Sunday, May 20, 2018

AT 21-03-1947 21-03-2018 71




















































21-03-1947
21-03-2018
71








26-08-2018











11 comments:

  1. நீங்கள் செய்துகொண்டிருக்கும் உருவ வழிபாட்டினை வள்ளலார் ஆதரிப்பவரா???

    ReplyDelete
    Replies
    1. நான் உருவ வழிபாடு செய்பவன் அல்ல. என்னை கருவரைக்குள் கொண்டுவந்த இரு உருவங்களை மதித்து கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. வாய்ப்பு வரும்போது மன்னர்கள் கால பெரிய கோவிலுக்கு இப்போதும் செல்வதுண்டு. வழிபாட்டுக்காக அல்ல. சுற்றுலா பயணிகளுக்கு தமிழகக் கோவில்கள் ரசிக்கும்படியாக அமைந்துவிட்டன. ஒரு சுற்றுலா பயணியாக அழகை ரசிப்பதற்காக செல்வதுண்டு. நெற்றியில் உள்ள விபூதியும் மேற் சொன்ன இரு உருவங்களால் வைக்கப்பட்டது. தவிர்க்க முடியவில்லை. மற்றபடி சமய, மத, சடங்குகள் எனது ஞான சபையை அண்ட முடியாது என்பது உறுதி.

      Delete
  2. வள்ளலார் போதித்த மரணமில்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

    நீங்கள் அதனை புரிந்தவர்களாக இருப்பவர்களா? அவ்வாறு இருப்பின், ஒரு பாமரனுக்கும் புரியுமாறு உங்களால் விளக்க முடியுமா?

    இல்லறத்தில் வாழும் சாதாரண மனிதன் அதனை அடைவது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. உடலும் உயிரும் என்றும் இணைபிரியாமல் இணைந்துவிடும் நிகழ்ச்சியால், சாதாரண தேகம் ஞான தேகமாகிவிடுதல்.
      எனக்கு முத்தேகம் பற்றி புரிதல் உண்டு. ஆனால் ஆழ்ந்த அனுபவம் இல்லை. பாலோடு நீர் கலந்தாற்போன்றது மரணமில்லா பெருவாழ்வு. “பால்” என்பது மனித தேகம். “நீர்” என்பது உயிர். இப்படி பாலோடு நீர் கலந்த பின்பு, “நீர்” அதன் பெயரை இழந்து “பால்” என்ற பெயரை பெற்றுவிடுகின்றது. அது போல் உயிரானது நிலைத்த உடம்பாகிவிடுதல்.
      இல்லற வாசிகள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் பிரமனின் ஆயுள் கிடைக்கும். துறவற வாசிகள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும்.

      Delete
  3. ''கடை விரித்தேன் கொல்வாரில்லை, கட்டிவிட்டேன்'' என்று மனம் நொந்த வள்ளலாருக்கு, ஆறுதல் அளிக்கும் விதமாக உங்களுடைய செய்கைகள் யாவை???

    ReplyDelete
    Replies
    1. வள்ளற்பெருமானை புகழ்ந்து வணங்கிப் பாடியவர்களுள் மிக அதிகமாக பாடியவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள். அதனைத் தொடர்ந்து அவரைவிட மிக அதிகமாக வள்ளற்பெருமானை பாடியவன் நான் என சொல்லலாம். (இவ்வுலகில் வள்ளற்பெருமானைத் தவிர வேறு எந்த ஒரு அடியாருக்கும் இவ்வளவு புகழ்ச்சி மாலை (பாடல்கள்) தமிழில் இதுவரை எழவில்லை)

      எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் "இராமலிங்க அந்தாதி" - 05-07-2015 அன்று துவங்கப்பட்டு 14-06-2016 அன்று முற்று பெற்றது. இதன் கையெழுத்துப் பிரதி என்று ஏதுமில்லை. இவ்வந்தாதி முழுதும் எம்மால் நேரடியாக கணிணியில் தட்டச்சு செய்யப்பட்டது.

