Saturday, July 11, 2015

இராமலிங்க அந்தாதி

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVEdIMUpQUVpZTTQ/view?usp=sharing

நேரிசை வெண்பா

அருட்பெருஞ் ஜோதி அடிபணிந்து தனிப்
பெருங் கருணை பெற்றேன் - நெருப்பென
இருக்கும் என்னை அணைத்து ராமலிங்கமே
குருவென வந்து கலந்தான்.

கலக்கும் முறை கற்றிலேன் உன்னை
நலமுற வணங்கி நாடிலேன் - குலமும்
கோத்திர மயக்கமும் கழன்று ராமலிங்கமே
தோத்திரம் ஆனான் தனக்கு.

தனக்கோர் மதம் தானில்லை எம்மதமும்
உனக்கோர் பொருட் டில்லை - மனத்தில்
பதிந்த மதத்தைப் பிரிந்து ராமலிங்கமே
கதிஎன காலங் கழித்தேன்.

கழித்த காலங்களைவிட கழிந்தக் காலங்கள்
இழிவாய் இருப்பது இயல்பு - விழித்திருந்து
அழியாதக் கல்வி அளித்த ராமலிங்கமே
பழியாதப் பாடம் புகட்டுவாய்.

புகட்டியப் புராணப் புளுகில் சாத்திர
சகதியில் மீளாது சிக்குண்டேன் - சகத்தில்
சுத்த சன்மார்க்க சாலையிட்ட ராமலிங்கமே
முத்தங் கொடுத்து மீட்டான்.

மீட்டுகின்றான் நான் மீளும்வரை என்னை
ஆட்டுவித்து என்னை ஆளுகின்றான் - பாட்டு
எழுதவிட்டு என்னை எழுப்புகின்றான் ராமலிங்கமே
விழுதாய் என்னுள் வந்தானே.

வந்த நோக்கமறிந்து வரவுசெலவு மின்றி
இந்த தேகத்தில் உறைந்தேன் - அந்தமும்
ஆதியும் கண்ணுறக் கண்டேன் ராமலிங்கமே
நாதியாய் இருந்தான் நன்று.

நன்றெல்லாம் நீயானாய் நன் மார்க்க
சன்மார்க சங்க சீரானாய் - பன்மார்க்கப்
பொரு ளெல்லாம் போக ராமலிங்கமே
ஒருபெரும் பொரு ளானான்.


ஆனவையாவும் அளந்து அண்ட முழுதும்
வானகத்தில் அடக்கு வித்தாய் - கானகத்தில்
நிறைந்த மரங்களின் நடுவில் ராமலிங்கமே
இறையென இருக்கின்றான் இங்கு.

இங்குமங்கும் எங்கும் எதிலும் நீக்கமறத்
தங்கி யருளும் தயாளன் - சங்கு
ஊதும் சடங்கை உடைத்த ராமலிங்கமே
ஓதுவாய் என்றும் அன்பினை.                       10

அன்பினால் என்னை அணைத்து என்
துன்பம் அறத் துடைத்தாய் - வன்குண
மாயை நீக்கி மாயமான ராமலிங்கமே
சாயையாய் என்னைச் சார்.

சார்ந்தேன் சன்மார்க்க சற்குரு நாதனைச்
சேர்ந்த நான் சத்தியனானேன் - நேர்ப்பட
நான்பாட என்னுள் நடமாடும் ராமலிங்கமே
வான்என இருப்பதுநின் வரமே.

வரமொன் றருளி வஞ்சக னெனைநின்
கரத்தில் ஏந்திக் களித்தாய் - மரத்தில்
கனிந்தக் கருணை கனியாம் ராமலிங்கமே
இனியார்க்கும் நீயே ஆருயிர்.
 
ஆருயிர் உள்ளொளிர் அறிவே உலகில்
ஓருயிர் வாட ஒவ்வாய் - பாருக்கெல்லாம்
ஜீவ காருண்ய சீர்புகலும் ராமலிங்கமே
பாவம் தொடாதெனைப் பார்.

