Tuesday, January 13, 2015

"பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீடு

அன்புடையீர்! வந்தனம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல், கடந்த மாதப்பூசம் அன்று (06-01-2015) வடலூரில் வெளியிடப்பட்டது. திரு.அ.திருநாவுக்கரசு அவர்களின் பதிப்பில் 850 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மதிப்பு ரூபாய் 400/- ஆகும். வெளியீட்டு நிகழ்ச்சியன்று சிறப்புச் சலுகையாக ரூ.200/-க்கு ச.மு.க. அறக்கட்டளையானது அன்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்தது. இந்நூல் வருகின்ற தைப்புசம் அன்றும் (03-02-2015) சிறப்புச் சலுகை விலையில் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு முன்பதிவு செய்த அன்பர்களுக்கு எல்லாம் அஞ்சலில் புத்தகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புத்தகம் இன்னும் கிடைக்கப்பெறாதவர்கள் தயவு செய்து 9445545475 என்ற தொடர்பு எண்ணில் தெரியப்படுத்தவும்.

மேலும் தற்போது சென்னையில் (நந்தனம்) நடைபெற்று வரும் புத்தகக்கண்காட்சியிலும் இந்நூல் விற்பணைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடை எண் 179 - சன்மார்க்க புத்தக நிலையத்தில் கிடைக்கும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.