய்து அருளியது மட்டுமல்லாது அதனை தங்களது வாழ்க்கையிலும் கடைபிடித்துக் காட்டினார்கள்.
அதன்படி இனிமேலாவது இவ்வுலகில் பெண்களை மதிக்க பழகிக்கொள்வோம்.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது” என்பதற்கிணங்க, சட்டங்கள்,
அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் இவைகள் எதுவும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவோ குறைக்கவோ
இயலாது. ஆடவரின் மனங்கள் / பார்வைகள் இயற்கையாகவே மாறவேண்டும். மன மாற்றத்திற்கான வழிமுறைகளை
இந்த ஆடவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வோம்.
“நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய “நக்கீரன்” பிறந்ததும் இந்த
தந்தை திருநாட்டில் தான். எனவே இந்த பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏதேனும் தண்டனை
கொடுக்க வேண்டுமல்லவா? என்ன கொடுப்பது?
மேற்கண்ட தண்டனைகளை கொடுப்பதை விட, அவர்களை உயிருடன் மருத்துவ துறைக்கு கொடுத்துவிடவேண்டும்.
அங்கே பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது உயிரையும், உடலையும் மனித குலத்திற்கு
அற்பனிக்கிறார்கள், அவர்களுக்கு இது தண்டனை அல்ல, மனிதர்களுக்கு செய்யும் சேவை.
அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.