பார்வை ஒன்றே பாவம் போக்கும்நின்
கூர்விழி உலகைக் காக்கும் - போரில்லா
அமைதி ஓங்கும் எங்கும் ராமலிங்கமே
இமையாய் காத் திருப்பான்.

இருப்பது எதுவோ இல்லாதது எதுவோ
விருப்பம் எதிலும் வையேன் - திருப்பம்
வருமென உனை வணங்க ராமலிங்கமே
உருவாய் வந்து அருளாய்.

அருளும் பொருளும் அளித்து நிற்பாய்
இருளும் ஒளியும் இன்றியே - மருதூர்வாழ்
மரகதமே வடலூர் மணி ராமலிங்கமே
மரணமிலா மணி மகுடமே.

மகுடம் அணிவித்தெனை மன்னன் ஆக்கியே
புகுந்து கலந்திட்டான் புண்ணியன் - தகுந்த
எனக்குநல் உயிரான என் ராமலிங்கமே
மனதிற்கு இனிய மன்மதா.

மன்மதக் கலையால் மனிதனை மாய்க்கும்
துன்பம் நீக்கி துயரறுத்தாய் - அன்பே
என் நிலையாக்கி ஏற்றிட்ட ராமலிங்கமே
உன்பேர் சொல்லி உயர்ந்தேனே.

உயர்ந்த மனமருளி உத்தம நிலையருளி
நயந்துச் சொல்லிநிலை நாட்டினாய் - மயக்கும்
மங்கையர் முகத்தை மறந்து ராமலிங்கமே
அங்கமென ஆடா தமர்ந்தேனே.                      20

அமர்ந்த என்னை அழைத்து ராமலிங்காய
நமவென் றென்னை நாட்டினாய் - கமலமலர்
சடத்தில் ஞான சபையாகி ராமலிங்கமே
நடன மிடுகின்றான் நடுவே.

நடுவைநாடி நடந்து நடுவிரவில் அடைந்து
கடுகென இருப்பதைக் கண்டேன் - அடுத்து
அதனுள் அண்டவெளி எல்லாம் ராமலிங்கமே
உதயமாக இருக்க உணர்ந்தேனே.

உணர்வாகி எனது உணர்ச்சியாகி காதலாகி
மணந்து கலந்த மணாளா - குணமெலாம்
குற்றமாய் இருந்தும் என்னை ராமலிங்கமே
சுற்றமாய் வந்து சூழ்ந்தான்.

சூழ்ந்தென வெல்லாம் சுகம் பெறவே
ஆழ்ந்தன அதை என்னென்பேன் - ஏழ்திரை
நிலைகளும் விலகி நிற்க ராமலிங்கமே
கலையாக நான் கற்றேன்.

கற்றவனின் சிறப்பைக் கூற அருட்ஜோதி
பெற்றவராலும் கருப் படாது - சிற்றவனின்
சிற் சபையில் சுகமளிக்கும் ராமலிங்கமே
சற் குருவேஎன் செந்தமிழே.

செந்தமிழால் நானுனைப் பாட இங்கு
வந்து என்னை வாழ்த்தாய் - எந்தையே
எண்ணமெலாம் நிறைந்த என் ராமலிங்கமே
வெண்பா வாகிய வெளியே.

வெளியெலாம் காணும் விழி பெற்றேன்
தெளிந்த முக்கண் தயவாலே - ஒளிஒன்றே
வான்முழுதும் இருந்து விளங்க ராமலிங்கமே
தான் நிறைதான் தன்னுள்.

உள்ளே ஒளிந்திருந்து உள்ளம் கலந்திருந்தக்
கள்ளக் காதல் கனிந்திடுமோ - எள்ளிபிறர்
நகைத்திடாது எனை நாடி ராமலிங்கமே
பகை வென்றான் பரிந்து.

ரிந்துரை செய்தாய் புண்ணியா உனக்கு
சரிநிகர் ஆனேன் சங்கத்தில் - எரிந்தது
முப்புறம் அப்புறமும் முயல ராமலிங்கமே
எப்புறமும் ஆனான் எனக்கு.

