Thursday, March 13, 2014

சாதாரன மனிதனுக்கும் சன்மார்கிக்கும் என்ன வித்தியாசங்கள்



சாதாரன மனிதனுக்கும் சன்மார்கிக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளது என்பதை வரிசைப்படுத்தி கூறமுடியுமா? - முகநூல் நண்பர்    திரு.வினோத்குமார்-சேலம்

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

அன்பென்றால் அதுஆண்டவன் ஒருவனுக்கே உடையது
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது பெண்பாலுடையதென்பான்

ஆன்றபுறானங்கள் ஆகமங்கள் இதிகாசவேதங் களையனைத்தும்
ஏன்னென்பான் சன்மார்க்கி அற்றவன்அது உயிரென்பான்

இன்னுயிரை கொய்துஊன் உண்ணும்மாக்களை புறஇனம்
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது வாழ்வாதாரமென்பான்

ஈன்றபிறவியால் இனங்களில் உயர்வேதுசாகாத இனமேஉயர்ந்த
ஊன்இனமென்பான் சன்மார்க்கி அற்றவன்அது உரிமைஎன்பான்

உன்தெய்வம் என்தெய்வம் என்பதேது அருட்பெருஞ்ஜோதி
ஒன்றேஎன்பான் சன்மார்க்கி அற்றவன்அது மதமென்பான்

ஊன்றியசமய மதமார்க்கங்கள் எல்லாம்பிள்ளை விளையாட்டென
சான்றளிபான் சன்மார்க்கி சகத்தவன்அது மேலேரும்வீதிஎன்பான்

என்உடல் பொருளாவி அனைத்தும்எம் தந்தையுடையது
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது என்னுடையதென்பான்

ஏன்என்று விசாரனையில் இருந்துக்கொண்டு உயிர்களெல்லாம்
தான்னென்பான் சன்மார்க்கி தவிர்த்தவன்அது விதிஎன்பான்

ஐன்சிங்வங் பங்அம்சிவவசி ஓம்அரிஅர இவைபரிபாஷை
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது மந்திரமென்பான்

ஒன்றென காணும்காட்சியும் ஒன்றெனஅறியும் அறிவும்வேண்டும்
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது வியர்த்தமென்பான்

ஓன்றவன் கட்டளையை ஏற்றுஇறந்தாரை புதைக்கவேண்டுமென்
பான்சன்மார்க்கி மற்றவன் பயந்துஅது வழிவந்ததென்பான்

ஒளவஎய்தும் சன்மார்க்க ஒழுக்கங்களை நம்உயிரைபிடிக்க
கெளவவேண்டுமென்பான் சன்மார்க்கி கடுத்தவன்அது வீணென்பான்

ஃதொருமாடத்தில் ஏறிஅகத்துள் ஆடும்ஜோதியை காணசகத்துள்
ஈதொருமார்க்கமென்பான் சன்மார்க்கி அற்றவன்அது புறத்தேஎன்பான்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.