Wednesday, April 17, 2013

புரியாத விதிகள் - 2.

                   புரியாத விதிகள் - 2.                               17.04.2012

51. ஒரு வகுப்பில் 20 பேர்தான் இருக்க முடியும் என்றால் உங்கள் விண்ணப்பம் எண் 21 ஆக இருக்கும்!

52. நீங்கள் அம்மாவிடம் இரகசியத்தை மறைத்து விட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளாடையை யார் மாட்டி விட்டது - மறந்து விட்டீர்களா!

53. உங்கள் காதலி ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூறும்போது தான் அதை சேமிக்க ஒரு தாளும் உங்களிடம் இருக்காது!

54. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் பின்னால் கையை கட்டிக் கொண்டு நிற்பார்!

55. எந்த ஒரு பிரச்சனையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எளிய முறையில் மட்டுமே அதை தீர்க்கமுடியும்!

56. உங்கள் மனைவி உங்களை முழுவதும் புரிந்துக்கொண்ட நாள் முதல் உங்கள் சொல்லை காதில் வாங்குவதே இல்லை!

57. நீங்கள் சரியான நேரத்திற்கு போய் சேர்ந்தீர்களானால் உங்கள் காதலி 20  நிமிடம் முன்தாக வந்திருப்பாள். 20 நிமிடம் முன்னதாக நீங்கள் போய் சேர்ந்திருந்தால் 1 மணி நேரம் தாமதமாக வருவாள்!

58. உலகின் மிக அழகான பெண்மணி அழகில்லாத ஒரு ஆணைத் தான் மணப்பாள்!

59. நீங்கள் தொலைத்த் ஊசி உங்கள் மாமியார் வெறுங்காலுடன் நடக்கும் போது கண்டுபிடிக்கப்படும்! 


60. நீங்கள் தைக்கும் ஆடைகள் இரண்டு விதமாக இருக்கலாம், பெரியதாக அல்லது சிறியதாக - சரியாக மட்டும் இருக்கவே இருக்காது!

61. ஒரு நம்பிக்கை எந்த அளவு மூடநம்பிக்கையாக இருக்கிறதோ அந்த அளவு அது அதிக மக்களை சென்றடையும்!

62. நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணருகிறீர்களா? கவலையே வேண்டாம் அந்த நிலை மாறிவிடும்!

63. எல்லாமே உங்களை நோக்கி வருவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் சாலையின் வலது பக்கமாக போய்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

64. தகவல் யாருக்குத் தேவையில்லையோ அவருக்கு விரைவாகச் சென்று சேரும்!

65. ஒரு பெரிய வேலையின் முடிவுறாத பகுதி, அலுவலகத்தின் எந்த துறைக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோமோ அங்கே தான் நடைபெறாமல் இருக்கும்!

66. மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்திற்கு, அடிக்கடி மாற்று விளக்கங்கள் வந்துக்கொண்டே இருக்கும்!

67. வளர்ச்சி என்பது யாதெனில், ஒவ்வொருவரின் அடி மனதிலும் உள்ள வருமானத்துக்கு மேல் செலவுசெய்ய துடிக்கும் துடிப்புதான்!

68. எந்தக்கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்கு போகாதீர்கள். நீங்கள் தான் முதல் ஆளாக இருப்பீர்கள்!

69. அதிகாரம் என்பது யாரால் ஒரு வேலையை செய்ய முடியாதோ அவருக்கே அதை அளிப்பதாகும்!

70. அறிவியல் உண்மையானது! இது போன்ற வாக்கியங்களில் ஏமாந்து விடாதீர்கள்!

71. உலகில் மனித இனம் மட்டும்தான் முழுமையடையாது பிறப்பாகும்!

72. உங்களுக்கு அணிய சுகமாக இருக்கும் செருப்பு பார்க்க அசிங்கமாகவே இருக்கும்!

73. கொடுக்க மாட்டேன் என்று சொல்வதை விட தாமதப்படுத்துதல் பெரிய விஷயமாகும்!