எனக் கென்றால் எதிர்நின்று எதையும்
மனங் கோணாமல் மகிழ்ந்தாய் - தனமும்
தயவு குணமெல்லாம் தந்த ராமலிங்கமே
மயங்கிக் கலந்தான் மனதில்.                              30

மனமெனு மோர்குரங்கை மதித்து எனக்கே
வனமாகி வந்துதித்த வள்ளலே - இனமாகி
மதியாகி விதியாகி மருதூர் ராமலிங்கமே
கதியாகிக் களித்தேன் காணீரோ.

காணாதக் காட்சியைக் காட்டுவித்து என்னைத்
தூணாகத் தாங்கியத் தலைவன் - ஆணான
அழகன் முக்காடு அறிவன் ராமலிங்கமே
உழவனாகி என்னை உழுதான்.

உழுது பயிர்செய்து உரமும் போட்டு
அழுதே நீர்பாய்ச்சி உயர்ந்தேன் - நழுவி
பாலில் விழுந்தப் பழமாய் ராமலிங்கமே
கூலி கொடுக்கக் கண்டேன்.

கண்ணிமை நேரத்தில் கடவுளைக் கடந்து
உண்மை தெரிந்து ஊமையானேன் - பெண்மை
பெற்ற பேரின்பம் பகருமோ ராமலிங்கமே
உற்ற தேகத்தை யடைந்தேனே.

அடைந்த மரணங்கள் அளக்கில் பல்கோடி
கடைசி காயமிது கலந்ததே - மடைதிறந்த
வெள்ளம் போல் வெள்ளாடை ராமலிங்கமே
துள்ளிக் குதிக்கின்றான் தன்னகத்தே.

அகத்தே விரியும் உலகெலாம் உள்ளவன்
இகத்தே நானானான் என்னவன் - யுகமெலாம்
கடக்கினும் காணாக் காட்சியாய் ராமலிங்கமே
கடவுளானான் கருணைக் கொண்டு.

கொண்டதும் சன்மார்க்கம் கண்டதும் உயிருக்கு
தொண்டு செய்வதே தொழிலாம் - உண்பதற்கு
தாவர உணவையேத் தந்த ராமலிங்கமே
பாவந் தவிர்த்தான் பயந்து.

பயந்தேன் பாடைமேல் படுத்தாரை பார்த்தேநீ
நயமாய் உரைக்க நடித்தேன் - தயக்கமின்றி
மரணமிலாது வாழ முயன்று ராமலிங்கமே
சரண மென்று சன்மார்க்கியானேன்.

ஆனேனென்று அன்று அறைந்த முரசெலாம்
தானேவந்து இன்று தானியங்குதே - நானேஇங்கு
வானேபோ லானேன் வலிந்து ராமலிங்கமே
ஊனே புகுந்த அதனால்.

ஆலும்தன் விழுதுபோக ஆடுமே ஆனாலென்
வாலும் ஆடாது வலுப்பெறும் - காலும்
வேகாது புனலும் போகாது ராமலிங்கமே
சாகாத் தலை சமைத்தான்.                          40

சமைத்த மதங்கள் சாத்திரங்கள் யாவும்
அமைத்து ஒருபயனு முறார் - எமையாளும்
சுத்தசன் மார்க்க சாலையில் ராமலிங்கமே
நித்தி யானந்தம் நல்குவான்.

நல்கும் நலமெல்லாம் நாட்டி என்னை
நல்லவன் என்றே நாட்டினாய் - வல்லவன்
செய லெல்லாம்நான் செய்ய ராமலிங்கமே
ஜெய மென்று ஜொலித்தேனே.

தேனினும் இனிக்கும் தெய்வம் எங்கள்
ஊனிலும் உதிக்கும் உதயம் - நானிலம்
போற்றும் தெய்வம் புகழ் ராமலிங்கமே
ஏற்றும் அருட்ஜோதி இறைவன்.