      திருவருட்பிரகாச வள்ளலாரை போற்றி இதற்கு முன்னர் அவரது அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா மட்டுமே "திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் சற்குரு வெண்பாவந்தாதி" என்று 1108 அந்தாதி பாக்களை இயற்றியுள்ளார்கள். இதனை அவர் வெளியிட்ட பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் பக்கம் 239 -இருந்து 391- வரை (அ.திருநாவுக்கரசு பதிப்பு)காணலாம்.

      அதன் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே தற்போது எம்மை கருவியாகக் கொண்டு மீண்டும் திருவருட்பிரகாச வள்ளலாரைப் போற்றி இந்த 'இராமலிங்க அந்தாதி' எழுந்துள்ளது. இதில் மொத்தம் 1125 பாக்கள் அமைந்துள்ளது.

      அடுத்ததாக, “இராமலிங்க அகவல்” என்பதனை 2010 அடிகளைக் கொண்டு இயற்றியுள்ளேன். வள்ளற்பெருமான் “அருட்பெருஞ்ஜோதி அகவல்” என்பதனை 1596 அடிகளை கொண்டு இயற்றியுள்ளார் என்பதனை அறிவோம். அதனைவிட தமிழில் மிகப்பெரிய பாடலாக “இராமலிங்க அகவல்” தற்போது விளங்குகின்றது.

      அடுத்ததாக வள்ளற்பெருமானை புகழ்ந்து சித்திரக் கவிகள் இயற்றியுள்ளேன். இதுபோன்று மரபுக் கவிதைகள் இதுவரை மூவாயிரத்தைத் தாண்டி இயற்றிகொண்டுள்ளேன். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக “சன்மார்க்க விவேக விருத்தி” என்கின்ற மின்னூலை தொடர்ந்து இயற்றி வந்தேன். இந்நூல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் காகித வடிவில் நூலாக (மாத இதழாக) வடிவமைக்க திட்டம் உள்ளது.

      வள்ளற்பெருமான் சமய மத தெய்வங்களை மிக அதிகமாகப் பாடியுள்ளார். ஆனால் நான் அருட்பெருஞ்ஜோதி மற்றும் வள்ளலார், வள்ளலாரின் அடியார்களைத் தவிர வேறு எதனையும் எமது பாக்களில் இயற்றியது கிடையாது. அவ்வகையில் எமது பாக்கள் சுத்த சன்மாக்க பாக்களாக இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

      காரணப்பட்டு ச.மு.க. இயற்றிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலினை எமது தகப்பனார் பெயரில் பதிப்பித்து மீண்டும் இவ்வுலகிற்கு வெளியிட்டுள்ளேன்.

      சுத்த சன்மாக்கம் சார்ந்த பல கட்டுரைகள் இயற்றியுள்ளேன். அவ்வப்போது ஜீவகாருண்ய பணியும் உண்டு. இவ்வாறு என்னால் முடிந்த பணிகளை வள்ளற்பெருமானுக்காக ஆற்றுவதில் எம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றேன்.

      Delete
  4. உங்களுக்கும், ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களுக்கும், உள்ள தொடர்பினை, 'Family tree' வரைபடத்தின் மூலமாக விளக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்.

    ReplyDelete
  5. A scholar who become a follower of Sanmargh (Sanmargh – the path advocated by Vallalar)

    Karanapattu S M Kandasamy Pillai was a learned person, a great scholar, musician, poet and had great affinity on Tamil language. He was suffering with a unique disease that he got fainted often. All sorts of treatments failed. He came to know about Vallalar and hence he came and requested Vallalar to cure him. Vallalar not only cured him by giving Vibhuti (holy ash), but also accepted him as his disciple. Since then, he started propagating about Vallalar, his greatness, his principles, etc. He also followed the various disciplines advocated by Vallalar (such as avoidance of killing animals, non intake of non vegetarian food, feeding the poor etc) scrupulously and remained a pure sanmarghi next to Thozhuvur Velayudha Mudaliar.

    He wrote “ Sarithira Keerthanai”, “Sarguru Venpa Andhathi”, “Gurunesa venpa”, “Siddhivilasa Namavali”, etc., composed several songs on Vallalar, compiled and published them as “prabhandha thirattu”. He also compiled entire “Thiruvarutpa” in a single book and published in 1924. In this way, Kandasamy pillai spent his life in the service of Vallalar and got his Grace.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your excellent writing about S.M.K.

      Delete
  6. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.