Monday, January 26, 2015

அடிக்கல்நாட்டு விழா

அன்புடையீர் வந்தனம்!

இன்று (26-01-2015) காலை 07.00 மணியளவில் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் விரிவாக்கப்பணிக்காக அடிக்கல்நாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. காரணப்பட்டு கிராமவாசிகளும், சன்மார்க்க அன்பர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு சன்மார்க்க அன்பர்களின் ஜீவகாருண்ய வழிபாட்டிற்கு வரயிருப்பதை எண்ணி நாமெல்லாம் மகிழலாம்.

மேலும் திருவருட்பா (ச.மு.க.பதிப்பு) மறுஅச்சு செய்த சன்மார்க்க அன்பர் சென்னை திரு.வெங்கட் ஐயா அவர்களால், திருவருட்பா புத்தகத்துடன் கூடிய அழகிய கண்ணாடி கூண்டினையும் அன்பளிப்பாக இந்நிலையத்திற்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு ச.மு.க. அருள் நிலையம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.