இறைவன் இவனென்று உரைத்த மதங்களும்
மறைகளும் காணாது மறிந்தன - குறையொன்றும்
இல்லா சுத்தசன்மார்க்க இயலில் ராமலிங்கமே
எல்லார்க்கும் இறைவ னானான்.

ஆனா னென்று ஊதியசங் கெல்லாமவன்
நானாக ஊதூதி நிலைக்கும் - கூனாத
உடல்பெற்று  உள்ளம் உருக ராமலிங்கமே
வடம் பிடித்து வருவான்.

வருவான் தருவான் வள்ளவன் என்றே
ஓராயிரம் பாடல்கள் ஓதிநின்றேன் - ஈராயிரம்
வெண்பா படித்து வேண்ட ராமலிங்கமே
தெண்ட னிட்டுத் தருவான்.

தருகின்றான் என் தலைவன் யாருக்கும்
அருள அகஇனம் ஆகுவீர் - தருணம்
இதுதானே வாரீர் இங்கு ராமலிங்கமே
அது வாகி ஆள்கின்றான்.

ஆள்கின்ற அடிக்கு ஆளாவோம் அவன்
தாள் தொட்டு தெண்டனிடுவோம் - நாள்தோறும்
அன்னதான மிட ஆளும் ராமலிங்கமே
உன்னைத் தேடி யருள்வான்.

வான்பொருள் காட்டியங்கு விளங்கும் எம்
மான்நிலை காட்ட மகிழ்ந்தேன் - நானென்ப
தெல்லாம் இனிநீயே என ராமலிங்கமே
செல்லாத நிலை சொன்னான்.

சொன்ன வரைக்கும் சென்று விட்டேன்
பொன்னான மேனியும் பெற்றுவிட்டேன் - தன்
நிகரில்லா பெரு நிலைபெற்ற ராமலிங்கமே
அகத்தில் சென்று ஆழ்ந்தானே.                      50

ஆழ்ந்திருக் கும்போது ஆளாத அண்டமெலாம்
வாழ்ந்திருக்கக் கண்டு வியந்தேன் - ஊழ்வினையை
அங்குள்ள உயிருக்கும் ஊட்டி ராமலிங்கமே
எங்குமாய் விளங்க எட்டானே.

எட்டானை அன்பினால் எட்டுவித்து அவனை
அட்டத்தில் பிடிக்க அமர்ந்தானே - விட்டத்தில்
நின்றுபார்க்க முழு நிலவாய் ராமலிங்கமே
என்னைப் பார்த்து ஏங்கினான்.

ஏங்கிய ஏக்கம் அறிந்து காதல்மடலை
வாங்கிப் படித்து வாஎன்றான் - ஓங்கிய
அண்டமெலாம் என தன்பை ராமலிங்கமே
விண் ணொளியாய் விரைத்தான்.

விரைந்து அருள்வார் வள்ளலார் என்றே
நரைவரும் முன்னே நாடுகின்றேன் - திரை
எல்லாம் தீர்த்து எனக்கு ராமலிங்கமே
பல்லாண்டு வாழ பதித்தான்.

பதித்த திருமுறை பன்னிரண்டும் சன்மார்க்கம்
உதித்த திருமுறைக்கு ஈடில்லை - மதித்த
சைவ வைணவ மதமெலாம் ராமலிங்கமே
நையப் புடைத்து நகர்ந்தானே.

நகர்ந்த அத்தருணம் நானும் சன்மார்க்க
உகத்தில் திருமுறை அளித்தேன் - சகத்தில்
எட்டாம் திருமுறை இதுவென ராமலிங்கமே
சட்டம் இயற்றி சார்ந்தான்.

சார்ந்த சன்மார்க்கத்தில் சாகாதிருக்க நான்
ஊர்ந்து உயிரொளி உற்றேன் - ஓர்நிலையை
அடைய வருமக இனத்தார்க்கு ராமலிங்கமே
உடைய பேரருள் உண்டாமே.

