Monday, October 30, 2023

தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

 தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

==============================

நேற்று (29-10-2023) கேரளாவில் யெகோவா கிறுத்துவ ஜெபக்கூட்டத்தில் 3 குண்டுகள் வெடித்து 2 பெண்கள் இறந்தார்கள். குண்டு வைத்தவர் காவலர்களிடம் சரணைந்தார். 

இவர்களது கடவுள் யகோவா ஆகும். (யூதர்களின் கடவுளும் யகோவா தான்.) யகோவா என்ற கடவுளின் குழந்தையாக 'இயேசு' இவர்களால் கருதப்படுகின்றார், எனவே கிறுத்துவத்தில் ஒரு பிரிவினராக இவர்கள் ஒரு தனிக்கூட்டமாக இயங்குகின்றார்கள். 

இம்மதக்கூட்டம் இந்திய தேசியத்திற்கு எதிராக பல கருத்துகளை தங்கள் மக்களிடம் பரப்புவதாக, நேற்று அம்மத இயக்கத்தைச் சார்ந்தவரும் குண்டு வைத்தவருமான மார்ட்டின் கூறியிருக்கின்றார். இம்மதக்கூட்டம் தேச துரோகத்தில் ஈடுபட இந்திய உச்ச நீதி மன்றமே ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 

இம்மதத்தார்கள் இந்திய தேசிய கீதத்தை பாடமாட்டார்களாம். அது எங்கள் மத அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து தங்கள் மத உரிமையை நிலைநாட்டி இருக்கின்றார்கள். இந்திய உச்சநீதி மன்றமும் இம்மதத்திற்கு ஆதரவாக பாடவேண்டாம் என தீர்ப்பளித்திருக்கின்றது. 

ஒரு தேசியத்திற்கு கட்டுப்படாத மதம், எந்த தேசியத்தில் இருந்தாலும் அந்த தேசியத்திற்கு ஆபத்துதான். எனவே இந்திய உச்சநீதி மன்றம், நேற்று நடந்த குண்டு வெடிப்பை சாதாரணமாகக் கடந்துச் செல்லாமல், அதில் தங்களது பங்களிப்பும் மறைமுகமாக இருப்பதைக்கருதி, மறு தீர்ப்பை இந்திய தேசத்திற்கு ஆதரவாக வழங்க வேண்டும். 

இதுபோல் இன்னும் எத்தனை மதங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன எனத்தெரியவில்லை. இவர்கள் எல்லாம் தாங்கள் வசிக்கும் "தேசத்தை எதிர்ப்பதே" கடவுள் கொள்கையாக வைத்துள்ளனர் என்பது வேதனை. 

TMR.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.