Wednesday, March 13, 2013

மரம் பாடும் பாடல்

மரம் பாடும் பாடல்

பாலை மணலில் நடக்கையில்
  பாவி மனம் பதைக்குதே
சாலை ஓர மரங்களும்
  சாதி பார்த்து உதவுதே
காலை நேர சூரியன்
  குலம் பார்த்து உதிக்குதே
மாலை வந்த பொழுதும்
  மதம் மறைய மறுக்குதே

இதமாய் வீசும் காற்றும்
  இனம் பார்த்து வீசுதே
விதவிதமாய் சாமிகளும் கல்
  விகார சிலை களானதே
சதகோடி ஒளியின் வழியும்
  சடங்காய் விளை யாடுதே
முதலிட்டு இலாபமே பார்க்கும்
  மனிதன் கட்டிய கோயிலே

தங்கள் குலத்திற்கு ஒருசாமி
  தவறாமல் கும்பிடும் மடசாமி
சங்கம் சரணம் கச்சாமி
  சாகும் மனிதனுக்கு ஏன்சாமி
தங்கம் வைரம் என்சாமி
  தவிக்கும் ஏழைக்கு எதுசாமி
எங்கும் மலிவாய் மதுசாமி
  அங்கம் வீழ குடிசாமி

தாயின் வாயில் சேவல்கொண்டை
  தயவு இன்றி மயானக்கொள்ளை
பேயின் ஆட்டமுடன் அகோரமாய்
  பாய்ந்து செல்லுதல் அழகலவே
பாயில் படுக்கின்றோமென்று தினம்
  பாடையிலே படுக்கின்றீர் பித்துலகீரே
வாயில்திறக்குதே நரகத்தில் அங்கே
  வாழ்த்து தெரிவிப்பான் எமனுமே

உருமிலா வழிபாடு அறியாயோ
  ஆயிரம் சடங்குகள் அழியாதோ
அருட்பெருஞ் ஜோதி வழிபாடு
  அருட்பா ஓதி துதிபாடு
மருள்நெறி புலூலை மறந்திடு
  மனித நெறியிலே நிலைத்திடு
இருள் நெறியிலேநீ நடக்கையில்
  அருள் மனம் மிகவலிக்குதே

புவனம் ஆளும் மனிதா
  புண்ணியம் செய்வது எளிதா
ஜீவகாருண்ய வழியென்ன புதிதா
  ஜோதியை நாடும் புனிதா
தவறால்நான் மரமாய் பிறந்தாலும்
  தனித்து நிற்பேனோ உனது
ஏவல்செய்ய நானும் நடந்தேனே
  தனிப்பெருங்கருணை இது தானே!

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.