உண்டுண்டு உறங்கி உயிர்விட்டுப் பிணமாய்க்
கண்டகால மெல்லாம் கனவே - கொண்ட
சுத்தசன்மார்க் கத்தில் சாகாத ராமலிங்கமே
மத்தியில் வர மாயைஓடுமே.

ஓடுகின்றேன் வடலூர் ஒளியைக் காணவே
பாடுகின்றேன் சன்மார்க்க மோங்கவே - ஆடுகின்றேன்
பொற்சபை நாட்டியம் போலவே ராமலிங்கமே
சொற்படி நான்நடக்கச் சாற்று.

சாற்றுவேன் சன்மார்க்க சங்கமதையே நான்
போற்றுவே னங்கு புனிதனாகியே - ஊற்றுபோல்
சொற் றொடரைச் சொல்லி ராமலிங்கமே
பொற் பாடலைப் பகர்ந்தான்.                  60

பகருகின்ற ஒவ்வொரு பாடலும் பரமனே
உகந்தளித்தான் எனக்கே உண்மை - பகலவன்
பொன்னொளி அகத்தில் பட்டு ராமலிங்கமே
இன்பமென துடிக்குதென் இதயம்.

இதயஇயக்க மனைத்தும் இறைவா நின்
பதத்தில் வைத்தேன் பாராய் - உதய
காலம் வருங் காலமெனவே ராமலிங்கமே
ஓலமிட்டு நமை எழுப்புவான்.

எழுந்தவரெல்லாம் இறவார் இறந்தவ ரெல்லாம்
எழுவார் என்பது உண்மை - அழுதாரெல்லாம்
சிரிக்கக் காண்பது சன்மார்க்கம் ராமலிங்கமே
புரிகின்ற செயலிது பாராய்.

பார்த்துப் படித்தப் படிப்பெல்லாம் பொய்யே
பார்க்காமல் படிக்கும் படிப்பறியாய் - மார்க்கம்
கூறும் சாகாக் கல்வியை ராமலிங்கமே
சோறு போட்டு சொன்னான்.

சொன்ன சொல்லின் சொந்தக்காரன் என்
கன்னந்தடவி இதழ் குவித்தான் - பின்
இடைதழுவி கூடி இணைய ராமலிங்கமே
கடை விரித்துக் கொண்டான்.

கொண்டதன் கடையில் கொள்வார் இல்லை
பண்டத்தை மூடி கட்டிட்டானே - பண்ணால்
பாடவே கட்டியக் கடையை ராமலிங்கமே
ஊடலின்றி கூட உடைத்தான்.

உடைத்ததன் கடையில் உள்ளே நுழைந்து
எடையின்றி கொள்ள லாமே - படைதிரண்டு
வாரீர் உலகீர் வள்ளல் ராமலிங்கமே
வாரி அணைக்கின்றார் வாரீர்.

வாரீர் வாரீர்வந்து வள்ளலாரின் கடையைப்
பாரீர் பாரீர்பார்த்துப் பயனுறுவீர் - தேரீர்
மாண்டா ரெல்லாம் மீள ராமலிங்கமே
மீண்டும் விரித்தான் மடியை.

மடிசுரந்த அமுதை மதுவாகக் குடித்து
அடிசறுக்கி வீழ்ந்தேன் அய்யோ - முடியா
லொரு மலையை இழுக்க ராமலிங்கமே
அருளால் செய்து முடித்தான்.

முடிந்த முடிவுகள் முடியாத எல்லைகள்
அடிமுடி வட்டம்போ லாகும் - கடிந்த
மதத்தை விரும்பி மயங்க ராமலிங்கமே
உதைக்க வந்தான் உள்ளே.                          70

உள்ளொன்றி இருக்கும் உண்மை யறிந்து
கள்குடித்துக் களித்தேன் கடவுளே - தள்ளாட்டம்
போக்கி ஒருமையுடன் பற்றி ராமலிங்கமே
நோக்கினான் நம்மை நயந்து.

