Thursday, October 19, 2023

ஐந்து “தி”கரம் - பாடல்

 ஐந்து “தி”கரம் - பாடல்

வள்ளற்பெருமானைப் போற்றி ஐந்து “தி”கரம் வரும்படியாகப் பாடியது.

ஆசாவீஓசோ திதிதிதிதி முறையாய்
பேசாமல் பேசும் வள்ளல்கை - வீசாமல்
முதலாகி அழித்து நடந்து மொழிந்து
இதயத்துள் அமரும் இறைவர்.

தன்னிரு கைகளை வீசி நடவாமல் கட்டியே நடக்கும் அதிசய மனிதர், அற்புத இறைவர் சித்தி வளாகத்தில் இறையருள் சூழ உலகாளும் வள்ளற்பெருமான், “ஆ, சா, வீ, ஓ, சோ” என்னும் இவ்வைந்தெழுத்துடன் “தி, தி, தி, தி, தி” என்னும்
இவ்வைந்தெழுத்தைத் தனித்தனி பொருந்த, அவை “ஆதி, சாதி, வீதி, ஓதி, சோதி” என்று ஆதலால், அவற்றுள் முறையாய், தீங்கு யாவைக்கும் முதலான 
(ஆதி), “சாதி”யை அழித்து, அருள் “வீதி”யில் நடந்து மஹா மந்திரம் மொழிந்து (ஓதி) நமது இதயத்துள் அமரும் அருட்பெருஞ்”சோதி”யெனும் இறைவர்.


T.M.RAMALINGAM

CUDDALORE - 9445545475

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.