74. நீங்கள் தரையில் இருக்கும்போது அதைவிட கீழே விழ இயலாது!

75. யாரிடமும் நீங்கள் எதை செய்யப்போவதில்லை என்பதனை மட்டும் சொல்லிவிடாதீர்கள்!

76. சர்வ உண்மை என்று எதுவுமே கிடையாது, இதுவே சர்வ உண்மை!

77. உங்களால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லையா? அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கிவிடுங்கள்!

78. லாட்டரி சீட்டு வாங்காமலே அதிஷ்டம் வராது!

79. பொதுமக்கள் என்போர் யார் எனில் செய்தித் தாள்களில் பெயர் வராதவர்களாவர்!

80. உங்களால் அவர்களை அடிக்க முடியாவிட்டால் அவர்களுடன் சேர்ந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!

81. நீங்கள் செய்யாமல் விட்ட அந்த வேலை மட்டுமே மிக மிக முக்கியமானது!

82. ஒரு வேலையை நீங்கள் சரியாக செய்துக்கொண்டிருந்தால் அது யார் கண்களிலும் படாது!

83. ஒவ்வொருவரும் தனக்கு அழகான, அறிவான, பணக்கார, சிக்கனமறிந்த, குறிப்பறிந்து செயல்படும், நன்றாக சமைக்கக்கூடிய மனைவிதான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்தோ பரிதாபம், சட்டம் ஒரு மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது!

84. திருமணம் என்பது இருவர் ஒருவர் ஆவது. பிரச்சனை யார் அந்த ஒருவர் என்பது தான்!

85. கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவுங்கள், அப்போதுதான் அவன் மீண்டும் கஷ்டப்படும் போது உங்களைத் தேடி வருவான்!

86. போர்களத்தில் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏற்கனவே கண்ணி வெடியின் மீது நிற்கின்றீர்கள் என்று அர்த்தம்!

87. ஒரு நிர்வாகத்தில் உங்கள் இடத்திலேயே நீங்கள் இருக்க வேண்டுமானால் வேகமாக முன்னேறுபவர்களை வெளியேற்றுங்கள்!

88. விதி விலக்குகள் விதியை விட அதிமாக இருக்கும்!

89. உங்கள் தந்தை ஏழையாக இருந்தால் அது உங்கள் விதி. உங்கள் மாமனார் ஏழையாக இருந்தால் அது உங்கள் முட்டாள்தனம்!

90. நாம் இங்கிருப்பது அடுத்தவர்களுக்கு உதவி செய்யத்தான் என்றால், அடுத்தவர்கள் இங்கிருப்பது எதற்காக?!

91. குறட்டை விடுபவர்தான் முதலில் தூங்குவார்!

92. பந்தயத்தில் முன்னால் ஓடமுடியவில்லை யெனில் பாதியிலேயே நின்றுவிடுவது நல்லது!

93. எது நடந்தாலும் அதை நீங்கள் எதிர்பார்த்தது போல காட்டிக்கொள்ளுங்கள்!

94. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன், நமது நண்பர்கள் என்னும் பதவியிலிருந்து இறங்கி விடுவார்கள்!

95. மாட்டிக்கொள்ளாதவரை எதுவும் தவறில்லை!

96. பிரச்சனையைத் தீர்க்கும் வேலை அந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்தவுடன் முடிவடைந்துவ்டும்!

97. நாம் அணைவரும் ஒரே சாலையில்தான் பயணம் செய்கிறோம், ஆனால் வெவ்வேறு திசையில்!

98. எந்த ஒரு மனிதனின் நேர்மை குறைவையும் திருட்டுத் தனம் ஆட்கொண்டுவிடும்! 

99. நீங்கள் விரும்பும் எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கும்!

100. இறைவன் அருளால் எல்லாம் செயல் கூடும், உங்களுக்கு ஆசை இல்லை என்றால்!  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.