Thursday, December 21, 2017

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்

21-12-2017 – வியாழன் அன்று வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையத்தில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஜோதி வழிபாடு நடைபெற்றது.

சன்மார்க்கர்களும் கிராம பொதுமக்களும் இவ்வழிபாட்டில் கலந்துக்கொண்டனர். முன்னதாக சன்மார்க்க திருக்கொடி ஏற்றப்பட்டு திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதப்பட்டது. வள்ளற்பெருமானின் பாதுகைக்கு வந்தனம் தெரிவிக்கப்பட்டது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறுதியில் ஜோதி வழிபாடும் வேண்டுதலும் வைக்கப்பட்டது.


இவ்வாரம் கும்பகோணம் திரு.எம்.சண்முகநாதன் ஐயா அவர்களின் கருணையால் அருள் நிலையத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. திரு.சண்முகநாதன் ஐயா அவர்கள் மூன்றாவது முறையாக இந்நிலையத்தில் அன்னதானம் வழங்கியுள்ளார். அவருக்கு அருள் நிலையத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. திரு.எம்.சண்முகநாதன் ஐயா அவர்களும் அவர்களது குடும்பமும் அருட்பெருஞ்ஜோதி அருளை பெற்று நீடு வாழ அருள் நிலையம் வாழ்த்துகின்றது. 














No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.