நயந்து சொன்னதெல்லாம் நயக்க ஆனதோ
வியந்த தெல்லாம் வியர்த்தமானதோ - பயந்து
பாவச்செயல் செய்யாப் பாவியை ராமலிங்கமே
கோவப்படப் பார்ப்பது கருணையோ.

ருணையால் கல்லும் கரைந்ததே தயவால்
இருளும் ஒளியானது இங்கே - விருந்தென
மனதிற்குக் கிடைத்த மாமருந்தே ராமலிங்கமே
உனையன்றி எனக்கேது உயிரே.

உயிரென்று இருப்பது உண்மையோ அன்புக்
கயிற்றை பாம்பென கூறுவதோ - வயிற்றுப்
பசிபோல் என்றும் பிரியாத ராமலிங்கமே
வசிக்க உயிராய் வந்தான்.

வந்தநாள்முதல் வடலூரே வாழ்வென இருந்தேன்
எந்தநாளும் எனக்கில்லை இனியே - சந்தமிகுப்
பாடல் உனக்காகப் பாடியே ராமலிங்கமே
ஆடல் புரிந்திருப்பேன் அழகாகவே.

அழகாய் தலைவாரி அழகன் உனக்காக
கழனியில் தனியே காத்திருந்தேன் - பழமுடன்
பாசமாய் வந்து பூச்சூடினாய் ராமலிங்கமே
தாசனாக நானும் தாசியானேனே.

தாசியாய் இருக்கஆசி தாருமய்யா உன்னை
பாசியாய் பிடித்திருக்க பிடிக்குதய்யா - நாசியில்
சென்று வருமென் செல்ல ராமலிங்கமே
என்றும் நீஇருக்க இறவேனே.

இறப்பதும் பிறப்பதும் இறைவன் செயலென்றால்
இறைவனும் இறப்பான் அன்றோ - இறப்பதை
தவிர்த்துப் பிறப்பதை தடுக்க ராமலிங்கமே
புவியை வென்று புகன்றான்.

புகன்ற சொல்லெல்லாம் புத்தியில் எட்டாது
அகன்று சென்றேன் என்னய்யாவே - தகன்று
போகாது என்னைப் பிடித்து ராமலிங்கமே
நோகாது நிறுத்தினான் நாட்டிலே.

நாட்டிலே நாட்டிய நான்மறையும் மற்றதும்
வீட்டிலே திரியும் விலங்காகும் - ஏட்டிலே
கூட்டிய எழுத்தைக் காட்ட ராமலிங்கமே
பாட்டிலே பாடியது போலாமோ.                      80

ஆகின்ற செயலெல்லாம் ஆள்கின்றாய் போற்றி
போகின்றபோக் கெல்லாமானாய் போற்றி - சாகின்ற
போதெல்லாம் தடுத்தாய் போற்றி ராமலிங்கமே
போற்றி நாதமுடிவே போற்றி.

போற்றி எனைப் பாடவைத்த பொற்சபை
சாற்றி எனைஏற்றியது சிற்சபை - காற்றில்
உள்ள வேகமாய் உருவான ராமலிங்கமே
அள்ளி வீசினான் ஆற்றலை.

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
கூற்றதை ஓட்டும் காலஜோதி - ஏற்றதை
அளித்து மாற்றத்தை அருள ராமலிங்கமே
ஒளியாய் வரும் எளியஜோதி.

ஜோதிஜோதி ஜோதிஜோதி ஜோதி யென்று
ஓதுமே ராமலிங்க அந்தாதியே - ஆதிநீதி
அந்தம் யாவும் ஆட்டியே ராமலிங்கமே
பந்தமுற்று வந்தான் பாட்டிலே.

பாட்டெல்லாம் அவன் புகழையேப் பாடும்
ஏட்டெல்லாம் அவனையே எழுதும் - ஊட்டிய
உணர் வெல்லா மென் ராமலிங்கமே
மணம் புரிந்து மகிழ்வான்.

