Tuesday, August 24, 2021

அடிக்கு அடியனாக

 

அடிக்கு அடியனாக

 

எழுதிரைக ளுமிலகவ ரம்தந்த வள்ளளுனை       

அழுதழுது வினைவிலகி சம்பந்த நல்லுறவு

மனமிலகி அடிபணிவே னென்னின்ப நித்தியவ ருள்முழுது மாக

 

மரணமில பிறவியில சத்சங்க சித்திபெற

தருமமிக கருணையுற சங்கத்து பற்றுவர

சமரசப ஜனைதனைதி னம்நல்க முத்திவர சத்தியனெ னாக

 

நரைதிரைமு துமைகளும டம்இன்றி பொத்திடவு

மறைமதமு மலமெனத டம்இன்றி செத்திடவு

முடியறசிவ வழிமேவிய பஞ்ஞொத்த சிற்பரனை சத்தகனை நாட

 

திருநிறைய அருளுகபொ ருள்இன்ப முற்றிடுக

வெளிவெளிக டகடதய வில்நின்று கற்றிடுக

ஒளிபெருகி அகமிளகி சிற்றம்ப லம்நிறைய அத்துவித மாக

 

உலகநிலை அணுவளவு மிச்சிக்க அச்சமுற

எனைமலை யளவுஎன தித்திக்க முத்தேகமு

மருளிஒளி யுடலெனது சொந்தம்எ னத்திலக மிட்டஉனை ஊட

 

புலைகொலையு மறுதலிய நற்சிந்தை சித்திபெற

உரையுமொலி பலிதமென என்தந்தை வள்ளலென

தினமுமெனை அருளகட வுள்தன்னை கண்டிடவு டன்உறைய தாக

 

எனதுநிலை செழுமையுற எண்ணங்க ளெல்லாமற

 கனகமலை உடலுமென எண்ணற்ற மாற்றுடைய

சபைஅமைய அபயமென வந்துன்ன டித்தழுவி சித்தனென தாக

 

புருவநடு நடனமிட எட்டும்இ ரண்டுமென

அமுதநதி நழுவிவிழ என்னிட்ட தெய்வமெழ

இருமைஅற ஒருமைவர தஞ்சம்எ னத்துனத டிக்கடிய னாக

--தி.ம.இராமலிங்கம்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.