வானத்தைத் தேடி விண்ணிலே செல்லினும்
கானத்தை பார்க்கக் கூடுமோ - நானடங்கி
கரனங்கள் யாவும் கழல ராமலிங்கமே
சரண மென்பது சன்மார்க்கம்.

சன்மார்க்க சாலையில் சித்தர்பல ரிருக்க
என்மார்க்கம் வந்தான் ஏனடி - நன்மார்க்க
மெல்லாம் சன் மார்க்கமென ராமலிங்கமே
பல்லார்க்கும் பகன்றான் பாரடி.

அடிமுடி காணாத அற்பன்நான் திருவருட்பா
அடிக்கடிப் படிக்க அடிமுடியானேன் - தடியடி
சண்டை யிட்டு சோர்ந்தேன் ராமலிங்கமே
கண்திறக்க கண்டேன் காட்சி.

காட்சிக்கு எளியவன் கண்ணுக்கு ஒளியவன்
ஆட்சிக்கு அரசனவன் ஆரேடி - சாட்சிக்கு
வருவா னவன் வடலூர் ராமலிங்கமே
தருவானருளை அவன் தானடி.  
  
தானம் செய்யசெய்ய தானே பையபைய
ஊனம் போக்கி உயர்த்துவான் - நானங்
கொண்டு களவி காண ராமலிங்கமே
தண்டில் ஏறி தங்கினான்.                            90

தங்கியவன் குண்டலிப்பால் தந் தென்
அங்கப்பசி நீக்கி ஆய்ந்தான் - தங்கமே
அணையார் சங்க மதில் ராமலிங்கமே
இணையாக வைத்தான் என்னை.

என்னதவம் செய்தேனோ என்னவன் மடி
தன்னில் தலைவைத்து துஞ்சவே - கன்னத்தில்
முத்தமிட்டு இன்பம் மலர ராமலிங்கமே
பித்தனா னானென் பார்வையில்.

பார்வை ஒன்று போதுமே என்னவன்
போர்வை கழண்டு போகுமே - ஓர்சொல்லுக்கு
ஏங்கிய அவன் ஏக்கத்தால் ராமலிங்கமே
தாங்கிய ஆடை துடிக்குமே.

துடிக்கு மென்னிரு தனங்களும் அவன்கைப்
பிடிக்கு அடங்கிப் பெருகுதே - இடிக்கப்
பெய்தபெரு மழைப் போல ராமலிங்கமே
தெய்வ சுகமதைத் தந்தான்.

தந்தான் தந்தான் தேனிதழ் உதட்டால்
எந்தன் மேனியை அளந்தான் - வந்துநான்
பாடியப் பாடலைப் பார்த்து ராமலிங்கமே
ஆடிய ஆட்டம் அறிவேன்.

அறியாயோ எனது ஆனந்த மூச்சின்
வெறியதை அடக்க வாராயோ - குறி
எல்லாம் காத லுறுமே ராமலிங்கமே
அல்லால் எனக்கு ஆரே.

ஆர்கண்டார் என் அண்ணலை அவர்
பேர் கொண்டேன் பெரிதே - பார்போற்றும்
மன்னவனை நான் மீட்ட ராமலிங்கமே
என் ராகத்தில் அசைந்தான்

அசைந்த உள்ளத்தில் ஊஞ்ச லாடியே
இசைக்க நான் இச்சையானேன் - பசையால்
ஒட்டிய காகிதமாய் என் ராமலிங்கமே
கட்டி இறுக்கக் கண்டேனே.

கண்களும் காணாத காட்சி அவன்
எண்களும் காணாத நீட்சி - பண்களும்
காணாதப் பாட்டைக் காண ராமலிங்கமே
பாணாத் தாளம் போட்டான்.

போட்டத் தாளத்திற்கு பாடின தோத்திரம்
ஏட்டில் எழுத ஏழ்கடலாம் - கூட்டில்
கூடும் குருவி களாய் ராமலிங்கமே
பாடும் வீட்டைப் பாராய்.                            100

(இராமலிங்க அந்தாதி - தொடரும்)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.